Wednesday 30 January, 2008

முகமதிய தீவிரவாதி தாவூத் உதவியுடன் அத்வானி மோடி‍யை கொல்ல பாகிஸ்தான் திட்டம்.

இன்றய இந்தியன் எக்ஸ்பிரஸில் வந்த செய்தியொன்று...


சர்வதேச பயங்கரவாத பட்டியலில் இடம்பெற்று தேடப்பட்டு(??)வரும் முகமதிய தீவிரவாதியான தாவூதை, அத்வானி மோடி ஆகியோரை கொலை செய்ய பாகிஸ்தானின் உளவுத்துறை ஐ.எஸ்.ஐ அணுகியிருப்பதாக இந்திய உளவுத்துறைக்கு வந்த தகவல்களின் அடிப்படையில், இவர்கள் இருவருக்கும் கொடுக்கப்பட்டிருக்கும் தற்போதய பாதுகாப்பு நடவடிக்கைகளை மறுமதிப்பீடு செய்யப்பட்டிருப்பதாக செய்தி.


ஐ.எஸ்.ஐ மற்றும் முகமதிய தீவிரவாதிகள் என்னும் பாம்புக்கு பால்வார்த்த பாகிஸ்தான், அவை தன்னையே தீண்டிக்கொண்டிருந்தும் இன்னும் புத்தி வரவில்லை... இந்த முகமதிய தேசத்துக்கு. இன்ஷா அல்லா !!

Wednesday 23 January, 2008

பள்ளிகளுக்கான அரசு நிதியுதவி அறிவியற்கல்விக்கு முகமதிய போதனைக்கல்ல‌

இன்றய இந்தியன் எக்ஸ்பிரஸில் வந்த செய்தி.


மத்திய அரசு பள்ளுகளுக்கு வழங்கும் நிதியுதவி, கணிதம், அறிவியல் போன்றவற்றை போதிக்கும் பள்ளிகளுக்கு மட்டுமே வழங்கப்படும். முகமதிய போதனைகளையும், ஷரியத் சட்டங்களையும் மட்டுமே போதிக்கும் முகமதிய பள்ளிகளுக்கு (மதரஸாக்கள்) வழங்கப்படமாட்டாது என்று மத்திய அரசு அறிவித்திருக்கிறது.


பொதுவாக இவ்வகை முகமதிய பள்ளிகளில், அராபிய மொழி, குரான் என்ற புத்தகத்தின் மேல்விளக்கங்கள், முகமதிய (ஷரியத்) சட்டமுறை, ஹதீதுகள் பற்றிய விளக்கங்கள், முகமதிய வரலாறு போன்றவை மட்டுமே போதிக்கப்பட்டு வருகிறது. இவ்வகை பாடதிட்டங்களுக்கு மத்திய அரசு நிதியுதவி வழங்கப்படமாட்டது என்று மனிதவள‌மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் உயரதிகாரி ஒருவர் அறிவித்திருக்கிறார்.


ஒருசில‌ ம‌த‌ர‌ஸாக்க‌ள் ம‌ட்டுமே தேவைக்கேற்ப அறிவிய‌ல் ம‌ற்றும் உல‌க‌ வ‌ர‌லாறு போன்ற‌வ‌ற்றை பாட‌த்திட்ட‌த்தில் கொண்டுள்ள‌தாக‌ இந்த செய்திக்குறிப்பு தெரிவிக்கிற‌து.


முக‌ம‌துவையும் முக‌ம‌திய‌த்தையும் ம‌ட்டுமே ப‌டித்து ப‌ட்ட‌ம் (?!!) பெற்ற‌ இப்ப‌ள்ளி மாண‌வ‌ர்க‌ளை, ம‌ற்ற‌ இ‍‍ந்திய‌ ப‌ள்ளிக‌ளில் ப‌ட்ட‌ம்பெற்ற‌ மாண‌வ‌ர்க‌ளுக்கு இணையாக‌ ந‌ட‌த்த‌வேண்டும் என்ற‌ கோரிக்கைக‌ளுக்கும் ப‌ஞ்ஞ‌மில்லை போலிக்கிறது (இன்ஷா அல்லா !!)


முக‌ம‌திய‌ ப‌ள்ளிக‌ளின் மத போதனை ஆசிரிய‌ர்க‌ள் விடுத்த‌ இந்த கோரிக்கைக‌ளுக்கு ப‌தில‌ளித்த‌ ம‌த்திய‌ அமைச்ச‌க‌ம், இ‍‍ந்திய‌ ப‌ள்ளிக‌ளில் ப‌ட்ட‌ம்பெற்ற‌ மாண‌வ‌ர்க‌ளுக்கு இணையாக‌ ந‌ட‌த்த‌வேண்டுமென்றால் முக‌ம‌திய‌ ப‌ள்ளி மாண‌வ‌ர்க‌ளின் திற‌னை ம‌றும‌திப்பீடு செய்ய‌வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ள‌து. (ஒரு ப‌ய‌ தேற‌மாட்டான்!!).


முகமதிய பள்ளிகளின் சீர்திருத்த நடவடிக்கையின் ஒருபகுதியாக, இவ்வகை மதப்பள்ளிகளில் அறிவியல், கணிதம், சமூக அறிவியல் (முகமதிய சமூகமல்ல), ஆங்கிலம் போன்றவற்றையும் போதிக்க எடுக்கும் மத்திய அரசின் நடவடிக்கைகள் பாராட்டப்படவேண்டியவை (காங்கிரஸ் அரசின் அமைச்சகத்திலிருந்து வந்த இந்த அறிவிப்புத்தான் கொஞ்சம் அதிர்ச்சியளிப்பதாக இருக்கிறது) .

முக‌ம‌திய‌ போத‌னைக‌ளை ம‌ட்டுமே க‌ற்பித்துவந்த இவ்வகை பள்ளிகளுக்கு அரசு நிதியுதவி இதுவ‌ரை வழங்கிவந்ததா ‌என்ப‌து குறித்து என‌க்கு தெரிய‌வில்லை. அவ்வாறு வ‌ழ‌ங்க‌ப்ப‌ட்டு வந்திருப்பின், அது உட‌ன‌டியாக‌ நிறுத்த‌ப்ப‌ட‌வேண்டும்.


இந்த மதரஸாக்களுக்கு பெட்ரோடாலர்கள் பலவழிகளிலிருந்தும் கொட்டப்பட்டு வருவது கண்கூடு. இந்திய ஏழைஎளியோரது வரிப்பணம் (அவர்கள்மீதே திரும்பப்பாயும் முகமதிய ப‌ய‌ங்க‌ர‌வாதிக‌ளை உற்ப‌த்திசெய்யும்) ம‌த‌ர‌ஸாக்க‌ளுக்கு செல‌விட‌ப்ப‌டுவ‌தை ஒருபோதும் அனும‌திக்க‌கூடாது.


அறிவியலும் கணிதமும் ஒரு சதவிகிதம் அளவுக்கு போதிக்கப்பட்டாலே முகமதியம் பின்னுக்குத் தள்ளப்பட்டுவிடும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. முகமதிய சிறுவர்களுக்கும் இளைஞர்களுக்கும் முகமதியத்தைதாண்டிய ஒரு உலகம் அறிமுகப்படுத்த வேண்டும்.


நல்லது நடக்கும் என்று நம்புவோம்...

Tuesday 22 January, 2008

இந்தியர்களின் வரலாற்று பிரக்ஞை குறித்து திண்ணைக்கட்டுரை


Thursday January 17, 2008
இந்தியர்களின் வரலாற்று பிரக்ஞை - வி எஸ் நைபாலை முன் வைத்து
சேதுபதி அருணாசலம்


புலம் பெயர்ந்து வாழும் இந்தியர்கள், இந்தியாவுக்கு வந்தவுடன் முதலில் குறையாகச் கொள்வது பெரும்பாலும் இந்தியாவின் சுகாதாரமின்மை, மாசுக் கலப்பு, திறந்தவெளிக் கழிப்பிடங்கள் இவற்றைப் பற்றிதான். உண்மைதான் என்றாலும், இந்தக் குப்பைகளுடனே வாழ்ந்து அந்த பிரக்ஞையே இல்லாமற் போய்விட்ட நிலையில் நமக்குக் கேட்பதற்குக் கொஞ்சம் எரிச்சலாகத்தான் இருக்கும். அப்படிப்பட்ட எண்ணம்தான் வி.எஸ்.நைபால் இந்தியாவைப் பற்றிய தன் எண்ணங்களைக் கூறும் இந்தக் கட்டுரையை மேலோட்டமாகப் படித்தபோது எனக்கு எழுந்தது. 'என்ன இவர், இந்தியா பெரும் வலியளிப்பதாக இருக்கிறது.. என் மனக் கனவுகளைத் தகர்த்து விட்டது என்றெல்லாம் புலம்புகிறார்.. இவரென்ன இந்தியாவைப் பற்றி கூறுவது? பிறந்து வளர்ந்ததெல்லாம் வெளிநாட்டில். சும்மா இங்கே சுற்றுப்பயணம் செய்ய வந்துவிட்டு ஒரே குறையாகச் சொல்கிறாரே' என்றுதான் எனக்கும் எரிச்சல் வந்தது.

ஆனால் மேலும் ஆழமாகப் படிக்கையில் தற்போது இந்தியாவில் வெளிப்படையாகக் காணப்படும் சில விஷயங்களைத்தான் நைபால் சாடுகிறார் என்பது எனக்குப் புரிந்தது.

நான் புரிந்து கொண்ட அந்த விஷயங்கள்:

1) ஸ்பானியப் படையெடுப்பகளில் மெக்ஸிக, பெரு கலாச்சாரங்கள் அழிந்தொழிந்தது போல், இந்தியா என்ற நீண்ட தொன்மையான பாரம்பரியம் கொண்ட நாட்டின் கலாச்சாரம் இஸ்லாமியப் படையெடுப்பகளில் சிதைந்து அழிந்தது. ஆனால் அப்படி ஒரு கலாச்சாரம் அழிந்ததன் மன வருத்தமோ, அதைப் பற்றிய பிரக்ஞையோ, ஒரு வரலாற்றுணர்வோ இன்றைய இந்தியர்களிடம் கிடையாது.


2) சுதந்திரப் போராட்ட இயக்கம் அறுநூறு வருடங்களாக நடந்த பேரழிவைப் பற்றிய கவனத்தை திசை திருப்பியது. சுதந்திரம் பெற்ற பின்னரும் இந்திய அரசியல் எண்ணங்களின் கற்பனை மயக்கங்களும், அலட்சியமும் பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து மீண்ட இந்தியாவில் தன் பாரம்பரியத்தைப் பற்றிய பிரக்ஞையோ, பெருமிதமோ இல்லாத ஒடுக்கமான சமுதாயத்தைத்தான் உருவாக்கின.


'இஸ்லாமியப் படையெடுப்புகளுக்கு முந்தைய இந்தியா' - இப்படி ஒரு விஷயத்தைப் பற்றி இன்று நம்மால் 'இந்தியா'வில் ஒரு மத அடிப்படையாளர் என்று தூற்றப்படாமல் தைரியமாகப் பெருமிதத்துடன் பேச முடியுமா? இந்தியக் கலாச்சாரம், பூர்வகுடி மக்களின் நம்பிக்கைகள் பற்றியெல்லாம் பேசுவதே ஒரு பாவம் என்ற பிம்பத்தை போலி மதச்சார்பின்மையும், அரசியல் உள்நோக்கங்கள் கொண்ட ஊடகங்களும் இன்று நம்மிடையே ஏற்படுத்தியிருக்கின்றன. அந்த அளவுக்கு நம்முடைய சுய கெளரவம் செத்துப் போயிருக்கிறது. நைபால் சொல்வதைப் போல, பூர்வகுடி மக்களுக்கிருந்த தன்னம்பிக்கையும், பெருமிதமும் நமக்கு இன்று இல்லை. இஸ்லாமியப் படையெடுப்பாளர்கள் அழித்து மிச்சம் வைத்த கட்டுமானங்களையும், நம்பிக்கைகளையும் இன்றைய அரசியல், ஊடக சூழல்கள் சிதைத்துக் கொண்டிருக்கின்றன. மறைமுகமாக நம் கலாச்சாரம் மீது நமக்கே ஒரு வெறுப்புணர்வு தோன்றுமளவுக்கு இந்த அறிவுஜீவிகள் மாற்றியிருக்கிறார்கள். இதைப் பற்றியெல்லாம் வெளிப்படையாகப் பேசுவதே நம் 'இறையாண்மை'க்கு ஆபத்தான விஷயங்கள் என்ற உணர்வும் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. ஆனால் 'இந்து என்றால் திருடன் என்று அர்த்தம்' என்று சொல்லலாம், பல நூறாண்டுகால நம்பிக்கைகளை காலில் போட்டு மிதிக்கலாம் நமக்கு வலிக்காது. எந்த பிரக்ஞையுமில்லாமல் கேட்டுக் கொண்டுதானிருப்போம். இவையெல்லாம், மாசுக் கலப்பு, திறந்தவெளிக் கழிப்பிடங்கள் போன்று நம் இருத்தலில் இரண்டறக் கலந்துவிட்ட விஷயங்கள். யாரோ ஒரு வெளிநாட்டுக்காரர் வந்து பார்த்து விட்டு வருத்தப்படப் போகிறார். அவ்வளவுதானே?


இந்தக் கட்டுரையில் என்னை ஆச்சரியப்படுத்தியிருக்கும் விஷயம் தன் படைப்புக்கான ஒரு இலக்கிய வடிவத்தைத் தேர்ந்தெடுக்க நைபால் எடுத்துக்கொள்ளும் சிரத்தை. ஒரு புதினம் எழுத இவ்வளவா யோசிப்பார்கள் என்று எண்ண வைக்கிறார். தனக்குத் தெரிந்த எல்லா விஷயங்களையும் எப்படியாவது புதின வடிவில் சொல்லி விடவேண்டும் என்று பிரயத்தனப்படுபவர்கள் இருக்கும் நம் நாட்டில், 'வரலாற்றுப் பிரக்ஞை இல்லாத இந்தியாவில் புதின வடிவில் மிக மேலோட்டமான விஷயங்களையே சொல்ல முடியும்' என்று அடித்துக் கூறுகிறார். மிகத் தொன்மையான கோயில்களையே ஒழுங்காகப் பாதுகாத்துப் பராமரிக்கத்தெரியாத நம்மிடம் ஒரு புதினத்தைப் படிப்பதற்கெல்லாம் வரலாற்றுப் பிரக்ஞையை எதிர்பார்ப்பது நல்ல வேடிக்கைதான்!
எழுதுவதும், படிப்பதும் - ஒரு சுய விவரிப்பு - வி.எஸ்.நைபால் கட்டுரையின் எழாம், எட்டாம் பகுதிகள்


[Seventh and Eigth parts of ‘Reading and Writing - A personal account’. An essay by V.S.Naipaul]


எனக்கு இந்தியா பெரும் மனக்காயம் அளித்தது. இந்தியா ஒரு போற்றிப் புகழப்பட்ட நாயகமான நாடு. அதே நாட்டின் பெரும் வறுமையிலிருந்துதான் என் முன்னோர்கள் 19-ஆம் நூற்றாண்டின் இறுதிகளில் தப்பித்து வெளியே ஓட வேண்டியிருந்தது. இந்த இரண்டு இந்தியாக்களும் வெவ்வேறாக இருந்தன. சுதந்திர இயக்கத்தைக் கொண்ட அரசியல் ரீதியான இந்தியா பெருமிதமளிக்கும் பெயர்களால் புகழாரம் செய்யப்பட்டிருந்தது. தனிப்பட்ட வாழ்க்கையுடன் தொடர்புடைய இன்னொரு இந்தியா வெளியுலகிலிருந்து ஒளிக்கப்பட்டிருந்தது; நினைவுகள் மங்கியபோது மறைந்தும்போனது. அந்த இந்தியாவைப் பற்றி நாம் படித்துத் தெரிந்து கொள்வது சாத்தியமில்லை. அது கிப்லிங்கோ, E.M.ஃபார்ஸ்டரோ அல்லது சாம்செட் மாமோ எழுதிய இந்தியா இல்லை. அந்த இந்தியா நேரு, தாகூர் போன்றவர்களால் அறியப்பட்ட வசீகரமான இந்தியாவிலிருந்து வெகு தொலைவிலிருந்தது. (பிரேம்சந்த் [1880-1936] என்றொரு எழுத்தாளர் இருந்தார். அவருடைய எழுத்துகள் நிஜமான கடந்தகால இந்திய கிராம வாழ்க்கையைக் காட்டியிருக்கும். ஆனால் நாம் மனிதர்களைப் பற்றி அப்படிப் படித்துத் தெரிந்து கொள்வர்களாயிருக்கவில்லை).


நேரம் வந்தபோது இந்த தனிப்பட்ட வாழ்க்கையுடன் தொடர்புடைய இந்தியாவுக்குதான் நான் சென்றேன்; பெருமிதமளிக்கும் பெயர்களால் புகழாரம் செய்யப்பட்ட இந்தியாவுக்கில்லை. ஆனால் இந்தியாவில் நான் பார்க்க நேர்ந்த அலட்சிய மனோபாவத்துக்கு (dereliction) எதுவும் என்னைத் தயார்படுத்தியிருக்கவில்லை. எனக்குத் தெரிந்த வேறெந்த நாடும் அத்தனை இழிநிலைகளின் (wretchedness) அடுக்குகளைத் தன்னகத்தே கொண்டதாயிருக்கவில்லை. எனக்குத் தெரிந்திருந்த நாடுகளில் சில நாடுகளே இந்தியாவுடன் ஒப்பிடும் அளவுக்கு மக்கள் அடர்த்தியைக் கொண்டதாயிருந்தன. உலகின் மற்ற பகுதிகளிலிருந்து தனித்து, ஒரு மர்மமான பேரழிவைச் சந்தித்த ஒரு கண்டத்திலிருப்பதைப் போல் இந்தியாவுக்குச் சென்றபோது நான் உணர்ந்தேன். ஆனால், நானறிந்த நவீன இந்திய, ஆங்கிலப் படைப்பு ஒன்றில் கூட, இந்தப் பேரழிவு ஒரு கருப்பொருளாக, முன்னணியில் இருந்திருக்கவில்லை என்ற விஷயம் எனக்கு மிகுந்த ஆச்சரியமளிப்பதாக இருந்தது. கிப்லிங் எழுதிய ஒரு ஆங்கிலக் காதல் கதையில் பின்னணியில் இந்தியாவின் பஞ்சம் சொல்லப்பட்டிருந்தது. ஆனால் பொதுவாகவே இந்திய, ஆங்கிலப் படைப்புகளில் இந்தியாவின் மிகப்பெரும் துன்பம் பின்னணியில் படிக்கப்படவேண்டிய ஒரு விஷயமாகவே கண்டுகொள்ளப்பட்டது. மேலும், எப்போதும் போலவே, இந்த இந்தியத் துன்பத்தில் ஒருவித சிறப்பான ஆன்மிகத் தன்மையைக் கண்டுகொள்பவர்களும் இருந்தார்கள்.


காந்தியின் சுயசரிதையான சத்தியசோதனையில்தான், தென்னாப்பிரிக்காவிலிருந்த பாதுகாப்பில்லாத இந்தியத் தொழிலாளர்களின் இழிநிலையைச் சொல்லும் பகுதிகளில், நேரடியாக இல்லாமல் மிகக்குறைந்த நேரம், இந்தியாவில் நானடைந்த மழுங்காத மனக்காயத்தின் வலி சொல்லப்பட்டிருப்பதைக் கண்டேன்.


அதன்பின் என் இந்தியப்பார்வையில் ஒரு புத்தகத்தை எழுதினேன். ஆனால், என் மனக்காயத்திலிருந்து என்னால் விடுபடமுடியவில்லை. பல்வேறு மனநிலைகளில் நிறைய எழுதியபின்புதான், தன் கடந்தகாலம் பற்றிய இந்தியாவின் உதாசீன மனப்பாங்கு மீதான என் மனவேதனையைத் தாண்டி என்னால் சிந்திக்க முடிந்தது. இந்தியாவின் கடந்தகாலம் பற்றிய இந்திய அரசியல் கொள்கைகளின் சார்புகளும், மனமயக்கங்களும் தந்த மனக்காயத்திலிருந்து விடுபட நேரம் பிடித்தது. பிரிட்டிஷ் காலனியாதிக்கத்துக்கு எதிரான சுதந்திரப் போராட்டம், பிரிட்டிஷ் வருகைக்கு முன்னால் இந்தியா சந்தித்த பேரழிவுகளை மறைத்து விட்டது. பேரழிவுகள் நடந்ததற்கான சாட்சியங்கள் மிக எளிதாக எல்லா இடங்களிலும் இருக்கின்றன. ஆனால் சுதந்திர இயக்கம் ஒரு மதம் போன்றிருந்தது; தான் பார்க்க விரும்பாத விஷயங்களை அது பார்க்கவில்லை.
கி.பி.1000-ஆம் ஆண்டுக்குப் பின், அறுநூறு வருடங்களுக்கும் மேலாக முஸ்லிம் ஆக்கிரமிப்பாளர்கள் இந்தியத் துணைக்கண்டத்தைத் தன் இஷ்டம் போல் கொள்ளையடித்தார்கள்; பேரரசுகளையும், அரசாங்கங்களையும் ஏற்படுத்தினார்கள்; தங்களுக்குள்ளேயும் சண்டை போட்டுக்கொண்டார்கள். அவர்கள் வட இந்தியாவின் உள்நாட்டு மதங்களின் கோயில்களை அழித்தார்கள். தெற்கேயும் வெகுதூரம் பரவி கோயில்களை அழித்து அசிங்கப்படுத்தினார்கள்.


இருபதாம் நூற்றாண்டின் இந்திய தேசியத்துக்கு அந்த நூற்றாண்டுகளின் தோல்வி சங்கடம் அளிப்பதாக இருந்தது. வரலாறு திருத்தப்பட்டது. பிரிட்டிஷ் வருகைக்கு முன்பிருந்த ஆட்சியாளர்களும் - ஆட்சி செய்யப்பட்டவர்களும், நாட்டைக் கையகப்படுத்தியவர்களும் - அடிமைப்பட்டவர்களும், ஒரு மதத்தின் நம்பிக்கையாளர்களும் - அதில் நம்பிக்கையில்லாதவர்களும், ஒன்றாக ஒரே அணியில் சேர்ந்தனர். பெரும்பலம் பொருந்திய பிரிட்டிஷ் அடக்குமுறை முன்னால் அப்படி இணைந்தது ஒரு விதத்தில் புரிந்து கொள்ளக்கூடிய ஒன்றாக இருந்தது. இருந்தாலும் பிரிட்டிஷ் வருகைக்கு முன்பான இந்தியாவின் தன்னிறைவான பூரணத்துவத்தைப் (wholeness) பிரகடனப்படுத்த இந்திய தேசிய எழுத்தாளர்கள், முஸ்லிம்களின் வருகைக்கு முன்னாலிருந்த ஐந்தாம், ஏழாம் நூற்றாண்டு இந்தியாவைப் பற்றிதான் எழுத வேண்டியிருந்தது. அந்த நூற்றாண்டுகளில் இந்தியா சிலருக்கு உலகின் மையமாக இருந்தது. சீனாவைச் சேர்ந்த புத்த மாணவர்கள் இந்தியாவின் புத்த கல்வி மையங்களுக்கு புனிதப் பயணமாக வந்தார்கள்.


14-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த, மொராக்கோவின் இஸ்லாமிய இறையியல் அறிஞரும், உலகப் பயணியுமான இபின் படுடா(Ibn Battuta) இந்த இந்திய பூரணத்துவத்துடன் எளிதாகப் பொருந்தவில்லை. இபின் படுடா உலகிலிருந்த அனைத்து முஸ்லிம் நாடுகளுக்கும் செல்ல ஆசைப்பட்டார். எங்கெல்லாம் அவர் சென்றாரோ அங்கு முஸ்லிம் மன்னர்களின் ஆதரவைப் பெற்றுக்கொண்டு பதிலுக்குத் தன் தூய்மையான அரேபிய விசுவாசத்தைக் கொடுத்தார்.


முஸ்லிம்கள் கைப்பற்றிய நாடென்ற வகையில் இந்தியாவுக்கும் அவர் வருகை தந்தார். அவருக்கு ஐந்து கிராமங்களின் வருமானங்கள் (அல்லது தானியங்கள்) மானியமாகக் கொடுக்கப்பட்டன. பஞ்ச காலமாக இருந்தபோதும் மேலும் இரண்டு கிராமங்கள் அவருக்கு வழங்கப்பட்டன. மொத்தம் ஏழு வருடங்கள் அவர் இந்தியாவில் தங்கியிருந்தார். ஆனால், இறுதியில் அவர் தப்பித்துதான் ஓட வேண்டியிருந்தது. இபின் படுடாவின் புரவலர், தில்லி முஸ்லிம் பேரரசருக்கு ரத்தம், தினசரி மரணதண்டனை (மற்றும் சித்திரவதை) இதிலெல்லாம் பெரும் விருப்பமிருந்தது. தன் அவையினர் முன்னால் தண்டனையை நிறைவேற்றி மூன்று நாட்களுக்கு மனித உடல்களை அவையிலேயே விட்டுவைத்திருந்தார். இபின் படுடா உலகெங்குமிருந்த முஸ்லிம் கொடுங்கோலர்களைப் பற்றியும், அவர்கள் செய்கைகளைப் பற்றியும் அறிந்திருந்தாலும் அவருக்கே பயமேற்பட்டுவிட்டது. அவரைக் கண்காணிப்பதற்காக நான்கு காவலர்கள் நியமிக்கப்பட்டபோது தன் முறை வந்துவிட்டது என்று அவருக்குத் தெரிந்துவிட்டது. ஏற்கனவே அவர் பேரரசரை பல்வேறு பொருட்களை வேண்டி நச்சரித்துக் கொண்டிருந்தார். தனக்களிக்கப்படும் பரிசுப்பொருட்களை அவர் பெற்றுக்கொள்வதற்கு முன்னரே அரசு அலுவலர்கள் உருவிக்கொண்டுவிடுகிறார்கள் என்றெல்லாம் பாதுஷாவிடம் புகார் செய்து கொண்டிருந்தார். தற்போது, கொடுங்கோலரசர் மீதான பயத்தின் உத்வேகத்தில் உலக ஆசைகளைத் துறந்து நோன்பிருப்பதாகப் பிரகடனப் படுத்திக்கொண்டார்; ஐந்து நாட்கள் ஆகாரமின்றி விரதமிருந்து குர்-ஆனைப் படித்தார்; அடுத்த முறை அரசரை சந்தித்தபோது ஒரு யாசகரைப் போல் உடையணிந்திருந்தார். இபின் படுடாவின் கோலம் பாதுஷாவின் பாறை இதயத்தையும் இளக்கியது; உயரிய எண்ணங்களை நினைவூட்டியது. இபின் படுடா திரும்பிப்போக அனுமதிக்கப்பட்டார்.
இபின் படுடாவின் குறிப்புகளில் உள்ளூர் பூர்வகுடி மக்களைப் பற்றி ஏனோதானோவென்று ஒரு ஒப்புக்குதான் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. அவர்களெல்லாம் கிராமங்களிலிருந்த பண்ணையாட்களாகவோ (அரசர்கள் சொத்தான இவர்கள் இபின் படுடாவுக்குக் கொடுக்கப்பட்ட மானியங்களின் ஒரு பகுதி) அல்லது சாதாரண அடிமைகளாகவோ இருந்தனர். (இபின் படுடாவுக்கு அடிமைப் பெண்களுடன் பயணிப்பதில் விருப்பமிருந்தது). அடிமைப்படுத்தப்பட்ட மக்களின் (மத)நம்பிக்கைகள் தொன்மையானவை. ஆனால் ஒரு முஸ்லிம் இறையியல் அறிஞருக்கு அவற்றில் ஆர்வமிருந்திருக்கவில்லை. தில்லியில் அம்மக்களின் நாயகர்கள் தூக்கியெறியப்பட்டிருந்தார்கள். அந்த நாடு அம்மக்களுக்கு சொந்தமானதாக அதற்கு மேலும் இருந்திருக்கவில்லை. ஒரு வெளிநாட்டு அரசருக்கு அந்நாடு புனிதமானதென்றெல்லாம் தோன்றவில்லை.


தங்கள் கலாச்சாரம் மீதான இந்தியர்களின் உதாசீனம் மிகுந்த மனோபாவத்தின் தொடக்கத்தை இபின் படுடாவின் குறிப்புகளில் காண முடிகிறது. பதினேழாம் நூற்றாண்டின் பயணிகளான தாமஸ் ரோ, பெர்னியர் ஆகியோருக்கு மொகலாயப் பேரரசர்களின் அரண்மனைகளுக்கருகே, குடிசைகளில் வாழ்ந்த மக்களின் இழிநிலை, அரசாள்பவர்களின் படோபடத்தைப் பார்த்து பரிகசிப்பது போலிருந்தது. 1858, 1859-ஆம் வருடங்களில் இந்தியக் கலகத்தைப் பற்றி ‘தி டைம்ஸ்’ பத்திரிகைக்கு தகவல் சேகரித்து, கல்கத்தாவிலிருந்து பஞ்சாபுக்கு மெதுவாகப் பயணித்த வில்லியம் ஹோவார்ட் ரஸ்ஸல் (William Howard Russel) இந்தியா எங்கெங்கும் பழைய இடிபாடுகளில் இருந்தது என்று குறிப்பிடுகிறார். “அரைப் பட்டினியாக இருந்த (குழிவிழுந்த தொடையுடனிருந்த - “Hallow-thighed”) பொதுமக்கள் தம்போக்கில் அடிமைப்பாங்கான வேலைகளைச் செய்து கொண்டு, முந்தைய ஆட்சியாளர்களுக்கு சேவகம் செய்தது போலவே பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கும் சேவகம் செய்து வந்தார்கள்” என்றும் குறிப்பிடுகிறார்.
என் சிறுவயதில் சரியான வார்த்தை தெரியாவிட்டாலும் இந்தியாவின் ‘பூரணத்துவம்’ (wholeness) என்ற விஷயத்தில் எனக்கு நம்பிக்கை இருந்தது. ராம்லீலாவும், எங்களுடைய மதச் சடங்குகளும் அந்த பூரணத்துவத்தின் ஒரு பகுதியாக இருந்தன. அந்த பூரணத்துவத்தை நாங்கள் இந்தியாவில் விட்டுவிட்டு வந்திருந்தோம். பல ஆண்டுகள் கழித்து இந்தியப் பயணத்தில் எனக்குக் கிடைத்த ‘கடந்த காலத்தைப் பற்றிய கருத்து’, அந்த மயக்கத்தை உடைத்தெறிந்தது. ஸ்பானியப் படையெடுப்பாளர்கள் முன்னால் மெக்ஸிக, பெரு கலாச்சாரங்கள் எப்படி ஒன்றுமே இல்லாமல் போனதோ அதுபோல் முஸ்லிம் ஆக்கிரமிப்பாளர்கள் முன்னால், இந்தியாவிலிருந்து வெகு தொலைவிலிருந்த எங்கள் காலனியில் பழமையானதும், சிதைந்து போகாததென்றும் நினைத்து நாங்கள் பல்வேறு விதமாக சிறந்த மரியாதை செலுத்தி வந்த எங்கள் தொன்மையான நாகரிகம் சிதைந்து போயிருந்தது; பாதி அழிந்து விட்டிருந்தது.


******

ஒவ்வொரு அனுபவத்தைச் சொல்வதற்கும் ஒரு முறையான வடிவம் (Form) இருக்கிறது. ஆனால் என்னுடைய இந்திய அனுபவத்தை என்ன விதமான புதினமாக எழுதியிருப்பேன் என்று எனக்குத் தெரியவில்லை. புனைகதை வடிவமானது, விதிகள் நன்றாக அறியப்பட்ட எல்லைகளுக்குட்பட்ட கலாச்சார, அறநெறித் தளங்களில் சிறப்பாக இயங்குகிறது. அந்தக் கட்டுப்பாடான தளத்தில் இயங்கும் புதினம், உணர்வுகளை, மனக்கிளர்ச்சிகளை, அறநெறி எதிர்பார்ப்புகளை மிகச்சிறப்பாக வெளிப்படுத்துகிறது. பிற இலக்கிய வடிவங்களில் இவ்விஷயங்கள் தொடமுடியாததாகவோ, முழுமையற்றதாகவோ இருக்கும்.


என்னுடைய அனுபவம் எனக்கென்று பிரத்யேகமாக ஏற்பட்டது. அதை ஒரு புதினமாக எழுதுவதென்றால், என்னைப் போன்ற ஒருவரை சிருஷ்டித்து, ஏதேனும் ஒரு காரணம் காட்டி அவரை இந்தியாவுக்கு எடுத்து சென்றிருக்க வேண்டும். கிட்டத்தட்ட என் உண்மையான அனுபவத்தை நான் பிரதிபலித்திருக்க வேண்டும். ஆனால் அதனால் பயனேதுமில்லை. செபஸ்டபோல் முற்றுகையை நெருக்கமாகக் காட்டி, மேலும் உண்மையாக நாம் உணர்வதற்காய் டால்ஸ்டாய் புனைகதை வடிவத்தைத் தேர்ந்தெடுத்தார். ஒருவேளை அத்தனை வித்தைகளையும் கைக்கொண்டு இந்தியாவைப் பற்றி நானொரு புதினம் எழுதியிருந்தால் அது ஒரு விலைமதிப்பில்லாத அனுபவத்தை பொய்யாக்கியது போலிருந்திருக்கும் என்று நினைக்கிறேன். அனுபவத்தின் மதிப்பு அதன் நுண்ணியமான தனித்தன்மையில் இருக்கிறது. அதை என்னால் முடிந்த அளவுக்கு நேர்மையாக வெளிக்கொணர வேண்டும்.
எளிதாகப் பின்பற்றமுடியும் என்பது போல் தோன்றிய, வசீகரமான பெருநகர (metropolitan) இலக்கிய வடிவமான புதினம், அகன்ற கல்விக்கான வாய்ப்பு, வரலாறு பற்றிய ஒரு கருத்து, சுய-அறிவைப் பற்றிய அக்கறை போன்ற சமுதாயத்தைப் பற்றிய பெருநகர அனுமானங்களக் கொண்டிருக்கிறது. இந்த அனுமானங்கள் தவறாகிப் போகும் இடங்களில், அகன்ற கல்வி அரைகுறையாகவோ, இல்லவே இல்லாமலோ போகும் இடங்களில், இந்தப் புதின வடிவத்தில் வெளிப்படையாகத் தோன்றும் புறக்காரணிகளைப் பற்றி சொல்வதைத் தாண்டி மேலே சொல்ல முடியுமா என்று தெரியவில்லை. ஜப்பானியர்கள் இந்தப் புதின வடிவத்தைக் கற்றுக் கொண்டு, தங்கள் வளமான இலக்கிய, வரலாற்றுப் பாரம்பரியங்களில் ஒன்றாகச் சேர்த்துக் கொண்டார்கள். எல்லாம் சரியாகப் பொருந்திப் போயின. ஆனால் கடந்த காலத்தைப் பற்றிய நினைவுகள் சிதைந்து போன, வரலாறைப் பற்றித் தெரிந்து கொள்ளாமலோ, தெரிந்து கொள்ளமுடியாமலோ, தடைசெய்யப்பட்டதாகவோ ஆகிப்போன இந்தியாவில், மேற்கிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட இந்தப் புதின வடிவத்தால், இருட்டிலிருக்கும் அரைகுறை வெளிச்சமடிக்கும் ஜன்னலைப் போல, ஒரு அரைகுறை உண்மையைச் சொல்வதைத் தாண்டி வேறெதுவும் சொல்லமுடியுமா என்று எனக்குத் தெரியவில்லை.


நாற்பது, ஐம்பது வருடங்களுக்கு முன்னால், இந்திய எழுத்தாளர்கள் அவ்வளவாகப் பொருட்படுத்தப்படாமலிருந்தபோது, எங்களைப் போன்ற எழுதுவதில் ஆர்வமிருந்தவர்களுக்கு (என் தந்தையும் இதில் அடக்கம்) ஆர்.கே.நாராயண் ஒரு ஆறுதலாகவும், எடுத்துக்காட்டாகவும் இருந்தார். இந்திய வாழ்க்கையைப் பற்றி நாராயண் ஆங்கிலத்தில் எழுதினார். அது உண்மையில் மிகவும் கடினமான விஷயம். நாராயண் அவ்வாறு எழுதுவதில் எழும் பிரச்சினைகளைக் கண்டு கொள்ளாமலிருந்ததன் மூலம் அவற்றுக்குத் தீர்வு கண்டார். அவர் இலேசாகவும், நேரடியாகவும், மிகக் குறைந்த சமுதாய விளக்கங்களுடனும் எழுதினார். அவருடய ஆங்கிலம் மனதுக்கு நெருங்கியதாகவும், எளிமையாகவும், சுத்தமாக ஆங்கிலேய சமுதாயத் தொடர்புகளுமற்று இருந்ததால் விசித்திரமானதாகத் தெரியவேயில்லை. அவர் எப்போதுமே தன்னுடைய கலாச்சாரத்துக்குள்ளிருந்தே எழுதுவது போல் தோன்றினார்.


அவர் ஒரு தென்னிந்திய சிறு நகர மக்களைப் பற்றி எழுதினார். சிறிய (எளிய) மக்கள். பெரிய பேச்சு, சிறிய (எளிய) செயல்கள். அங்கேதான் அவர் ஆரம்பித்தார். ஐம்பது வருடங்களுக்குப் பின்னும் அவர் அங்கேயேதான் இருந்தார். அது ஒருவகையில் நாராயணின் சொந்த வாழ்க்கையைப் பிரதிபலிப்பதாக இருந்தது. அவர் எப்போதுமே தன்னுடைய பூர்விகத்தை விட்டு வெகுதூரம் இடம் பெயர்ந்து வசித்திருக்கவில்லை. நாராயண் வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டிருந்தபோது 1961-இல் லண்டனில் அவரைச் சந்தித்தேன். அப்போது இந்தியாவுக்குத் திரும்பிப் போகவிருந்தார். தன் சொந்த ஊருக்குத் திரும்பி, கையில் வெயிலுக்குக் குடை பிடித்துக் கொண்டு தன்னுடைய கதாபாத்திரங்களுடன் உலவுவதற்காகக் காத்துக் கொண்டிருந்தார்.


உண்மையிலே அவர் தன் கதைகளின் உலகத்தைத் தன்னுடையதாகக் கொண்டிருந்தார். அது முழுமையானதாகவும், எப்போதும் அவருக்காகக் காத்துக் கொண்டிருந்தும் இருந்தது. உண்மையான வெளியுலகின் மாறுதல்கள் நாராயணின் உலகத்தை அடையும் முன்னரே அவை மடிந்து விடும் அளவுக்கு அந்த உலகம் வெளியுலகிலிருந்து வெகு தொலைவிலிருந்தது. 1930, 40-களில் சூடுபிடித்திருந்த சுதந்திரப் போராட்ட இயக்கம் கூட அவர் கதைகளின் உலகிலிருந்து தொலைவில்தான் இருந்தது. பிரிட்டிஷ் ஆட்சியின் இருப்பு வெறும் இடப்பெயர்கள், கட்டடப் பெயர்களால்தான் சுட்டப்பட்டிருந்தது. நாராயணின் அந்த அக இந்தியா, தனக்குத்தானே மிகவும் முக்கியத்துவம் கொடுத்துக் கொண்டிருந்த புற இந்தியாவைப் பழிப்பது போலிருந்தது; தன் போக்கில் போய்க்கொண்டிருந்தது.


“பேரரசுகள் எழுந்தன. வீழ்ந்தன. மாளிகைகளும், அரண்மனைகளும் தோன்றின, மறைந்தன. மொத்த நாடும் தீக்கிரையானது. ஆக்கிரமிப்பாளரின் வாளில் துண்டானது. ஸரயு நதி கரை புரண்டோடியபோது கழுவிவிடப்பட்டது போல் அழிந்து போனது. ஆனால் எப்போதும் அந்த நாடு மறுபிறப்பெடுத்து வளர்ந்தது”.


ஆர்.கே.நாராயணின் ஒரு ‘அகநிலை உணர்வு பெற்ற’(mystic) படைப்பில் வரும் இந்தப் பத்தியில் நெருப்பும், தோல்வியைச் சந்தித்த வாளும் ஒரு பொழிப்பாகத்தான் (abstractions) சொல்லப்பட்டிருக்கின்றன. உண்மையான துன்பம் சொல்லப்படவில்லை. மறுபிறப்பும் மாயமாக நடந்தது. நாராயண் படைப்புகளின் எளிய மனிதர்கள், முக்கியத்துவமில்லாத வேலைகளைச் செய்து, சொற்ப சம்பளத்தில் ஜீவனம் செய்தார்கள். தின வாழ்க்கையின் சடங்குகளே இவர்களை ஆட்சி செய்தன. அதிலேயே திருப்தியும் அடைந்திருந்த அவர்கள் வரலாறிலிருந்து பிரித்து வைக்கப்பட்டிருந்தார்கள். நெருங்கிப் பரிசோதிக்கையில் அவர்களுக்கு மரபுவழி என்று எதுவும் இருக்கவில்லை; அப்பா, தாத்தாவைத் தாண்டிய முன்னோர்களைத் தெரிந்திருக்கவில்லை. அவர்கள் தொன்மையான கோயில்களுக்குச் சென்றார்கள். ஆனால் அக்கோயில்களைக் கட்டியவர்களுக்கிருந்த தன்னம்பிக்கை அவர்களுக்கு இல்லை. அவர்களால் நீண்டு நிலைத்திருக்கும் எதையும் கட்ட முடியாது.


ஆனால் அவர்கள் வசித்த நாடு புனிதமானது. அதற்கென்று கடந்த காலம் என்ற ஒன்று இருந்தது. மேற்கூறிய அதே படைப்பில் ஒரு கதாபாத்திரத்துக்கு இந்தியாவின் கடந்த காலத்தை நிலைக்காட்சிகளாகக் (tableaux) காணும் ஒரு வரம் கிடைக்கிறது. முதல் காட்சி (கி.மு.ஆயிரமாவது ஆண்டுகளின்) இராமயணத்திலிருந்து வருகிறது. இரண்டாவது காட்சி கி.மு.ஆறாம் நூற்றாண்டின் புத்தர். மூன்றாம் காட்சி கி.பி.6-ஆம் நூற்றாண்டின் ஆதி சங்கரர். அதன் ஆயிரம் வருடங்களுக்குப் பின்னர் நிகழும் பிரிட்டிஷ் வருகையை நான்காம் காட்சி காட்டுகிறது.


முஸ்லிம் படையெடுப்புகளையும், அவர்கள் ஆட்சிகளையும் கொண்ட நூற்றாண்டுகள் இந்த நிலைக்காட்சிகளிலிருந்து விடுபட்டிருக்கின்றன. நாராயண் தன் குழந்தைப்பருவத்தின் ஒரு பகுதியை மைசூர் மாகாணத்தில் கழித்திருந்தார். மைசூரை ஒரு ஹிந்து மகாராஜா ஆட்சி செய்து வந்தார். பிரிட்டிஷ் அரசாங்கம் முஸ்லிம் அரசரைத் தோற்கடித்து அந்த ராஜாவை அரியணையில் அமர்த்தியிருந்தது. அந்த ராஜா செல்வாக்கு மிகுந்த குடும்பத்திலிருந்து வந்தவர். அந்தக் குடும்பத்தினர் தென்னிந்தியாவின் கடைசி இந்துப் பேரரசில் மாகாண ஆளுநர்களாகப் பதவி வகித்தவர்கள். கி.பி.1565-இல் அந்தப் பேரரசு முஸ்லிம்களால் தோற்கடிக்கப்பட்டிருந்தது. அந்தப் பேரரசின் தலைநகரம் (அந்நகரம் செயல்படக்காரணமாக இருந்த அறிஞர்களைக் கொண்ட மனிதவளத்துடன் சேர்த்து) கிட்டத்தட்ட முழுவதுமாக அழிக்கப்பட்டது. இந்த இடத்திலிருந்தும் ஒரு பேரரசு தோன்றியிருக்கக்கூடுமா என்று எண்ணுமளவுக்கு அந்த இடம் சிதைந்தும், மனித ஆக்க சக்தியுமில்லாமலும் போயிருந்தது. கொள்ளை, வெறுப்பு, இரத்தம், மேலும் இந்துக்களின் தோல்வி ஆகியவற்றை நான்கு நூற்றாண்டுகளுக்குப் பின்னும் பறை சாற்றும் அந்நகரின் இடிபாடுகள் மைசூரிலிருந்து ஒரு நாளுக்குள்ளான பயணத்தொலைவில்தான் இருக்கிறது.


நாராயணின் உலகம் மேற்பார்வைக்குத் தெரிவது போல் வேர் கொண்டதோ(rooted), முழுமையானதோ இல்லை. அவருடைய எளிய மனிதர்கள் கடந்த காலமென்று தாங்களாக மனதில் நினைத்திருந்த விஷயத்தைப்பற்றி கனவு கண்டார்கள். அவர்களுடைய கடந்த காலத்தில் ஒரு மிகப்பெரிய வெற்றிடம் இருந்தது. அவர்கள் வாழ்க்கை சிறியதாக, ஒடுக்கமானதாக (small) இருந்தது. பிரிட்டிஷ் காலனிச் செயல்பாடுகளின் புதிய, எளிய கட்டமைப்புகளான பள்ளிக்கூடம், சாலை, வங்கி, நீதிமன்றம் போன்றவற்றைக் கொண்ட ஒடுங்கிய சமூகம்தான் பேரழிவின் இடுபாடுகள் நிரம்பிய சூழலிலிருந்து முளைத்து வர அனுமதிக்கப்பட்டது. நாராயணின் புத்தகங்களில், வரலாறைச் சொல்லும் இடங்களில், ஒரு அறிவார்ந்த, சாஸ்வதமான இந்து வாழ்க்கையைப் பற்றித் தெரிவதை விட, பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து திரும்பக்கிடைத்த அமைதிதான் தெரிகிறது.


எனவே இந்தியாவில் பிரிட்டிஷ் அல்லது ஐரோப்பாவிலிருந்து பெற்றுக்கொண்ட புதின வடிவத்தைக் கொண்டு, மேலோட்டமான விஷயங்களைச் சொல்வதற்கு மிக நன்றாகக் கற்றுக்கொண்டாலும், அந்த வடிவத்தால் சில சமயங்களில் அந்த மேலோட்டமான விஷயங்களின் மையக்கருத்தைக்கூட (essence) சொல்லமுடியாமல் போக நேரிடும்.
என்னுடைய குடும்பப்பின்னணி, எங்களுடைய இடம்பெயர்வு, ஒரு தலைமுறை வாழ்வில் எங்கள் பாதி நினைவிலிருந்த இந்தியா, திரு.வார்ம் (Mr.Worm) எங்களுக்குப் பாடம் சொல்லித்தந்த பள்ளிக்கூடம், என் அப்பாவின் இலக்கிய இலட்சியம் ஆகியவற்றைச் சரியாகப் புரிந்து கொள்ளாமல் புனைகதை எழுத ஆரம்பித்த நாட்களில், என்னால் வெறும் புறக்காரணிகளைப் பற்றிதான் எழுத முடிந்தது. இன்னும் ஆழமாக எழுதுவதற்கு நான் வேறு வடிவங்களைத் தேடிப் பிடிக்க வேண்டியிருந்தது.
****
sethupathi.arunachalam@gmail.com

நமது அரசியல்வாதிகள் பற்றி வாஸந்தியின் திண்ணைக்கட்டுரை

எனது எண்ணவோட்டங்களை ஒட்டி சுருக்கமாக/தெளிவான நடையில் எழுதப்பட்ட கட்டுரை : எனவே மீள்பதிவு...


Thursday January 17, 2008
கண்ணில் தெரியுதொரு தோற்றம் - 16 நமது அரசியலுக்கும் மக்களின் யதார்த்த வாழ்வுக்கும் சம்பந்தமில்லை

By வாஸந்தி

சமீபத்தில் நான் சென்னையில் சந்தித்த ஒரு பிரபல ஆங்கில ஏட்டின் ஞாயிறுப் பதிப்பின் ஆசிரியர் பதவியில் இருக்கும் தோழி அலுப்பும் வெறுப்புமாகச் சொன்னார்.

" நமது அரசியல் தலைவர்களுக்கும் மக்களுக்கும் இடையே இருக்கும் இடைவெளி நம்பமுடியாத அளவு விரிந்திருக்கிறது. நான் சில கிராமங்களுக்கு வேலை நிமித்தமாகப் போயிருந்தபோது நமது இளைய தலைமுறையினரின் ஆர்வத்துக்கும் தாகத்துக்கும் கொஞ்சமும் பொருத்தமில்லாமல் நமது அரசியல் வாதிகள் போடும் கோஷங்கள் இருப்பதைக் கவனித்தேன். யாருக்காக அவர்கள் அந்த கோஷங்கள் போடுகிறார்கள்? காலாவதியான, இன்றைய யதார்த்தத்துக்குக் கொஞ்சமும் சம்பந்தமில்லாத சித்தாந்தங்களை, பழமைவாத கருத்துக்களை ஏன் தேவையற்ற ஆக்ரோஷத்துடன் முழங்குகிறார்கள்?"

தோழியின் அங்கலாய்ப்பு அர்த்தமுள்ளது என்பதை என்னால் மறுக்கமுடியவில்லை. அவள் தன்னைக் கட்டுப் படுத்திக்கொள்ள இயலாமல் புலம்பித் தீர்த்தாள்.

'இன்றைய தலைமுறை முன்னேறத் துடிக்கிறது. உலகமயமாக்கலுக்குப் பிறகு அதிகரித்துவிட்ட வாய்ப்புகளை உபயோகித்துக்கொள்ளும் அவசரத்தில் எல்லாரும் இருக்கிறார்கள். கிராமத்து இளைஞர்கள் கூட ஆங்கிலக் கல்வியும் கம்ப்யூட்டர் அறிவும் இன்றைய அவசியமான தேவை என்று உணர்ந்துகொண்டு செயல்படுகிற சமயத்தில் தனித் தமிழ் கோஷம் போடுவதிலும் கண்னகி சிலைபற்றின விவாதத்திலும் யாருக்கு அக்கறை இருக்கும்?' என்பது தோழியின் கேள்வி. சுகாதாரம், உள்கட்டமைப்பு போன்ற அடிப்படைத் தேவைகளில் கவனம் செலுத்துவதை விட்டு சித்தாந்த கோஷங்கள் யாருக்கு லாபமென்று போடப்படுகின்றன? யாருக்காக இந்த வேஷம்?

சாமான்ய மக்களுக்கும் நாட்டு அரசியலுக்கும் சம்பந்தமில்லாமல் போய் வெகு காலமாகிறது. கோஷங்களும் வேஷங்களும் இன்றைய அரசியலுக்குத் தேவையான கவசங்கள். அவர்களது இயலாமையை மறைத்துக்கொள்ªவும், தங்களது இருப்பை உறுதி படுத்திக் கொள்ளவும் தேவைப்படும் சாகசங்கள். அரசியல்வாதிகளுக்கு மக்களின் நலனைவிட தங்களது சுய நல அரசியலே முக்கியமாகிப் போனதாகத் தோன்றுகிறது. அவர்களை நாடாளுமன்றத்துக்கும் மாநில அவைக்கும் தேர்ந்தெடுத்து அனுப்பிய சாமான்ய மனிதனுக்கு அவர்கள் பேசும் அரசியல் விளங்கக் கூட இல்லை. விளங்கினாலும் அதைப் பற்றிக் கவலைப் படும் அளவுக்கும் அவனுடைய வாழ்வுடன் அது சம்பந்தப் பட்டதில்லை.

அரசியலில் சித்தாந்தங்கள் நீர்த்துப் போயும் வெகு காலமாயிற்று. நீர்த்துப் போவது தவறில்லை. காலம் மாறும் போது சித்தாந்தங்களும் மாறவேண்டியது அவசியம். ஆனால் வேறு ஒன்றும் உருப்படியாகச் செய்ய முடியாதபோதோ எதிர்கட்சியைத் தாக்கவேண்டிய கட்டாயத்தினாலோ திடீரென்று அவை ஆயுதங்களாக மாறும்போது சாமான்யன் திகைக்கிறான்.சமீப காலமாக ஒவ்வொரு வாரமும் ஏதாவது ஒரு விஷயம் தலையெடுத்து சம்பந்தமில்லாத அவனை வம்புக்கு இழுத்துக் குழப்புகிறது.

அமெரிக்காவுடனான அணு சக்தி ஒப்பந்தத்துக்கு நமது தோழர்கள் தெரிவித்த தீவிர எதிர்ப்பில் நாடு கிடுகிடுத்துப் போனது.இன்னமும் அதன் அதிர்வு தொடர்கிறது. ருஷ்யாவும் சீனாவும் தீவிர கம்யூனிசவாதம் இன்றைய யதார்த்தத்துக்கு ஒத்து வராது என்ற முடிவுக்கு வந்து பல வருடங்கள் ஆகிவிட்டன. ஆனால் நமது இடது சாரி கட்சிகள் மிகத் தீவிர கொள்கை வாதிகளாகத் தொடர்வதால் அவர்களை நம்பி அரசு நடத்தும் மத்தியில் உள்ள கூட்டணி அரசு வெல வெலத்துப் போனது. அணு சக்தி ஒப்பந்தத்தின் நுணுக்கம் எதுவும் எந்தக் கூட்டணி கட்சிக்கும் தெரிந்திருக்கும் என்று எனக்குத் தோன்றவில்லை. அவர்களுக்குப் புரிந்தது ஒரே விஷயம் தான். இடதுசாரிகள் ஆதரவை விலக்கிக் கொண்டால், அரசு கவிழ்ந்து விடுமே? சண்டைபிடித்து பேரம் பேசி வாங்கிய மந்திரிப் பதவிகளும் அதனால் கிடைத்து வந்த இன்னபிற சௌகர்யங்களும் கை நழுவிப் போகுமே? மீண்டும் தேர்தல் வந்தால் இதே அளவு எண்ணிகையுடன் வெற்றிபெறுவது சாத்தியமில்லையே? ஆள் ஆளுக்கு சமாதானங்கள் சொல்ல ஆரம்பித்தது பெரிய கூத்து. ஆரம்பகட்டத்தில் கூட்டணியிலும் அமைச்சரவையிலும் பங்கு கொண்ட எல்லா கட்சிகளும் ஒப்பந்தத்தை ஆதரித்து வரவேற்றிருக்கின்றன. இடது சாரிகள் விலகுவோம் என்று எச்சரித்தவுடன் 'எனக்கு முதலிலேயே இதில் சம்மதமில்லை' என்கிறார் நமது முதல்வர். 'ஒப்பந்தத்தை விட அரசு [நீடித்திருப்பது] முக்கியம்' என்கிறார். மக்கள் மேல் மறுபடி ஒரு தேர்தலை சுமத்துவது நியாயமில்லை என்கிறார்கள் எல்லோரும் அப்போதுதான் மக்களின் நினைவு வந்ததுபோல. அவர்களது கவலைத் தங்களது பதவி நீடிப்புதானே தவிர மக்களைப் பற்றி அல்ல என்பது முட்டாளுக்குக் கூடத் தெரியும்.

இந்த ஒப்பந்தத்துக்காகப் பல மாதங்களாக உழைத்து தனது பெரிய சாதனையாக நினைத்த பிரதமர் மன்மோகன் சிங் முகத்தில் கரி பூசி நிற்கிறார். அவர் சராசரி அரசியல்வாதி இல்லை, கொஞ்சம் கொள்கை உள்ளவர் என்று நினைத்திருந்த என்னைப் போன்ற பலருக்கு அவர் கூனிக்குறுகித் தோல்வியை விழுங்கிக் கொண்டு பிரதமராகத் தொடர்வது மிகப் பெரிய ஏமாற்றம்தான். பதவி, நாற்காலி ஆசை யாரையும் விட்டுவைப்பதில்லை என்று சோர்வு ஏற்படுகிறது .தலைவர்கள் போடும் சண்டையையும் பதவியைத் தக்க வைத்துக்கொள்ள இவர்கள் பரிதவித்து தோப்புக்கரணமும் குட்டிக்கரணமும் போடும் பல்டிகளைக்கண்டு நாடும் மக்களும் வெறுத்துப் போனார்கள். அரசியல் தலைவர்களுக்கே விளங்காத அணு சக்தி ஒப்பந்தம் சாமான்யனுக்கு என்ன விளங்கும்? நாட்டின் நீண்ட கால எரிவாயு திட்டங்களுக்கு இந்த ஒப்பந்தம் மிக முக்கியமானது என்றும் அமெரிக்காவிற்கு சலாம் போடும் அளவுக்கு இந்தியா சிறிய நாடு அல்ல , தன்மானத்தை விட்டுக்கொடுக்க அது பலவீனமானதும் அல்ல என்ற பிரதமரின் வாதத்தை ஏற்க யாருக்கும் பொறுமை இல்லை. முதல் முறையாக பெரிய பலத்துடன் நாடாளுமன்றத்திற்கு வந்திருக்கும் இடதுசாரிகளுக்கு இந்த சந்தர்பத்தைவிட்டால் சவால் விட வேறு தருணம் கிடைக்காது.

இதிலெல்லாம் சித்தாந்தங்களைவிட கட்சிகளின் ஈகோ பிரச்சினையும் சேருகிறது. அமெரிக்காவுடன் இந்தியா நெருக்கமாக இருப்பது மத்திய அரசுக்கு ஆதரவு தரும் இடது சாரிகளுக்கு ,முக்கியமாக சிபிஎம்மின் தலைவர் பிரகாஷ் கராத்துக்கு பெரிய அவமானம். தனது கௌரவத்தைக் காப்பாற்றிக்கொள்வது தேர்தலை சந்திப்பதைவிட அவருக்கு முக்கியமாகிவிட்டதாகத் தோன்றுகிறது. அதே ஈகோ பிரச்சினையில் தமிழக முதல்வரும் மாட்டிக்கொண்டார்.

அணு சக்தி விவகாரத்தில் மன்மோகன் சிங் திணறுவதற்கு முன்பு, சேது சமுத்திர திட்ட விவகாரத்தில் ரகளை ஆனதற்கு இதே காரணம். பல கோடி இந்துக்கள் வழிபடும் ராமரை கருணாநிதி உண்டு இல்லை என்று பண்ணிவிட்டார்! வீம்புக்கு என்னென்னவோ பேசி நம்பிக்கை உள்ள இந்துக்களை அவர் புண்படுத்தியதெல்லாம் 'தனது சொல்லுக்கு மறு சொல்லா' என்கிற எரிச்சலால் வந்த வினையாகத் தோன்றுகிறது. தேர்தலுக்கு நின்றபோது மக்களுக்குக் கொடுக்கப் பட்ட வாக்கைக் காப்பாற்றவேண்டும் என்கிற தீவிரத்தைவிட அது ஒரு மானப் பிரச்சினையாகிப் போனது.

முதலமைச்சர் என்ற பதவியில் இருப்பவர் நிதானம் காக்கவேண்டும் என்பது மறந்துவிடும் அளவுக்கு. உச்ச நீதிமன்றம் வரை விவகாரம் போக, திட்டம் தடை பட்டுப் போனது எதிர்கட்சிகளுக்கு வெற்றி என்கிற எரிச்சல் அவரது கண்னை மறைத்திருக்கும். சுற்றுச் சூழல் ஆர்வலர்களும் பொருளியல் நிபுணர்களும் அந்த திட்டத்தின் லாப நஷ்டத்தைப் பற்றி எழுப்பும் கேள்விகளுக்கு இதுவரை சரியான விளக்கம் அளிக்கப் படவில்லை. உச்சகட்டமாக மத்திய அரசில் தாம் பங்கு கொண்டுள்ளதும், திட்டத்தை அமல் படுத்தும் அமைச்சர் தமது கட்சியைச் சேர்ந்தவர் என்ற நிலையிலும் அவலை நினைத்து உரலை இடித்த கதையாக உச்ச நீதிமன்ற தடையையும் மீறி உண்ணாவிருதம் என்ற பெயரில் தமிழகத்தில் பந்த் நடத்துவது சரியா என்ற கேள்வியைக் கூட்டணிக் கட்சிகளுக்குக் கேட்கும் துணிச்சல் இல்லை. மக்கள் அவர்களுக்கு சம்பந்தமில்லா விஷயத்துக்காக அவர்களது விருப்பமில்லாமலே அவதிக்குள்ளானார்கள். 'ஏன் இந்த உண்ணாவிருதம்'? 'மக்களுக்கு சேது சமுத்திர திட்டம் முக்கியமானது என்று உணர்த்துவதற்காக' என்கிறார்கள். எத்தனை கேலிக் கூத்து! 70 சதவிதம் சேது திட்டப் பணி முடிந்ததைப் பற்றி மக்களுக்கு ஒரு சதவிதம் கூடத் தெரியாது.

ஒரு வேடிக்கை என்னவென்றால் எதிர் கட்சிக்கும் தோழமைக்கட்சிகளும் இப்போது வித்தியாசம் இல்லை. எதிர்கட்சியைவிட அவர்களைக் கண்டுதான் ஆளும் கட்சி பயப்பட வேண்டியிருக்கிறது. சந்தர்ப்பவாத அரசியலுக்குப் பழகிப் போன கட்சிகள் கூட்டணியில் இருந்தபடியே தமக்கு சாதகமான தருணத்தைக் கணக்கிட்டு எதிர்ப்பைத் தெரிவிப்பதும் கூட்டணியை உடைப்பதாக அச்சுறுத்துவதும், அரசுகள் கவிழ்வதும் தன்னிச்சையாக நிகழ் கின்றன. நித்திய கண்டம் பூர்ணாயிசாக இருக்கும் அரசுகளுக்குத் தங்கள் அதிகாரத்தைக் கட்டிக் காப்பதிலும் தற்காப்பு வீம்புகளில் ஆழ்வதிலுமே கவனம் என்பதால் அரசு நிர்வாகம் என்பது ஏதோ உருட்டிவிட்ட கட்டையைப் போல் ஓடுகிறதே தவிர தீர்க்க தரிசனத்துடன் கூடிய பார்வை இல்லாததால் மக்களுக்கான ஆட்சியாகப் பரிணமிக்கும் வாய்ப்பு கிடையாது. அத்தனை அமற்களத்திலும் அசிங்கமாக வெளிப்படுவது ஒன்று- அப்பட்ட சுயநல அரசியல். நம்மைச் சுற்றி நடக்கும் அரசியல் கூத்துகள், அராஜகங்கள், பல இடங்களில், அரசு நிர்வாகமே போலீஸ் உதவியுடன் மூட்டிவிடும் பயங்கர கலவரங்கள் எல்லாம் சொல்வது அதுதான். நாம் வாக்களித்து அதிகாரம் கொடுத்து அவர்களை நாம் செல்வாக்கான ஆசனத்தில் அமர்த்தியதற்கு அவர்கள் செய்யும் கைம்மாறு அது.மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு மக்களுக்காக ஆட்சி நடத்த வருபவர்கள் உரு மாறும் அவலம் அது. எதிர்கட்சி ஸ்தானத்தில் அமரும்போது ஆளும் கட்சியின் செயல் பாடுகளை மக்கள் விரோத அரசு என்று குற்றம்சாட்டும் கட்சிகள் பதவிக்கு வரும்போது அதே குற்றங்களைக் கூசாமல் செய்கின்றன. இந்தியா முழுவதுமே ஜன நாயகம் என்ற பெயரில் எல்லா அரசுகளுமே மக்கள் விரோத அரசியல் நடத்துவதாக எனக்குப் படுகிறது.

கர்நாடகத்தில் நடக்கும் கூத்து நமது அரசியல் கேடு கெட்டுப் போன அவலத்தின் உச்சம். கடந்த இருபது மாதங்களாக முன்னாள் பிரதமரும் ஜனதாதளம் [மதசார்பின்மை] கட்சியின் தலைவருமான தேவே கௌடாவின் மகன் குமாரசுவாமி முதல்வராகப் பணியாற்றினார். கூட்டணிகட்சியான பாஜகவுடன் ஆரம்பத்தில் செய்த ஒப்பந்ததின்படி அடுத்த இருபது மாதங்கள் பாஜகவின் கீழ் ஆட்சி அமையவேண்டும். இருபது மாதங்கள் பதவியை அனுபவித்த குமாரசுவாமிக்கு அதை இழக்கவேண்டிய தருணத்தில் மனசு வரவில்லை. ஏற்கனவே அவர் தன் தந்தைக்கு விருப்பமில்லாமல் அதிரடியாக காங்கிரெஸ்ஸ¤டன் இருந்த கூட்டணியை முறித்து பாஜகவுடன் அதிரடியாகக் கூட்டணி அமைத்து ஆட்சிக்கு வந்தார். தேவே கௌடா அப்போது இனி மகனுடன் எனக்கு உறவு இல்லை என்று நாடகம் ஆடினார். இப்போது ஆட்சி மாற வேண்டிய தருணம் வந்த போது ஒரு பாஜக எம் எல் ஏ தன் மகன் மீது பழி சொன்னது தனது மனசைப் புண்படுத்திவிட்டது என்று கூப்பாடு போட்டார். இதற்கிடையில் கருணாநிதி 'ராமர் என்பதே பொய்' என்று டிவி காமிராவின் முன் சொன்னதற்கு விஷ்வ ஹிந்து பரிஷத்காரர்கள் கர்நாடகாவுக்கு வரும் இரண்டு தமிழ்நாட்டு பஸ் களை எரித்து பெங்களூரில் வாழும் கருணாநிதியின் மகள் செல்வியின் வீட்டு ஜன்னல் கண்ணாடிகளை உடைத்தார்கள். குமாரசுவாமி கிடைத்தது சாக்கு என்று 'ஆட்சியை வி.ஹி.ப.வின் கூட்டாளிகளான பாஜகவிடம் ஒப்படைத்தால் மக்களுக்குப் பாதுகாப்பு இருக்காது என்றும் அதனால் கொடுக்கமுடியாது என்றும் அடம் பிடித்தார். இத்தனைக்கும் பாஜகவின் எண்ணிக்கைதான்[79] அதிகம் மன்றத்தில். ஜனதாதளம் [ம.சா] வெறும் 45தான். பாஜக தலைவர்கள் நடையாய் நடந்தார்கள். குமாரசாமி மசியாததால் பாஜக தனது ஆதரவை வாபஸ் பெற்றது. அரசு விழுந்தது. தேர்தலை சந்திப்போம் என்று கௌடா முகாம் முழங்கியது. மாநில அவையைக் கலைத்து விடும்படி கவர்னருக்கு கௌடா கடிதம் எழுதிய பிறகு ஜனாதிபதி ஆட்சி வந்தது. ஆனால் அவை சஸ்பெண்ட் மட்டும் செய்யப்பட்டது. இந்த மாதிரி ஒரு சூழலுக்குக் காத்திருந்த இரண்டாம் எண்ணிக்கை கொண்ட காங்கிரெஸ் சுறுசுறுப்பானது. கௌடாவின் முடிவில் விருப்பமில்லாத ஜ.மா.ச . உறுபினர்கள் சிலரை ஆசைக்காட்டி தேர்தலில்லாமல் காங்கிரெஸ் கூட்டணி அரசு நிறுவப் பார்த்தது. இதை உணர்ந்துகொண்ட கௌடா முகாம் எங்கே கட்சியில் பிளவு வந்து தங்கள் செல்வாக்கு அடியோடு போய்விடுமோ என்று அலறி அடித்துக்கொண்டு வெட்கமில்லாமல் மிண்டும் பாஜகவிடம் சென்று அவர்கள் ஆட்சி அமைக்க ஆதரவு தருவதாகச் சொன்னதும் ஒரே நாள் போதில் நிலைமை தலை கீழாக மாறிவிட்டது. பெங்களூர் அரசியல் அல்லோலகல்லோலப் பட்டது. பத்திரிக்கை டிவி நிருபர்கள் சாப்பாடு தண்ணி தூக்கம் பாராமல் ராஜ் பவன் வாசலிலோ, தலைவர்களின் வீட்டு முன்போ தவமிருந்தார்கள்.

இத்தனை அமற்களத்திற்கு நடுவே பெங்களூர் மக்கள் அதில் கவனமில்லாமல் தங்கள் பணிக்காக ஓடிக்கொண்டிருந்தார்கள். கவனித்தவர்கள் வெறுத்துப் போனார்கள். தலைவர்களின் கூத்துக்கும் அவர்களுக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை. மக்களின் வரிப் பணத்தைத் துச்சமாக மதித்து தங்கள் ஈகோ பிரச்சினையால் தேர்தலுக்குத் தயாராகும் துணிச்சல் தலைவர்களுக்கு எப்படி வருகிறது? மானம் ரோசம் இல்லாமல் பேசுபவர்களை, வார்த்தைகளை மாற்றுபவர்களை நம்பி நாம் எப்படி ஆட்சியை ஒப்படைப்பது? தன்னலமே பெரிதாக இருக்கும் இவர்கள் மக்களுக்காக என்ன பணி செய்வார்கள்? இப்படி அரசியலைப் பந்தாடுபவர்களை அரசியலிலிருந்தே ஒதுக்கவேண்டாமா? ஆட்டத்தின் விதிகளைப் பின்பற்றாதவர்களை ஆட்டத்திலிருந்து விலக்குவதுபோல அரசியல் கட்சிகளுக்கும் சில விதிகள் வைக்கப் படவேண்டும் என்று தோன்றுகிறது. மக்கள் வெறுத்துப் போய்தான், எந்தக் கட்சியின் மீதும் நம்பிக்கை இல்லாததால்தான் தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் போகிறது. அப்படியும் கூட்டணி என்கிற பேரில் நடக்கும் அராஜகங்களும் ஸ்திரமின்மையால் நடக்கும் கூத்துக்களும் மக்களை மேலும் மேலும் தூர விலக்குகின்றன.

இதற்கு என்ன தான் தீர்வு? கல்வி ஒன்றே தீர்வு என்று முன்பு எண்ணம் எல்லோருக்கும் இருந்தது. கல்வி அறிவு அதிகப் பட்சம் இருக்கும் கேரளத்தில் நடக்கும் அரசியல் அபத்தங்களுக்குக் கணக்கில்லை. அரசியலுக்கு வருபவர்களுக்கும் கட்சி நடத்துவதற்கும் சில கடுமையான விதிகள் பின் பற்ற வேண்டிய அவசியம் ஏற்படவேண்டும். பணம் புரளும் தேர்தல் செலவுகள் கட்டுப்படுத்த கடுமையான சட்டம் தேவை. ஜன மயக்கு திட்டங்களும் இலவசங்களும் நிறுத்தப்பட சட்டம் தேவை. ஒவ்வொரு அரசும் மக்களின் நலனுக்குத் தேவைப்படும் உள்கட்டமைப்பிலும் அடிப்படை வசதிகளிலும் கவனம் செலுத்த காலக்கெடு இருக்கவேண்டும். இதற்கெல்லாம் சட்டம் இயற்றப் படவேண்டும்.

சட்டம் இயற்றும் அதிகாரமும் நாம் அனுப்பும் பிரதினிதிகளிடம்தான் இருக்கிறது. தங்களை இக்கட்டில் மாட்டவைக்கும் விதிகளைத் தாங்களே போடுவார்களா?

ராம ராமா. இது சேது பந்தம்கூட இல்லை. நாம் வெளியில் வரமுடியாத சக்கிரவியூகத்தில் மாட்டிக்கொண்டிருக்கும் அபிமன்யுகள்.

vaasanthi.sundaram@gmail.com

வஹ்ஹாபி என்னும் முகமதியனின் எதிர்வினைக்கு மலர்மன்னன் பதில்

Thursday January 17, 2008
வாய்ப்பளிக்கும் வஹ்ஹாபிக்கு வந்தனம்
மலர் மன்னன்


கரன் தாப்பர் பற்றிய எனது கட்டுரைக்கு அன்பிற்குரிய வாசகர் வஹ்ஹாபி அவர்கள் எழுதிய எதிர்வினையைப் படித்து மகிழ்ச்சியடைந்தேன்.

திண்ணையில் வெளியான எனது கட்டுரைகள் எல்லாவற்றையுமே அவர் ஊன்றிப் படித்திருப்பது தெரிய வருகையில் மகிழ்ச்சி ஏற்படுவது இயல்பே அல்லவா?

நரேந்திர மோடி அவர்கள் மிகப் பெரும்பான்மை ஆரவுடன் திரும்பவும் ஆட்சிப் பொறுப்பை ஏற்று இன்னும் ஒரு மாதம் கூட ஆகவில்லை. கரன் தாப்பர் என்னதான் அதிகப் பிரசங்கியாக இருந்தாலும் மோடி உடனடியாகப் பதவியிலிருந்து விலக்கப்பட்டாக வேண்டும் என்று சொல்கிற அளவுக்கு விவரம் தெரியாதவர் அல்ல. மேலும் இன்றைய சூழ்நிலையில் ஒரு மாநில அரசின் மீது மத்திய அரசுக்கு எவ்வளவுதான் காழ்ப்பு இருப்பினும் அதை எடுத்தேன் கவிழ்த்தேன் என்று திடீரென அகற்ற இயலாது என்பதையும் அவர் அறியாதவராக இருப்பதற்கில்லை. ஆகவே மோடி பதவியிலிருந்து திடீரென அகற்றப்பட வேண்டும் என்பதாகக் கரன் தாப்பர் குறிப்பிட்டதற்குப் பொருள் கொள்வது சாத்தியமில்லை. மேலும் அன்பர் வஹ்ஹாபியே எடுத்துத் தந்துள்ள கரன் தாப்பரின் வரிகளை அப்படியே கீழே தருகிறேன்:

"Only the sudden removal of Narendra Modi can stop this. For he is the agent forcing this change. And whilst he’s with us, he will do just that. I have no doubt Indian politics after Sunday the 23rd is another country. We have to live with new challenges. Some of us have to accept new leaders."

இதன் தமிழ் வடிவம்:

" நரேந்திர மோடி திடீரென அகற்றப் படுவது மட்டுமே இதனை நிறுத்த முடியும். ஏனெனில் இந்த மாற்றத்தை நிர்பந்திக்கிற முகவர் அவர்தான் (அதாவது ஹிந்துத்துவத்திற்கு எதிரான (போலி மதச் சார்பற்றோர்) அனைவரும் சோனியா தலைமையின் கீழ் ஒன்று திரள வேண்டும் என்கிற மாற்றம்). அவர் (மோடி) நம்மிடையே இருக்கும் பரியந்தம் இப்படித்தான் செய்து கொண்டிருப்பார். ஞாயிறு (டிசம்பர்) 23 க்குப் பிறகு ஹிந்துஸ்தானத்து அரசியல் வேறு தேசத்திற்குரியதாக விட்டது என்பதில் எனக்குச் சந்தேகம் இல்லை. புதிய சவால்களுடன் நாம் வாழ்ந்தாக வேண்டும். நம்மில் சிலர் புதிய தலைவர்களை ஏற்றுக் கொண்டாக வேண்டும்.''

வேறு தேசம் என்று சொல்வதன் மூலம் கரன் தெரிவிப்பது என்னவென்றால் மோடியின் வெற்றிக்குப் பிறகு ஹிந்துஸ்தானம் ஹிந்துஸ்தானமாகவே ஆகிவிட்டது என்பதுதான்!

எனக்குத் தெரிந்த ஆங்கில மொழிப் பயிற்சிக்கு இணங்கத் தமிழாக்கம் செய்துள்ளேன். மொழியாக்கம் செய்கையில் தொனிக்கும் பொருளுக்கு ஏற்பத்தான் புரிந்துகொள்ள வேண்டும். இங்கு மோடி பதவியிலிருந்து திடீரென அகற்றப் பட வேண்டும் என்றுதான் கரன் விருப்பம் தெரிவிக்கிறாரா அல்லது வேறுவிதமாகவா என்பதை அறிவார்ந்த திண்ணை வாசகர்கள்தான் முடிவெடுக்க வேண்டும்.

மோடி இல்லாத ஆண்டு அமைவதாக என வாசகர்களுக்குப் புத்தாண்டு வாழ்த்துச் சொன்ன வினோத் மேத்தாவின் கருத்திற்கும் அன்பர் வஹ்ஹாபி விளக்கம் அளித்தால் நன்றாக இருக்கும்.

கரன் தாப்பர் சார்பில் வஹ்ஹாபி வாதுக்கு வந்திருப்பதன் மூலம் கரன் தாப்பரின் வாய்த்துடுக்கும் ஊடக நெறிமுறைக்கு முரணான போக்கும் புதிதல்ல என்பதை விளக்கும் வாய்ப்பு எனக்குக் கிட்டியுள்ளது. ஒரு தனிக் கட்டுரையாகவேதான் அதைச் செய்ய வேண்டும். வாய்ப்பளித்த வஹ்ஹாபிக்கு நன்றி.

முகமதியருக்கு அவர்களின் இறைத் தூதரைக் காட்டிலும் மேம்பட்டவர் எவருமில்லை. இறை மறுப்பைக் கூட அவர்களால் பொறுத்துக்கொள்ள முடியும். ஆனால் தம் இறைத் தூதரைப் பற்றி ஒரு சொல் விமர்சனமாக வந்தாலும் சகித்துக் கொள்ள மாட்டார்கள். எனவே அவர் பெயரால் அவர்களை அழைப்பது அவர்களுக்கு நியாயப்படி மகிழ்ச்சியையும் பெருமையையும்தான் அளிக்க வேண்டும். நான் பழகியவரை வட மாநிலங்களில் முகமதியர் என்றோ முகமதியம் என்றோ குறிப்பிடுவதை எவரும் ஆட்சேபிப்பதில்லை.

ஹிந்தி என இக்பால் குறிப்பிட்டது ஹிந்துஸ்தானத்தவர் நாம் என்பதாக என்கிற விஷயத்தைத்தான் நினைவூட்டினேன். அன்பர் வஹ்ஹாபி சவூதிக்குப் போனால் அவரை ஹிந்தி என்றுதான் குறிப்பிடுவார்கள். இந்தியன் என்றல்ல!

malarmannan79@rediffmail.com

மலர்மன்னன் திண்ணைக்கட்டுரைக்கு வஹ்ஹாபி என்னும் முகமதியனின் எதிர்வினை

Thursday January 10, 2008
காந்திஜி, ஹரிஜன், முகமதியம் மற்றும் ஸடன் ரிமூவல்
வஹ்ஹாபி

சென்ற வாரத் திண்ணையில் 'முகமதிய பயங்கரவாதிகளுக்கு அழைப்பு விடுக்கும் அரசியல் விமர்சகர்கள்' என்ற கட்டுரை [சுட்டி-01] படிக்க நேர்ந்தது.
'தீவிரவாதம்' மற்றும் 'பயங்கரவாதம்' என்ற வருமொழிச் சொல்லாடல்களுக்கு 'இஸ்லாமிய' என்பது நிலைமொழியாக நிறுத்தப் படுவதன் அயோக்கியத்தனத்தைக் குறித்துக் கடந்த 04.10.2007 குங்குமம் இதழில் திண்ணை எழுத்தாளர் நாகூர் ரூமி சுருக்கமாகத் தொட்டு[சுட்டி-02]க் காட்டி விட்டதால், இங்குத் தலையாய பேசுபொருள் முகமதியம்/முகமதியர் என்ற திரிபுவாதம் மட்டுமே.
சரி, காந்திஜியும் ஹரிஜனும் இங்கெதெற்கு? என்ற கேள்வி வரலாம்.
தாழ்த்தப் பட்ட மக்களுக்கு 'ஹரிஜன்' என்ற பெயரை முதலில் வழங்கியவராக காந்திஜி அறியப் படுகிறார். ஹரிஜன் என்ற சொல்லுக்கான விளக்கத்தையும் காந்திஜியே கூறுகிறார்:
'ஹரிஜன்' என்பதன் அர்த்தம் ஆண்டவனின் அருளை நேரடியாகப் பெறக்கூடிய பாக்கியம் பெற்றவர்கள் என்பதுதான். தெய்வமே துணைக்கு நிற்கும் ஜனங்கள் என்று குறிப்பிட மிகப் பொருத்தமானவர்களாக நான் நினைப்பது இந்த நாதியற்ற, நலிவுற்ற, இழிவாகக் கருதப்படுகின்ற ஜனங்களைத்தான் (ஹரிஜன், 11.2.1933).
ஆனால், காந்திஜியின் விளக்கங்களுக்கு அன்று முதல் இன்றுவரை எழுந்த எதிர்ப்புக் குரல்கள் ஓயவேயில்லை. அதற்குக் காரணம் இல்லாமலில்லை.
1939இல் நார்சி மேத்தா என்ற குஜராத்திக் கவிஞர், தனது நாவலில் கோவிலுக்குப் பெட்டுக் கட்டி விடப் பட்டப் பெண்களையும் அவர்களுக்குப் பிறக்கும் பிள்ளைகளையும் 'ஹரிஜன்' என்று குறிப்பிடுகிறார். அதாவது, தகப்பன் பெயர் தெரியாத தாசிமக்கள் அனைவரும் 'ஹரிஜன்கள்' என்று தெளிவாகச் சொல்கிறார். எனவே, 'ஹரிஜன்' என்று குறிப்பது கடவுளின் பிள்ளை என்ற பொருளிலன்று; மாறக, தாசிமகன் என்ற பொருளிலாம் என்று அறச் சீற்றம் கொள்கிறார் புனிதப்பாண்டியன். [ 'தலித் மக்களா? தாசி மக்களா?' தலித் அரசியல் தொகுப்பு;சுட்டி-03].
தாழ்த்தப்பட்ட மக்களுக்கு 'ஹரிஜன்' என்று காந்திஜி பெயரிட்டழைத்ததை டாக்டர் அம்பேத்கர் வெறுத்தார். "தாழ்த்தப்பட்டவன் கடவுளின் குழந்தை எனில் உயர்ந்த வர்ணத்தவர் என்று சொல்லிக் கொள்பவர்கள் சாத்தானின் பிள்ளைகளா?" என்று அப்போதே எதிர்ப்புக் குரல் கொடுத்திருக்கிறார்.
குஜராத்தி எழுத்தாளர் நர்சி மேத்தா தன்னுடைய நாவலில் கடவுளின் குழந்தைகள் என்பவர்கள் தந்தை யார் என்பதை அறியாதவர்கள் என்று குறிப்பிடுவது இங்கே கவனிக்கத் தக்கது. எனவேதான் காந்தியடிகளின் பேச்சில் ஏதோ உள்நோக்கு இருப்பதாகக் கருதிய அம்பேத்கர் அதை எதிர்த்தார் [சுட்டி-04].
"காந்தியடிகள் உருவாக்கிய ஹரிஜன் (கடவுளின் குழந்தைகள்) என்ற வார்த்தையே தவறானது; அரசியல் சட்டத்திற்கு விரோதமானது. அதனால்தான் நான் உ.பியில் ஆட்சிக்கு வந்ததும், அரசு அலுவலகங்களில் ஹரிஜன் என்ற வார்த்தையை நீக்கி விட்டு தலித் என்ற வார்த்தை மட்டுமே இடம் பெற வேண்டும் என்று உத்தரவிட்டேன்" என்று சண்டிகரில் நடைபெற்ற செய்தியாளர்கள் அமர்வில் உ.பி. முதல்வர் மாயாவதி பேசியது, 'காந்தி மீதி மாயாவதி பாய்ச்சல்' என்ற தலைப்புச் செய்தியாகக் கடந்த 28.10.2007இல் வெளியானது [சுட்டி-05].
அறிஞர் அண்ணாவின் அமைச்சரவையில் சமூக நலத்துறை அமைச்சராகப் பணியாற்றி, பின்னர் தி.மு.கழகத்திலிருந்து விலகி 1975இல் ‘தாழ்த்தப்பட்டோர் முன்னேற்றக் கழகம்' என்ற அமைப்பைத் தொடங்கிய, மறைந்த சத்தியவாணிமுத்து அம்மையாரும் காந்திஜியை 'ஹரிஜன்' பெயர் சூட்டல் காரணத்துக்காகக் கடுமையாக எதிர்த்துப் பேசியிருக்கிறார்.
தாழ்த்தப்பட்டோருக்கு ஹரிஜன் என்று பெயரிட்டு, அதே பெயரில் இதழ் ஒன்றையும் தொடங்கியதைக் கண்டித்துத் தாழ்த்தப்பட்டோரே பேசி இருக்கின்றனர்; பாடி இருக்கின்றனர் [சுட்டி-06]; எழுதியுமிருக்கின்றனர்.
"சாற்றிடும் அரிசனப் பெயர் எதற்குதவும் - அது
தாழ்ந்தவரைக் கை தூக்குமோ"
என்று மணிநீலன் (முத்துக்கிருஷ்ணன்) என்பவர் பாடல் எழுதினார். அவரெழுதிய நூலுக்குப் பெயரே 'காந்தி கண்டன கீதம்' என்பதாகும். (உண்மை விளக்கம் பிரஸ், ஈரோடு, 1932, பக்கம்.11) [சுட்டி-07].
"தலித்துகளை ஹரிஜன் என்று அழைக்க வேண்டும் என மகாத்மா காந்தி கூறினார். ஹரிஜன் என்ற வார்த்தைக்குப் பதில் 'ஆதி தமிழர்' என்று அழைக்க வேண்டும். அதுதான் சரியான சொல்லாக இருக்க முடியும்" என்று திருத்தம்(?) கொண்டு வந்திருப்பவர் காஞ்சி சங்கராச்சாரியார் [சுட்டி-08]. அதாவது, இந்தியா முழுதும் வாழும் ஹரிஜனங்கள் எந்த மொழி பேசினாலும் அவர்களுக்கு 'ஆதித் தமிழர்' என்பதுதான் பெயராம்.
சங்கராச்சாரியாரின் திருத்தம்(?) வேடிக்கையாக இருக்கும் அதேவேளை, காந்திஜியின் கதியை நினைத்துப் பார்க்கையில் மத்தளத்து உவமைதான் நினைவுக்கு வருகிறது.
***
தேசப்பிதா என்றழைக்கப் படும் காந்திஜியால் ஒரு சமுதாயத்துக்கு நன்னோக்கில் சூட்டப் பட்டப் பெயருக்கே இவ்வளவு கண்டனங்கள் பதிவு செய்யப் பட்டிருக்கின்றவெனில், முஸ்லிம்களின் சமயநெறிப் பெயரான இஸ்லாம் என்பதை 'முகமதியம்' என்றும் முஸ்லிம்களை 'முகமதியர்' என்றும் திரும்பத் திரும்ப எழுதித் திரிபுவாதம் செய்யும் மலர் மன்னனுக்குக் கண்டனங்கள் பதிவு செய்யப் படவேண்டாவா?
எதைப் பற்றி எழுதினாலும் தொடர்பு இருந்தாலும் இல்லா விட்டாலும் 'முகமதிய மதம்', 'முகமதியர்' பற்றி மறவாமல் கட்டுரைக்குள் குறிப்பு வைத்து விடுவது மலர் மன்னனின் வழக்கமான திரிபுவாத உத்தியாகும். இதை நான் மிகைப்பட எழுதுவதாக யாரும் நினைத்தால் திண்ணையின் தேடுபொறியில் 'முகமதிய' என்ற சொல்லை இட்டுப் பார்த்து உறுதி செய்து கொள்ளலாம்.
திண்ணையில் நான் தேடிப் பார்த்த வகையில் மலர் மன்னனுக்கு அடுத்தபடியாக வருபவர் முஸ்லிம்களைத் 'துருக்கர்' என்றும் 'முகமதியர்' என்றும் வெறுப்பை உமிழ்ந்து, மலர் மன்னனுக்கு முன்னோடியாக எழுதி வைத்த பாரதியார்.
//பாரதி எழுதுகிறார் 'திப்பு சுல்தான் காலத்தில் முகமதிய சேனாபதி யொருவன் சிறிய படையுடன் வந்து பாலக்காட்டுக் கோட்டையின் முன்னே சில பிராமணர்களை மேல் அங்கவஸ்திரத்தை உரித்து நிற்கும்படிச் செய்வித்து, பிராமணர்களை அவமானப்படுத்திய கோரத்தைச் சகிக்க மாட்டாமல், யாதொரு சண்டையுமின்றி, தம்பிரான் இனத்தார் கோட்டையை விட்டுப் போய்விட்டார்கள். திப்பு சுல்தான் கோழிக்கோட்டில், ஹிந்துக்களை அடக்க ஆரம்பஞ் செய்தபொழுது, இருநூறு பிராமணரைப் பிடித்து முசுலீம் ஆக்கிக் கோமாமிசம் புசிக்கச் செய்தான்'
ஆனால், உண்மையில் திப்புசுல்தான் அவ்வாறு செய்ததாய் வரலாற்று ஆதாரம் ஏதுமில்லை. மாறாக திப்பு, பார்ப்பனர்களை ஆதரித்த செய்திதான் கிடைத்துள்ளது.
திப்புவின் ஆட்சியில் அரசுப்பணியில் இருந்த பார்ப்பனர்கள், தவறு செய்தால் கூட அவர்களைத் தண்டிக்கும் உரிமையை திப்பு ஏற்காமல், அவ்வுரிமையை சிருங்கேரி சங்கராச்சாரியிடமே ஒப்படைத்துள்ளான்.
1791இல் திப்பு சிருங்கேரி மடத்துக்கு எழுதிய கடிதம் இதோ:
'There are more than 45 to 50 thousand Brahmins in our service. It is wondered if the Government alone is bestowed with Judiciary powers of handling their cases and punishing them for offence like theft, liquor and Brahmahati. Hence the authority to punish such offences in your premises is given to you. You could punish them in any manner as given in sastras. '
இன்னும் ஒரு படி மேலே சென்று திப்புவின் ஆட்சி நிலைத்திருக்க சாஸ்தரா சண்டி ஜெபம் நடத்த, திப்பு சங்கராச்சாரியைக் கேட்டுக்கொண்டான். ஓராயிரம் பார்ப்பனர்கள், 40 நாட்கள் ஜெபம் செய்தனர். முழுச்செலவையும் திப்பு ஏற்றுக்கொண்டான்.
பாரதிக்கு இஸ்லாமியர் மீது இருந்த வெறுப்பின் அடையாளமே மேற்கண்ட அவதூறு எழுத்து.
இவ்வெறுப்பின் உச்சத்தை 'சிவாஜி தன் சைனியத்துக்குக் கூறியது ' பாடலில் பரக்கக் காணலாம்.// -கற்பக வினாயகம் அவர்களின் திண்ணைப் பதிவிலிருந்து [சுட்டி-09].
சென்ற திண்ணை இதழில் மலர் மன்னனது டெக்னிக், கட்டுரைத் தலைப்பிலேயே இடம் பிடித்து விட்டதால் அவருடைய திரிபுவாதத்துக்கு எதிர்வினையாற்றுவது எனக்குக் கடமையானது.
இஸ்லாத்தை 'முகமதிய மதம்' என்றும் முஸ்லிம்களை 'முகமதியர்' என்றும் குறிப்பது குடி முழுகி விடும் தவறா? என்ற கேள்வி வாசகர்களுக்கு எழக் கூடும்.
கிருத்துவம் தோன்றி 2007 ஆண்டுகளே ஆகின்றன என்பதைக் கிருத்துவர்கள் ஒப்புக் கொள்ளக் கூடும். இஸ்லாம் தோன்றி 1430 ஆண்டுகளே ஆகின்றன என்ற கருத்தில் சில அரை வேக்காடுகள் புலம்பி வைக்கலாம். ஆனால் ஒரு முஸ்லிம் அதை ஒப்புக் கொள்ள மாட்டான்; ஒப்புக் கொண்டால் வரலாற்றின் குடி முழுகித்தான் போகும்.
"சிலர் திரும்பத் திரும்ப வேண்டுமென்றே திரித்து எழுதுவதுபோல் இஸ்லாம் என்பது 'முகமதிய மத'மன்று. குர்ஆனை வேதமாக ஏற்றுக் கொண்ட முஸ்லிம்களின் நம்பிக்கையின்படி, இஸ்லாம் என்பது கி.பி. ஏழாம் நூற்றாண்டில் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களால் தோற்றுவிக்கப் பட்ட ஒரு புதுக் கொள்கையன்று [அல்குர்ஆன் 003:144 ]. மாறாக, முழுமனித குலத்துக்கும் முஸ்லிம்கள் நம்புகின்ற இணையற்ற, அல்லாஹ் என்ற ஒரே இறைவனால் முதல் மனிதரும் அவனுடைய நபியுமான ஆதமுக்கும் அவரிடமிருந்து அவருடைய வழித்தோன்றலார் அனைவர்க்கும் வழங்கப் பட்ட வாழும்வழி-வாழ்க்கைநெறியே இஸ்லாமாகும் [003:019, 002:31, 007:025]" என்று நான் ஏற்கனவே திண்ணையில் பொதுவாக எழுதி [சுட்டி-10] இருந்ததைப் படிக்க மலர் மன்னனுக்கு வாய்த்திருக்காது.
வாய்த்திருந்தாலும் தனது தவறான கருத்தை நிறுவுவதற்கு, 'முகமதிய மதம்', 'முகமதியர்' என்று திரிபுவாதத்தை வேண்டுமென்றே மலர் மன்னன் திரும்பத் திரும்பச் செய்து கொண்டிருக்கிறார் என்பது தெளிவு..
"என்னது? வேண்டுமென்றே செய்கிறாரா?" என்ற ஐயம் வாசகர்களுக்கு எழலாம்.
வேண்டுமென்றேதான் செய்து கொண்டிருக்கிறார்:
//"There is no doubt in my mind that in the majority of quarrels the Hindus come out second best. But my own experience confirms the opinion that the Mussalman as a rule is a bully, and the Hindu as a rule is a coward. I have noticed this in railway trains, on public roads, and in the quarrels which I had the privilege of settling. Need the Hindu blame the Mussalman for his cowardice? Where there are cowards, there will always be bullies. They say that in Saharanpur the Mussalmans looted houses, broke open safes and, in one case, a Hindu woman's modesty was outraged. Whose fault was this? Mussalmans can offer no defence for the execrable conduct, it is true. But I, as a Hindu, am more ashamed of Hindu cowardice than I am angry at the Mussalman bullying. Why did not the owners of the houses looted die in the attempt to defend their possessions? Where were the relatives of the outraged sister at the time of the outrage? Have they no account to render of themselves? My non-violence does not admit of running away from danger and leaving dear ones unprotected. Between violence and cowardly flight, I can only prefer violence to cowardice."
"Hindu-Muslim Tension: Its Cause and Cure", Young India, 29/5/1924; Reproduced in M.K. Gandhi: The Hindu-Muslim Unity, p.35-36.
மலர் மன்னனுடைய தமிழ் மொழிபெயர்ப்பு:
(முகமதியர்களுக்கும் ஹிந்துக்களுக்குமிடையிலான) பெரும்பாலான சண்டை சச்சரவுகளில் ஹிந்துக்கள் இரண்டாம் இடத்தைத்தான் வகிக்கிறார்கள் என்பதில் எனக்குச் சந்தேகமில்லை. சொல்லிவைத்தாற்போல் ஒரு முகமதியன் அடாவடிப் பேர்வழியாகவும், ஒரு ஹிந்து கோழையாகவுமே இருக்கிறார்கள் என்பதை என் சொந்த அனுபவப்பூர்வமாகவே அறிந்துள்ளேன். அது ரயிலானாலும் சரி, பொதுவான சாலையானாலும் சரி, நான் தீர்த்துவைக்கும் சண்டை சச்சரவானாலும் சரி, நிலைமை இப்படித்தான் இருக்கிறது. ஒரு ஹிந்து தனது கோழைத்தனத்திற்காக முகமதியனை ஏன் குறைகூறவேண்டும்? எங்கு கோழைகள் இருக்கிறார்களோ அங்கு அடாவடிப் பேர்வழிகளும் இருக்கத்தான் செய்வார்கள். சஹாரன்பூரில் முகமதியர் (ஹிந்துக்களின்)வீடுகளைச் சூறையாடியதாகவும், பெட்டகங்களை உடைத்ததாகவும், ஒரு இடத்தில் ஒரு ஹிந்துப் பெண்மணி மானபங்கம் செய்யப்பட்டதாகவும் சொல்கிறார்கள். இது யாருடைய தவறு? தங்களுடைய அத்துமீறிய நடத்தைக்கு முகமதியர்களால் சமாதானம் சொல்ல இயலாது என்பது உண்மைதான். ஆனால் ஒரு ஹிந்து என்கிற முறையில், முகமதியரின் அடாவடிச் செயலுக்காக அவர்கள் மீது ஆத்திரம் வருவதைவிட ஹிந்துக்களின் கோழைத்தனத்தைக் கண்டு எனக்கு வெட்கம்தான் வருகிறது. பறிகொடுத்த (ஹிந்துக்களான)வீட்டுச்சொந்தக்காரர்கள் தங்கள் உடமைகளைப் பாதுகாத்துக்கொள்ளப் போராடி, அந்தப் போராட்டத்தில் உயிரிழக்காதது ஏன்? தங்கள் சகோதரி மானபங்கம் செய்யப்பட்ட சமயத்தில் அவளுடைய உறவினர்கள் எங்கு போயிருந்தார்கள்? அவர்களுக்கு இதில் பொறுப்பு ஏதும் இல்லையா? என்னுடைய அஹிம்சைக் கொள்கை ஆபத்துக் காலத்தில் தம்மால் பாதுகாக்கப்பட வேண்டிய அன்பிற்குரியோரை அம்போவென விட்டுவிட்டு ஓடிப் போவது அல்ல. வன்முறையா, கோழைத்தனமாக ஓடிப் போதலா, இரண்டில் எதைத் தேர்வது என்கிற கேள்வி எழுமானால் கோழைத்தனத்தைக் காட்டிலும் வன்முறையினையே நான் தேர்ந்தெடுப்பேன்.//
ஆங்கில மூலத்திலுள்ள சொற்களான 'Muslim' மற்றும் காந்திஜி பயன் படுத்திய Mussalman ஆகிய சொற்களைத் தமிழில் எழுத வேண்டுமானால் முஸ்லிம்கள் என்றல்லவா மொழி பெயர்க்க வேண்டும்? மலர் மன்னன் எந்தச் சொல்லைப் பயன் படுத்தியுள்ளார் [சுட்டி-11] என்பதைக் கவனித்தால் அவருடைய டெக்னிக் அல்லது திருகுதாளம் தெளிவாகத் தெரிய வரும்.
கொஞ்சம்போல் இந்தி மொழி தெரிந்தவர்களும் எளிதாகப் புரிந்து கொள்ளும் "ஹிந்தி ஹம் ஹை" என்ற உருதுக் கவிஞர் இக்பாலின் கவிதைக்கு "நாம் இந்தியர்கள்" என்று செம்மாந்துச் சொல்லும் தமிழ்ப் பொருள் கொள்ளலாகாதாம். மாறாக, "நாம் இந்துக்கள்" என்பதுதான் அஸ்லீ தர்ஜுமாவாம் [சுட்டி-12] இந்தியா முழுக்கச் சுற்றி வந்த செய்தியாளர் மலர் மன்னன் சொல்கிறார்.
காந்திஜியின் 'முஸல்மான்' என்ற சொல்லையே 'முகமதியர்' என்று மொழி பெயர்த்தவருக்கு, கவி இக்பாலின் ஹிந்தி'யை 'இந்து'வாக்குவது பெரிய வித்தையா என்ன?
ஆனால், உண்மை நிலை வேறாகவன்றோ இருக்கிறது? இந்தியர்கள் அனைவரையும் ஒட்டு மொத்தமாக 'இந்து' என்று குறிப்பிட்டுத் தம்மைத் தாமே ஏமாற்றிக் கொள்ளும் 'இந்துத்துவா'க்கள், தம் தெற்குத் தஞ்சைப் பகுதிச் சுற்றுப் பயணத்தின்போது, "நான் இந்துவல்ல; மனிதன்" என்று முகத்திலறையும் அறிவிப்புப் பலகைகள் தொங்கும் வீடுகளைக் கவனித்திருக்க மாட்டார்கள்.
***
கடந்த 29.12.2007 ஹிந்துஸ்தான் டைம்ஸ் இதழில், 'அரசியல் சீர்திருத்தம்' என்ற தலைப்பின் கீழ் கரண் தாப்பர் ஒரு கட்டுரை எழுதியுள்ளார்.
குஜராத் பொதுத் தேர்தலை அடுத்து மாநிலக் கட்சிகள் இடதுசாரிகள் மட்டுமின்றி, சாதாரண வாக்காளர்களாகிய நாமும் நம் முன்னிருக்கும் இரண்டு வாய்ப்புகளில் ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப் பட்டுள்ளதாகக் அக்கட்டுரையில் கூறுகிறார். மேலும் அவர் கூறுவதாவது:
"ஒன்று, மோடித் திட்டத்தோடும் மோடித்துவாவோடும் இயைந்து, அவற்றை ஏற்கப் பழகிக் கொள்ள வேண்டும்.
அல்லது, காந்தியப் பாரம்பரியத்தில் வந்த சோனியா தலைமை ஏற்று நடத்தும் மோடித்துவாவுக்கு எதிரான போராட்டத்தில் இணைந்து விடவேண்டும். இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுத்தாக வேண்டிய கட்டாயத்தை மோடி நம் மீது வலிந்து திணித்து விட்டார். நம் மீது திணிக்கப் பட்டுள்ள இக்கட்டாயம் ஒரு முடிவுக்கு வர வேண்டுமானால் மோடியின் பதவி நீக்கம் (ஸடன் ரிமூவல்) ஒன்றே வழி"(சுருக்கம்).
ஆங்கிலத்தில்:
For the rest of us, voters rather than politicians, commentators but not participants, we also have to make a critical choice. We can either accept the idea of Modi and Moditva and adapt and adjust to it, or overcome our concerns with the Gandhi dynasty and Sonia in particular, and join the fight she must lead.
If I’m right, the middle ground is shrinking, even disappearing. The emergence of a dominant idea on the saffron front and, in response, the creation of an equal but counterveiling force on the other will squeeze out everything else. The more Moditva grows, the more its opposite has to be strengthened. Increasingly the choice will be one or the other. We will have to take sides.
Where does this leave the regional parties and the Left? They may retain their identity, even their present base, but they will have to line-up behind Modi or Sonia, in the saffron camp or the liberal/secular one. They may even have to submerge themselves within the broad appeal of the camp they belong to.
Only the sudden removal of Narendra Modi can stop this. For he is the agent forcing this change. And whilst he’s with us, he will do just that. I have no doubt Indian politics after Sunday the 23rd is another country. We have to live with new challenges. Some of us have to accept new leaders.
முழுதும் படிக்க [சுட்டி- 13]. கட்டுரைத் தலைப்பையும் கவனிக்கவும்: ‘Modification’ of politics.
ஒரு பதவியில் இருப்பவர் குறித்து ஆளப் படும் Sudden Removal என்ற சொல்வழக்கு, பதவி நீக்கத்தையே குறித்து நிற்கும்.அதுவும் ஊடகத் துறையில் sudden removal என்பது, 'பதவி நீக்கம்' என்ற பொருளில் வெகு இயல்பாகப் பயன் படுத்தப் படுவதாகும்.
மலர் மன்னனும் sudden removal என்ற சொல்லுக்கு,'திடீரென அகற்றப் படுதல்'என்றே குறிப்பிடுகிறார் -'அலுவலகத்திலிருந்து' என்ற சொல்லை வேண்டுமென்றே தவிர்த்து விட்டு.அவ்வாறு மொட்டையாய் எழுதினால்தானே 'முகமதிய பயங்கரவாதி'களைத் தலைப்பில் கொண்டு வந்து,ஆளைத் 'தீர்த்துக் கட்டுதல்' என்று திரிபுப் பொருளை அதற்குக் கொடுத்து எழுத்து பயங்கரவாதம் செய்ய முடியும். மலர் மன்னனின் திரிபுவாதத்தின் அடிப்படையில் ஸடன் ரிமூவலுக்குத் 'தீர்த்துக் கட்டுதல்'எனப் பொருள் கொண்டால் உண்டாகும் அபத்தங்கள் சிலவற்றை வரிசைப் படுத்திப் பார்க்கலாம்:
(1) இந்திய வேளாண் ஆய்வுக் கழகத் தலைவர் 'தீர்த்துக் கட்டப் பட்டதற்காக' இந்திய விஞ்ஞானிகள் சென்ற வாரம் அமளியில் ஈடுபட்டனர்.
Indian scientists are in an uproar over the sudden removal last week of the head of the Indian Council of Agricultural Research (ICAR) [சுட்டி-14].
(2) பீபிப்பூர் பள்ளிக் கூடத்தில் பணியாற்றிய தலித் சமையற்காரியான பூல் குமாரி ரவட் 'தீர்த்துக் கட்டப் பட்டதன்' பின்னணி குறித்துப் பள்ளி நிர்வாகத்தினர், வியாழக்கிழமை நடைபெறவிருக்கும் முதல் அமர்வில் விளக்கம் சொல்ல அழைக்கப் பட்டுள்ளனர்.
The education and administration officials have been called for the first hearing on Thursday and explain the reason behind her sudden removal [சுட்டி-15].
(3) சண்டே அப்ஸர்வர் இதழாசிரியர் ராஜ்பால் அபெநாயக்க 'தீர்த்துக் கட்டப் பட்டதற்காக' எங்களது கண்டனங்களைப் பதிவு செய்து கொள்கிறோம்.
...register our concern over the sudden removal of The Sunday Observer editor Rajpal Abenayaka... [சுட்டி-16].
(4) பாக்கிஸ்தானின் தலைமை நீதிபதி 'தீர்த்துக் கட்டப் பட்டார்' அடுத்து என்ன?
CJ of Pakistan sudden removal. Whats next? [சுட்டி-17].
இன்னும் அடுக்கலாம்.ஒவ்வொரு சொற்டொருக்கும் முன்னால் சுவாரஸ்யம் வேண்டுமென விரும்பும் வாசகர்கள், 'முகமதிய பயங்கரவாதிகளால்' என்று சேர்த்துக் கொள்க!
கரண் தாப்பரின் ஸடன் ரிமூவல் வெளியாகி இரண்டு வாரத்தை நெருங்கும் இந்நாள் வரையிலும் ஒரு 'தீர்த்துக் கட்ட சதி'வழக்கோ 'கொலை முயற்சி வழக்கோ 'தூண்டுதல்'வழக்கோ அட் லீஸ்ட் ஒரு நியூஸென்ஸ் வழக்கோ அவருக்கு எதிராகப் பதிவு செய்யப்படாத மர்மம் என்னவென்றால்,மலர் மன்னன் திரித்துக் கூறும் பொருளில் ஸடன் ரிமூவல் அந்த இடத்தில் பயன் படுத்தப் படவில்லை என்பதும் appointஇன் எதிர்மறைச் சொல்லான removalஐத்தான் அங்குத் தாப்பர் பயன் படுத்தி இருக்கிறார் என்பதும்தான்.
***
அறியாமையைவிட அரைகுறை அறிவு ஆபத்தானது. ஆங்கிலம் தெரியாதது வசதிக்குறைவுதானே தவிர, அது ஒரு குறைபாடு அல்ல. ஆங்கிலம் அறியாதவர்கள் எல்லாம் அறிவில்லாதவர்கள் அல்ல; ஆங்கிலம் அறிந்தவர்கள் எல்லாம் புத்திசாலிகளும் அல்ல. ஆங்கிலம் தெரிந்திருந்தாலும் மூடன் மூடன்தான், ஆங்கிலம் தெரியாவிடினும் அறிவாளி அறிவாளிதான். ஆங்கிலத்தை அரைகுறையாகப் புரிந்துகொண்டு, விஷயம் தெரிந்துவிட்டதாக நினைத்துக்கொள்வதால்தான் சங்கடம் வருகிறது. மேலும் ஒரு விஷயம் பற்றி எதுவும் தெரியாவிடினும் எல்லாம் தெரிந்ததுபோல் பேசத் தொடங்குவதாலும் சங்கட முண்டாகிவிடுகிறது. சான்றோர் சபையில் மூடனும் மவுனம் காப்பதால் சான்றோனாகி விடலாம். வீணாக வாயைக் கொடுத்துப் பெயரை கெடுத்துக் கொள்வானேன்?
மாற்றுக் கருத்துக் கொண்டிருந்தாலும் எதிர்க் கருத்தே கொண்டிருந்தாலும் தமிழுலகில் நன்கு அறியப் பட்ட ஓர் எழுத்தாளரை இப்படி எள்ளி நகையாடி எழுதலாமா? என்று என்னை முறைக்க வேண்டாம்.ஏனெனில், மேற்காணும் எள்ளல் வரிகளுக்குச் சொந்தக்காரர் [சுட்டி-18] சாட்சாத் மலர் மன்னன்தான்.
இனிமேலாவது 'முகமதிய மதம்'என்பதை விடுத்து 'இஸ்லாம்'என்றும் 'முகமதியர்'என்பதற்குப் பகரம் 'முஸ்லிம்கள்'என்றும் மலர் மன்னன் எழுதப் பழகுவார் என்று எதிர் பார்ப்போம்.
நன்றி!
ஃஃஃ
to.wahhabi@gmail.com
http://wahhabipage.blogspot.com
___________________________
சுட்டிகள்:
01 - http://www.thinnai.com/?module=displaystory&story_id=20801032&format=html
02 - http://www.satyamargam.com/index.php?option=com_content&task=view&id=653&Itemid=52
03 - http://sugunadiwakar.blogspot.com/2007/03/blog-post_14.html
04 - http://xavi.wordpress.com/2006/12/06/ambedkar/
05 - http://thatstamil.oneindia.mobi/news/2007/10/28/2339.html
06 - http://tamilcircle.net/tamil_isai_viza_2003/Ajiram_kalam_11.html
07 - http://www.thinnai.com/?module=displaystory&story_id=20306193&format=html
08 - http://thatstamil.oneindia.in/news/2003/05/24/kanchi.html
09 - http://www.thinnai.com/?module=displaystory&story_id=60603247&format=htm
10 - http://www.thinnai.com/?module=displaystory&story_id=80704196&format=html
11 - http://www.thinnai.com/?module=displaystory&story_id=206042112&format=html
12 - http://www.thinnai.com/?module=displaystory&story_id=20712131&edition_id=20071213&format=html
13 - http://www.hindustantimes.com/StoryPage/StoryPage.aspx?id=8368a158-42d4-466c-ba71-685eb2bbc204
14 - http://www.sciencemag.org/cgi/content/summary/290/5496/1477c
15 - http://in.news.yahoo.com/071226/48/6ovr6.html
16 - http://www.tamilnet.com/art.html?catid=13&artid=19924
17 - http://rabitazone.blogspot.com/2007/03/cj-of-pakistans-sudden-removalwhats.html
18 - http://www.thinnai.com/?module=displaystory&story_id=20603241&format=html

மலர்மன்னன் திண்ணைக்கட்டுரை

Friday January 4, 2008
முகமதிய பயங்கரவாதிகளுக்கு அழைப்பு விடுக்கும் அரசியல் விமர்சகர்கள்
மலர் மன்னன்

ஊடகங்களின் அரசியல் விமர்சகர் என்ற போர்வையில் விஷமப் பிரசாரம் மட்டுமின்றி விஷப் பிரசாரமே செய்யும் நபர் ஒருவர் நம்மிடையே நடமாடி வருகிறார். எதைப்பற்றியும் தயங்காமல் துணிவுடன் கேட்கும் பாவனையில் மிகவும் அநாகரிகமாகக் கேள்விகள் கேட்டுப் பெருமைப் பட்டுக் கொள்ளும் இவரது பெயர் கரண் தாப்பர்.

முன்னமேயே ஒரு தொலைக் காட்சியினருக்காக குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடியிடம் நேர் காணல் நடத்த வந்த கரண் தாப்பர், தாம் ஏதோ அரசுத் தரப்பு வழக்குரைஞர் அல்லது நீதிபதி போலவும், நரேந்திர மோடி குற்றவாளிக் கூண்டில் நிற்பவர் போலவும் பாவித்துக்கொண்டு விசாரணை செய்வதுபோல் கேள்விகள் கேட்கத் தொடங்கியதால் அதனைக் கண்டித்து நரேந்திர மோடி பாதியிலேயே தாம் அளித்த நேர் காணலை ரத்துச் செய்ய வேண்டியதாயிற்று.

ஊடக நெறிமுறைகள் அறியாதோர்

கரண் தாப்பர், பிரபு சாவ்லா போன்ற நபர்கள் முறைப்படி ஊடக நிருபர்களாக உருவானவர்கள் அல்ல. அவ்வாறு இருப்பின் ஊடகத் துறைக்குரிய ஒழுக்க விதிகள், நடைமுறைகள் ஆகியவை பற்றிஅவர்களுக்குத் தெரிந்திருக்கும். எந்தவொரு விஷயம் குறித்தும் ஒருவரிடம் விசாரித்து விவரங்களைப் பொது நலன் கருதி மக்களுக்குத் தெரிவிக்கும் கடமையும் உரிமையும் ஊடகத்தாருக்கு உண்டு. ஆனால் அதற்கும் வரைமுறைகள் உள்ளன.

நேரடியாகக் குற்றஞ் சுமத்தும் விதமகவோ தீர்ப்பளிக்கும் அதிகாரத்துடனோ கேள்விகள் கேட்கலாகாது. தக்க ஆதாரங்கள் இன்றி எது பற்றியும் விசாரிக்கலாகாது. குழாயடியில் மக்கள் பேசிக்கொள்கிறார்கள் என்பதுபோல் எல்லாம் ஆதாரங்களைக் காட்டவும் கூடாது. பரிகசிக்கும் விதமாகவோ, அநாகரிகமாகவோ, தனிநபர் தாக்குதலாகவோ, உள் நோக்கத்துடனோ, சொந்த விரோதம் காரணமான துவேஷத்துடனோ கேள்விகள் கேட்கலாகாது. ஆனால் இந்த அடிப்படை விதிமுறைகளுக்கு முற்றிலும் மாறாகத் தாம் ஏதோ சகல அதிகாரங்களும் பெற்றுள்ள தனிப் பிறவி என்பதுபோலத்தான் கரண் தாப்பர் கேள்விகள் கேட்பார். பிறகு தம் சகாக்கள் மத்தியில் அது குறித்துத் தாம் ஏதோ பெரிய சாதனை புரிந்துவிட்டதுபோலப் பெருமையடித்துக் கொள்வார்.

தில்லியில் ஒருமுறை பொது நிறுவனம் ஒன்று ஏற்பாடு செய்திருந்த விருந்தில் கலந்துகொண்ட போது, இந்த கரண் தாப்பர் கையில் ஸ்காட்ச் விஸ்கியுடன் அறையில் அட்டகாசமாகத் தம்மைத் தாமே அறிமுகம் செய்துகோண்டும் ஏற்கனவே அறிமுகம் உள்ளவர்களின் முதுகில் தட்டிக் கொண்டும் உரத்த குரலில் சிரித்தவாறு அறையில் சுற்றிச் சுற்றி வந்தவர், என்னிடமும் வந்தார். நான் தமிழ் நாட்டுக்காரன், பத்திரிகையாளனாக இருந்து தற்போது ஊடக ஆலோசகனாக இருப்பவன் என அறிந்ததும், உங்கள் ஜயலலிதாவிடம் நீங்கள் எல்லோரும் மிரள்கிறீர்களே, நான் அவரை எப்படி மிரள வைத்தேன் தெரியுமா என்று பெருமைப் பட்டுக்கொண்டார்.

தொலைக் காட்சியில் அதை நானும் பார்த்தேன். ஜயலலிதாவிடம் உள்ள முறைகேடுகள், குறைபாடுகள் நான் அறியாததல்ல; ஆனால் எதைப் பற்றிக் கேட்பதானாலும் ஒரு குறைந்த பட்ச நாகரிகம் வேண்டும். அந்த அம்மா அன்று உங்களைச் செருப்பால் அடித்திருந்தாலும் அது எனக்குத் தவறாகப் பட்டிருக்காது என்று சொன்னேன். கரண் தாப்பர் விழிகளை உருட்டி உருட்டி என்னைப் பார்த்துவிட்டு அவசரமாக விலகிச் சென்றார்.

குஜராத் வெற்றி கண்டு தடுமாற்றம்

இந்த கரண் தாப்பர் தாமும் தம்மையொத்த ஊடகக்காரகளும் ஆசைப்பட்டதற்கு முற்றிலும் மாறாக குஜராத் மக்கள் மீண்டும் நரேந்திர மோடியே எமது முதலவர் என ஏகோபித்துத் தீர்ப்பளித்துவிட்டதால் புத்தி தடுமாறிப் போய்விட்டிருக்கிறார். சென்ற முறை நூற்று இருபத்தேழு தொகுதிகளில் தமது கட்சியை வெற்றிபெறச் செய்த நரேந்திர மோடி இந்தத் தடவை உள்கட்சி அதிருப்தியாளர்களின் ஒத்துழையாமையால் பத்தே பத்து இடங்கள் மட்டுமே குறைவாகப் பெற்று, தமது ஆட்சிக்கு மக்களின் அங்கீகாரம் இருக்கும் உண்மையினை நிரூபணம் செய்திருப்பதை தாப்பரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.

உள்கட்சி அதிருப்தியாளர்கள் குறுக்குச் சால் ஓட்டாமல் இருந்திருந்தால் மொத்தமுள்ள நூற்று எண்பத்து இரண்டு இடங்களில் நூற்று ஐம்பது இடங்களில்கூட பா.ஜ.க. வெற்றிபெற்றிருக்கக்கூடும் என்கிற உண்மையை உணந்துகொண்ட எரிச்சலில் கரண் தாப்பர் வழக்கத்தைவிடக் கூடுதலாகவே நிதானம் தவறியிருக்கிறார்.

குஜராத்தைத் தொடர்ந்து உடனுக்குடன் ஹிமாசலப் பிரதேசத்திலும் பாரதிய ஜனதா கட்சி அமோக வெற்றி பெற்றுவிட்டது அவருக்கு அச்சமளித்துவிட்டிருக்கிறது. எங்கே ஹிந்துஸ்தானம் முழுவதுமே மோடியின் செல்வாக்கு வேரூன்றி, பாரதிய ஜனதா மக்களின் பேராதரவுடன் மத்தியிலும் மாநிலங்களிலும் மிகப் பெரும்பான்மை பெற்று ஆட்சிக்கு
வந்துவிடுமோ என்கிற கவலையில் காங்கிரசுக்கும் கம்யூனிஸ்டுகளுக்கும் அறிவுரை சொல்லத் தொடங்கியிருக்கிறார்.

அரசியல் பார்வையாளன் என்கிற முறையில் ஒருவர் தாம் ஆதரிக்கும் தரப்பினருக்கு ஆலோசனை கூறுவதில் தவறில்லை. ஆனால் வன்முறையைத் தூண்டுகிற விதமாக அது அமையும்போது அதற்கு ஆட்சேபணை தெரிவிக்க வேண்டியதாகிறது.

இன்றைய அரசியல் கட்சிகளில் பா. ஜ. க. நீங்கலாக வேறு எந்தக் கட்சியிலும் சோனியா காந்தியைத் தவிர வேறு எவருக்கும் மக்களைச் சந்தித்து அவர்களின் வாக்குகளைப் பெறுவதற்கான முகராசி இல்லை என்பதை ஒப்புக் கொள்வதுபோல, மதச் சார்பற்ற சக்திகள் அனைத்தும் சோனியாவின் ஒருகுடைக் கீழ் ஒன்று திரள வேண்டும் என்று அறைகூவியழைத்திருக்கிறார், கரண் தாப்பர்.

திடீரென அகற்றப்பட வேண்டுமாம்

2007 டிசம்பர் 29 ஆம் நாள் ஹிந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழில் தாம் வழக்கமாக எழுதும் பத்தியில் தமது அறைகூவலை வெளிப்படுத்தியிருக்கிற தாப்பர், அத்துடன் நிறுத்திக் கொண்டிருந்தால், சரி, அது அவரது ஆதங்கம் என்று விட்டு விட்டிருக்கலாம். ஆனால் அவர் அதையும் மீறித் தமது துராசையை பகிரங்கமாக வெளியிட்டிருப்பதுதான் கடுமையான கண்டனத்திற்குரியதாகிறது.

ஹிந்துத்துவம் மோடித்துவமாக விசுவரூபம் எடுத்திருப்பதாக மிரளும் கரண் தாப்பர், மதச் சார்பற்ற சக்திகள் வெற்றி பெற வேண்டுமானால் மோடி திடீரென அகற்றப்படுவது அவசியமென்று ஆலோசனை கூறியிருக்கிறார். ஆங்கிலத்தில் அவர் அதற்குப் பயன்படுத்தியிருக்கும் சொற்கள், ஸடன் ரிமூவல். (Sudden Removal)

ஒரு நபர் திடீரென அகற்றப்பட வேண்டும் என்று ஒருவர் கருத்துத் தெரிவித்தால் அதற்கு என்ன அர்த்தம்?

மோடியை அகற்ற முகமதிய பயங்கரவாதிகளுக்கு கரண் தாப்பர் அழைப்பு விடுக்கிறார் என்பதைத் தவிர அதற்கு வேறு என்ன அர்த்தம் இருக்க முடியும்? ஒரு ஊடக அரசியல் விமர்சகர் இப்படி வெளிப்படையாக வன்முறை வெறியுடன் பயங்கர வாதிகளுக்கு ஆலோசனை சொல்வதை எப்படி அனுமதிக்க முடியும்?

இதேபோல வினோத் மேத்தா என்கிற இன்னொரு பத்திரிகையாளர் அவுட்லுக் என்கிற பத்திரிகையின் ஜனவரி 14 2008 இதழில் நரேந்திர மோடி இல்லாத ஆண்டாக 2008 அமைவதாக என்று வாசகர்களுக்குப் புத்தாண்டு வாழ்த்துத் தெரிவிதிருக்கிறார்.

மோடி இல்லாத ஆண்டு அமைய வேண்டுமாம்
பண்பாடு சிறிதுமின்றி ஒரு மாநில முதலமைச்சரை மரணத்தை விற்பனை செய்கிறவர் (மவுத்கா ஸேளதாகர்) என்று வசைபாடிய சோனியாவின் ஆதரவாளர்களிடம் இவ்வாறான எதிர்வினைகளைத்தான் எதிர்பார்க்க முடியும் என்றாலும் இப்படிப்பட்ட வெளிப்படையான வன்முறை ஆதரவுக் கருத்துகளுக்கு உடனுக்குடன் சட்டப்படிக் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

நரேந்திர மோடி ஏற்கனவே முகமதிய பயங்கரவாதிகளால் குறிவைக்கப்பட்டிருப்பது அனைவருமே அறிந்த விஷயம். அதனைத் துரிதப் படுத்த வேண்டும் என தூபமிடும் கரண் தாப்பர், வினோத் மேத்தா ஆகியோர் மீது வன்முறையைத் தூண்டும் குற்றத்திற்காக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

malarmannan79@rediffmail.com

Friday 11 January, 2008

திண்ணையில் வஹ்ஹாபி என்னும் "முகமதியன்"...!!

இவ்வார‌ திண்ணையில், "குஜராத்தில் மத சார்பற்ற ஆட்சியை கொண்டுவரவேண்டுமானால் 'sudden removal' ஒன்றே வழி என்று க‌ர‌ண் தாப்ப‌ர் குறிப்பிட்டதில் '' என்ப‌த‌ற்கு தீர்த்துக‌ட்டுத‌ல் என்ப‌துதான் அர்த்த‌ம்" என்ற‌ ம‌ல‌ர்ம‌ன்ன‌ன் அவ‌ர்க‌ள‌து க‌ட்டுரைக்கு, 'sudden removal' என்றால் 'ப‌த‌வி நீக்க‌ம் செய்வ‌து' என்ப‌து ம‌ட்டுமே அர்த்த‌ம் என்கிற தொனியில் வ‌ஹ்ஹாபி என்னும் "முக‌ம‌திய‌ன்" எழுதிய‌ க‌ட்டுரை க‌ண்டேன்.

வஹ்ஹாபி எழுதியபடி "sudden removal" என்பதற்கு "பதவி நீக்கம்" என்பதே அர்த்தமாக இருந்துவிட்டு போகட்டும்...

பெறும்பான்மையான மக்கள் ஜனநாயகமுறைப்படி தேர்ந்தெடுத்த ஒரு முதல்வரை, தேர்ந்தெடுத்த மறுநாளே "பதவி நீக்கம்" செய்வது எப்படியென்ன்று தாப்பர்களுக்கும், வஹ்ஹபிகளுக்கும் மட்டுமே தெரிந்த உண்மை.

********

உல‌கெங்கிலும் ந‌ட‌க்கும் ப‌ய‌ங்க‌ர‌வாத‌ செய‌ல்க‌ளுக்கு முன்னோடியான‌ முக‌ம‌து என்ப‌வ‌ன் பெய‌ரால், "முக‌ம‌திய‌ம்" என்றும் "முக‌ம‌திய‌ ப‌ய‌ங்க‌ர‌வாத‌ம்" எனறு அழைப்ப‌தில் என்ன‌ த‌வ‌று இருக்க‌முடியும்....

இணைய இந்து நண்பர்கள் அனைவரும் இனி "முக‌ம‌திய‌ம்", "முக‌ம‌திய‌ ப‌ய‌ங்க‌ர‌வாத‌ம்" என்பதை பரவலாக பயன்படுத்தவேண்டும்.

வாழ்க பாரதம்...பாரத அன்னையை வணங்குவோம்...

Tuesday 8 January, 2008

"இனிய மார்க்க" வழியில் சவுதி அரேபியா

ஃபிரான்ஸ்‍ பிரதமர் நிகோலஸ் ஸர்கோஜி (Nicolas Sarkoji) தனது மனைவி ஸெஸிலியா (Cecilia) யை விவாகரத்தது செய்தபின் கர்லா ப்ரூனி (Carla Bruni) என்னும் காதலியுடன் கல்யாணமாகாமலே குடும்பம் நடத்திவருவது ஒரு பைசா பெறாத செய்தி...

ஜோக் என்னவென்றால்...

இம்மாத இறுதியில் சவுதிக்கு அரசுமுறை சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கும் ஸர்கோஜிக்கு, தனது காதலியுடன் சவுதிக்கு வருவதானால் அனுமதி மறுக்கப்படும் என்ற நிபந்தனையை சவுதி அரசு விதிப்பதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி. காரணம்... கல்யாணமாகாத ஆணும் பெண்ணும் ஒன்றாக இருப்பது அவர்களது இனிய மார்க்கத்துக்கு எதிரானதாம்... அப்பிடி போடு....

என்னவோ சவுதியில் விபச்சாரமே நடக்காதது மாதிரி...

எல்லாம் பெட்ரோல் பணம் படுத்தும் பாடு...