தலையங்கம்: குனியக் குனிய...
Dinamani.com
First Published : 25 Nov 2009 11:42:00 PM IST
Last Updated :
அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா சமீபத்தில் ஜப்பான் சென்றபோது, ஜப்பானிய அரசர் அகிஹோடோவைக் குனிந்து வணங்கி நட்புப் பாராட்டிய நிகழ்ச்சி, அமெரிக்க மக்கள் மத்தியில் கடும் கண்டனத்தை எழுப்பியது.
அமெரிக்காவிடம் நிதி உதவியும், அமெரிக்க ராணுவத்தின் பாதுகாப்பு உதவியும் பெறும் குட்டி நாடான ஜப்பானின் மன்னரை, அதிபர் ஒபாமா குனிந்து வணங்க வேண்டிய அவசியம் என்ன என்று அமெரிக்கர்கள் கொதித்தெழுந்ததில் ஆச்சரியம் எதுவும் இல்லை.
ஆனால், அதிபர் ஒபாமாவைச் சந்திக்க வாஷிங்டன் சென்றிருக்கும் நமது இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், வெள்ளை மாளிகையில் ஓவல் அறையில் அமெரிக்க அதிபரை சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்தாலும் நிச்சயம் நாம் அதைச் சட்டை செய்யவும் போவதில்லை. தேசிய அவமானமாகக் கருதவும் போவதில்லை. முந்தைய அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷை இந்தியாவே நேசிக்கிறது என்று கடந்த ஆண்டு இதே பிரதமர் அசடு வழிந்தபடி கூறியதை இப்போது யாராவது நினைவில் வைத்திருக்கிறார்களா என்ன?
இந்தியப் பிரதமர் அமெரிக்கா பயணமாகிறார் என்றால், ஒன்று, நிதி உதவி கேட்பதற்காக அல்லது அமெரிக்க அதிகார மையங்கள் பிறப்பிக்கும் உத்தரவுகளையும், விடுக்கும் எச்சரிக்கைகளையும் மௌனமாகத் தலையசைத்து ஏற்றுக் கொள்வதற்காக என்பது காலாகாலமாகத் தொடரும் அனுபவம். இந்த விஷயத்தில், இந்திரா காந்தி பிரதமராக இருந்த காலகட்டம் மட்டும் விதிவிலக்கு!
உலகப் பொருளாதார வல்லுநர்கள், நாளைய வல்லரசுகள் என்று அடையாளம் காட்டும் நாடுகள் இந்தியாவும் சீனாவும். ஆனால், அமெரிக்காவின் அணுகுமுறையில், சீனாவுக்குத் தரப்படும் மரியாதையும், முக்கியத்துவமும் இந்தியாவுக்குத் தரப்படுவதில்லையே, ஏன்? இதற்குக் காரணம் நாம் பலவீனமானவர்கள் என்பதால் அல்ல. நாமே நம்மைப் பலவீனமானவர்களாகக் கருதிக் கொள்வதால்தான். நமது வெளிவிவகாரத் துறை அமைச்சகமும், அதிகாரிகளும் குனிவதிலும் குழைவதிலும் காட்டும் சுறுசுறுப்பை, முறையாகத் திட்டமிடுவதிலும், ராஜதந்திர ரீதியான அணுகுமுறைகளைக் கையாள்வதிலும் காட்டுவதில்லை என்பதால்தான்.
பிரதமர் மன்மோகன் சிங்கின் அமெரிக்க விஜயத்துக்காக, நமது வெளிவிவகாரத் துறையும், வாஷிங்டனிலுள்ள இந்தியத் தூதரகமும் தேர்ந்தெடுத்திருக்கும் தேதிகளே தவறு. "நன்றி அறிவித்தல் தினம்' கொண்டாடும் வாரத்தில் அமெரிக்காவே கோலாகலமாக இருக்கும் வேளையில் பிரதமரின் வாஷிங்டன் விஜயம் போதிய முக்கியத்துவம் பெறாது என்பதுகூடத் தெரியாமல், செயல்படும் இந்தியத் தூதரகத்தை என்ன சொல்வது?
சீனாவிடம் அமெரிக்கா பயப்படுவதற்குக் காரணங்கள் இருக்கின்றன. முதலில், அமெரிக்காவில் சீன முதலீடு சுமார் 2 ட்ரில்லியன் டாலர்கள். அதாவது, 2 லட்சம் கோடி டாலர்கள். இந்த முதலீட்டை சீனா திரும்பப் பெற்றால் அமெரிக்கப் பொருளாதாரம் தலைகுப்புற விழ வேண்டியதுதான். இரண்டாவதாக, உலக அரங்கில் அமெரிக்காவுக்கு இணையான ராணுவப் பலமுடைய நாடாக சீனா வளர்ந்து வருகிறது என்பதும் ஒரு காரணம்.
அதிபர் ஒபாமா சீனா சென்றார். சீன அதிபரைச் சந்திக்கும்போது பிரச்னைகள் எதுவும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக, தலாய் லாமாவைச் சந்திப்பதைக்கூட அதிபர் ஒபாமா தவிர்த்து விட்டார். சீனாவுக்கு எதிராக அமெரிக்கத் தரப்பிலிருந்து எதுவும் நேர்ந்துவிடக் கூடாது என்பதில் நிர்வாகம் கவனமாக இருந்தது. அப்படியிருந்தும், மனித உரிமைப் பிரச்னையில் தொடங்கி அதிபர் ஒபாமா எழுப்பிய எந்தப் பிரச்னையையும் அவர்கள் சட்டைகூடச் செய்யவில்லை.
ஆனால், பிரதமர் மன்மோகன் சிங்கின் வாஷிங்டன் விஜயத்துக்கு முன்னோடியாக, வேண்டுமென்றே இந்தியாவை அவமானப்படுத்தும் முயற்சிகள் அமெரிக்காவால் அரங்கேற்றப்பட்டது. இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தில் குறிப்பிடப்படாத ஷரத்துகள் வலிய எழுப்பப்பட்டு, இந்தியாவைப் பெயருக்கு மட்டுமே ஓர் அணு ஆயுத நாடாக்கும் முயற்சி நடந்தேறி வருகிறது. ஒப்பந்தம் கையெழுத்தாகி ஓராண்டாகப் போகிறது. அணு அளவும் எதுவுமே அசைந்ததாகத் தெரியவில்லை.
கடைசியில், அணு ஆயுதத் தடுப்பு ஒப்பந்தத்தில் இந்தியாவைக் கையெழுத்திட வைத்து, இதுவரை இத்தனை ஆண்டுகளாக நாம் நடத்தி, ஏறத்தாழ முடிவடையும் நிலையிலுள்ள தோரியம் சார்ந்த தொழில்நுட்பத்துடன் கூடிய அணுசக்தி முயற்சியையும் முடக்கிய பிறகுதான் அமெரிக்கா ஓயப் போகிறது. அதைத்தான் சீனா எதிர்பார்க்கிறது.
சீனா சென்ற அமெரிக்க அதிபர் நடத்திய பேச்சுவார்த்தைகளில் பங்கு வகித்த ஒரு விஷயம் எது தெரியுமா? சுமுகமாகக் காஷ்மீர் பிரச்னையைத் தீர்ப்பது பற்றிய விவாதம். நீண்ட நாள்களாகவே இந்திய - பாகிஸ்தான் விவகாரத்தில் மூக்கை நுழைத்துத் தன்னைத் தென்னாசிய அரசியலில் முதன்மைப்படுத்திக்கொள்ள விழையும் சீனாவின் எண்ணத்துக்கு அமெரிக்க அதிபர் துணை போயிருக்கிறார். சரி, பரவாயில்லை. அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவுடனான பிரதமர் மன்மோகன் சிங்கின் பேச்சுவார்த்தைகளில், சுமுகமாக திபெத் விவகாரத்தைத் தீர்த்து வைப்பது பற்றிய விவாதத்தைச் சேர்க்கும் தைரியம் நமது இந்தியத் தரப்புக்கு இருக்கிறதா? அதை அமெரிக்க வெளிவிவகாரத் துறை ஏற்றுக் கொள்ளுமா?
அமெரிக்கக் கணினித் துறை இந்தியா சார்ந்த ஒன்றாகத்தான் இருக்கிறது. ஆனால், அமெரிக்கர்கள் இந்தியர்களை அறிவு சார்ந்த கூலிகளாகத்தான் கருதுகிறார்கள். சீனாவுக்கு எதிராக அமெரிக்கா விரலசைத்தால், அமெரிக்காவில் இருக்கும் சீனர்கள் உள்படத் தங்களது முதலீட்டைத் திரும்பப் பெறுவார்கள். ஆனால், இந்தியாவை என்னதான் அவமானப்படுத்தினாலும், அமெரிக்க வாழ் இந்தியர்கள், இந்தியாவாழ் இந்தியர்கள் என்கிற வித்தியாசமே இல்லாமல், இந்தியப் பிரதமர் உள்பட, நாம் அவமானப்படக் கூச்சப்பட மாட்டோம். இது அமெரிக்கர்களுக்குத் தெரியும்!
குனியக் குனியக் குட்டத்தான் செய்வார்கள். என்றுதான் மடியுமோ நமது அடிமைத்தன மோகம்?
Wednesday 25 November 2009
Thursday 19 November 2009
சாத்தானின் தோட்டம் அல்லது கண்ணி வெடிகள்
இவ்வார ஆனந்த விகடனில் வந்த கட்டுரையிது. உலகெங்கும் புதைத்துவக்கப்பட்டிருக்கும் கண்ணிவெடிகளை கணக்கிட்டால் அவற்றின் பெரும்பாலானவை முகமதிய நாடுகளில். கண்ணிவெடிகளில் சிக்கி மாண்டுபோவோர் பெரும்பாலும் அப்பாவி பொதுஜனம்.
தன்னையும் தனது நாட்டினரையும் குண்டுவைத்து கொல்வதற்கு இந்த முகமதியர்களால் மட்டுமே இயலும்.
"தலைவன்" எவ்வழியோ மக்களும் அவ்வழி...
*******
போரைவிடக் கொடுமையானது கண்ணி வெடி. போர்கூட முடிந்துவிடும். ஆனால், கண்ணி வெடிகளின் தாக்குதல் ஆண்டுக்கணக்கில் தொடர்ந்து மக்களைக் காவு வாங்கும். போரில், யார் எங்கே கண்ணி வெடிகளைப் புதைத்துவைத்தார்கள் என்பது யாருக்கும் தெரியாது. விளைவு...
எந்தவிதத்திலும் போருடன் தொடர்பு இல்லாத சாதாரண மக்கள், உயிரையும் உறுப்புகளையும் இழக்கிறார்கள்.
எகிப்து: கண்ணி வெடியால் கதிகலங்கிப்போயிருக்கும் நாடு எகிப்து. சுமார் 2 கோடியே 30 லட்சம் கண்ணி வெடிகள் நாடு முழுக்க இருக்கின்றனவாம். 1956, 1967 மற்றும் 1973-களில் நடந்த எகிப்து - இஸ்ரேல் போர்கள்தான் நாட்டை இப்படிக் கண்ணி வெடி தேசமாக்கிவிட்டன. 'எதிரி நாட்டு டாங்கிகள் முன்னேறி வந்தால், சின்னா பின்னமாக வேண்டும்' எனப் புதைக்கப்பட்ட இவற்றில் பெரும்பாலானவை அவ்வப்போது வெடித்து மக்களைக் கொன்றுகொண்டு இருப்பதுதான் வேதனை. இவற்றை அகற்ற 15 வருடங்கள் கடுமையாகப் போராடியது எகிப்து. கடைசியில் மேற்குப் பாலை நிலப் பகுதியில் 70 லட்சம் கண்ணி வெடிகளையும், சீனாய் பாலைவனப் பகுதியில் இருந்து 30 லட்சம் கண்ணி வெடிகளையும் கண்டெடுத்தனர். தொட்ட இடமெல்லாம் கண்ணி வெடியாகக் காட்சியளிப்பதால் இதைச் சாத்தானின் தோட்டம் என்கிறார்கள்.
இரான்:
தென்மேற்கு இரான் கண்ணி வெடிகளால்சூழப் பட்டு இருக்கிறது. இரான்-இராக் இடையேயான ஜென்ம விரோதம்தான், இந்தக் கண்ணி வெடி விதைப்புக்குக் காரணம். 1980 -களில் இரான் அரசு புதைத்துவைத்த கண்ணி வெடிகளின் எண்ணிக்கை 1 கோடியே 60 லட்சம். இரான் - இராக் எல்லையில் சுமார் 42 ஆயிரம் சதுர கிலோமீட்டர் பரப்பளவில் இவை புதைக்கப்பட்டுள்ளன. இதனால், அந்தப் பகுதியே எந்தப் பயனும் இல்லாமல் கிடக்கிறது. விவசாயம், தொழிற்சாலைகள், பள்ளிக்கூடம் எதுவும் கிடையாது. அவ்வப்போது கண்ணி வெடியில் சிக்கி கால்களை இழப்பது மட்டும்தான் மிச்சம்!
அங்கோலா:
அங்கோலாவின் மொத்த மக்கள் தொகையைவிட அங்கு புதைக்கப்பட்டு இருக்கும் கண்ணி வெடிகளின் எண்ணிக்கை அதிகம். விவசாயம் செய்ய நிலத்தைத் தோண்டினால் வெடிக்கிறது, சாலை வெட்டினால் வெடிக்கிறது, அவசரத்துக்கு ஓரமாக ஒதுங்கினால்கூட வெடிக்கிறதாம். அங்கோலாவில் இப்படி வெடிக்கு மடிந்தவர்கள் சுமார் 70,000 பேர் என்கிறது ஐக்கிய நாடுகள் அறிக்கை. இரண்டு கோடி கண்ணி வெடிகள் இங்கு புதைத்துவைக்கப்பட்டு உள்ளன. இந்தச் சிக்கலில் இருந்து எப்படி மீள்வது என முழி பிதுங்கி நிற்கிறது அங்கோலா அரசு.
ஆப்கானிஸ்தான்:
சராசரியாகத் தினமும் 10 முதல் 12 பேர் கண்ணிவெடியை மிதித்துக் காலியாகிறார்கள். ஆப்கனில் நீக்கமற நிறைந்திருக்கும் கண்ணிவெடிகளின் எண்ணிக்கை சுமார் ஒரு கோடி! 1979-க்கும் 1992-க்கும் இடைப்பட்ட காலத்தில் புதைக்கப்பட்டவை. இராக்: இங்கு புதைக்கப்பட்டு இருக்கும் கண்ணி வெடிகளின் எண்ணிக்கை 1 கோடிக்கு மேல். இரான்-இராக் எல்லைப் பகுதியில்தான் அதிகபட்சம் இருக்கின்றன. எதிரிக்கு வைத்த வெடியில் வைத்தவர்களே சிக்கிக்கொள்கிறார்கள். நாட்டில் சுமார் 1.5 லட்சம் குடும்பங்கள் கண்ணி வெடிகளினால் ஏதோ ஒரு வகையில் பாதிக்கப்படுகின்றனர். சுமார் 3,500 இடங்கள் கண்ணி வெடிகளினால் நிரம்பியிருப்பதாக இராக் சொல்கிறது.
தன்னையும் தனது நாட்டினரையும் குண்டுவைத்து கொல்வதற்கு இந்த முகமதியர்களால் மட்டுமே இயலும்.
"தலைவன்" எவ்வழியோ மக்களும் அவ்வழி...
*******
போரைவிடக் கொடுமையானது கண்ணி வெடி. போர்கூட முடிந்துவிடும். ஆனால், கண்ணி வெடிகளின் தாக்குதல் ஆண்டுக்கணக்கில் தொடர்ந்து மக்களைக் காவு வாங்கும். போரில், யார் எங்கே கண்ணி வெடிகளைப் புதைத்துவைத்தார்கள் என்பது யாருக்கும் தெரியாது. விளைவு...
எந்தவிதத்திலும் போருடன் தொடர்பு இல்லாத சாதாரண மக்கள், உயிரையும் உறுப்புகளையும் இழக்கிறார்கள்.
எகிப்து: கண்ணி வெடியால் கதிகலங்கிப்போயிருக்கும் நாடு எகிப்து. சுமார் 2 கோடியே 30 லட்சம் கண்ணி வெடிகள் நாடு முழுக்க இருக்கின்றனவாம். 1956, 1967 மற்றும் 1973-களில் நடந்த எகிப்து - இஸ்ரேல் போர்கள்தான் நாட்டை இப்படிக் கண்ணி வெடி தேசமாக்கிவிட்டன. 'எதிரி நாட்டு டாங்கிகள் முன்னேறி வந்தால், சின்னா பின்னமாக வேண்டும்' எனப் புதைக்கப்பட்ட இவற்றில் பெரும்பாலானவை அவ்வப்போது வெடித்து மக்களைக் கொன்றுகொண்டு இருப்பதுதான் வேதனை. இவற்றை அகற்ற 15 வருடங்கள் கடுமையாகப் போராடியது எகிப்து. கடைசியில் மேற்குப் பாலை நிலப் பகுதியில் 70 லட்சம் கண்ணி வெடிகளையும், சீனாய் பாலைவனப் பகுதியில் இருந்து 30 லட்சம் கண்ணி வெடிகளையும் கண்டெடுத்தனர். தொட்ட இடமெல்லாம் கண்ணி வெடியாகக் காட்சியளிப்பதால் இதைச் சாத்தானின் தோட்டம் என்கிறார்கள்.
இரான்:
தென்மேற்கு இரான் கண்ணி வெடிகளால்சூழப் பட்டு இருக்கிறது. இரான்-இராக் இடையேயான ஜென்ம விரோதம்தான், இந்தக் கண்ணி வெடி விதைப்புக்குக் காரணம். 1980 -களில் இரான் அரசு புதைத்துவைத்த கண்ணி வெடிகளின் எண்ணிக்கை 1 கோடியே 60 லட்சம். இரான் - இராக் எல்லையில் சுமார் 42 ஆயிரம் சதுர கிலோமீட்டர் பரப்பளவில் இவை புதைக்கப்பட்டுள்ளன. இதனால், அந்தப் பகுதியே எந்தப் பயனும் இல்லாமல் கிடக்கிறது. விவசாயம், தொழிற்சாலைகள், பள்ளிக்கூடம் எதுவும் கிடையாது. அவ்வப்போது கண்ணி வெடியில் சிக்கி கால்களை இழப்பது மட்டும்தான் மிச்சம்!
அங்கோலா:
அங்கோலாவின் மொத்த மக்கள் தொகையைவிட அங்கு புதைக்கப்பட்டு இருக்கும் கண்ணி வெடிகளின் எண்ணிக்கை அதிகம். விவசாயம் செய்ய நிலத்தைத் தோண்டினால் வெடிக்கிறது, சாலை வெட்டினால் வெடிக்கிறது, அவசரத்துக்கு ஓரமாக ஒதுங்கினால்கூட வெடிக்கிறதாம். அங்கோலாவில் இப்படி வெடிக்கு மடிந்தவர்கள் சுமார் 70,000 பேர் என்கிறது ஐக்கிய நாடுகள் அறிக்கை. இரண்டு கோடி கண்ணி வெடிகள் இங்கு புதைத்துவைக்கப்பட்டு உள்ளன. இந்தச் சிக்கலில் இருந்து எப்படி மீள்வது என முழி பிதுங்கி நிற்கிறது அங்கோலா அரசு.
ஆப்கானிஸ்தான்:
சராசரியாகத் தினமும் 10 முதல் 12 பேர் கண்ணிவெடியை மிதித்துக் காலியாகிறார்கள். ஆப்கனில் நீக்கமற நிறைந்திருக்கும் கண்ணிவெடிகளின் எண்ணிக்கை சுமார் ஒரு கோடி! 1979-க்கும் 1992-க்கும் இடைப்பட்ட காலத்தில் புதைக்கப்பட்டவை. இராக்: இங்கு புதைக்கப்பட்டு இருக்கும் கண்ணி வெடிகளின் எண்ணிக்கை 1 கோடிக்கு மேல். இரான்-இராக் எல்லைப் பகுதியில்தான் அதிகபட்சம் இருக்கின்றன. எதிரிக்கு வைத்த வெடியில் வைத்தவர்களே சிக்கிக்கொள்கிறார்கள். நாட்டில் சுமார் 1.5 லட்சம் குடும்பங்கள் கண்ணி வெடிகளினால் ஏதோ ஒரு வகையில் பாதிக்கப்படுகின்றனர். சுமார் 3,500 இடங்கள் கண்ணி வெடிகளினால் நிரம்பியிருப்பதாக இராக் சொல்கிறது.
Subscribe to:
Posts (Atom)

