Monday 31 March, 2008

வஹ்ஹபி கமெடிக்கு கோபால் ராஜாராம் திண்ணையில் பதில்

Friday March 28, 2008
திண்ணைப் பேச்சு - அன்புள்ள வஹாபி
கோபால் ராஜாராம்

எல்லாக் குழந்தைகளும் முஸ்லிமாய்ப் பிறக்கிறது என்று எனக்குத் தெரியாத அரபி மொழியில் ஏதோ, சொல்லியிருக்கிற வஹாபியின் கடிதம் கண்டு நான் மனமாரச் சிரித்தேன். நான் பிறந்தது நிர்வாணமாக. அம்மா-அப்பா குரொமோசோம்களின் கலவையும், முன்னோர்களின் மரபணுப் பதிவின் கலவையுமாகப் பிறந்த நான் ஒரு எழுதப் படாத சிலேட் தான். அதற்குப் பின்பு என் பெற்றோர், என் சூழல், என் ஆசிரியர்கள், படித்தது, கேட்டது என்று ஐயப் பாடுகளும், சிந்தனைகளும் பெற்று வளர்ந்து நிற்கிற ஒருவன் நான்.

எல்லோருமே அப்படித்தான், வஹாபி உட்பட. பிறக்கும்போதே சாதி, மதம், சொல்லப்போனால் பாலின உணர்வு கூடப் பெறுவதில்லை என்று அறிவியல் சொல்கிறது. எனவே தான் கிருஸ்துவ மதத்தில் ஓரளவு சிறுவர் சிறுமியர் வளர்ந்த பிறகு அவர்களுக்கு ஞானஸ்நானம் வழங்கப் படுகிறது. யூத மதத்திலும் அவ்வாறே. இப்படி வஹாபி எழுதுவது இஸ்லாமியராய் அல்லாத 400 கோடி மக்களை அவமதிப்பது மட்டுமல்ல, இஸ்லாம் என்ற மதத்தையும் அவமதிப்பது போலத்தான். அறிவு பெற்றபிறகு பகுத்தறிவால் ஆய்ந்து உணர்ந்து தேர்வு செய்துகொள்கிற நம்பிக்கை தான் உண்மையானதாய் , ஒரு மனிதனின் இயல்பிற்குத் தக்கதாய் இருக்க முடியும். மிரட்டலாலும், இப்படி பிறக்கும்போதே இஸ்லாமியனாய்ப் பிறந்தாய் என்றெல்லாம் பொய் சொல்லி ஆள் சேர்க்கிற அளவு இஸ்லாம் பலவீனமானது என்று நான் நம்பவில்லை.

இஸ்லாம் பற்றிய புகழுரையை வழங்கியுள்ள அநேகம் பேரை மேற்கோள் காட்டுவதன் மூலம் வஹாபி என்ன சொல்கிறார் என்று எனக்கு விளங்கவில்லை. இஸ்லாம் பற்றி விமர்சனங்களை முன்வைத்த பலநூறு பேரையும் என்னால் மேற்கோள் காட்ட முடியும். ஆனால் வஹாபி காட்டும் மேற்கோள்களும் சரி, இஸ்லாமை விமர்சனம் செய்பவர்களின் மேற்கோள்களும் சரி எதனுடைய நிரூபணமும் அல்ல. ஒரு குறிப்பிட்ட பார்வையிலிருந்து செய்யப் படுகிற பாராட்டு அல்லது விமர்சனம், அதன் பின்னணியில் வைத்துப் புரிந்துகொள்ளத் தக்கதே தவிர சீர்தூக்கிய முடிவல்ல. அதை வேதவாக்காய்க் கொண்டு இஸ்லாமைப் புகழ்வதோ, இகழ்வதோ தவறு. இது இஸ்லாமிற்கு மட்டுமல்ல, எல்லா மதங்களுக்கும் பொருந்தும்.

அமெரிக்காவில் மிக வேகமாக வளர்கிற மதம் இஸ்லாம் என்ற புள்ளி விவரம் தவறு என்று சொல்கிறார்கள். அப்படி இருந்தால் கூட அது இஸ்லாமின் தகுதியைக் காட்டிலும், அமெரிக்காவின் பல்கலாசாரப் பண்பிற்கு ஒரு பாராட்டாகத் தான் அமையுமே தவிர வேறில்லை. இதே சுதந்திரம் இஸ்லாமியர் பெரும்பான்மையாய் உள்ள நாடுகளிலும் வழங்கப் படவேண்டும் என்று வஹாபி பிரார்த்தனை செய்யட்டும். பெரும்பான்மை வாதத்தால் மற்ற மதங்களின் உரிமைகள் நசுக்கப்படாத அமெரிக்கா போன்றே இரான், அரேபியா , எகிப்து போன்ற நாடுகளிலும் மதச்சுதந்திரம் வழங்கப் படவேண்டும் என்பது நம் கோரிக்கையாய் இருக்கட்டும். வஹாபி இதற்குப் பாடுபடுவார் குரல் கொடுப்பார் என்று நம்புவோம்.

****

பிறக்கும்போதே ஒரு மதத்தைப் பச்சை குத்திக் கொண்டு எல்லோரும் பிறக்கிறார்கள் என்ற வாதம் ஒரு தத்துவப் பிரசினையின் தொடக்கம். மனிதனின் இருப்பு முன் கூட்டியே நிர்ணயிக்கப் பட்டுவிட்டால், அவனுடைய சுயம் என்பது என்ன? சுதந்திரத் தேர்வு என்பது என்ன? அப்படித் தேர்வு இல்லையென்றால் அவன் செயல்களுக்கு அவன் எப்படி பொறுப்பாவான்? சொர்க்கம் நரகம் என்ற கருத்தாக்கம் எப்படி பொருள் கொள்ளும் என்பது ஒரு தத்துவப் பிரசினை. கிருஸ்துவ தத்துவத்தில் சுதந்திரத் தேர்வு மனிதனுக்கு உண்டா இல்லையா என்பது பற்றி பெரும் தத்துவ விசாரங்கள் நடந்து வந்திருக்கின்றன.

ஆனால் வஹாபி போன்றவர்களுக்கு இந்தத் தத்துவப் பிரசினையெல்லாம் ஒரு பொருட்டே அல்ல. தயாராக உள்ள பதில்களைப் பதிவு செய்தால் போதும்.

****

1400 வருடங்கள் முன்பு இஸ்லாம் தோன்றவில்லை என்று வஹாபி சொல்வதும் எனக்கு விளங்கவில்லை. முகம்மது கார்ட்டூன்களுக்குத் தானே முஸ்லிம்கள் எதிர்ப்புத் தெரிவித்தார்கள். மோசஸ், ஏசு பற்றி காமெடியும், கார்ட்டூன்களும் வழமையாய் எல்லா மேற்கு நாடுகளிலும் உண்டே அதற்கு முஸ்லிம்கள் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லையே. முகம்மது தோன்றியிராவிட்டால் எப்படி இஸ்லாம் என்ற மதம் தோன்றியிருக்கும்?

****

Friday 28 March, 2008

வ‌ஹ்ஹாபி காமெடி

கடந்த வாரத்தில் வஹ்ஹாபி என்னும் முகமதியன் (மார்ச் 20, 2008)திண்ணைக்கட்டுரையில் (பார்ப்பனர், சங்கராசாரி, சனாதனக்குட்டை விவகார வரிசையில்) எழுதிய ("நகைச்சுவையும் வித்தியாசமானவையும்" பகுதியில் வந்திருக்க வேண்டிய, "கடிதங்கள்" பகுதியில் வெளியான) கடிதத்தில் க‌ண்ட காமெடி வரிகள் இவை...

வ‌ஹ்ஹாபி காமெடி

(1) அமெரிக்காவில் ("உலகில்" என்ற இணைய ஜல்லடிகளும் உண்டு) மிக வேகமாக வளர்ந்துவரும் மதம் முகமதியம்.

(2) பிறக்கும்போது எல்லாருமே முகமதியனாகவே பிறக்கின்றனர் (பேராசிரியர் (?!!) ரூமியும் இந்த ரீதியில் உளரிய கட்டுரையை எங்கோ படித்த ஞாபகம்). பின்னரே பெற்றோர் இன்னபிற காரணங்களால் சிலைவழிபாட்டாளனாகிறான்.

(3) முகமதியம் முழுமனிதகுலத்துக்கும் வழங்கப்பட்ட வாழும்நெறி

(4) "நான் ஒரு முஸ்லிம்; என்னை முஸ்லிம் என்றே விளியுங்கள்" என்று ஓர் அஹமதியோ, ஒரு ஷியாவோ, ஒரு பஹாயோ வேண்டுகோள் வைத்தால் மிக்க மகிழ்வுடன் ஏற்றுக் கொண்டு அவர்களை 'முஸ்லிம்' என்று விளிப்பதில் / குறிப்பதில் எனக்கு எவ்விதத் தயக்கமுமில்லை.

(5) பார்ப்பனர் என்ற சாதாரணச் சொல் வசைச் சொல்லாக மாறியது கடந்த சில மாதங்களுக்குள்ளாத்தான் இருக்க வேண்டும் என்று உறுதிபடச் சொல்லலாம்.

(6) அஹமதி, ஷியா, பஹாய் போன்றோரின் POA (Power Of Attorney)க்கள் இனிமேல் நேச குமாருக்கு உதவா என்பதால் அவற்றைக் கிழித்துப் போட்டு விடலாம். அஹமதி, ஷியா, பஹாய் ஆடுகள் நனைவது குறித்து அழ வேண்டிய தேவையும் இனிமேல் நேச குமாருக்கு இல்லாமலாகி விட்டது.

(7) அவதூறு எழுதிய நேச குமார், அதற்காகத் திண்ணை வாசகர்களிடம் மன்னிப்புக் கேட்டாக வேண்டும். இல்லையெனில், அவதூறு+ஆட்கொணர்வு வழக்குகளை - திண்ணை/திண்ணையர் சாட்சியாக - நீதிமன்றத்தில் அவர் சந்திக்க நேரலாம் என்பதை அன்போடு சொல்லி வைக்கிறேன்.

*************************************************

முகமதுவயும் முகமதியத்தையும் பாராட்டி பேசுவது எழுதுவது எல்லாமே, மதசகிப்பு காரணமாகத்தான். கோடிக்கணக்கானோர் நம்பிக்கை வைத்திருக்கும் ஒரு மதத்தினையும் அதன் நிருவனரையும் (அதனால் சமுதாயகேடுகள் விளையாத வரையில் அல்லது சமுதாய நல்லிணக்கத்தை முன்னிறுத்துவது போன்ற காரணங்களாலும்) விமர்சிப்பது தேவையில்லாத விஷயமாகும். இந்த வகையில் தேசப்பிதா காந்தி போன்றோரின் முகமதியம்/முகமது குறித்த பாராட்டுதல்கள் குறித்து அதன்பின்னணி குறித்து விளங்கிக்கொள்வது அத்தனை கடினமான விஷய‌மில்லை.

வஹ்ஹாபிகளின் பார்வையில் முகமதியம் ஒன்றே எல்லா மனிதகுலத்துக்கும் அருளப்பட்டது; அல்லா மட்டும்தான் ஒரே இறைவன் என்று கொண்டால், அவர் கொடுத்த லிஸ்டில் உள்ள அனைவரும் (அல்லது கொஞ்சபேராவது) முகமதியத்துக்கு மாறியிருக்க வேண்டுமே.

இன்று முகமதியத்துக்கு மாறுபவர்கள், முகமதியம் ஒன்றுதான் உலகில் தலைசிறந்த மதம் என்பதற்காக மட்டுமே மாறுபவர்களா என்ன ?

முகமதியத்தைவிட சிறந்த கோட்பாடுகளுள்ள மதங்கள் இல்லையா என்ன ?
புத்தமதத்தை பின்பற்றும் ஜப்பானியர்களுக்கு (அவர்களும் சிலைவழிபாட்டாளர்கள்தான்) "வாழும் வழிமுறையில்" என்ன குறை கண்டுபிடிக்க முடியும் இந்த வஹ்ஹாபிகளால் ?

முகமதுவையும் முகமதியத்தையும் பாராட்டிப்பேசும் மாற்றுமத‌த்தினர் (என்னைப்போல் ஒருசில அரைவேக்காடுகள் தவிற)பெரும்பான்மையாக இருக்க, மற்ற மதக்கோட்பாடுகளை மதிக்கும் முகமதியனை தேடித்தான் கண்டுபிடிக்கவேண்டும்.

"நீ பிறக்கும்போது இஸ்லாமியன்", "தீவணங்கி", முழுமனிதகுலத்துக்கும் வளங்கப்பட்ட குரான்" என்ற ரீதியில் எழுதி முகமதியரல்லாத கோடிகணக்கான‌ மக்களை அவமதிக்கும் வஹ்ஹாபிகள் நேசக்குமார் போன்றோருக்கு எழுதும் அறிவுரைகள் சாத்தான் ஓதும் வேதமே.

**********

முகமதியத்தை நேசக்குமார் மட்டுமே (தான்தான் உலகம் என்று நினைத்துக்கொண்டு) விமர்சிக்கவில்லை. முகமதியம் குறித்த விமர்சனங்கள் இன்று இணையம் மற்றும் அனத்து ஊடகங்களிலும் விரவிக்கிடக்கிறது.

// "நான் ஒரு முஸ்லிம்; என்னை முஸ்லிம் என்றே விளியுங்கள்" என்று ஓர் அஹமதியோ, ஒரு ஷியாவோ, ஒரு பஹாயோ வேண்டுகோள் வைத்தால் மிக்க மகிழ்வுடன் ஏற்றுக் கொண்டு அவர்களை 'முஸ்லிம்' என்று விளிப்பதில் / குறிப்பதில் எனக்கு எவ்விதத் தயக்கமுமில்லை. //என்று எழுதும் வஹ்ஹபிகள்தான் தாமே உலகம் என்று எண்ணிக்கொள்கின்றன.

அஹமதியா, ஷியா, பஹாய்களை முஸ்லிமாக வஹ்ஹாபி ஏற்றுக்கொள்வதைப்பற்றி நேசக்குமாருக்கு அக்கறையிருக்க வாய்ப்பில்லை. அல்லாவை கடவுளாக ஏற்றுக்கொண்ட அஹமதியாக்களும், ஷியாக்களும், பஹாய்களும், அவர்கள் நசுக்கப்படுவதும் நசுக்கும் முகமதியர்களைப்ப‌ற்றியே நேசக்குமார் சுட்டியிருந்தார்.

மிகப்பெருந்தன்மையாக அஹமதியாக்களையும், ஷியாக்களையும், பஹாய்களையும் (அவர்கள் வேண்டிக்கொண்டால்) முஸ்லிமாக எற்றுக்கொள்வதாக எழுதும் வஹ்ஹாபிகள்தான் தம்மையே உலகம் என்று எண்ணிக்கொள்வதாக படுகிறது. இதே மனநினலைதான் முகமது காலம்தொட்டு, அழுரங்கசீப்பு திப்புசுல்தான் கடந்து இன்றய வஹ்ஹாபிகள் வரை கொண்டிருக்கும் கரூர மனப்பாங்கு.

**********

நல்ல வேளை, வழக்கமான பத்துவாக்களில்லாமல் நீதிமன்றத்தில் சந்திக்க வேண்டியிருக்கும் என்ற "அன்பான‌" மிறட்டலோடு விட்டுவிட்டார். இங்கு என்ன ஷரியா கோர்ட்டா நடக்குது... அடப்போங்கடா....

***********

எப்பொதும் ஒரு விஷ‌ய‌ம் மாறாம‌ல் நடந்துகொண்டிருக்கிற‌து...

தான் ப‌டித்த‌ விஷ‌ய‌ங்க‌ள், இவ்வுல‌கில் க‌ண்கூடாக‌ ந‌ட‌க்கும் விஷ‌ய‌ங்க‌ள் குறித்து, த‌ன‌து பார்வையில், ம‌ற்ற‌ ஆராய்சியாள‌ர்க‌ள் பார்வையில் க‌ண்ட‌ விஷ‌ய‌ங்க‌ள் குறித்து, இணைய‌ ந‌ண்ப‌ர்க‌ள் ம‌ற்றும் விம‌ர்ச‌க‌ர்க‌ள் நோக்கி உபயோகமான‌‌ விவாத‌ங்க‌ளை எதிர்நோக்கி கேள்விக‌ள‌யும் விம‌ர்ச‌ன‌ங்க‌ள‌யும் நேச‌க்குமார் முன்வைப்ப‌தும்....

அவ‌ர் கேள்விக்குள்ளாக்கிய‌ குரானிலிருந்தே ப‌ல்வேறு வ‌ச‌ன‌ங்க‌ளை க‌ட் அண்ட் பேஸ்ட் செய்து, கேள்விகேட்ட‌வரையே "ம‌னனோயாளி"க‌ளாக‌வும், "கிழிபடு"ப‌வ‌ராகவும் சித்த‌ரித்து‌‌ எழுதுவ‌தும்....

மைய்ய‌ப்பொருளான‌ கேள்விக‌ள் அந்த‌ர‌த்தில் மாறாம‌ல் தொங்கிக்கொண்டிருப்ப‌தும்... ஒருகட்டத்தில் அவமான‌ப்ப‌டுத‌ப்ப‌டும் உண‌ர்ச்சிமிகுதியில் நேசக்குமார் பொறுமையிழப்பதும் [கார்ட்டூன் மீழ்ப‌திவு, முக‌ம‌துவை சாமியார் என்ற‌ழைப்ப‌து போன்று... (முக‌ம‌து மனநிலை பிறழ்ந்த‌ சாமியார் என்ப‌து ஒன்றும் ர‌க‌சிய‌மான‌ விஷ‌ய‌மில்லை !) ] ...

க‌டைசியில்...ப‌த்வா, நீதிம‌ன்ற‌ அவ‌ம‌திப்புவழ‌‌க்கு என்று மிர‌ட்ட‌ப்ப‌ட்டு வாய‌டைக்கும் முய‌ற்சிக‌ளில் முடிகின்ற‌து...

த‌ன‌து முய‌ற்சியில் ச‌ற்றும் ம‌ன‌ம் த‌ள‌றாத‌ விக்ர‌மாதித்த‌ன் போல‌, மீண்டும் த‌ன‌து கேள்விக‌ளுக்கு விடைதேட‌ நேச‌க்குமார் முய‌ல்வ‌தும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிற‌து.

ஆர‌ம்ப‌கால‌த்தில்... நேச‌க்குமார் முக‌ம‌திய‌ம் குறித்து விம‌ர்ச‌ன‌ங்க‌ளை முன்வை‌த்து எழுதிய‌ க‌ட்டுரைக‌ளை மீண்டும் ஒருமுறை எந்தவித பாரபட்சமுமில்லாமல் நடுநிலையோடு ப‌டித்துப்பார்த்தால், அவரது நல்ல நோக்கங்கள் புரியும். யாரையும் புண்ப‌டுதாத‌ வ‌கையில் வார்த்தைக‌ளை தேர்ன்தெடுத்து ப‌ய‌ன்ப‌டுத்தி, நியாய‌மான‌, இன்ற‌ய‌ முக‌ம‌திய‌ உல‌கில் காண‌ப்ப‌டும் அவலநி‌லைக‌ளுக்கான தீர்வுக‌ளை எதிர்நோக்கிய‌ ந‌ல்லெண்ண‌ங்க‌ளின் வெளிப்பாடாக‌வே அவ‌ர‌து விம‌ர்ச‌ன‌ க‌ட்டுரைக‌ள் இருந்த‌ன‌. இந்த‌ ஒரு கார‌ண‌த்திற்காக‌வே அவ‌ர‌து ப‌திவுக‌ளை வாசிக்க‌ ஆர‌ம்பித்தேன்.

நேச‌க்குமார், தான்சார்ந்த இந்தும‌தத்தை குறையொன்றும் இல்லாத‌ முழுமையான‌ ம‌த‌ம் என்று என்னாளும் எழுதிய‌தில்லை. மாற்று மதத்தினரை தனது மதம் நோக்கி வருமாறு அழைப்பதில்லை. த‌ன‌து ம‌த‌த்தில் இருக்கும் குறைக‌ளை விம‌ர்சிக்கவும், தனது மதத்தில் தான் காணும் குறைகளுக்கு எதிராக தனது கருத்துக்களை தெரிவிக்கவும், இன்றய அறிவுசார் மனிதகுலத்துக்கு எதிரான விஷயங்களை தூக்கி எறிய அவ‌ருக்கு இருக்கும் சுதந்திர‌ம் மாற்று ம‌த‌த்தின‌ருக்கு ஏன் இல்லை ?... முக‌ம‌திய‌ம் ஏன் அந்த‌ சுதந்‌திர‌த்தை ம‌றுக்கிற‌து ? முக்கால‌த்துக்கும் அருள‌ப்ப‌ட்ட‌ வாழ்க்கைமுறை என்று ஏன் க‌ண்மூடித்த‌ன‌மாக‌ கேள்விகேட்க்கும் சுத‌ந்திர‌மில்லாம‌ல் இருக்க‌வேண்டும் ? என்ப‌தே அவ‌ர‌து கேள்விக‌ளின் மைய்ய‌ப்பொருள் என்ப‌து என‌து க‌ருத்து. முக‌ம‌திய‌ரின் இந்த‌ சுத‌ந்திர‌மில்லாமை குறித்து அவ‌ருக்கு ஏன் இவ்வ‌ள‌வு அக்க‌ரை ?. அவ‌ர் ஒன்றும் முக‌ம‌திய‌த்தை சீர்திருத்த‌ வந்த‌ சீர்திருத்த‌வாதிய‌ல்ல‌. தவறான‌ பின்ப‌ற்றுத‌ல்கொண்ட வஹ்ஹாபி போன்ற‌ "அடிப்ப‌டைவாதிக‌ளால்" முக‌ம‌திய‌த்தின் உள்ளும் புற‌மும் நிகழ்கின்ற‌ ச‌முதாய‌ அவ‌ல‌ங்க‌ள், பாதிப்புக‌ள் குறித்த‌ எந்த‌வொரு சாதார‌ண‌ ம‌னித‌னுக்குள்ளும் எழுகின்ற‌ இய‌ல்பான‌ கேள்விக‌ள்தான் அவை.

அடிப்ப‌டைவாத‌ குண‌ம‌ற்ற‌ எண்ண‌ற்ற‌ முக‌ம‌திய‌ர்க‌ள் இருப்ப‌தும் அவ‌ர்க‌ள் குறித்து த‌ன‌து உய‌ர்வான‌ எண்ண‌த்தையும் ம‌திப்பையும் குறித்து நேச‌க்குமார் எழுதிய‌ ப‌திவுக‌ள் எங்கோ காற்றில் க‌ரைந்துதான் போனது.

இதை ச‌ரியாக‌ புரிந்துகொள்ளாம‌ல், அவ‌ரைத் தூற்றுவ‌தும் மிற‌ட்டுவ‌தும்தான் ந‌ட‌ந்துகொண்டிருக்கிற‌து.... இன்னும் ந‌ட‌க்கும்.

********************
அந்த காமெடிக்கடிதம் கீழே...
================

Thursday March 20, 2008
கிழிபடும் POAக்கள்
வஹ்ஹாபி

சென்ற வாரத் திண்ணையில் நேச குமாருடைய [சுட்டி-1] கடிதம் படித்ததிலிருந்து என் பள்ளித் தோழன் ஜீனா கணேசன் எனது சிந்தனையில் ஒருவார காலமாக இடம் பிடித்துக் கொண்டான்.

ஜீனா என்பது அவனுடைய இனிஷியல் அல்ல.
அவனுக்கு அபார நினைவாற்றல் இருந்தது. எத்தனை முறை எவ்வளவு தெளிவாகச் சொல்லிக் கொடுத்தாலும் ஒருமுறைகூட மறந்து விடாமல் ஜப்பானை "சப்பான்" என்றும் சீனாவை "ஜீனா" என்றும்தான் சொல்லுவான். அதனால் அவனுக்கு எங்கள் வகுப்பாசிரியர் வைத்த பெயர்தான் "ஜீனா கணேசன்".(நாளக்கி ஜிவாசி படம் போடப் போறாங்கடா).

ஒருவரை இஸ்லாமிய வாழ்க்கை நெறியை ஏற்றுக் கொண்ட 'முஸ்லிம்' என்று ஒப்புக் கொள்வதற்கும் அல்லர் என்று மறுதலிப்பதற்கும் இஸ்லாத்தில் தெளிவான வரையறை உண்டு. அவற்றை மூன்றாவது தடவையாக இங்குப் பதிய வேண்டிய கட்டாயத்துக்கு நேச குமார் என்னைத் தள்ளி விட்டார்:

//ஒரே இறைவனான அல்லாஹ்வைத் தன் கடவுளாக ஏற்றுக் கொண்டு, ஆதம் முதல் ஈசா வரை அவன் அனுப்பி வைத்தத் தூதர்களைத் தொடர்த் தூதர்களாகவும் அத்தொடரில் இறுதியாக வந்தவர் முஹம்மது (ஸல்) அவர்கள்" என்றும் ஏற்றுக் கொண்டு, இஸ்லாமிய வாழ்க்கை நெறிகளைச் செயல் படுத்துகின்ற அனைவரும் முஸ்லிம்கள்தாம் என்ற வரையறை இஸ்லாத்தில் ஏற்கனவே உண்டு. எனவே, யாரும் யாரையும் 'முஸ்லிம்' என்று ஏற்றுக் கொள்ள வேண்டும்; அல்லது 'இல்லை' என்று மறுதலிக்க வேண்டும் போன்ற அறிவுரைகள் தருவதற்கு அரைகுறைகளின் தேவை முஸ்லிம்களுக்கு இல்லை.//

இயல்பான மனநிலையிலுள்ள, தமிழைப் படிக்கத் தெரிந்த எவருக்கும் எளிதாக விளங்கும்படி நான் எழுதியிருப்பது நேச குமாருக்கு விளங்கவில்லை; பாவம்!

"இஸ்லாம் என்பது 1400 ஆண்டுகளுக்கு முன்னர் முகமது என்பவரால் அரேபியாவில் தோற்றுவிக்கப் பட்ட புதிய மதம்" என்ற தவறான தகவல் அவருக்குப் பதிந்து போனதால் சரியானதைச் சொல்லிக் கொடுத்தாலும் அவரால் மாற்றிக் கொள்ள முடியவில்லை, ஜீனா கணேசனைப் போல்.
மேற்கொண்டு படிப்பதற்கு முன் தொடர்புடைய சில குறிப்புகள்:

(*) 'முகமதிய பயங்கரவாதிகளுக்கு அழைப்பு விடுக்கும் அரசியல் விமர்சகர்கள்' என்ற தலைப்பில் மலர் மன்னன் ஒரு கட்டுரை [சுட்டி-2] எழுதியிருந்தார்.

(*) இஸ்லாம் என்ற வாழ்க்கை நெறியைப் பின்பற்றுபவர்களை 'முகமதியர்' என்று குறிப்பது வரலாற்றுப் பிழையாகும். ஏனெனில் "இஸ்லாம் என்ற வாழ்க்கை நெறி முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களால் அரபு நாட்டில் புதிதாகத் தோற்றுவிக்கப் பட்ட ஒரு மதமல்ல" என்று நான் மறுப்பெழுதினேன் [சுட்டி-3]. அதில்,

"சிலர் திரும்பத் திரும்ப வேண்டுமென்றே திரித்து எழுதுவதுபோல் இஸ்லாம் என்பது 'முகமதிய மத'மன்று. குர்ஆனை வேதமாக ஏற்றுக் கொண்ட முஸ்லிம்களின் நம்பிக்கையின்படி, இஸ்லாம் என்பது கி.பி. ஏழாம் நூற்றாண்டில் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களால் தோற்றுவிக்கப் பட்ட ஒரு புதுக் கொள்கையன்று [அல்குர்ஆன் 003:144 ]. மாறாக, முழுமனித குலத்துக்கும் முஸ்லிம்கள் நம்புகின்ற இணையற்ற, அல்லாஹ் என்ற ஒரே இறைவனால் முதல் மனிதரும் அவனுடைய நபியுமான ஆதமுக்கும் அவரிடமிருந்து அவருடைய வழித்தோன்றலார் அனைவர்க்கும் வழங்கப் பட்ட வாழும்வழி-வாழ்க்கைநெறியே இஸ்லாமாகும்" என்று நான் சார்ந்திருக்கும் சமயம் பற்றிச் சுருங்கக் கூறியிருந்தேன்.

இன்னும் சுருக்கமான கூடுதல் விளக்கங்கள்:
"இபுராஹீமுக்கு நாம் இஸ்ஹாக்கையும் (அவரிலிருந்து) யஃகூபையும் வழித்தோன்றல்களாக அருளி, அவ்வனைவரையும் நேர்வழியில் செலுத்தினோம். அவர்களுக்கு முன்னர் நூஹையும் அவருடைய வழித்தோன்றல்களான தாவூது, ஸுலைமான், அய்யூப், யூஸுஃப், மூஸா, ஹாரூன் ஆகியோரையும் நேர்வழியில் செலுத்தினோம் ... [அல்குர்ஆன் 006:084].
"மீக்கூறிய அனைவரும் அல்லாஹ் அருள் புரிந்த நபிமார்களாவர்; அவர்கள் ஆதம், நூஹ், இப்ராஹீம், இஸ்ராயீல் (ஆகிய நம் நபிமார்களின்) வழி வந்த நபிமார்களும் நாம் தேர்ந்தெடுத்து நேர்வழியில் நடத்தியவர்களுமாவர் ... [அல்குர்ஆன் 019:058].
(*) மலர் மன்னனுக்குத் திண்ணையில் மறுப்பெழுதிய கோபால் இராஜாராமும், 'இஸ்லாம் என்பது ஒரு புதிய மதம்' என்று பிழையாகவே விளங்கினார். ஆயினும், "தம்மை இவ்வாறுதான் விளிக்க/குறிக்க வேண்டுமென்று கூறுபவர்களின் கூற்றுப்படியே விளிப்பது/குறிப்பதுதான் முறையாகும்" என்று 'பெயர்கள் அடையாளங்கள் : முகமதியரா முஸ்லீம்களா?' என்ற தலைப்பில் [சுட்டி-4] எடுத்துரைத்தார்:
//ஒரு சமூகக் குழு எப்படி பெயரிட்டு, எப்படி இனங்காணப் படுகின்றது என்பது, அந்தச் சமூக குழுவின் வரலாற்றையும் மற்றும் அந்த இனக்குழு மற்ற இனக்குழுக்களால் எப்படி அடையாளம் காணப்படுகின்றது என்பதற்கான வரலாற்றையும் பொருத்த விஷயம். முஸ்லிம்கள், "முகமதியர்கள்" என்று அழைக்கப் பட்டதற்கு ஐரோப்பிய வரலாற்றில் காரணங்கள் உண்டு. ஒரு புதிய மதத்தை அதற்கு வெளியே இருப்பவர்கள் அதன் தலைவர் அல்லது வழிகாட்டியை முன்னிறுத்தி அழைப்பது புதிய விஷயம் அல்ல. உலகம் பூராவும் அதுவே நடைமுறை. பௌத்தம் இன்றும் கூட அதனை ஸ்தாபித்தபவர்களின் பெயரால் தான் அறியப் படுகிறது. கிருஸ்துவம் யாரை முன்னிறுத்துகிறதோ அவர் பெயரால் தான் அழைக்கப் படுகிறது. 1965 வரையில் கூட ஆக்ஸ்ஃபோர்ட் அகராதி முகம்மதியர் என்ற வார்த்தையை பிரயோகம் செய்து வந்திருக்கிறது.
ஆனால் முஸ்லிம்கள் சமீப காலத்தில் இந்தப் பெயரைத் தவிர்த்து, முஸ்லிம்கள் என்றே அறியப் படவிரும்புகிறார்கள். எனில் அவர்களை முஸ்லிம்கள் என்று அழைப்பதே சரியாகும்.//
(*) எல்லா முஸ்லிம்களின் பெற்றோரும் முஸ்லிம்களல்லர்; அவ்வாறு இருந்திருப்பின் உலகின் இரண்டாவது பெரிய சமயமாக இஸ்லாம் வளர்ந்திருக்காது. அவ்வாறே முஸ்லிம் குடும்பத்தில், முஸ்லிம் பெற்றோருக்குப் பிறந்தவர்கள் எல்லாருமே உண்மையான முஸ்லிம்களாக வாழ்வதும் தரம் தாழ்வதும் ஒப்புக் கொண்டவற்றை நிறைவேற்றுவதைப் பொறுத்திருக்கிறது என்பதாக 'முஸ்லிம்' என்ற தன்மைப் பெயரை மிகச் சுருக்கமாக [சுட்டி-5] எழுதி இருந்தேன். எல்லாருக்கும் எளிதாக விளங்குவது நேச குமாருக்கு மட்டும் விளங்கமல் போய் விடுகிறது. கூடுதல் விளக்கத்துக்காகச் சில உவமைகள்:
"நான் ஒரு முஸ்லிம்; என்னை முஸ்லிம் என்று அழையுங்கள்" என்று கூறாதவரைக்கும் இஸ்மாயில் என்ற பெயரைத் தன் கையில் பச்சை குத்திக் கொண்டவனை முஸ்லிம் என்று குறிப்பது தவறாகும்.
ராமசாமி என்ற பெயரைப் பெற்றிருந்த பெரியார் எப்படி இந்து இல்லையோ அதுபோலவே மஸ்தான் என்ற பெயரை மட்டும் முன்னிறுத்தி குணங்குடியை முஸ்லிம் என்று சொல்லிவிட முடியாது. ஏனெனில், அவ்வாறு அழைக்கப் படுவதை அவ்விருவருமே வெறுத்தனர்; மறுத்தனர்.
இதுவரைக்கும் பேசுபொருள் முகமதியம்/முகமதியர் என்பதாகவே இருந்தது.
(*) 'பாரதி தரிசனம்' என்ற தலைப்பில் கற்பக வினாயகம் எழுதிய திண்ணைக் கட்டுரையில் பாரதியின் 'முகமதிய'த்தை மேற்கோள் காட்டுவதற்காக நான் எடுத்தாண்டபோது அதிலிருந்த 'பார்ப்பன'ரையும் 'சங்கராச்சாரி'யையும் [சுட்டி-6] தூக்கிக் கொண்டு ஓடிவந்தார் தன்னை அபார்ப்பனர் என்று வெளியில் சொல்லிக் கொள்ளும் நேச குமார்.
பார்ப்பனர் என்பது சாதாரணச் சொல்லாயிருந்து இப்போது வசைச் சொல்லாக மாறிவிட்டதாம்; நேச குமார் சொல்கிறார். ஆனால், மாறிய தேதியையோ மாற்றம் கண்ட காரணத்தையோ அவர் சொல்லவில்லை. சங்க காலக் குறிப்புகளை ஒதுக்கி விட்டு, "நான் பாப்பாத்திதான்" என்று சட்டமன்றத்தில் பெருமை பொங்க அறிவிப்புச் செய்து செருக்கி நின்ற முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சி காலத்திற்குப் பிறகு மாறியிருக்கக் கூடும் என்று வைத்துக் கொண்டாலும் சுமார் 15 ஆண்டு காலமாக அதன் காரணம் மர்மமாக இருக்க வேண்டிய தேவை என்னவென்று தெரியவில்லை.
பார்ப்பனர் என்ற சாதாரணச் சொல், வசைச் சொல்லாக மாறிய காரணத்தை விடுத்து அது மாறிய காலகட்டத்தைத் துல்லியமாக அறிய முடியா விட்டாலும் சான்றுகளின் அடிப்படையில் குத்து மதிப்பாகக் கணித்து விடலாம். பார்ப்பனர் என்ற சாதாரணச் சொல் வசைச் சொல்லாக மாறியது கடந்த சில மாதங்களுக்குள்ளாத்தான் இருக்க வேண்டும் என்று உறுதிபடச் சொல்லலாம். காரணம், மூச்சுக்கு மூச்சு, வரிக்கு வரி, 'பார்ப்பனர்' என்ற சொல்லைப் பயன் படுத்தி, மலர் மன்னன் [சுட்டி-7] எழுதிய கட்டுரையான "தமிழ் நாட்டுப் பார்ப்பனர் பிரச்னையும் அதற்குத் தீர்வும்" திண்ணையில் வெளியானது 31 மே 2007இல்தான். ஆனால், வசையான சொல்லாக அது வகை பிரிக்கப் பட்டது யாரால்? எப்படி? என்பது புரியாத புதிராகவே இருக்கிறது!
***
"முகமது என்பவரால் அறிமுகப் படுத்தப் பட்ட ஒரு புதிய மதம்தான் இஸ்லாம்" என்ற வரலாற்றுப் பிழை திண்ணையில் இடம் பெற்று, அதுவே வருங்காலத்தில் பிறரால் எடுத்தாளப் படும் ஆவணமாகி விடக் கூடும் என்ற காரணத்தை முன் நிறுத்தியே - அப்பிழையைத் திருத்தும் முயற்சியாகவே - நான் எதிர்வினைகள் ஆற்றி வருகிறேன். முகமதியர்/முகமதியம் என்பன பிழையான சொல்லாட்சிகள் என்பதைச் சொல்லி வைப்பதுதான் எனது எதிர்வினையின் நோக்கமேயன்றி அவை வசைச் சொற்கள் என்பதற்கான வெற்றுக் குமுறலன்று.
இஸ்லாம் என்ற வாழ்க்கை நெறி, முதல் மனிதனில் தொடங்குவதாகும். பிறப்பால் உயர்வு-தாழ்வு என்பதே இஸ்லாத்தில் இல்லை. பிறக்கும்போதே எந்தக் குழந்தையும் சாதி-மத-வருணங்களோடு பிறப்பதில்லை. வளர்ப்பினால் அவை வலிந்து திணிக்கப் படுகின்றன. இதையே,
"எல்லா மகவுகளும் (இஸ்லாம் என்ற) இயற்கைநெறியில்தான் பிறக்கின்றன. அவற்றின் பெற்றோர்தாம் யூதராகவோ, கிருத்துவராகவோ தீவணங்கியாகவோ அவற்றை வளர்த்து விடுகின்றனர்..." (புகாரீ 6110) என்று எங்கள் தலைவரும் இஸ்லாத்தின் இறுதி நபியுமான முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் விளக்கமளித்தார்.
மேற்காணும் காரண காரியங்களோடு,
"நான் ஒரு முஸ்லிம்; என்னை முஸ்லிம் என்றே விளியுங்கள்" என்று ஓர் அஹமதியோ,
"நான் ஒரு முஸ்லிம்; என்னை முஸ்லிம் என்றே விளியுங்கள்" என்று ஒரு ஷியாவோ,
"நான் ஒரு முஸ்லிம்; என்னை முஸ்லிம் என்றே விளியுங்கள்" என்று ஒரு பஹாயோ
இங்கு வேண்டுகோள் வைத்தால் மிக்க மகிழ்வுடன் ஏற்றுக் கொண்டு அவர்களை 'முஸ்லிம்' என்று விளிப்பதில்/குறிப்பதில் எனக்கு எவ்விதத் தயக்கமுமில்லை.
எனவே, அஹமதி, ஷியா, பஹாய் போன்றோரின் POA (Power Of Attorney)க்கள் இனிமேல் நேச குமாருக்கு உதவா என்பதால் அவற்றைக் கிழித்துப் போட்டு விடலாம். அஹமதி, ஷியா, பஹாய் ஆடுகள் நனைவது குறித்து அழ வேண்டிய தேவையும் இனிமேல் நேச குமாருக்கு இல்லாமலாகி விட்டது.
***
உலகில் எல்லோராலும் இஸ்லாம் எள்ளி நகையாடப் படுகிறதாம். தன் ஒருவரையே உலகம் என்று நினைத்துக் கொண்டு எழுதும் நேச குமார் சொல்கிறார். ஆனால், அவருடைய கருத்தை மறுக்கும் முகமாக, நேச குமாருடைய சென்னை முகவரிவரை அறிந்து வைத்திருக்கும் அவரின் நண்பர் திண்ணையில் [சுட்டி-8] மேற்கோள்களை அடுக்குகிறார்:
//இஸ்லாத்தைப் பற்றியும் முஹம்மது நபியைப் பற்றியும் மாற்று மதத்தினர், அதுவும் உலகப் புகழ் பெற்ற, அதிகாரத்திலும் அந்தஸ்திலும் இருந்தவர்கள், தலைவர்கள், என்ன சொன்னார்கள் என்று கீழே சில உதாரணங்கள் கொடுத்திருக்கிறேன். உண்மை அப்படி இருக்கும்போது இஸ்லாத்தை அசைத்துப் பார்த்துவிட முயலும் முயற்சிகள் எங்கேபோய் முடியும் என்று நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள்:
"அமெரிக்காவில் வெகு வேகமாகப் பரவி வரும் மார்க்கம் இஸ்லாம்" - நியூயார்க் டைம்ஸ், பிப்ரவரி 21, 1989, பக்கம் 01.
"அமெரிக்காவில் வெகு வேகமாகப் பரவி வரும் மார்க்கம் இஸ்லாம். வழிகாட்டியாகவும் நிலையான தூணாகவும் பலருக்கு அது இருக்கிறது" - ஹிலரி ரோட்மேன் க்ளிண்டன், லாஸ் ஏஞ்சலஸ் டைம்ஸ், மே 31, 1996, பக்கம் 3.
"இஸ்லாம் அமெரிக்காவில் தொடந்து வளர்ந்து கொண்டிருக்கிறது. யாரும் அதை சந்தேகிக்க முடியாது" - சிஎன்என், டிசம்பர் 15, 1995.
"அமெரிக்காவில் முஸ்லிம்கள் இப்போது ஐம்பதிலிருந்து அறுபது லட்சம் பேர் இருக்கிறார்கள். ப்ரெஸ்பிட்டீரியன்கள், எபிஸ்கோபேலியன்கள், மோரோமோன்கள், க்வேக்கர்கள், யூனிட்டேரியன்கள், செவன்த்டே அட்வெண்டிஸ்டுகள், மென்னொனைட்டுகள், ஜெஹோவாவின் சாட்சிகள், கிறிஸ்தவ விஞ்ஞானிகள் இவர்கள் எல்லாரையும் விட முஸ்லிம்கள் அதிகமாக இருக்கிறார்கள். அமெரிக்காவில் இரண்டாவது பெரிய மதமாக யூதமதம் இருந்தது.ஆனால் அந்த இடத்தை இப்போது இஸ்லாம் பிடித்து விட்டதாகப் பல மக்கள்தொகைக் கணக்கெடுப்பாளர்கள் கருதுகிறார்கள்" - ஜான் ப்ளாங்க், யூஎஸ்நியூஸ், 07/20/1998.
"இஸ்லாத்தில் உள்ள அருமையான கருத்தாக்கங்களில் ஒன்றுதான் அதன் நீதியுணர்வு. அன்றாட வாழ்க்கைக்குரிய, அகில உலகமும் பயன்படுத்தக்கூடிய வாழ்க்கை பற்றிய நடைமுறைக் கோட்பாடுகளை நான் குரானில் படித்தேன்" Ideals of Islam என்ற தலைப்பில் கொடுக்கப்பட்ட விரிவுரைகள் - சரோஜினி நாயுடுவின் பேச்சும் எழுத்தும், (The Speeches and Writings of Sarojini Naidu), சென்னை, 1918, பக்கம் 167.
"அடிப்படைவாத முஸ்லிம்கள் வாளின் முனையில் வற்புறுத்தி இந்த உலகம் முழுவதும் இஸ்லாத்தைப் பரப்பினார்கள் என்ற கதையானது, வரலாற்றாசிரியர்களால் திரும்பத் திரும்பச் சொல்லப்பட்ட அபத்தமான கற்பனையாகும் என்பதை வரலாறே தெளிவுபடுத்துகிறது" - டெ லேஸி ஓ லியரி, Islam at the Croosroads,லண்டன், 1923, பக்கம் 08.
"மனிதர்களுக்கு இடையே உயர்ந்த இனம், தாழ்ந்த இனம் என்ற பிரக்ஞையின் அழிவை ஏற்படுத்தியது இஸ்லாத்தின் தலைசிறந்த சாதனைகளில் ஒன்றாகும். இந்த இஸ்லாமிய உணர்வைத் தற்கால உலகத்தில் ஏற்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது" - ஏ.ஜே.டாய்ன்பீ (உலகப்புகழ் பெற்ற வராலாற்றாசிரியர்), Civilization On Trial, நியூயார்க், 1948, பக்கம் 205.
"வழக்கமான அர்த்தப்படி பார்த்தால் நான் ஒரு முஸ்லிமல்ல. ஆனால் இறைவனிடம் சரணாகதி அடைந்தவனே முஸ்லிம் என்ற கருத்துப்படி பார்த்தால் நான் ஒரு முஸ்லிம்தான். குர்ஆனில் பல தெய்வீக உண்மைகள் சொல்லப்பட்டிருக்கின்றன என்பதை நான் நம்புகிறேன். எங்களைப் போன்ற மேற்கத்தியர்கள் அதிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டியவை நிறைய உள்ளன" - W.மாண்ட்கோமரி, இஸ்லாமும் கிறிஸ்தவமும் இன்று (Islam and Christianity Today), லண்டன், 1983, பக்கம் ix.
"இஸ்லாம் வழங்கும் சகோதரத்துவம் உலகில் உள்ள எல்லா மனிதர்களுக்குமானதாக இருக்கிறது. அவர் என்ன நிறத்தில், என்ன கொள்கையில், என்ன கோட்பாட்டில், என்ன இனத்தில் இருந்தாலும். இந்த சகோதரத்துவத்தை நடைமுறைப்படுத்திய ஒரே மதம் இஸ்லாம்தான். முஸ்லிம்கள் இந்த உலகில் எந்த மூலையில் இருந்தாலும், ஒருவரையொருவர் சந்தித்துக் கொள்ளும்போது, தாங்கள் சகோதரர்கள் என்பதை உணர்ந்து கொள்கிறார்கள்" - ஆர்.எல்.மெல்லமா, ஹாலந்து, மானிடவியலாளர், எழுத்தாளர், அறிஞர்.
முஹம்மது நபி பற்றி, "இறைத்தூதர்களிலேயே அதிகமாக வெற்றியடைந்தவர் முஹம்மதுதான்" - என்சைக்ளோபீடியா ப்ரிட்டானிகா.
"இந்த உலகம் சார்ந்த இருபது சாம்ராஜ்ஜியங்களையும் மறுமை சார்ந்த ஆன்மிக சாம்ராஜ்ஜியத்தையும் நிறுவியவ ஒருவர் முஹம்மது. மனிதனுடைய பெருமையையும் புகழையும் அளக்கக்கூடிய எந்த அளவுகோலை வைத்துப் பார்த்தாலும், முஹம்மதைவிட சிறந்த ஒருவரை நாம் காட்ட முடியாது" - லா மார்ட்டின், ஹிஸ்டரி துலா துர்கி (ஃப்ரெஞ்ச்), பாரிஸ்,1854, பாகம் 11, பக்கங்கள் 276-277.
"அருமையான உயிர்த்தன்மை காரணமாக, முஹம்மதின் மார்க்கத்தை நான் எப்போதுமே ஒரு உயர்ந்த இடத்தில் வைத்திருக்கிறேன். மாறிக்கொண்டே இருக்கின்ற இந்த உலகில், எல்லாவற்றையும் இணைக்கும் தகுதி படைத்த ஒரே மதமாக இஸ்லாம்தான் உள்ளது. எல்லாக் காலங்களிலும் கவரக்கூடியதாக அது இருக்கும். முஹம்மதை நான் அலசி ஆராய்ந்து பார்த்துவிட்டேன். அவர் மனிதகுலத்தைக் காக்க வந்தவர் (Saviour of Humanity). இந்த நவீன உலகின் சர்வாதிகாரியாக அவரைப் போன்ற ஒருவர் வருவாரேயானால், இன்றைக்கு மிகவும் அவசியமான தேவைகளாக இருக்கின்ற அமைதியையும் சந்தோஷத்தையும் கொண்டுவந்து பிரச்சனைகளைத் தீர்க்க அவரால் மட்டுமே முடியும். இன்று இருப்பதுபோல, வருங்காலத்திலும் முஹம்மதின் மார்க்கம் ஐரோப்பாவால் ஏற்றுக்கொள்ளக்கூடிய மார்க்கமாகவே இருக்கும் என்று நான் தீர்க்கதரிசனம் சொல்வேன்.
அடுத்த நூறு ஆண்டுகளில் இங்கிலாந்தை - ஏன் - ஐரோப்பாவையே ஆளக்கூடிய வாய்ப்பு ஒரு மதத்துக்கு இருக்குமானால் அது இஸ்லாமாகத்தான் இருக்க முடியும்" - ஜார்ஜ் பெர்னார்ட் ஷா, த ஜெனியுன் இஸ்லாம்.The Genuine Islam, Singapore, Vol. 1, No. 8.1936).
"சமய ரீதியாகவும், சமயம் சாராத லௌகீகம் சார்ந்த வகையிலும் வெற்றியடைந்த ஒரு மனிதரைக் காட்ட முடியுமென்றால் அது முஹம்மதுதான். அதனால்தான் இந்த உலகில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய 100 மாமனிதர்களில் முதலாமவராக நான் முஹம்மதைத் தேர்ந்தெடுத்தேன்" - மைக்கேல் ஹார்ட், த ஹண்ட்ரட், நியூயார்க், ஹார்ட் பப்ளிஷிங் கம்பனி, 1978, பக்கம் 33.
"அன்பின் ஆன்மாவாக முஹம்மது இருந்தார். அவருடைய தாக்கம் உடன் இருந்தவர்களால் மறக்கமுடியாததாக இருந்தது" - திவான் சந்த் ஷர்மா, The Prophets of the East, கொல்கத்தா, 1935, பக்கம் 122.
"போப்புக்கான பாசாங்குகளும், சீசருக்கான படையணியினரும், பாதுகாவலர்களும், அரண்மனையும், நிரந்தர வருமானவும் இல்லாமல், ஒரே சமயத்தில் சீசராகவும் போப்பாகவும் இருந்தவர் முஹம்மது. தெய்விக கட்டளை கொண்டு ஆண்ட ஒரு மனிதன் உண்டென்றால் அது முஹம்மதுதான்" - பாஸ்வொர்த் ஸ்மித், Mohammad and Mohammadanism, லண்டன்,1874, பக்கம் 92.
"அரேபியாவின் மாபெரும் தீர்க்கதரிசியான முஹம்மதுவின் வாழ்க்கையையும், அவர் எப்படி வாழ்ந்தார், எப்படி வாழக் கற்றுக் கொடுத்தார் என்று படிக்கும் யாருக்கும் அவர்மீது மரியாதை தவிர வேறு எதுவும் ஏற்படாது" - அன்னிபெசண்ட், The Life and Teachings of Muhammad, சென்னை,1932, பக்கம். 4.
"கோடிக்கணக்கானவர்களின் இதயத்தில் விவாதத்துக்கு இடமில்லாத வகையில் இடம் பிடித்த ஒருவரின் வாழ்க்கையை அறிந்து கொள்ள விரும்பினேன்...இஸ்லாம் வாளால் பரப்பப்படவில்லை என்ற உண்மை எனக்கு தெள்ளத் தெளிவாக விளங்கியது. இஸ்லாத்தின் பிடிவாதமான எளிமை, இறைத்தூதர் முஹம்மதுவின் பரிபூரணமான சுயநலமற்ற தன்மை, கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றுவதில் அவர் வைத்திருந்த மரியாதை,தன் தோழர்கள் மீதும் தன்னைப் பின்பற்றியவர்கள் மீதும் அவர் கொண்டிருந்த அளவற்ற பிரியம், தீவிரமான அர்ப்பணம், அவரது வீரம், எதற்கும் அஞ்சாத தன்மை, கடவுள்மீது அவர் வைத்திருந்த பரிபூரண நம்பிக்கை, அவருக்கு கடவுளால் கொடுக்கப்பட்ட பணி மீது இருந்த கடமையுணர்வு இவைதான் இஸ்லாம் பரவுவதற்குக் காரணம். ஒவ்வொரு தடையையும் மீறி இஸ்லாம் வந்தது இவைகளால்தான். வாளால் அல்ல. நபிகள் நாயகம் பற்றிய இரண்டாம் பாகத்தை நான் படித்து முடித்து மூடியபோது, அந்த மகாவாழ்க்கை பற்றிப் படிக்க மேலும் இல்லையே என்று எனக்கு வருத்தமாக இருந்தது" - மகாத்மா காந்தி, 'யங் இந்தியா' பத்திரிக்கையில் 1924ல் எழுதியது.
"ராணுவ வெற்றிகளின்போது, மற்றவர்களிடம் ஏற்படுவதைப்போல, பெருமையோ வீண் பேச்சோ முஹம்மதுவிடம் ஏற்படவில்லை. துன்பத்திலும் துயரத்திலும் உழன்று கொண்டிருந்தபோது எப்படி எளிமையாகத் தோன்றினாரோ, நடந்து கொண்டாரோ, அப்படியே வெற்றியின் உச்சியில் இருந்த போதும் இருந்தார்.அநாவசியமாக தனக்கு மரியாதை தரப்படுவதை அவர் வெறுத்தார்" - வாஷிங்டன் இர்விங், Life of Muhammad, நியூயார்க், 1920.
"ரொம்ப உற்சாகமாக நம்மவர்கள் முஹம்மதைப் பற்றிச் சொன்ன பொய்களும் அவதூறுகளும் நம்மையே கேவலப்படுத்துவதாக உள்ளது" - தாமஸ் கார்லைல். Heroes and Hero Worship and the Heroic in History, 1840//
மேற்காண்பவை இஸ்லாத்தையும் எங்கள் தலைவர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களையும் உலகம் எப்படிப் பார்க்கிறது என்பதற்கான திண்ணையில் ஆவணப் படுத்தப் பட்டுள்ள எழுத்துச் சான்றுகள்.
வெளிச்சான்றுகளும் நிறையவே உள. விரிவஞ்சி அவற்றை இங்குத் தவிர்க்கிறேன்.
சுட்டிகள் 9 முதல் 12 வரை ஓய்வு நேரத்தில் காண வேண்டிய காட்சிச் சான்றுகள்.
***
இறுதியாக,
இந்து மதத்தை, "சனாதனக் குட்டை" என்று நான் குறிப்பிட்டதாக அவதூறு எழுதிய நேச குமார், அதற்காகத் திண்ணை வாசகர்களிடம் மன்னிப்புக் கேட்டாக வேண்டும். இல்லையெனில், அவதூறு+ஆட்கொணர்வு வழக்குகளை - திண்ணை/திண்ணையர் சாட்சியாக - நீதிமன்றத்தில் அவர் சந்திக்க நேரலாம் என்பதை அன்போடு சொல்லி வைக்கிறேன்.
ஃஃஃ
to.wahhabi@gmail.com
http://wahhabipage.blogsopt.com
சுட்டிகள்:
01 - http://www.thinnai.com/?module=displaystory&story_id=80803135&format=html
02 - http://www.thinnai.com/?module=displaystory&story_id=20801032&edition_id=20080103&format=html
03 - http://www.thinnai.com/?module=displaystory&story_id=20801102&edition_id=20080110&format=html
04 - http://www.thinnai.com/?module=displaystory&story_id=20801241&edition_id=20080124&format=html
05 - http://www.thinnai.com/?module=displaystory&story_id=80802075&edition_id=20080207&format=html
06 - http://www.thinnai.com/?module=displaystory&story_id=60603247&format=html
07 - http://www.thinnai.com/?module=displaystory&story_id=20705314&format=html
08 - http://www.thinnai.com/?module=displaystory&story_id=80610062&format=html
09 - http://www.youtubeislam.com/search_result.php?search_id=convert
10 - http://www.youtubeislam.com/search_result.php?search_id=reverts
11 - http://www.youtubeislam.com/channel_detail.php?chid=19
12 - http://www.satyamargam.com/index.php?option=com_content&task=view&id=714&Itemid=119

Thursday 27 March, 2008

திபெத் விவகாரங்கள் குறித்த தகவல்கள் (5)

ஜூனிய‌ர் விக‌ட‌னில் ர‌விகுமார் எம்.எல்.எ

திபெத்தில் துவங்கிய சீன ஒலிம்பிக்ஸ்!

ஒலிம்பிக் போட்டிகள் திட்டமிட்டபடி சீனாவில் நடக்குமா? திபெத்தில் நடந்து வரும் கலவரத்தை யட்டி எழுந்துள்ள மிகப்பெரும் கேள்வி இது. மார்ச் மாதம் பத்தாம் தேதியை 'திபெத் எழுச்சி நாளாக' திபெத்தியர்கள் கொண்டாடி வருகிறார்கள். 1959-ம் ஆண்டு தலாய்லாமா திபெத்திலிருந்து வெளியேறி, இந்தியாவில் தஞ்சம் புகுந்தது முதல் இப்படி 'திபெத் எழுச்சி நாள்' கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த வருடம் அந்தக் கொண்டாட்டம் கலவரமாக மாறிய தில் நூற்றுக்கும் மேற்பட்ட திபெத்தியர்களை சீன போலீஸார் சுட்டுக் கொன்றுவிட்டதாக சொல்லப் படுகிறது.

இந்த ஆண்டு இப்படி திடீரென்று கலவரம் வெடிக் கும் என எவரும் எதிர்பார்க்கவில்லை. உலகின் பல்வேறு பகுதிகளிலும் திபெத்தியர்கள் இம்முறை தீவிரமான போராட்டங்களை நடத்தினார்கள். திபெத் தில் நிகழும் மனித உரிமை மீறல்களை உலகின் கவனத்துக்குக் கொண்டு போவதற்குத்தான் இந்த ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டங்கள் இவ்வளவு தீவிரமாக இருப்பதற்கு சீனாவில் நடக்கவிருக்கும் ஒலிம்பிக் போட்டிகளே முக்கியக் காரணம். ஏதென்ஸிலிருந்து புறப்படும் 'ஒலிம்பிக் ஜோதி' ஏப்ரல் மத்தியில் பாகிஸ்தானையும், இந்தியாவையும் கடந்து திபெத்துக்குப் போவதாகத் திட்டமிடப்பட்டுள்ளது. இதை திபெத்தியர்கள் விரும்ப வில்லை. சீன ஆதிக்கத்தை ஏற்க மறுத்து கடந்த ஐம்பது ஆண்டுகளாகப் போராடி வரும் அவர்கள், திபெத்தில் ஒலிம்பிக் ஜோதியை அனுமதிப்பது சீனாவின் மேலாதிக்கத்தை ஏற்றுக் கொள்வதாகிவிடும் என்ற எண்ணத்தில் அதை மூர்க்கமாக எதிர்க்கின்றனர்.

திபெத் எழுச்சி நாளையட்டி நடந்த கலவரங்களில் எவ்வளவுபேர் கொல்லப்பட்டனர் என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை. லாசாவிலும், திபெத்தின் பிற பகுதிகளிலுமாகச் சேர்த்து நூறு பேருக்கு மேல் கொல்லப்பட்டிருப்பதாக திபெத்திய தரப்பில் சொல்லப்படுவதை சீனா மறுத்து வருகிறது. 'ரெட்கிராஸ்' முதலிய சர்வதேச அமைப்புகள் திபெத்துக்குள் சென்று உண்மை யைக் கண்டறிந்து உலகுக்கு வெளிப்படுத்த வேண்டும் என, அயல்நாடுகளில் வாழும் திபெத்தியர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே பதினாறாயிரம் அடி உயரத்தில் அமைந் திருக்கிறது திபெத். உலகிலேயே மிக உயரத்தில் அமைந்திருப்பதால் அதை 'உலகின் கூரை' என்று அழைக்கிறார்கள். இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் திபெத்தை பிரிட்டிஷ்காரர்கள் கைப்பற்றினார்கள். 1906-ம் ஆண்டு செய்துகொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் சீனாவிடம் திபெத்தை அவர்கள் ஒப்படைத்தனர். ஆனால், சீனாவின் பிடியிலிருந்து 1912-ம் ஆண்டு திபெத் தன்னை விடுத்துக்கொண்டது. சீனாவில் கம்யூனிஸ்ட் ஆட்சி ஏற்பட்ட பிறகு, திபெத் மீது சீனா படையெடுத்து அதை ஆக்கிரமித்தது. ஆனாலும், ராணுவ மற்றும் வெளியுறவுத் துறைகளை மட்டும் தன் கையில் வைத்துக்கொண்டு உள்நாட்டு நிர்வாகத்தை தலாய்லாமாவிடம் சீன அரசு ஒப்படைத்தது. தொடர்ந்து நடந்து வந்த ராணுவ அடக்குமுறைகளால் 1959-ம் ஆண்டு தலாய்லாமா இந்தியாவில் தஞ்சமடைந்தார்.

சீனாவில் நடைபெற்ற கலாசாரப் புரட்சியின் தாக்கம் திபெத்திலும் வெளிப் பட்டது. நான்காயிரத்துக்கும் மேற்பட்ட பௌத்த மடாலயங்கள் இடித்து நொறுக்கப்பட்டன. பௌத்த பிக்குகள் கைது செய்யப்பட்டு, கட்டாயமாக மனமாற்றம் செய்யப்பட்டார்கள். தலாய் லாமாவோ, இப்போது இந்தியாவின் வடபகுதியில் அமைந்துள்ள தர்மசாலா என்னுமிடத்தில் தங்கியிருந்த படி போட்டியாக திபெத் அரசாங்கம் ஒன்றை நடத்தி வருகிறார்.

திபெத் கலாசாரத்தின்படி சிறு குழந்தையாக இருக்கும் போதே தலாய்லாமா யாரென்பதைத் தேர்ந்தெடுத்து விடுவார்கள். தற்போதுள்ள தலாய்லாமாவும் அப்படித் தேர்வு செய்யப்பட்டவர்தான். தலாய் என்றால் சமுத்திரம் என்று பொருள். லாமா என்பதற்கு குரு என்று அர்த்தம். இப்போதிருப்பவர் பதினான்காவது தலாய்லாமா ஆவார்.

சீன அரசாங்கம் திபெத் மீதான தனது ஆக்கிர மிப்பைத் தொடர்ந்து நியாயப்படுத்தி வருகிறது. அடிமைத்தனத்திலிருந்தும், நிலப்பிரபுக்களின்
ஆதிக்கத்திலிருந்தும் திபெத்தை 'விடுதலை' செய்திருப்பதாக சீனா கூறிக் கொண்டபோதிலும், திபெத்தின் வரலாற்றைப் படிப்பவர்களுக்கு சீனா கூறுவது பச்சைப் பொய் என்பது தெளி வாகிவிடும். திபெத்தின் தலைமைப் பொறுப்பை வகித்துவரும் தலாய்லாமா, சாதாரண மக்களிலிருந்தே தெரிவு செய்யப்படுகிறார். அது பரம்பரை பதவி அல்ல. அவருக்குக் கீழே பொறுப்பு வகித்த பௌத்த பிக்குகளும்கூட எளிய பின்னணியிலிருந்து வந்தவர்களாகவே இருப்பார்கள். சீன ஆக்கிரமிப்புக்கு முந்தைய திபெத்தில் பிச்சைக்காரர்கள் இருந்ததில்லை, மரண தண்டனையும் வழங்கப்பட்டது கிடையாது. நிலங்கள் யாவும் அரசாங்கத்துக்கு சொந்தமாக இருந்தன. பௌத்த மடாலயங்கள் வெறும் மத நிறுவனங்களாக இல்லாமல் பள்ளிகளாகவும், பல்கலைக்கழகங்களாகவும், திபெத்திய கலைகள், மருத்துவம், பண்பாடு ஆகியவற்றின் மையங்களாகவும் திகழ்ந்தன. அப்படி இருந்த நாட்டைத்தான், சீனப் படைகள் ஆக்கிரமித்துக் கொண்டன.

திபெத்தைக் கைப்பற்றிய பிறகு கொஞ்சம் கொஞ்சமாக திபெத்தியர்களை அகற்றிவிட்டு, அங்கெல் லாம் சீனர்கள் குடியேறத் தொடங்கி விட்டனர். இந்த நடவடிக்கையால் இப்போது திபெத்தில் திபெத்தியர்கள் சிறுபான்மை மக்களாக மாற்றப்பட்டு விட்டனர். தற்போது அங்கே அறுபது லட்சம் திபெத்தியர்களும் எழுபத்தைந்து லட்சம் சீனர்களும் வசிப்பதாகத் தெரியவந்துள்ளது.

திபெத்தில் தற்போது என்னமாதிரியான நிலைமை நிலவுகிறது என்பது எவருக்கும் தெரியவில்லை. அந்த நாட்டின் இன்டர்நெட், தொலைபேசி முதலிய தொடர்புகளை சீன அரசு துண்டித்து விட்டதால், அங்கு எவ்வளவுபேர் கொல்லப்பட்டார்கள் என்பது கூடத் தெரியவில்லை. அமெரிக்க உளவு அமைப்பான சி.ஐ.ஏ-வின் பணத்தில் நடத்தப்படுவதாகக் கூறப் படும், 'ரேடியோ ஃப்ரீ ஆசியா' மூலமாகத்தான் ஒருசில செய்திகள் வெளியே தெரியவந்துள்ளன. வலைப்பூக்கள் (Blogs) மூலமாகவும் சில செய்திகள் வெளிப்பட்டுள்ளன. திபெத்தின் தலைநகரான லாசா முழுவதும் கலவரங்கள் நடப்பதாகவும்; கார்களும், கடைகளும் எரிக்கப்படுவதாகவும், பள்ளிகள் செயல்படவில்லையென்றும் அந்தச் செய்திகள் தெரிவிக்கின்றன.
திபெத்தில் இவ்வளவுதூரம் அடக்குமுறைகள் ஏவப்பட்ட போதிலும் உலக நாடுகள் சீனாவைக் கடுமையாகக் கண்டிப்பதற்கு முன் வரவில்லை. 'பொறுமையைக் கடைப்பிடிக்கு மாறு சீனாவுக்கு அமெரிக்கா அறிவுரை கூறியிருக்கிறது. அதையே மற்ற ஐரோப்பிய நாடுகளும் வழிமொழிந்து விட்டன. சீனப் பிரதமர் வென் ஜியோபோ இதனால் மேலும் தைரியம் பெற்று, 'இந்தக் கலவரங்களுக்கு தலாய்லாமாவே காரணம்' என்று குற்றம் சாட்டியுள்ளார். ஐ.நா. சபையும்கூட இதில் தலையிடாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. 'அமைதியான முறையில் பிரச்னையைத் தீர்த்துக்கொள்ள வேண் டும்' என ஐ.நா. செயலாளர் பான் கி மூன் அறிவுரை கூறியிருக்கிறார். இதில் ஐ.நா. சபை தலையிடும் திட்டம் எதுவும் இல்லை எனவும் அவர் தெளிவு படுத்திவிட்டார். இந்தியாவின் நிலையும் மற்ற நாடுகளைப் போலத்தான் இருக்கிறது. திபெத் என்பது சீனாவின் அங்கம் என்று அழுத்தம் திருத்தமாகக் கூறியிருப்பதன்மூலம் இந்தியா இந்த விஷயத்தில் சீனாவைப் பகைத்துக் கொள்ளவிரும்பவில்லை என்பதைத் தெளிவாக்கியுள்ளது.
இந்தியாவிலிருக்கும் திபெத் அகதிகளின் போராட் டத்தை உடனுக்குடன் ஒடுக்குவதன் மூலம் சீனாவின் பாராட்டுக்களை இந்தியா இப்போது பெற்றிருக்கிறது. இந்த வாய்ப்பையே பயன்படுத்தி திபெத் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காணும் முயற்சியில் இந்தியா ஈடுபட வேண்டும்.

தலாய்லாமாவும் சீன அரசும் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு இந்தியா களம் அமைத்துத் தருவதன் மூலம் ஆசியாவில் தனது வலிமையை அது வெளிப்படுத்திக்கொள்ள முடியும். அது மட்டுமின்றி, திபெத்தை சீனாவின் பகுதியாக அங்கீகரிப்பதற்குக் கை மாறாக அருணாச்சலப் பிரதேசத்தை இந்தியாவின் பகுதியென சீனா அங்கீ கரிக்கவேண்டும் என இந்தியா வலியுறுத்த வேண்டும். அதற்கு இதுதான் சரியான சந்தர்ப்பமாகும்.
சீனாவில் நடத்தப்படவுள்ள ஒலிம்பிக் போட்டிகளின் துவக்க விழாவைப் புறக்கணிக்கவேண்டும் என்ற கோரிக்கை இப்போது வலுவடைந்து வருகிறது. 'எல்லைகள் இல்லா செய்தியாளர்கள்' என்ற அமைப்பு உலக நாடுகளுக்கு விடுத்துள்ள வேண்டுகோளில் இந்த யோசனையை வலியுறுத்தியுள்ளது. அதனைத் தொடர்ந்து ஃபிரான்ஸின் வெளியுறவு அமைச்சர், ''இந்த யோசனையை ஐரோப்பிய யூனியன் நாடுகள் பரிசீலிக்க வேண்டும். திபெத்தில் சீனா மேற்கொண்டுள்ள ஒடுக்குமுறைக்குக் கண்டனம் தெரிவிக்க இதுவே சரியான வழி'' என்று கூறியுள்ளார். ஆம்னஸ்டி இன்டர் நேஷனல் அமைப்பும்கூட, ''சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியும், ஒலிம்பிக் போட்டிகளுக்கு ஆதரவு அளிக்கும் நிறுவனங்களும் மனித உரிமைகளை மதிக்குமாறு சீனாவை வலியுறுத்தவேண்டும்'' என தெரிவித்திருக்கிறது.

சீனா இப்போது பொருளாதாரத்தில் மட்டுமல்ல... ராணுவத்திலும் இந்தியாவைவிட பலமடங்கு கூடுதலான வலிமையைப் பெற்றிருக் கிறது. 2010-ம் ஆண்டு வாக்கில் வலிமையான ராணுவ அடித்தளத்தை அமைப்பது, அதற்கு அடுத்த பத்து ஆண்டுகளில் அந்தத் துறையில் பெரிய முன்னேற்றத்தை ஒட்டி, இந்த நூற்றாண்டின் மத்தியில் உலகின் மிகப்பெரும் ராணுவ சக்தியாக உருவெடுப்பது என்ற குறிக்கோளாடு சீனா தனது ராணுவ பட்ஜெட்டை அதிகரித்து வருகிறது. இப்படி சீனா வலுவடைந்தால் தற்போது உலக அளவில் அமெரிக்கா வகித்துவரும் இடம் கேள்விக் குறியாகிவிடும். அதை அமெரிக்கா உணர்ந்தே இருக்கிறது.

ராணுவத் துறையில் அதிகரித்துவரும் சீனாவின் வலிமை இந்தியாவுக்கும் சில நெருக்கடிகளை உருவாக்கும். ''தென் ஆசியாவில் தனது இடத்தை வலுப்படுத்திக்கொள்ள வேண்டிய அவசியம் இந்தியாவுக்கு ஏற்படும். பிணக்குகளைத் தீர்த்துக்கொண்டு, தங்களோடு சுமுகமான உறவைப் பேணும்படி சீனா இந்தியாவை நிர்ப்பந்திக்கும். அதுமட்டுமின்றி சீனாவைவிடச் சிறந்த கடற்படை கொண்ட நாடாக இந்தியா உருவாகவேண்டிய தேவை அதிகரிக்கும்'' என இதுபற்றி ஆராய்ந்துள்ள டாக்டர் சுபாஷ் கபிலா என்ற நிபுணர் கூறுகிறார். இவற்றையெல்லாம் இந்திய வெளியுறவுக் கொள்கைகளைத் தீர்மானிக்கும் அதிகாரிகள் கவனத்தில் கொள்வதாகத் தெரியவில்லை. நமது நாட்டின் அயலுறவுக் கொள்கை, அரசியல் தலைமையால் தீர்மானிக்கப்படுவதைவிடவும் அதிகார வர்க்கத்தாலேயே முடிவு செய்யப்பட்டு விடுகிறதோ என்ற ஐயம் பரவலாக உண்டு. திபெத் பிரச்னையில் தெளிவாக முடிவெடுத்து இந்த சந்தேகத்தைப் போக்க வேண்டியது ஆட்சியாளர்களின் கடமையாகும்.

Tuesday 25 March, 2008

திபெத் விவகாரங்கள் குறித்த தகவல்கள் (4)

Dinamani 24 March 2008 Editorial

திபெத் எனும் தீப்பொறி

திபெத்தின் தலைநகர் லாசாவில் புத்த பிக்குகள் மற்றும் பொதுமக்கள் சீன அரசுக்கு எதிராகக் கொதித்தெழுந்த சம்பவம், அங்கே அடக்குமுறை ஆட்சி நடைபெறுகிறது என்பதை மேலும் உறுதிப்படுத்தி இருக்கிறது. கடந்த இருபது ஆண்டுகளில் நடைபெற்ற பல்வேறு போராட்டங்களைப்போல அல்லாமல், 19 பேரின் உயிரைப் பலி வாங்கிய இந்தப் போராட்டம் உலகெங்கிலும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி இருப்பதில் வியப்பில்லை.

பல்வேறு நாடுகளின் உள்நாட்டுப் பிரச்னைகளில் அமெரிக்கா தேவையில்லாமல் மூக்கை நுழைப்பது வழக்கம். அது தனது சுய ஆதாயத்திற்காகவும், தனது ஏகாதிபத்திய லட்சியத்தை முன்னிறுத்தியும் செய்யப்படுபவை என்பதிலும் நமக்கு நிச்சயமாகக் கருத்து வேறுபாடு கிடையாது. ஆனால், திபெத் விஷயத்தில் அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலூசி வெளியிட்டிருக்கும் கருத்தை ஆமோதிக்க மறுப்பது என்பது மனித நேயமற்றவர்களால் மட்டும்தான் முடியும்.

""திபெத்தில் நடக்கும் அடக்குமுறைகளைப் பற்றி பேசாவிட்டால், உலகில் மனித உரிமை மீறல் பற்றி பேசும் தார்மிக உரிமையை இழந்து விடுவோம்'' என்கிற நான்சி பெலூசியின் கருத்தை நமது இந்திய அரசு ஏன் எதிரொலிக்கவில்லை என்பது புரியவில்லை.

இராக் மற்றும் பாலஸ்தீனத்தில் அமெரிக்காவின் பங்கு எத்தகையதோ அதைவிட மோசமான அணுகுமுறையை திபெத்தில் சீனா கையாள்கிறது என்பது உலகத்துக்குத் தெரிகிறது. ஆனால், இந்திய அரசுக்கு மட்டும் ஏன் தெரியவில்லை?

1959ஆம் ஆண்டு திபெத் நாட்டின் அரசியல் மற்றும் ஆன்மிகத் தலைவரான தலாய் லாமா சீன ராணுவத்தின் ஆக்கிரமிப்புக்குப் பயந்து இந்தியாவில் தஞ்சம் புகுந்தார். தலைநகர் லாசாவைக் கைப்பற்றிய சீனப் படைகள், 86 ஆயிரம் திபெத்தியர்களைக் கொன்று குவித்தது. அன்று முதல் இன்று வரை திபெத், சீனாவின் அடக்குமுறை ஆட்சியில் தொடர்கிறது. தலாய் லாமா இமாசலப் பிரதேசத்திலுள்ள தர்மசாலாவில் தங்கி இருக்கிறார்.

திபெத்தைத் தனி நாடாக அறிவிக்க வேண்டும் என்று அவர் கேட்கவில்லை. ஹாங்காங்குக்கு இருப்பதுபோல சுயாட்சி அதிகாரம்தான் கேட்கிறார். தங்களது கலாசாரத்துக்குப் பாதுகாப்புக் கேட்கிறார். ஆனால், அதைக்கூடத் தர மறுக்கிறது சீன அரசு. இதை விமர்சிக்கத் துணிவில்லாமல், மௌனம் காக்கிறது இந்திய அரசு. சீனாவின் உள்நாட்டுப் பிரச்னை என்று திபெத்தைப் பற்றி இந்தியா கூறுகிறது.

பிரம்மபுத்ரா, சட்லெஜ் மற்றும் சிந்து நதிகள் திபெத்தில்தான் உற்பத்தியாகின்றன. சீனா நினைத்தால், கர்நாடகம், தமிழகத்துக்குச் செய்யும் அதே துரோகத்தை எப்போது வேண்டுமானாலும் செய்ய முடியும். இந்த நதிகளில் அணைகட்டி, அவற்றிலுள்ள தண்ணீரைத் திசைதிருப்பினால், இந்தியா வறண்ட பிரதேசமாகிவிடும். இது தெரிந்துதான் ஜவாஹர்லால் நேருவும், இந்திரா காந்தியும், தலாய் லாமாவுக்கு ஆதரவுக் கரம் நீட்டி அடைக்கலம் கொடுத்தார்கள். அதுகூட, அவர்களது வாரிசுகளுக்குத் தெரியவில்லையே, ஏன்?

திபெத்தை ஆக்கிரமித்திருக்கும் சீனா, இந்தியாவின் பகுதிகளையும் ஆக்கிரமித்திருக்கிறது. அருணாசலப் பிரதேசத்துக்கு சொந்தம் கொண்டாடுகிறது. அந்தமான் தீவுகள் மீது தனது பார்வையைச் செலுத்துகிறது.

இதெல்லாம் தெரிந்திருந்தும் இந்திய அரசு மௌனம் சாதிக்கிறது, அது ஏன்?
இந்திய அரசு மௌனம் சாதிப்பது இருக்கட்டும். நமது இடதுசாரிக் கட்சிகள் இந்த விஷயத்தில் சீனாவுக்கு ஆதரவு தெரிவிக்கிறார்களே, அது ஏன்?

பாலஸ்தீனத்திலும், வியத்நாமிலும், ஆப்கானிஸ்தானிலும், இராக்கிலும் அமெரிக்கா தலையிட்டது எந்த அளவுக்குத் தவறோ அதே அளவு தவறைத்தான் சீனா திபெத்தில் செய்திருக்கிறது. அதைப்பற்றி ஏன் மௌனம் சாதிக்கிறார்கள் நமது இடதுசாரிகள்? இவர்களுக்கு தேசபக்தியைவிட சீனபக்தி அதிகமாக இருப்பது ஏன்?

முதலாளித்துவ ஏகாதிபத்தியம் செய்தால் தவறு, ஆனால் பொதுவுடைமை ஏகாதிபத்தியம் செய்தால் மட்டும் அது சரியா?

திபெத் என்பது சீனாவின் உள்நாட்டுப் பிரச்னை அல்ல. மனித உரிமை மீறல் பிரச்னை. மக்களின் விருப்பத்துக்கு எதிராக அடக்குமுறை மூலம் யார் ஆட்சி செலுத்த முயன்றாலும் அதை எதிர்க்கும் தார்மிகக் கடமை இந்தியாவுக்கு உண்டு. இலங்கையில் ஆனாலும், பாலஸ்தீனத்தில் ஆனாலும், இராக்கில் ஆனாலும், திபெத்தில் ஆனாலும் அடக்குமுறைக்கு எதிராகக் குரலெழுப்ப மறுத்தால், சரித்திரம் நம்மை மன்னிக்காது!

Wednesday 19 March, 2008

அவுரங்கசீப்பு(?!) விவகார திண்ணை கட்டுரை

Saturday March 15, 2008
உயிர்த்தெழும் ஔரங்கசீப்
அருணகிரி

ஔரங்கசீப்பின் ஆட்சியில் இந்துக்களின் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட மத பயங்கரவாத வரலாற்றை பிரதிபலிக்கும் வரலாற்றுக்கண்காட்சியை FACT (Foundation Against Continuing Terrorism) அமைப்பின் ஃபிரான்ஸுவே கோத்தியே இந்தியாவெங்கும் நடத்தி வருகிறார். பிரான்சுவா கோத்தியே 19 வயதில் இந்தியாவுக்கு வந்தவர். காஷ்மீர் பயங்கரவாதத்தையும் வட கிழக்கு மாகாணங்களின் பிரச்சனைகளையும் நேரில் கண்டு விரிவாக எழுதிய பத்திரிகையாளர். இந்திய அரசியல், ஆன்மீகம், வரலாறு குறித்து பல புத்தகங்கள் எழுதிய இவர், சிறந்த பத்திரிகையாளருக்கான "நசிகேதா" விருது பெற்றவர். இந்த விருதுப் பணத்தை வைத்து இவர் தொட்ங்கிய FACT அமைப்பு காஷ்மீர், பங்களாதேஷ் போன்ற இடங்களில் திட்டமிட்டு நடத்தப்படும் பயங்கரவாதத்தின் கோரங்களை வரலாற்றுக் கண்காட்சியாக மக்களிடையே எடுத்துச் சென்று வெளிச்சம் போட்டு வருகிறது.

டெல்லியிலும், பூனாவிலும், பெங்களூரிலும் பெரும் வரவேற்பு பெற்று அமைதியாய் நடந்து முடிந்த இவரது ஔரங்கசீப் ஆட்சி குறித்த வரலாற்றுக் கண்காட்சி சென்னையில் இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புகளால் மிரட்டப்பட்டு போலீஸ் துணையுடன் வல்லடியாக மூடப்பட்டுள்ளது.

இக்கண்காட்சியில் இடம் பெற்ற சித்திரங்கள் ஔரங்கசீப்பின் இஸ்லாமிய அறிஞர்களே பதிவு செய்திருக்கும் நிகழ்வுகளின் அடிப்படையில் ஆனவை. இதில் ஔரங்கசீப் ஆட்சியில் மதுராவின் கேசவராய் கோவிலும், சோமநாத் கோவிலும் இடிக்கப்பட்டதும் , தெய்வச்சிலைகள் உடைக்கப்பட்டதும் காட்சிகளாய் வரையப்பட்டிருந்தன. தமுமுக, மனித நீதிப் பாசறை (கருத்துரிமையைக்கூட மதிக்காத ஒரு அமைப்பு தன் பெயரில் மனித நீதி என்ற பெயரைக் கொண்டிருப்பது கொடிய நகை முரண்) போன்ற இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புகளுக்கு ஆதரவாகவும் இந்துக்களுக்கு இழைக்கப்பட்ட வரலாற்று அநியாயங்களை இருட்டடிப்பு செய்யும் வகையிலும் கருணாநிதி அரசின் போலீஸ் துறை கேவலமான அடக்குமுறையை கண்காட்சி நடத்துபவர்கள் மீது கட்டவிழ்த்து விட்டது. நிகழ்ச்சி நடத்துனர்களை வயதான பெண்கள் என்றும் பாராது (மாலை ஆறு மணிக்கு மேல் பெண்களின் கைதுக்கு உள்ள தடையை மீறி சட்டவிரோதமாக) போலீஸ் துறை கைது செய்தது. ஆற்காட்டு நவாப் என்ற தோரணையில் இன்றும் வலம் வரும் ஒரு இஸ்லாமிய அடிப்படைவாதியின் மிரட்டல் அழுத்தத்தின் பின்னணியில் இந்த அநீதி நடந்தேறியுள்ளது.
வரலாற்று அநியாயங்களை வன்முறையாக இருட்டடிப்பு செய்வது புண்ணை காற்றுப்புகாமல் மூடி வைத்து புரையோடச்செய்வது போன்றதுதான்.

கேரளாவின் ஜாதிக்கொடுமைகளைக் கண்டு பித்தர் கூட்டம் என வர்ணித்தார் விவேகானந்தர். ஜாதிக்கொடுமைகள் வெளிப்படையாகப் பேசப்பட்டதுதான் அதனை எதிர்த்த சட்ட திருத்தங்களுக்கும் சமூக மாறுதல்களுக்கும் வழி வகுத்தது. நாகஸாகி, ஹிரோஷிமா மீதான அணுகுண்டு வீச்சை ஜப்பான் வரலாற்று சின்னங்களையும், அமைதிப்பூங்காக்களையும் எழுப்பி அணுஆயுத அழிவை உலகுக்கு உணர்த்தும் அமைதி நாளாக நினைவு கூர்கிறது. அறுபது லட்சம் யூதர்கள் இனப்படுகொலை செய்யப்பட்ட ஹோலோகோஸ்ட் நினைவுச்சின்னங்களை ஜெர்மனி இன்றும் அழியாமல் காக்கிறது. செவ்விந்தியர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட இனப்படுகொலையை அமெரிக்கப் பாட நூல்கள் விரிவாக விவரிக்கின்றன. ஒவ்வொரு செவ்விந்தியக்குழுவும் அழிக்கப்பட்ட வரலாற்றினையும் கண்காட்சிகளாய், புத்தகங்களாய், பாடங்களாய் நவீன அமெரிக்கா பதிவாக்குகிறது. கறுப்பர்கள் அடிமைத்தளையிலிருந்து விடுதலை பெற்ற வரலாறு அமெரிக்காவில் குழந்தைகளுக்கும் சொல்லித் தரப்படுகிறது. வரலாற்று அநீதிகள் மறக்கடிக்கப்படாமல் இருப்பதும், அந்த வரலாறு புதிய தலைமுறைகளுக்கு நினைவுறுத்தப்படுவதும் பழைய அநியாயங்களும் வெறுப்பியல் மனநோய்களும் மீண்டும் உயிர்த்தெழாமல் தடுக்கும் தடுப்பூசிகள்.
செவ்விந்தியப் படுகொலைகளைப் பாடமாக்கும் அமெரிக்க ப்ராட்டஸ்டண்ட் சமூகமும் , யூத இனப்படுகொலையை வரலாறாக்கும் ஜெர்மனியின் கிறித்துவ சமூகமும் , இந்து பழைமைவாத எதிர்ப்புக்குரல்களைப் பாடங்களில் பதிவு செய்யும் இந்திய இந்து சமூகமும் பழைமை அநீதிகளிலிருந்து சுய விமர்சனம் மூலம் தம்மை புதுப்பித்துக்கொள்ள விழையும் முற்போக்கு சமூக முனைப்புக்கு எடுத்துக்காட்டாகின்றன.

இவ்வகையில் சுயவிமர்சனத்தின் முலம் நிகழும் சமுதாய புதுப்பித்தலும் நவீனமாக்கலும் இஸ்லாமிய சமூகங்களில் இன்னும் நிகழாமலேயே இருக்கிறது. இதற்குக்காரணமாகும் விஷப்பயிர்களைத் தம்முள் இனங்கண்டு களைவதே முற்போக்கு இஸ்லாமிய சமூகத்தின் முதன்மைப் பணியாக இருக்க வேண்டும். மாறாக, இஸ்லாமிய பழைமைவாதத்திற்கு உயிர் கொடுக்கப்பட்டு, பயங்கரவாத கோரங்களுக்கு மதப் புனித சாயம் ஏற்றப்பட்டு மதராஸாக்களிலும், மசூதிகளிலும், அரசியலிலும் , உலகளாவிய உம்மா என்ற பெயரில் எல்லை தாண்டிய மதவாதமும் தேச விரோதமும் வளர்க்கப்பட்டு வருகின்றன.

தாலிபான்களால் தகர்க்கப்பட்ட பாமியான் புத்த சிலைகளும், இஸ்லாமிய பயங்கரவாதிகளால் தங்கள் நிலத்திலிருந்து அழித்து விரட்டப்பட்டு டெல்லியில் அகதி வாழ்க்கை வாழும் காஷ்மீர் இந்துக்களும், பங்களாதேஷிலும் மலேஷியாவிலும் அழித்தொழிக்கப்படும் இந்து கலாசார சின்னங்களும் பழைமைவாத வெறுப்பியலின் புதிய கோர முகங்களாக இஸ்லாம் ஆகிவருவதையே வெளிப்படுத்துகின்றன. தனது சகோதரர்களைக் கொன்று, தன் தந்தையை சாகும் வரை சிறையில் அடைத்து வைத்திருந்த கடும் இஸ்லாமிய அடிப்படைவாதியான அவுரங்கசீப் மொகலாய மன்னர்களிலேயே உன்னதமான முன்மாதிரியாக பாகிஸ்தான் பாட நூல்களில் காட்டப்படுவது குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தானின் ஜிஹாதி பயங்கரவாத அமைப்புகளான லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஷ்-இ-முஹம்மது, லஷ்கர்-இ-ஜாங்வி, ஹர்கட்-அல்-இஸ்லாமி ஆகிய அமைப்புகள் ஔரங்கசீப்பை ஆதர்சமாகவும் ஔரங்கசீப் ஆட்சியை மொகலாய இஸ்லாமிய ஆட்சியின் பொற்காலமாகவும் முன்னிறுத்தி, அதுபோன்ற ஆட்சியை மீண்டும் இந்தியாவில் நிறுவுவதையே தங்கள் லட்சியமாக விவரிக்கின்றன.* எனவே இப்படிப்பட்ட தீவிரவாத அமைப்புகளின் வெறுப்பியல் மனநிலையையும், இந்திய எதிர்ப்பையும், எதிர்காலத் திட்டத்தையும் அறிந்து கொள்ள ஔரங்கசீப்பின் வரலாற்றை ஆராய்வது அவசியமான ஒன்று. ஆகவே, இது போன்ற ஜிஹாதிகளின் ஆதர்ச அரசனான ஔரங்கசீப்பினால் முன்பொரு முறை ஏற்பட்ட பாதிப்புகளை மக்களுக்கு நினைவுறுத்துவதும் வரலாற்றுப் பதிவாக அவற்றை வெளிச்சம் போடுவதும் சமூக மேம்பாட்டில் அக்கறைகொண்ட ஒவ்வொரு முற்போக்கு சிந்தனையாளனும் - அவன் இஸ்லாமியனோ, இந்துவோ, வலதோ, இடதோ, வடக்கோ, தெற்கோ- அவசியமாக உடனடியாகச் செய்ய வேண்டிய பணியாக ஆகிறது.

ஔரங்கசீப்பின் பழைமைவாதத்தில் தோய்ந்த சமயப்பொறுமையற்ற அரசாட்சி மொகலாயப் பேரரசுக்கு சாவு மணி அடித்தது. அதன் எதிரொலி ஆங்கிலேயக் காலனியாதிக்கமாக இந்திய சமுதாயத்தை வந்தடைந்தது. இஸ்லாமிய பழைமைவாதமும் பயங்கரவாதமும் இணைந்து வரும் ஆபத்தை இந்தியா மீண்டும் இன்று எதிர்கொள்ள வேண்டி வரும் இந்த காலகட்டத்தில் இந்துக்கள் மட்டுமல்ல- ஒவ்வொரு இந்தியனும் இதே போன்ற நிலை உருவான முற்காலம் ஒன்றில் தற்காலத்தை உரசிப்பார்க்க வேண்டும். அவ்வாறு செய்வது, விளைவுகளை எதிர்நோக்கவும், அவற்றிலிருந்து காக்கும் தற்காப்பு சாத்தியங்களை எடைபோடவும் உதவும். எனவே "அன்று நடந்தது பற்றி இப்போது என்ன பேச்சு" என்பதனை அரைகுறைகளின் ஆபத்தான உளறல் என்றோ அல்லது தெரிந்தே செய்யப்பட்டும் திருட்டு வாதம் என்றோதான் கொள்ள வேண்டும்.

இவற்றையும் தாண்டி, தமிழகத்தின் சில இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புகளும் ஆற்காட்டு நவாப் போன்ற இஸ்லாமிய ஆதிக்கவாதிகளும் ஔரங்கசீப்பின் அநியாயங்களை வெளிச்சம் போடுவதை எதிர்க்க, காரணம் என்னவாக இருக்க முடியும்?

ஔரங்கசீப்பின் ஆட்சிக்கொடுமைகளை நினைவுறுத்துவது இப்போதுள்ள முஸ்லீம் சமுதாயத்தின் மேல் பகையை வளர்த்து விடலாம் என்பது காரணமாக சொல்லப்படுகிறது. இது எப்போது உண்மையாகும்? இப்போதுள்ள முஸ்லீம் சமூகத்தினர் அனைவரும் ஔரங்கசீப்பின் அடிப்படைவாதத்தையே தமது ஆதர்சமாகக் கொண்டுள்ளார்கள் என்று ஒப்புக்கொண்டால்தான் இந்தக் கருத்து உண்மை என்று ஆகும். இது உண்மை அல்ல என்பது என் நம்பிக்கை. இந்தியாவின் மற்ற பகுதிகளில் பிரச்சனை ஏதும் இன்றி இந்த கண்காட்சி நடந்து முடிந்திருப்பதை இந்த நம்பிக்கைக்கு ஆதரவான ஒன்றாக நான் காண்கிறேன்.

மாறாக, தமுமுக, மநீபா போன்ற தமிழக இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புகள் மிகத்தெளிவாக தங்களை ஔரங்கசீப்பின் ஆதர்சவாதிகளாகவே இன்னமும் காண்கின்றனர். இந்து வெறுப்பியல் என்ற இஸ்லாமிய அடிப்படைவாத இருட்டில் அரசியல் செய்து வருவதால்தான் அவுரங்கசீப்பின் வரலாற்றுக்கொடுமைகளை வெளிச்சம் போட்டது அவர்களது கண்களைக் கூசச்செய்து விட்டது. இதில் கொடுமை என்னவென்றால் மிகப்பெரும்பான்மையான முஸ்லீம்கள் மீதும் இந்த ஔரங்கசீப் ஆதர்சத்தைத் திணிக்க இவர்கள் முற்படுவதுதான். இது தமிழக முஸ்லீம்கள் அனைவருமே ஔரங்கசீப்பை முன்மாதிரியாக வரிக்கும் அடிப்படைவாதிகள் என்று காட்ட பிற்போக்கு மதவாத அமைப்புகள் செய்யும் முயற்சியே. இதனை முஸ்லீம்களில் உள்ள முற்போக்கு சிந்தனையாளர்கள் வெளிவந்து கண்டனம் செய்ய வேண்டும். இந்த நேரத்தில் இவர்கள் அமைதி காப்பது தமிழக இஸ்லாமியர்கள் அவுரங்கசீப்பை விதந்தோதும் மத அடிப்படைவாதிகள் என்ற எண்ணம் மக்கள் மனதில் வலுப்படவே உதவும். இது பெரும்பான்மை மக்களிடமிருந்து இஸ்லாமியர்களை மேலும் தனிமைப்படுத்தும்.
இஸ்லாமிய ஏஜெண்டாவை மதப் பழைமைவாதிகள் கையிலும், பயங்கரவாதிகள் கையிலும் அடகு வைத்து விட்டு குண்டு வெடிப்புகளிலும் ரத்த சிதறல்களிலும் குடும்பங்களையும் குழந்தைகளையும் எதிர்காலத்தையும் பறிகொடுத்து கையைப்பிசைந்து கொண்டு நிற்கும் நாடுகள் பலவும் இன்றைய நிலையில் இஸ்லாமிய நாடுகளே. எதிர்க்க வேண்டிய நேரத்தில் மவுனம் சாதிக்கும் சமுதாயம், அந்த மவுனத்தின் எதிர்காலக் கதையை கண்ணீரிலும் , ரத்தத்திலும், அழிவிலும் எழுதவேண்டி வந்து விடும். அன்றைய மஹாபாரதம் முதல் இன்றைய அரசியல் வரை வரலாறு நமக்கு சொல்லித் தரும் பாடம் இதுதான்.

FACT- Foundation Against Continuing Terrorism என்ற பெயர் கொண்ட இந்த அமைப்பின் வரலாற்றுக் கண்காட்சி இஸ்லாமிய தீவிரவாத அமைப்புகள் சிலவற்றால் அதிகாரத்துணையுடன் அடாவடியாக நிறுத்தப்பட்டிருப்பது, எந்த அளவுக்கு இது போன்ற அமைப்புகளின் பணி இன்றும் அவசியமாக உள்ளது என்பதையே அடிக்கோடிடுகிறது.

தமக்குள் வளரும் பழைமைவாதத்தையும் பயங்கரவாதத்தையும் ஜனநாயக நாடுகளில் கூட வெளிப்படையாக எதிர்க்காத ஒரு சமுதாயம் நுனிக்கிளையில் அமர்ந்து அடிக்கிளையை வெட்டும் வேலையைத்தான் செய்கிறது என்பதனை இஸ்லாமிய சமுதாயம் புரிந்து கொள்ள வேண்டும்.
ஔரங்கசீப் இறந்த காலத்தில் இருக்க வேண்டும் என்றால், இஸ்லாமியர்கள் நிகழ்காலத்தின் நவீன பிரதிநிதிகளாக இடைக்கால அரேபியாவின் இருட்டுக் காலத்திலிருந்து விடுபட்ட அடையாளத்துடன் தங்களை வெளிப்படுத்திக்கொள்ள வேண்டும்.

* http://outlookindia.com/full.asp?fodname=20080309&fname=raman&sid=1&pn=1

சேதுபதி அருணாசலத்தின் திண்ணைக்கட்டுரை: "பழமைவாதமும் புதுமைவாதமும்: இரு கண்காட்சிகள்": http://www.thinnai.com/?module=displaystory&story_id=20702153&format=html

FACT அமைப்பு குறித்த வலைத்தளங்கள்:
http://www.fact-india.com/

http://www.factusa.org/

http://factusa.blogspot.com/2008/03/press-coverage-and-controversy-around.html

திபெத் விவகாரங்கள் குறித்த தகவல்கள் (3)

Article by Malarmannan in Thinnai


Thursday September 20, 2007
சொன்னாலும் சொல்வார்கள், திருக் கயிலாயம் வெறும் பாறை என!
மலர் மன்னன்

ஸேது ஸமுத்திர கால்வாய் திட்டம் என்று பெயர் சொல்கிறார்கள். ஸேது என்றாலே பாலம் என்றுதான் அர்த்தம். ஆனால் பாலமே இல்லை என்கிறார்கள். ராமநாதபுரம் சமஸ்தான மன்னர்களுக்கு சேதுபதி என்பதுதான் பட்டப் பெயர். அதாவது பாலத்திற்கு அதிபதி. ஆனாலும் பாலமே இல்லை என்கிறார்கள். பிறகு ஏன் ஸேது ஸமுத்திரக் கால்வாய் திட்டம்? ஸேது ஸமுத்திரம் என்பது காலங்காலமாய் இருந் து வரும் அடையாளம் என்பதால்தானே? வழக்கு என்றால் வெறும் மணல் திட்டுகளின் தொகுப்பு என்பார்கள். ஆனால் அடையாளப் படுத்த மட்டும் பாலம் என்பதைத்தான் பயன் படுத்துவார்கள்! ஏன் இந்த முரண்பாடு?

கால வெள்ளத்தின் பின்னால் இன்னும் கொஞ்சம் போனால் ஸ்ரீராம ஸேது என்கிற அடையாளம் தெரியும். அது ஹிந்து தேச கலாசாரத்தின் அடையாளம். மர்யாதா புருஷோத்தம் ராமபிரானும் கீதாசாரியன் கண்ணபிரானும் ஒவ்வொரு ஹிந்துவின் அணுவிலும் உள்ளனர். சந்தனம் எங்கள் நாட்டின் புழுதி, சிறுவர்கள் யாவரும் ஸ்ரீராமர், சிறுமியர் எல்லாம் சீதையரே என்று பெருமிதம் கொள்ளும் ஹிந்துக்களிடம் ராமர் இருந்ததற்கான அடையாளமே இல்லை என்று சொன்னால் எதிர்வினை என்னவாக இருக்கும்? அல்லது என்னவாக இருக்க வேண்டும் என்பதை அவரவர் தீர்ப்பிற்கே விட்டு விடுகிறேன்.

ஆர்க்கியாலாஜிகல் சர்வே ஆப் இந்தியா என வழங்கப்படும் ஹிந்துஸ்தானத்துத் தொல்லியலாய்வு மற்றும் பராமரிப்பு அரசினர் நிறுவனம் இதுவரை ஸ்ரீராம ஸேது பற்றி எவ்வித ஆய்வும் செய்ததுமில்லை, அறிக்கை தயாரித்து ஆவணப் படுத்தியதுமில்லை. ஆகவே ஸ்ரீராம ஸேது பற்றிய விவரங்களைத் தாக்கல் செய்வதற்கான அருகதை அதற்கு இல்லை. மத்திய அரசின் கலாசாரத் துறை அதனிடம் தகவல் கேட்டபோதே இது பற்றி நாங்கள் ஆய்வு ஏதும் செய்ததில்லை என்றுதான் நியாயமாக அது பதிலளித்திருக்க வேண்டும்.

ஸ்ரீராம ஸேதுவைத் தொல்பொருளாகப் பராமரிக்க வேண்டிய பொறுப்பு தனக்கு இல்லை என்று தொல்லியல் ஆய்வு மற்றும் பராமரிப்பு நினைத்துக்கொண்டிருக்கிறது என்றால் அது தன் கடமைகள் யாவை என்பதையே சரியாக அறியவில்லை என்று அர்த்தம். வெறும் புராதனக் கட்டிடங்கள் மட்டுமல்ல, இயற்கையாகவே அமைந்த நூதனமான கலாசார அடையாளங்களையும் இனங் கண்டு பாதுகாத்துப் பராரிப்பது அதன் கடமை. ஆர்க்கியாலாஜிகலை ஆர்க்கிடெக்சராஜிகல் என்று கண்டுபிடித்திருகிறார்களா என்ன?

ஸ்ரீ ராம ஸேது ஒரு நீண்ட நெடிய கால கலாசாரத்தின் அடையாளம். தொன்மையான தொரு மாபெரும் சமூகத்தின் உயிரோட்டத்தில் இறண்டறக் கலந்துவிட்ட நம்பிக்கையின் அடையாளமும் கூட. நமது தொல்லியல் துறையில் பொதுவாகப் புராதனக் கட்டிட நிர்மாணங்களைப் பற்றிய புள்ளி விவரங்களைத்தான் வைத்திருப்பார்கள்.

ஆயிரமாயிரம் ஆண்டு வயதான மரங்கள் கல்லாகிப் போய்விடுவதுபோல் எந்த யுகத்திலோ முறையான பாலம் அமைக்க வேண்டிய அவசியமோ அதற்கான அவகாசமோ இன்றிக் கடலில் பாதை அமைக்க அணை கட்டுவதுபோலப் பாறைகளை இட்டு நிரப்பிய அமைப்பின் மீது கால வெள்ளம் போர்த்தி மூடிய மணல் கெட்டித்துப் போய், உடைத்து எறிந்தால்தான் அகற்ற இயலும் என்னும் அளவுக்குக் கவசம்போலாகிவிட்டது பற்றி மத்திய அரசின் கலாசார அமைச்சகம் தனது அறியாமையின் காரணமாக விசாரித்தாலும் அல்லது உச்ச நீதிமன்றமேகூடக் கேட்டிருந்தாலும் எங்களிடம் இது பற்றி விவரம் இல்லை. காலாசாரம் தொடர்பான ஆய்வாளர்களிடமோ ஆன்மிகப் பெரியவர்களிடமோ கேளுங்கள் அல்லது புவிஇயலாளரிடம் விசாரியுங்கள் என்றல்லவா சொல்லியிருக்க வேண்டும், அந்த ஆர்க்கியாலாஜிகல் சர்வே? அதற்கு மாறாக அதிகப் பிரசங்கித்தனமாகச் சம்பந்தா சம்பந்தமின்றி ஒரு அறிக்கை தந்தால் அவ்வாறு தருமாறு அது நிர்பந்திக்கப்பட்டிருக்கும் என்கிற முடிவுக்குத்தான் வரவேண்டியுள்ளது. தொல்லியல் துறை என்ற முறையில் இதுபற்ற்றி ஆய்வு செய்து எங்கள் கருத்தைத் தெரிவிக்கிறோம், அவகாசம் தாருங்கள் என்றாவது அவர்கள் சொல்லியிருக்க வேண்டும்; அவ்வாறில்லாமல் ராமபிரான் இருந்ததற்கே வரலாற்றுச் சான்று இல்லை, ஆகவே அவர் கட்டியதாகக் கூறப்படும் பாலத்திற்கும் வரலாற்றுச் சான்று இல்லை என்று வாக்குமூலம் அளித்தால் அது

வெளி நிர்ப்பந்தமாக இருக்கக்கூடுமேயன்றி வேறு என்னவாக இருக்க முடியும்?

இந்த ஐயப்பாட்டின் முள் முனை மூவரை நோக்கி நீள்கிறது. ஒருவர் மத்திய கலாசார அமைச்சர் சோனி, சட்ட அமைச்சர் பரத்வாஜ் மற்றும் என்ன காரணத்தாலோ ராமர் பாலத்தை உடைத்தே தீருவது எனத் துடித்துக்கொண்டிருக்கும் மத்திய தி மு க கடல் வழிப் போக்குவரத்து அமைச்சர் டி ஆர் பாலு. அரசு அதிகாரிகளை இவர்கள் நிர்ப்பந்திதிருக்கக் கூடும் என்கிற சந்தேகத்தின் பேரில் இம்மூவரையும் மன்மோஹன் சிங் தமது அமைச்சரவயிலிருந்து நீக்கியிருக்கவேண்டும். ஆனால் அதைச் செய்யாமல் தாம் வெறும் பொம்மலாட்டப் பிரதமர்தான் என்பதை இந்த விஷயத்திலும் நிரூபித்திருக்கிறார். இதில் அமானுஷ்ய மவுனம் நீடிப்பதால் னமது சந்தேக முள் சோனியா காந்தியை நோக்கியும் நீள்கிறது.

ஸ்ரீராமர் என்று ஒருவர் இருந்தார் என்று ஒப்புக்கொண்டால்தானே ஸ்ரீ ராமர் கட்டிய பாலமா அல்லவா என்கிற விவாதம் எழும், ஆகவே ஸ்ரீ ராமபிரான் இருந்ததற்கே ஆதாரம் இல்லை என்று சொல்லிவிடுங்கள் என்று ஹிந்துதானத்தின் கலாசாரம், நம்பிக்கை, புனிதம் ஆகியவை பற்றி ஏதும் தெரிந்துகொள்ள முனையாத கிறிஸ்தவரான மத்திய காலாசாரத் துறை அமைச்சர் அம்பிகா சோனியோ, தேர்தலில் வெற்றிபெற்றமைக்குக் குறிப்பாகக் கிறிஸ்தவர்களுக்கு நன்றி சொன்ன தி மு க மத்திய கடல்வழிப் போக்குவரத்து அமைச்சர் டி ஆர் பாலுவோ அவர்களை வற்புறுத்தியிருக்கக் கூடும் என்கிற சந்தேகம் எழுமானால் அது நியாயம்தானே?
ஒரு நாட்டின் மலைகள், நூதனமான புவியமைப்புகள், விசாலமான நீர்நிலைகள் முதலானவை யாவும் பரம்பரையாகத் தொடர்ந்து வரும் கலாசாரத்தின் அடையாங்கள். அவற்றுக்கு மூலாதாரமாக இருப்பவை மக்களின் உள்ளார்ந்த நம்பிக்கை. அந்த நம்பிக்கையின் ஊற்றுக்கண் சமயம், அதாவது அந்த நாட்டின் மண்ணுகே உரித்தான மதம். புராதன நாகரிகங்கள் தவழ்ந்த எகிப்து, பாலஸ்தீனம் (இன்றைய இஸ்ரேல் உள்ளிட்ட பகுதி), கிரேக்கம் முதலான இடங்களில் இத்தகைய சமய நம்பிக்கை சார்ந்த இயற்கையாகவே உருவான கலாசார அடையாளங்கள் இன்றும் போற்றிப் பாதுகாக்கப்பட்டு வருவதைக் காணலாம். ஜெருசலேத்தில் உள்ள ஒரு குன்றிலிருந்துதான் தம் இறை தூதர் குதிரை மீதேறி வானுலகு ஏகினார் என்பது முகமதியர் நம்பிக்கை. அந்தக் குன்று அவர்களுக்கு ஒரு புனிதச் சின்னம். உங்கள் இறை தூதர் இந்தக் குன்றின் மீதிருந்து குதிரை ஏறி வானுலகு ஏகியமைக்கு வரலாற்று ஆதாரம் இல்லை என்று எவரும் சொல்லிவிட முடியாது. சொல்லிவிட்டுப் பத்திரமாக வீடு திரும்பவும் முடியாது!

மிகத் தொன்மையான ஹிந்து நாகரிகத்தின் தொட்டிலான பழம் பெரும் பாரத பூமியிலும் ஏராளமான இயற்கை அமைப்புகள் சமய நம்பிக்கையின் அடிப்படையில் உருவான கலாசார அடையாளங்களாகத் திகழ்வதில் வியப்பில்லை.

விழுப்புரம் அருகில் கண்ட மானடி என்ற பெயரில் ஒரு சிற்×ர். இங்கதான் சீதை கேட்ட பொன்மானை ராமர் அடிச்சாரு என்று நேரில் கண்டதுபோல ஒரு பொட்டலைக் காட்டிச் சொல்கிறான் அங்கே ஆடு மேய்த்துக் கொண்டிருக்கிற ஒரு சிறுவன்! இதற்கு என்ன சொல்வது? ஆழப் பதிந்த அவனது நுட்மான உள்ளுணர்வைச் சிதைத்துப் போடுவதுதான் பகுத்தறிவு போலும்! தனது கிராமத்தில்தான் ராமபிரானும் சீதை பிராட்டியாரும் தங்கிச் சென்றனர் என்கிற அந்தச் சிறுவனின் பெருமிதமும் மகிழ்ச்சியும் கலந்த உணர்வை ஏளனம்

செய்வது என்ன நாகரிகம்? பண்பாடுள்ள எவரும் இத்தகைய நுண்ணுணர்வுகளை ஏளனம் செய்யவோ அவமதிக்கவோ மாட்டார்கள்.
ராமர் பாலம் இயற்கையாக உருவான மணல் திட்டுகளின் தொகுப்பு என்று அமெரிக்காவில் உள்ள நாஸா விண்வெளி ஆய்வு மையம் சொல்லிவிட்டதாகப் பிரசாரம் செய்யப்படுகிறது. ஆனால் நாஸா இதுபற்றிய தனது கருத்தை வெளியிடுகையில் முடிவாக என்னதான் சொல்லியிருக்கிறது?

பூமியைச் சுற்றி வரும் செயற்கை கோள்களில் பொருத்தபட்டுள்ள தொலை தூர உணர்வுப் பதிவுக் கருவிவிகளும் புகைப்படக் கருவிகளும் இதுபோன்ற திட்டுகள் எவ்வாறு தோன்றின என்றோ , அவை தோன்றி எத்தனை காலம் ஆயிற்று என்றோ நேரடியான தகவலைத் தரக் கூடியன அல்ல. அவை மனித முயற்சியால் உருவாக்கப் பட்டவையா அல்லவா என்றும் அவற்றின் மூலம் திட்ட வட்டமாகக் கூற முடியாது என்றுதான் நாஸா அதிகாரி மார்க் ஹெஸ் அறிவித்திருக்கிறார். அதாவது ராமர் பாலம் இயற்கையாகத் தோன்றிய மணல் திட்டுகளின் தொகுப்பா அல்லது மனித முயற்சியால் உருவான அமைப்பா என்று எங்களால் சொல்ல முடியாது என்று அதற்குப் பொருள்!

ராமேஸ்வரத்திற்கும் இலங்கையின் தலைமன்னாருக்குமிடையே அச்சு அசலாக ஒரு பாலம் போலவே தோற்றமளிக்கும் அமைப்பு ஸ்ரீராம பிரான் தம் துணைவர்களின் உதவியால் உருவாக்கியது என்ற கருத்தை நாஸா உறுதி செய்யவும் இல்லை, அதே சமயம் மறுக்கவும் இல்லை! ஆனால் ஹிந்துக்களின் நம்பிக்கைகள், மன உணர்வுகள் ஆகியவற்றை எள்ளி நகையாடுவதில் மகிழ்ச்சியடையும் தகவல் தொடர்பு சாதனங்களும் அரசியல்வாதிகளும் நாஸாவின் கருத்திற்கு மாறான தகவலைத் தொடர்ந்து சொல்லிவருகிறார்கள்!

ஹிந்துஸ்தான அரசின் கலாசார அமைச்சகமும் சட்ட அமைச்சகமும் அரசு சார்ந்த அமைப்புமே ஸ்ரீராம ஸேது பற்றிப் பொறுப்பில்லாமலும், கலாசார நுட்பம் தெரியாமலும் ஒரு வாக்கு மூலத்தை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்து தமது சிறுபிள்ளைத்தனத்தை பகிரங்கப் படுத்தக் கூடுமானால் நமது பொறுப்பிலிருந்து கை நழுவிப் போய்விட்ட திருக்கயிலாயத்தின் நிலை என்னவாகுமோ என யோசிக்க வேண்டியுள்ளது.

திருக் கயிலாயம் திபேத்தினுள் இருந்த போதிலும் ஹிந்துஸ்தானத்திற்கு வெகு அருகாமையி லுள்ளதுதான் என்பது வரைபடத்தைப் பார்த்தால் தெரியும். வட கிழக்கேஇமய மலையின் ஓர் அங்கமாகவே திகழ்வது திருக் கயிலாயம். ஹிந்துக்கள், சமணர்கள், பவுத்தர்கள், திபேத்தின் பவுத்தத்திற்கு முற்பட்ட புராதன சமயத்தினர் ஆகிய அனைவருக்குமே சமய நம்பிக்கையின் அடிப்படையில் மிகப் புனிதமாக இருந்துவரும் திருக் கயிலாயம், கம்பீரமாக எழுந்து நிற்கும் ஒரு கரிய நிறக் கற்பாறை. பெரும்பாலும் பனிப் போர்வையால் தன்னைப் போர்த்திக் கொண்டிருப்பதால் அது வெண்ணிறமாய்ப் பொலிகிறது. சூரிய ஒளி படும்போது அது மஞ்சள் நிறமாகவும் ஆரஞ்சு வண்ணத்திலும் ஒளிர்கிறது! ஸிந்து, சட்லெட்ஜ், பிரம்மபுத்திரா முதலான ஆறுகளின் தோற்றுவாய் அது. ஞான பூமிக்காகப் பணி செய்து வந்த நாள்களில் தலங்கள் பலவற்றுக்கும் சென்று அவற்றின் தனிச் சிறப்பு குறித்து எழுதி வந்த நான் திருக் கயிலாயமும் சென்று வர வேண்டும் என மணியன் விரும்பினார். அதற்கான நடைமுறைப் பணிகளும் தொடங்கின. ஆனால் குடும்பப் பிரச்சினை ஒன்றால் அந்த அரிய வாய்ப்பை இழக்க நேரிட்டது.

ஹிந்துஸ்தானத்தின் தென்கோடியிலுள்ள தமிழகம் உள்ளிட்ட எல்லாப் பகுதிகளையும் சேர்ந்த மக்கள் எவ்வித வசதியையும் எதிர்பாராமல், எத்தகைய இடையூறுகளையும் பொருட்படுத்தாமல் திருக் கயிலாய யாத்திரையைக் காலங் காலமாக மேற்கொண்டு வந்திருக்கிறார்கள். இதற்கு எவ்விதக் கட்டுப்பாடும் இருந்ததில்லை!

1950 ல் சீனா துராக்கிரமாகத் திபேத்தை ஆக்கிரமித்துக் கொண்ட பிறகு ஹிந்துஸ்தானத்திலிருந்து எவரும் திருக் கயிலாயம் செல்வதற்கு சீன அரசு அனுமதிக்கவில்லை. 1980 ல் நடந்த பேச்சு வார்த்தையின் விளைவாக ஆண்டு தோறும் பாரதத்திலிருந்து ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில் யாத்திரிகர்கள் திருக் கயிலாய தரிசனம் செய்ய சீன அரசு அனுமதித்தது. எனது ஞாபகம் சரியாக இருக்குமேயானால் சுப்பிரமணியம் ஸ்வாமி இதற்குப் பெரு முயற்சி எடுத்துக் கொண்டார் எனலாம்.

இன்று உரிய கட்டணம் செலுத்திச் சீனாவின் அனுமதிச் சீட்டைப் பெறாமல் பாரதத்திலிருந்து எவரும் திருக் கயிலாய யாத்திரை மேற்கொள்ள இயலாது! திபேத் இன்று சீனாவுக்குச் சொந்தம். ஆகவே திபேத் எல்லைக்குள் உள்ள திருக்கயிலாயமும் சீனாவுக்குச் சொந்தமாகிப் போனது!

சீனா திபேத்தை ஆக்கிரமித்தபோதே நேரு அதனைத் துணிவுடன் கண்டித்து சர்வ தேசப் பிரச்சினையாக்கியிருந்தால் அன்றைக்கு இருந்த கடுமையான கம்யூனிஸ்ட் எதிர்ப்பு நிலையில் அமெரிக்காவும் மேற்கத்திய வல்லரசுகளும் அதற்கு ஆதரவு தெரிவித்திருக்கும். இரண்டாம் உலகப் போரில் தீவிரமாக இறங்கியதால் சிறிது சலிப்புற்றிருந்த ரஷ்யா பிரச்சினையில் தலையிடாமல் ஒதுங்கியிருந்திருக்கும். மேலும் தொடக்கத்திலிருந்தே ரஷ்யாவுக்கு சீனாவின் மீது அப்படியொன்றும் பந்த பாசமில்லை. அங்கும் கம்யூனிஸம் காலூன்றியதால் ஒரு சம்பிரதாயமான இசைவுதான் இருந்தது (பிறகு இரண்டுக்குமிடையே எல்லைப் பிரச்சினை எழுந்து பிணக்கும் தோன்றியது). 1949ல்தான் பிறந்திருந்த செஞ்சீனமும் நெருக்கடியைச் சமாளிக்க இயலாமல் பின் வாங்கியிருக்கும். திபேத் தொடர்ந்து ஒரு சுயாட்சி அதிகாரம் உள்ள பிரதேசமாக நீடித்திருக்கும். திருக்கயிலாய புனித யாத்திரை மேற்கொள்ள சீனாவின் தயவை எதிர் நோக்கியிருக்கும் தலைக் குனிவும் நமக்கு நேர்ந்திருக்காது. நேருவின் மார்க்ஸிய மயக்கம் சீனாவின் மீதான மயக்கமாகிவிட்டதால் அதன் அத்துமீறலை அவரால் எதிர்க்க இயலவில்லை. இந்தி சீனி பாய் பாய் என்றார்; பிறகு அதற்கும் நம்மை விலை கொடுக்கச் செய்துவிட்டுப் போனார்!

1962 ல் சீனா பாரதத்தின் மீது படையெடுத்து, வட கிழக்கு இமய மலைப் பகுதியில் பாரதத்திற்குச் சொந்தமான பெரும் பகுதியை ஆக்கிரமிப்புச் செய்து தனதாக்கிக்கொண்டு விட்டது. பல்லாயிரக் கணக்கான சதுர மைல்கள் பரப்புள்ள பகுதியை சீனாவிடம் இழந்துவிட்ட மத்திய காங்கிரஸ் அரசின் கையாலாகாத்தனம் குறித்து நாடாளுமன்றத்த்தில் கடும் விமர்சனம் எழுந்தது.
அப்போது, பிரதமராகப் பொறுப்பு வகித்த நேரு, ஒரு புல் பூண்டு கூட முளைக்காத வெறும் பனிப் பாலைவனத்தைத்தான் சீனா தன் வசமாக்கிக் கொண்டுள்ளது என்று சமாதானம் சொன்னார்.

உடனே எதிர்க் கட்சி வரிசையிலிருந்த லோஹியாவோ அன்றி காமத்தோ எழுந்து, பிரதமர் அவர்களே உங்கள் மண்டையும் ஒரு முடிகூட இல்லாமல் வழுக்கையாகத்தான் கிடக்கிறது. அதற்காக உங்கள் தலையை யாராவது பறித்துச் செல்ல ஒப்புவீர்களா என்றுகேட்டார். அதற்கு நேருவால் அசட்டுச் சிரிப்புச் சிரித்துத்தான் சமாளிக்க முடிந்தது.

மெய்ஞானத்தை மதிக்காத விஞ்ஞானத்தை மனித சமுதாயம் மேற்கொண்டதால்தான் இன்று உலகமே இயற்கையின் பலவாறான சீற்றங்களுக்கு இலக்காகியுள்ளது. சுற்றுப்புறச் சூழலின் சீரழிவுக்குக் காரணமே இயற்கையின் தோற்றத்தில் இறைச் சக்தியைக் கண்டு அதனை மதிப்பதற்கும் மகிழ்வதற்கும் மாறாக எந்த வகையில் அந்த இயற்கை அமைப்பைச் சிதைத்து ஆதாயம் அடையலாம் என்று பேராசைப்பட ஆரம்பித்ததுதானே!
அதிலும் மக்களின் மன உணர்வுகளையோ நுட்பமான அழகியலையோ சிறிதும் மதிக்காத சீன அரசு ஏதேனும் ஆதாயம் கருதி தன் வசமுள்ள கயிலாய பர்வதத்தைச் சிதைக்கவோ அதன் மீது ஏதேனும் கருவிகளைப் பொருத்தவோ, அல்லது திருக் கயிலாயத்தையே முற்றிலுமாக அகற்றிவிடவோ முற்பட்டால் என்னவாகும்?

தனது பேராசையை நிறைவேற்றிக்கொள்ள எத்தகைய முறைகேட்டையும் செய்யத் தயங்காதவர்கள் இன்றைக்கு சீனாவில் அதிகாரம் செலுத்துபவர்கள் என்பது உலகமே அறிந்த உண்மை. ஒரே பண்டத்தை மிக உயர்ந்த தரம், நடுத்தரம், கடைத்தரம் என்று மூன்று விதமாக உற்பத்தி செய்து உலகச் சந்தையில் நபர்களின் தன்மைக்கு ஏற்ப விற்கிற ஒழுக்கங்கெட்ட தேசம் எனப் பெயர் எடுத்துள்ள தேசம் இன்றைய சீனம்!

இத்தகைய சீனா கவர்ந்துகொண்ட நிலத்தைப் பற்றிச் சர்வ சாதாரணமாகக் கருதிய நேருவின் வழி வந்தவர்களின் கையில்தான் இன்று அதிகாரம் உள்ளது.

மக்களின் மன உணர்வுளைச் சிறிதும்பொருட்படுத்தாமல் தனது எல்லைக்குட்பட்ட ராமர் பாலத்தைப் பற்றி அலட்சியமாக வாக்குமூலம் அளித்து, அந்தப் பாலத்தைத் தகர்ப்பதில் எவ்விதத் தயக்கமும் தனக்கு இல்லை எனத் தனது சொரூபத்தை பகிரங்கப் படுத்தி விட்ட காங்கிரஸ் வசமுள்ள இன்றைய பாரத அரசு, ஒருவேளை சீனா திருக் கயிலாயத்தைச் சிதைக்க முடிவு செய்தால் அதுபற்றி எவ்விதக் கவலையும் கொள்ளாது என்றுதானே எண்ண வேண்டியிருக்கிறது?

இன்றைக்கு இருக்கிற கங்யூனிஸ்ட் ஆதரவு பாரத காங்கிரஸ்தி முக கூட்டணி அரசு, பெரும்பான்மை மக்களின் மன உணர்வுகளை மதிக்காத அரசு. எத்தகைய பாதகத்தை விளைவித்தாலும் அவர்கள் சகித்துக் கொள்வார்கள் என்று அலட்சியம் செய்யும் அரசு. கண் துடைப்பாகச் சிறிதளவு பரிகாரம் செய்வதுபோலக் காண்பித்தாலேயே திருப்தியடைந்துவிடும் ஒட்டகக் கூட்டம் என்று பெரும்பான்மை மக்களை துச்சமெனக் கருதும் அரசு.

எனவேதான் ராமர் பாலத்தோடு கூடவே திருக் கயிலாயம் பற்றிய கவலையும் எழுகிறது.

(1950ல் சீனா திபேத்தை ஆக்கிரமித்தபோது, பாரத அரசு சீனாவுக்குத் தனது கண்டனத்தைத் தெரிவிக்கத் தவறவில்லை. வல்லபாய் பட்டேல், ராஜாஜி போன்றவர்கள் நேருவுக்கு இணையான முக்கியத்துவம் பெற்றிருந்ததால்தான் அது சாத்தியமாகியது.அமெரிக்காவும் பிரிட்டனும் பாரதத்தின் நிலைப் பாட்டுக்கு ஆதரவு தெரிவித்தன. இதன் காரணமாகவே சீனா பாரதத்தின் மீது உள்ளூரப் பகைமை கொள்ளலாயிற்று. எவ்வித முறைகேட்டுக்கும் தயங்காத சீனாவிடம், அரசியல், பொருளாதாரம், வாணிபம் என எல்லாக் கோனங்களிலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய பொறுப்பு நமக்கு உள்ளது. திண்ணை வாசகர்கள் விரும்பினால் இதுபற்றி ஒரு தனிக் கட்டுரை எழுத முற்படுவேன்)

திபெத் விவகாரங்கள் குறித்த தகவல்கள் (2)

Links to Tibet

(1) http://www.tibet.to/ and http://www.tibet.to/link.htm

(2) http://www.tibethouse.jp/

(3) http://www.youtube.com/watch?v=XnEO2882ZZY
(シナ人「チベット侵略は中国の国内問題だからお前ら関係ないアル」 and few more YouTube Video links on this page

(4) Google the following to find more videos
中国軍がチベットの巡礼者を無差別に撃ち殺す映像

(5) Article by Malarmannan
http://www.thinnai.com/?module=displaystory&story_id=20709203&format=html

திபெத் விவகாரங்கள் குறித்த தகவல்கள் (1)

திபெத் விவகாரங்கள் குறித்த தகவல்களை சேமித்திருக்கிறேன். இந்த தகவல்கள் அடிப்படையில் நீண்ட கட்டுரையொன்றை எழுத ஆவல்.

**********************
தினமணி செய்தி (1)
**********************
Monday March 17 2008 00:00 IST
வன்முறைக்கு எதிராக மக்கள் யுத்தம்: சீனா அறிவிப்பு

திபெத்தியர்களுக்கு எதிரான சீனாவின் நடவடிக்கையைக் கண்டித்து, இமாசல பிரதேசம் தர்மசாலாவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பேரணியில் பங்கேற்ற திபெத்தியர்கள்.

பெய்ஜிங், மார்ச். 16: திபெத்திய வன்முறையாளர்களுக்கு எதிராக மக்கள் யுத்தத்தை சீனா அறிவித்துள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை திபெத் தலைநகர் லாஸôவில் நடந்த வன்முறை சர்வதேச நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.

"உலகின் கூரை' என்று அழைக்கப்படும் திபெத்திய தேசம் பல ஆண்டுகளாக சீனாவின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது.

அந்நாட்டில் ஏற்பட்ட அரசியல் குழப்பங்களைத் தொடர்ந்து, 1959-ம் ஆண்டு ஆன்மிகத் தலைவர் தலாய் லாமா இந்தியாவில் தஞ்சமடைந்தார்.

லாமாவிற்கு அடைக்கலம் கொடுத்ததன் விளைவாக, இந்திய-சீனா இடையிலான ராஜாங்க உறவுகள் கடுமையாக பாதிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, பல்வேறு அரசியல் சர்ச்சைகள் அரங்கேறிய போதும், தலாய் லாமா இந்தியாவிலேயே தங்கினார்.

சீனாவின் பிடியிலிருந்து திபெத்தை விடுவிக்கும் படி, பல்வேறு போராட்டங்களில் அவ்வப்போது புத்த பிக்குகள் ஈடுபட்டு வந்தாலும், அதனை இரும்புகரம் கொண்டு சீனா அடக்கி வந்தது.

இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை நடந்த போராட்டத்தின் போது ஏற்பட்ட கலவரத்தில் 10-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

அதன் தொடர்ச்சியாக, வங்கிகள் கொள்ளையடிக்கப்பட்டன. கடைகள் அடித்து நொறுக்கப்பட்டன. வணிக வளாகங்கள் சூறையாடப்பட்டன.

போராட்டம் கலவரமாக உருமாறியதற்கு சில விஷமிகளின் தூண்டுதலே காரணம் என அரசு குற்றம்சாட்டியுள்ளது.

இந்நிலையில், கலவரக்காரர்கள் தாங்களாகவே வந்து சரணடைய, திங்கள்கிழமை வரை திபெத் அரசு கெடு விதித்துள்ளது. அவ்வாறு சரணடையாவிட்டால், கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அந்நாடு எச்சரித்துள்ளது.

இந்த கலவரத்திற்கு பின்னணியில் தலாய் லாமா இருப்பதாக சீனா கருதுகிறது.

சீனாவின் இந்தக் குற்றச்சாட்டை வன்மையாக மறுத்துள்ள தலாய் லாமா, 1989-ம் ஆண்டு நடந்த மோசமான வன்முறைக்கு பிறகு, தான் முற்றிலும் அகிம்சை பாதைக்குத் திரும்பிவிட்டதாக தெரிவித்தார்.

தனது முடிவுக்கு சீன அதிகாரிகள் மற்றும் கல்வியாளர்கள் சிலரும் ஆதரவு தெரிவித்துள்ளதாக கூறிய லாமா, அவர்களது பெயரை வெளியிடவில்லை.
சீனா விடுதலை வழங்காவிட்டாலும், தன்னாட்சி அதிகாரத்தையாவது வழங்க வேண்டும் எனக் கூறினார்.

போராட்டத்தை நிறுத்தாமல் தொடர்ந்து நடத்த தனக்கு திபெத்தியர்களிடமிருந்து ஏராளமான தொலைபேசி அழைப்புகள் வருவதாகக் கூறிய அவர், இப்பிரச்னைக்கு இன்னும் தீர்வு காணப்படாமல் இருப்பதற்கு திபெத்தில் உள்ள சீன அதிகாரிகளே காரணம் என குற்றம்சாட்டினார்.

**********************
தினமணி செய்தி (2)
**********************
Monday March 17 2008 00:00 IST
திபெத் கலவரத்தில் 100-க்கும் அதிகமானோர் சாவு?: தலாய்லாமா அச்சம்


லண்டன், மார்ச். 16: திபெத் நாட்டில் நடைபெற்ற வன்முறையில் பலியானோர் எண்ணிக்கை 100-க்கும் அதிகமாக இருக்கும் என அஞ்சுவதாக தலாய்லாமா தெரிவித்துள்ளார்.

திபெத் தலைநகர் லாஸôவில் புத்த பிக்குகள் மற்றும் பொதுமக்கள் வெள்ளிக்கிழமை நடத்திய போராட்டத்தின் போது வன்முறை வெடித்தது.
இதில் கடைகள் அடித்து நொறுக்கப்பட்டன. பள்ளி, மருத்துவமனைகள் தீவைத்து கொளுத்தப்பட்டன. பொதுச் சொத்துகள் சூறையாடப்பட்டன. இந்த மோதலில் 10 பேர் உயிரிழந்ததாக சீனா தெரிவித்தது. இது குறித்து கருத்து தெரிவித்த, புத்த மதகுரு தலாய்லாமா, திபெத்திய வன்முறையில் நூற்றுக்கும் அதிகமானோர் பலியாகி இருக்கக்கூடும் என தெரிவித்தார்.

திபெத்திய விவகாரத்தில் சீனா தனது கொள்கையை மாற்றி கொண்டாலன்றி இப்பிரச்னை தீராது எனக் கூறினார்.

இருப்பினும், சீனாவின் பெய்ஜிங் நகரில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிக்கு தனது ஆதரவைத் தெரிவித்தார்.

லாமா கண்டனம்: திபெத்தில் நடைபெற்ற வன்முறையை, சீன ஆதரவு 11-வது பஞ்சன் லாமா கண்டித்துள்ளார்.

குறிப்பிட்ட சிலரால் வேண்டுமென்றே நிகழ்த்தப்பட்ட நாசவேலை இது.
கலவரத்தில் ஈடுபட்டவர்கள் தேச நலனுக்கு மட்டும் குந்தகம் விளைவிக்கவில்லை, புத்தரின் நோக்கத்தையே சிதைத்துவிட்டனர் என்று தெரிவித்துள்ளார்.

வன்முறை நடந்த லாஸô நகரில் இயல்பு நிலை திரும்பி, விரைவில் அமைதியும், ஸ்திரத்தன்மையும் ஏற்படும் என தான் நம்புவதாக அவர் கூறினார்.

அமைதி திரும்பியது:

லாஸô நகரில் அமைதி திரும்பியதாக அந்நகர மேயர் டோஜி சிஜூக் தெரிவித்துள்ளார்.

நாட்டில் தற்போது சட்டம்-ஒழுங்கு நிலை சீராகியுள்ளது. எனவே, நெருக்கடி நிலை அமல்படுத்தும் எண்ணம் அரசுக்கு இல்லை என்றார்.

சீனாவிடம் விளக்கம் கோரியது அமெரிக்கா:

திபெத்திய விவகாரத்தில் சீனா தனது கொள்கையை விளக்கு வேண்டும் என அமெரிக்கா கோரியுள்ளது.

இது தொடர்பாக அமெரிக்க வெளியுறவு அமைச்சர் கண்டோலிசா ரைஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், அமைதியாக நடைபெற்ற போராட்டத்தின் போது, திடீரென நிகழ்ந்த வன்முறை பலரது உயிரைக் குடித்துள்ளது வருத்தமளிப்பதாக உள்ளது எனக் கூறியுள்ளார்.

**********************
தினமணி செய்தி (3)
**********************
Wednesday March 19 2008 00:00 IST
திபெத் பிரச்னையில் இணக்கமான நிலைப்பாடு: இந்தியாவுக்கு சீனா பாராட்டு

பெய்ஜிங், மார்ச் 18: திபெத் பிரச்னையில் இந்தியாவின் நிலைப்பாட்டுக்கு சீனா பாராட்டு தெரிவித்துள்ளது.

திபெத் போராட்டக்காரர்களை இந்தியா கையாண்ட விதம் பாராட்டுக்குரியது என்று சீனாவின் பிரதமர் வென் ஜியாபாவ் கூறினார்.

இரண்டாம் முறையாக பிரதமராக பதவியேற்ற பின் செய்தியாளர்களுக்கு அவர் பேட்டியளித்தார்.

திபெத் பிரச்சினை இந்திய - சீன உறவில் மிகவும் சிக்கலான பிரச்னை என்றார் அவர்.

திபெத் பிரச்னையில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே ஏற்பட்டுள்ள ஒப்பந்தத்தை இந்தியா பின்பற்றும் என்று நம்புவதாக வென் கூறினார்.
திபெத் விவகாரத்தில் இந்தியா மிகவும் கவனத்துடன் செயல்படுகிறது என்று இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ள திபெத்திய ஆன்மிகத் தலைவர் தலாய் லாமா கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியாவில் சீனாவுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என்று திபெத்தியர்களை இந்திய அரசு கேட்டுக்கொண்டது.

**********************
தினமணி செய்தி (4)
**********************
Wednesday March 19 2008 00:00 IST
"திபெத் பிரச்னையில் ஐ.நா. தலையிடாது'

நியூயார்க், மார்ச் 18: திபெத் பிரச்னையில் ஐ.நா. தலையிடாது என்று கூறப்படுகிறது.

திபெத்தில் தற்போது ஏற்பட்டுள்ள கலவரங்களை அடுத்து அரசின் அடக்குமுறை நடவடிக்கைகளுக்கு கடிவாளம் போட ஐ.நா. சபை தலையிட வேண்டும் என்று திபெத்தின் ஆன்மிகத் தலைவர் தலாய் லாமா மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வன்முறைச் சம்பவங்கள் குறித்து ஐ.நா. சார்பில் தன்னிச்சையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அவர்கள் கோரினர். ஆனால் இந்த விஷயத்தில் ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சில் எந்த நடவடிக்கையும் எடுக்காது. சபையில் இது குறித்து விவாதமும் நடைபெறாது என்று கூறப்படுகிறது. திபெத் பிரச்னையால் சர்வதேச அமைதிக்கும் பாதுகாப்புக்கும் எந்த அச்சுறுத்தலும் இல்லை. எனவே இது குறித்து விவாதிக்கப்படாது. திங்கள்கிழமை கூட்டத்திலும் கூட இது குறித்து விவாதிக்கப்படவில்லை என்று ஐ.நா.வுக்கான சீனத் தூதர் தெரிவித்தார்.

ஐ.நா.வுக்கான ரஷியத் தூதர் விடாலி சுர்கின்னும் இதே கருத்தைத் தெரிவித்தார். மியான்மரில் ராணுவ அடக்குமுறையின்போது கூட ஐ.நா. தலையிடவில்லை என்பதையும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

ஆஸ்திரேலியாவில் போராட்டம்: ஆஸ்திரேலியாவில் உள்ள சீனத் தூதரகம் எதிரே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திபெத்தியர்களை போலீஸôர் பலப் பிரயோகம் செய்து கலைத்தனர். ஆர்ப்பாட்டக்காரர்கள் சீனக் கொடியை தீயில் எரித்தனர்.

ஆஸ்திரேயாவில் சிட்னி நகரில் உள்ள சீனத் தூதரகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட திபெத்தியர்கள் கூடி ஆர்ப்பாட்டம் நடத்தினர். திபெத் கொடியை அவர்கள் பிடித்திருந்தனர். சீனாவுக்கு எதிராக முழக்கமும் எழுப்பினர்.

**********************
தினமணி செய்தி (5)
**********************
Wednesday March 19 2008 00:00 IST
தலாய் லாமாவுடன் பேசத் தயார்: சீனா அறிவிப்பு

பெய்ஜிங், மார்ச் 18: தலாய் லாமாவுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக உள்ளோம் என்று சீனப் பிரதமர் வென் ஜியாபாவ் கூறினார்.

இரண்டாவது முறையாகப் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பின் செய்தியாளர்களுக்கு அவர் பேட்டியளித்தார்.

தனி நாடு கேட்பதைக் கைவிட்டு திபெத் சீனாவின் பகுதி என்று ஏற்றுக்கொள்ளும்பட்சத்தில் அவருடன் பேச சீனா தயாராக உள்ளது.
தைவானும், திபெத்தும் சீனாவின் பகுதிகள். இதை அவர்கள் ஒப்புக்கொள்ள வேண்டும் என்றார் அவர்.

தனி நாடு கோரிக்கையை அவர் கைவிட்டுவிட்டால் பேச்சுவார்த்தைக்கு அவருக்கு கதவுகள் திறந்தே இருக்கின்றன என்றார் ஜியாபாவ்.

திபெத்தில் சீன அரசு கலாசார படுகொலையில் ஈடுபட்டுள்ளது என்று தலாய் லாமா சொல்வதில் சிறிதும் உண்மை இல்லை.

திபெத் தலைநகர் லாசாவில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வன்முறைச் சம்பவங்களுக்கு பின்னணியில் இருந்து தூண்டிவிட்டது தலாய் லாமாவும் அவரது ஆதரவாளர்களும்தான் என்பதற்கு ஏராளமான ஆதாரங்கள் உள்ளன என்றார் ஜியாபாவ்.

லாசா வன்முறைச் சம்பவங்கள் குறித்து உலகம் முழுவதும் பரபரப்பாகப் பேசப்பட்டு வரும் நிலையில், சீனாவில் முக்கியத் தலைவர்கள் அது பற்றி ஏதும் பேசாமல் மெüனம் காத்தனர்.

ஆனால் முதல் முதலாக வென் ஜியாபாவ், அதுபற்றி பேசி தலாய் லாமாவை பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளார்.

**********************
தினமணி செய்தி (6)
**********************
Tuesday March 18 2008 00:00 IST
திபெத்துக்குச் செல்ல சீனா தடை

திபெத் விடுதலைப் போராட்டத்தின்போது சீன ராணுவத் தாக்குதலில் பலியான திபெத்தியர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக தைவான் தலைநகர் தைபேயில் திங்கள்கிழமை மெழுகுவர்த்தி ஏந்தியபடி கூடிய பொதுமக்கள்.

பெய்ஜிங், மார்ச் 17: வெளிநாட்டவர் திபெத்துக்குள் நுழைய சீன அரசு தடை விதித்துள்ளது.

அதுபோல் தற்போது அங்கிருக்கும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் உடனடியாக வெளியேற வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

திபெத் பல ஆண்டுகளாக சீனாவின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. சீனாவின் பிடியிலிருந்து திபெத்தை விடுவிக்கும் படி, பல்வேறு போராட்டங்களில் அவ்வப்போது புத்த பிக்குகள் ஈடுபட்டு வந்தாலும், அதனை இரும்புக்கரம் கொண்டு சீனா அடக்கி வந்தது.

அந்நாட்டில் ஏற்பட்ட அரசியல் குழப்பங்களைத் தொடர்ந்து, 1959-ம் ஆண்டு ஆன்மிகத் தலைவர் தலாய் லாமா இந்தியாவில் தஞ்சமடைந்தார்.

லாமாவிற்கு அடைக்கலம் கொடுத்ததன் விளைவாக, இந்திய-சீனா இடையிலான உறவு கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இருப்பினும் தலாய் லாமா இந்தியாவிலேயே தொடர்ந்து தங்கினார்.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் திபெத் தலைநகர் லாசாவில் கடும் வன்முறை வெடித்தது. புத்த பிக்குகள் மற்றும் பொதுமக்கள் வெள்ளிக்கிழமை நடத்திய போராட்டத்தின் போது வன்முறை வெடித்தது.
இதில் கடைகள் அடித்து நொறுக்கப்பட்டன. பள்ளி, மருத்துவமனைகள் தீவைத்து கொளுத்தப்பட்டன. பொதுச் சொத்துகள் சூறையாடப்பட்டன. இந்த மோதலில் 10 பேர் உயிரிழந்ததாக சீனா தெரிவித்தது.

வன்முறையாளர்களை ஒடுக்க மக்கள் யுத்தத்தை நடத்தப் போவதாக சீனா ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது.

இந்நிலையில் திபெத்துக்கு வெளிநாட்டவர் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதுபோல் தற்போது அங்கிருக்கும் வெளிநாட்டுப் பயணிகள் வெளியேறவும் உத்தரவிட்டுள்ளது.

பாதுகாப்பு கருதியே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். லாசாவில் வன்முறை கட்டுப்படுத்தப்பட்டாலும் தொடர்ந்து பதற்றம் நிலவுகிறது. 20 வெளிநாட்டுப் பயணிகள் அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். 3 ஜப்பானியர்கள் உள்பட 580 பேரை கலவரப் பகுதியிலிருந்து காப்பாற்றியதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர். கலவரத்தை ஒடுக்க சீன பாதுகாப்புப் படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே அமைதியாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது எந்த அடக்குமுறையும் ஏவப்படவில்லை என்று திபெத்திய பிராந்திய நிர்வாகம் மறுப்புத் தெரிவித்துள்ளது. போராட்டக்காரர்களை அடக்க துப்பாக்கிகளையோ அல்லது ஆயுதங்களையோ பயன்படுத்த வில்லை என்று திபெத் பிராந்திய அரசின் தலைவர் புன்கோக் தெரிவித்தார்.

ஆஸ்திரேலியா கவலை: திபெத்தில் நடைபெற்று வரும் வன்முறைச் சம்பவங்கள் குறித்து ஆஸ்திரேலிய பிரதமர் கெவின் ரூட் கவலை தெரிவித்தார்.

**********************
தினமணி செய்தி (7)
**********************
Tuesday March 18 2008 00:00 IST
திபெத்தியர் போராட்டம் எதிரொலி: எவரெஸ்ட் சிகரம் ஏறத் தடை

காத்மாண்டு, மார்ச் 17: உலகிலேயே உயரமான சிகரமான எவரெஸ்ட்டில் ஏறுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

திபெத் வழியாக எவரெஸ்ட் சிகரம் செல்ல சீனா தடை விதித்துள்ளது. அதுபோல் நேபாளம் வழியாகச் செல்ல நேபாளம் அரசும் தடை விதித்துள்ளது. சீனாவின் வேண்டுகோளை ஏற்று நேபாள அரசு இத் தடையை அறிவித்துள்ளது.

திபெத்தியர்களின் போராட்டத்தை அடுத்து இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ள நிலையில், திபெத்தியர்களால் பிரச்னை ஏற்படுவதைத் தவிர்க்கவே இந்தத் தடை என்று கூறப்படுகிறது.

இதற்கிடையே, சீனாவை எதிர்த்து நேபாளத்திலும் திபெத்தியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். காத்மாண்டுவில் உள்ள ஐ.நா. கட்டடம் எதிரே ஆயிரக்கணக்கான திபெத்தியர்கள் கூடி திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திபெத்தில் படுகொலையை நிறுத்து என்று அவர்கள் முழக்கம் எழுப்பினர். போராட்டத்தில் கலந்து கொண்ட பெண்களின் கண்களில் நீர் வழிந்தது. அவர்கள் திபெத் கொடியை கையில் பிடித்திருந்தனர்.

ஆனால் போலீஸôர் அவர்கள் மீது திடீரென தடியடி நடத்தினர். இதில் போராட்டக்காரர்களில் பலருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

"போராட்டம் அமைதியான முறையில்தான் நடைபெற்றது. நாங்கள் போலீஸôரை அழைக்கவில்லை. ஆனால் ஆர்ப்பாட்டக்காரர்களைக் கலைக்க போலீஸôர் தேவையில்லாமல் பலத்தை பிரயோகித்தனர்' என்று ஐ.நா. அலுவலகத்தில் உள்ள அதிகாரிகள் தெரிவித்தனர்.

Friday 14 March, 2008

வஹ்ஹாபி(களு)க்கு நேசகுமார் திண்ணையில் எழுதிய பதில்கட்டுரை

கடந்த வாரங்களில் வஹ்ஹாபி எழுதிய அபத்த கட்டுரைகளுக்கு, தான் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலாக "நீ மட்டும் ஒழுங்கா ? உங்கிட்ட இல்லாத குறையா ?..." என்ற ரீதியில் கட் & பேஸ்ட் செய்து எழுதபட்ட கடிதங்களுக்கு, விடை கிடைக்காது என்றாலும் விடாப்பிடியாக தமது கேள்விகளுக்கு பதில்தரவேண்டி நேசக்குமார் எழுதிய இவ்வார கடிதம் கீழே

-------------------------------------



Thursday March 13, 2008
வஹ்ஹாபி வெளிப்படுத்தும் அடிப்படை முகமதிய மனோபாவம், இஸ்லாமிய தர்க்கம்

நேசகுமார்

பார்ப்பனர், சங்கராச்சாரி, சனாதனம் என்ற தலைப்பில் திரு.வஹ்ஹாபி அவர்கள் எழுதியிருந்த மடலை கடந்த வார திண்ணை இதழில் கண்டேன்

(http://www.thinnai.com/?module=displaystory&story_id=80803061&format=html). எனது கருத்துக்கள் சில:

1. இத்தனை மடல்களுக்குப் பிறகு //"பார்ப்பனர்", "சங்கராச்சாரி" என்ற இரு சொற்களையும் நானே என் கைகளால் எழுதியதாகவே வைத்துக் கொள்வோம்// என்று பெருந்தன்மையுடன் ஒப்புக் கொள்வது போல எழுதிவிட்டு அடுத்த பாராவிலேயே பார்ப்பனர் என்று இன்னின்ன இடங்களில் வருகிறது, சங்கராச்சார் என்று இன்னின்ன செய்திகளில் வந்திருக்கின்றது என்று வழக்கமான வல்லடி வழக்கை முன்வைத்துள்ளார் நம் சகோதரர் வஹ்ஹாபி.

2.
இங்கே இதை சொல்கின்ற நிலையில், இன்னொன்றையும் சுட்டிக் காட்டிட வேண்டியிருக்கிறது - இந்த எனது கடிதத்தின் நோக்கம் அதுவல்ல என்றாலும். எப்படி பார்ப்பனர் என்பது தன்னளவில் சாதாரணச் சொல்லாக இருந்து வசைச் சொல்லாக இன்று மாறிவிட்டதோ, அதே போன்று ஏராளமான சொற்கள் முன்பு சாதாரணமாகப் பிரயோகிக்கப் பட்டுவந்து பின்பு வசைச் சொல்லாக மாறிவிட்டன. 'பாண்டி' தொடங்கி 'பல்லி' வரை இந்த சொற்களெல்லாம் சாதாரணச் சொற்களே, ஆனால், இன்றைய சூழலில் அவை வசைச் சொற்களாகவே கருதப்படும். ஆனால், நான் சுட்டிக் காட்ட விழைந்தது அதுவல்ல. 'பார்ப்பனர்', 'சங்கராச்சாரி' போன்ற பதங்களை பயன்படுத்துவதை நான் ஆட்சேபிக்கவில்லை. இது போன்ற பதங்களை பயன்படுத்திக் கொண்டே தங்களை 'முகமதியர்', தங்களின் சாமியாரை/நபியை அவதூறாகப் பேசுகின்றார்கள் என்று ஓலமிடும் இரட்டை மனப்பான்மையையே நான் சுட்டிக் காட்டினேன். எனது கட்டுரையிலேயே இதை தெளிவாகவும் எழுதியிருந்தேன். பார்க்க:

//
தனியே இதை படிப்பவர்களுக்கு நான் பார்ப்பனர், சங்கராச்சாரி, சனாதனக் குட்டை போன்ற பதங்களைக் கண்டு மனம் புண்பட்டதாகத் தோன்றும். இப்படியெல்லாம் அவரோ மற்ற இஸ்லாமியர்களோ திட்டுவதில் எனக்கு தனிப்பட்ட முறையில் எந்த வருத்தமும், கோபமும் இல்லை. ஒரு ஜாதி அல்லது மதத்தை அவர் எப்படி வேண்டுமானாலும் சாடிவிட்டுப் போகட்டும்.//
http://www.thinnai.com/?module=displaystory&story_id=80802145&format=html

3.
நான் எந்த விஷயத்தை சுட்டிக் காட்டிட விழைந்தேனோ, அதே விஷயத்தை தெளிவாக தனது செயல்களின் மூலம், தர்க்கங்களின் மூலம், மனோபாவத்தின் மூலம், வார்த்தைகளின் மூலம் தெளிவுபடுத்தியுள்ளார் சகோதரர் வஹ்ஹாபி. பார்ப்பனர், சங்கராச்சாரி போன்ற பதங்களை பலர் பயன்படுத்தியுள்ளனர். இப்போது வஹ்ஹாபியுமே தான் பயன்படுத்தியுள்ளேன் என்று ஒப்புக் கொண்டுள்ளார். பின்பு, அதே அளவுகோளின் அடிப்படையில் 'முகமதியன்' என்று நம் தமிழ் இஸ்லாமியச் சகோதரர்களை அழைப்பதையோ, முஹமதை (வஹ்ஹாபி அவர்கள் உணர்ச்சிவயப்பட்டு தூய அரபியில் சல்-புல் என்றெல்லாம் அழைப்பதைவிட்டு) பற்றி பேசுவதையொ கண்டு வஹ்ஹாபியும் ஏனைய இஸ்லாமிஸ்ட் நண்பர்களும் குமுறுவது ஏன்?

4.
இங்கே திண்ணை வாசகர்கள் அனைவருக்கும் நான் வஹ்ஹாபியின் எள்ளல், வசவுகள், பயன்படுத்தியுள்ள வார்த்தைகள் (மனப்பிறழ்வு, அரைகுறை, மந்தி, பன்றி, இன்னபிற) ஆகியவற்றின் மூல காரணத்தை, தோற்றுவாயை சுட்டிக் காட்ட விரும்புகிறேன். இது அச்சு அசலாக முகமது 1400 வருடங்களுக்கு முன்பு பயன்படுத்திய அதே யுக்தி, தர்க்கம், வசவுகள். பிறந்ததிலிருந்து தினம் தினம் கேட்டு, ஓதி, சிந்தித்து வருகின்ற வஹ்ஹாபி போன்ற சகோதரர்கள் இப்படி மாறிப்போயுள்ளதில் என்ன வியப்பிருக்கின்றது? மவுலானா மவுதூதி தனது குத்பா பிரசங்கங்களில் சொல்வார், ஒரு முஃமீனான முஸ்லீம் தொழுகை செய்வது,இஸ்லாத்தின் மார்க்கக் கடமைகளை நிறைவேற்றுவது எல்லாமே ஜிகாதுக்கு அவரைத் தயார் படுத்திவிடும் என்று. எப்படி நன்கு படித்த, வசதியான குடும்பங்களிலிருந்து வருகின்றவர்கள் கூட பால் வார்க்கும் கையை பதம் பார்க்கும் நாகம் போல நமது சமுதாயத்துக்கெதிராக குண்டு வைக்கிறார்கள், கொலை செய்கிறார்கள், வன்முறையில் ஈடுபடுகின்றார்கள் என்றால் ... இப்படி மதத்தால் சிறுவயதிலிருந்து காழ்ப்பை கொட்டி வளர்க்கப் படுவதால்தான். இதை வஹ்ஹாபியின் வார்த்தைகளும் வசவுகளும் மெய்ப்பிக்கின்றன.

5.
அடிப்படையில் நான் சுட்ட வந்த விஷயத்தை கடைசியாகவாவது குறிப்பிட்டு பதிலெழுதியுள்ளார் சகோதரர் வஹ்ஹாபி. ஆனால், வழக்கம் போல நான் கேட்டதற்கு பதில் சொல்வதை விட்டு வசைகளை அள்ளி வீசுவதிலேயே கவனம் செலுத்தியிருக்கின்றார்:

///////...
அஹமதி உருவாக்கிய மதத்தைச் சார்ந்தவர்களை, பஹாவுல்லாஹ் உருவாக்கிய மதத்தைச் சார்ந்தவர்களை பஹாய்கள் என்றழைப்பதும் தவறுதானே? இவர்களையெல்லாம் முஸ்லீம்கள் என்று வஹ்ஹாபிகள் ஒப்புக் கொள்வார்களா?// என்று 27 பிப்ரவரி 2008 திண்ணை இதழில் கேள்வி கேட்கும் இவரை மனம் பிறழ்ந்து நிதானமிழந்தவர் என்று குறிப்பதில் தவறேதுமுண்டோ? இவருடைய பேதலிப்புக்கு எத்தனை முறைதான் எழுத்து வைத்தியம் பார்ப்பது?

அவர் கேள்வி வைத்த ஒரு வாரத்திற்கு முன்னரே (21 பிப்ரவரி 2008) பதிப்பான எனது திண்ணைக் கடிதத்திலிருந்து மீண்டும்:
"
ஒரே இறைவனான அல்லாஹ்வைத் தன் கடவுளாக ஏற்றுக் கொண்டு, ஆதம் முதல் ஈசா வரை அவன் அனுப்பி வைத்தத் தூதர்களைத் தொடர்த் தூதர்களாகவும் அத்தொடரில் இறுதியாக வந்தவர் முஹம்மது (ஸல்) அவர்கள்" என்றும் ஏற்றுக் கொண்டு, இஸ்லாமிய வாழ்க்கை நெறிகளைச் செயல் படுத்துகின்ற அனைவரும் முஸ்லிம்கள்தாம் என்ற வரையறை இஸ்லாத்தில் ஏற்கனவே உண்டு. எனவே, யாரும் யாரையும் 'முஸ்லிம்' என்று ஏற்றுக் கொள்ள வேண்டும்; அல்லது 'இல்லை' என்று மறுதலிக்க வேண்டும் போன்ற அறிவுரைகள் தருவதற்கு அரைகுறைகளின் தேவை முஸ்லிம்களுக்கு இல்லை.////////

6.
மேலே குறிப்பிட்டிருப்பது சிதைக்கப்பட்ட எனது கேள்வி தான் என்பதை ஒதுக்கிவிட்டு, கேள்விக்கு பதிலாக என்ன சொல்லியிருக்கின்றார் என்பதை பார்ப்போம். நான் ஒரு கேள்வி கேட்டால், அதற்கு 'இஸ்லாம்' இப்படித்தான் சொல்கிறது எனவே இதுவே உண்மை என்கிறார். இது தான் சராசரியான இஸ்லாமிஸ்ட் மனோபாவம், கட்டுப்படுத்தப்பட்ட மனதின் குறைபட்ட சிந்தனை. இப்படி என்றால் எந்தக் கேள்விக்குமே 'இஸ்லாம் இதைத் தான் சொல்கிறது' என்ற ஒரே வரியிலேயே பதில் சொல்லிவிடலாமே? உலகம் தட்டையா என்றால், அது தட்டை இல்லை என்று நிரூபிக்க வேண்டியதில்லை, இஸ்லாம் இப்படித்தான் சொல்கிறது என்று சொல்லிவிடலாம். மேலே நட்சத்திரம் தெரிகிறது என்றால், இல்லை மேலே கடவுள் விளக்குகளைத் தொங்கவிட்டிருக்கிறார் - ஏனென்றால் இஸ்லாம் இப்படித்தான் சொல்கிறது என்று சொல்லிவிடலாம். எல்லாக் கேள்விகளுக்கும் விடை, தனது மதத்தின் வாக்குகளில் உள்ளது என்று சொல்லிவிட்டு , ஒரு ரோபோ போல இருந்துவிடலாம். பின்பு சிந்தனை எதற்கு, தர்க்கம் எதற்கு, விவாதம் எதற்கு, அட திண்ணையில் எழுதுவது விவாதிப்பது எல்லாமே எதற்கு?

7.
ஆனால், இந்த அடிப்படைவாதிகளின் வாதம், தர்க்கம் எல்லாமே இப்படித்தான் இருக்கிறது. 'எனவே, யாரும் யாரையும் 'முஸ்லிம்' என்று ஏற்றுக் கொள்ள வேண்டும்; அல்லது 'இல்லை' என்று மறுதலிக்க வேண்டும் போன்ற அறிவுரைகள் தருவதற்கு அரைகுறைகளின் தேவை முஸ்லிம்களுக்கு இல்லை' என்றால், இந்த அறிவுரையைத் தானே முஹமது தன்னைச் சுற்றியிருந்தவருக்கு தந்தார்? முகமது சொன்னதைத் தானே 'அகமது' (அகமதியாக்களின் இறைத் தூதர்)சொன்னார்? பகாவுல்லாவும் இதைத்தானே சொன்னார்? முகமதை நம்புகிறவர்கள் தங்களை முஸ்லீம்கள் என்று அழைத்துக் கொள்ள உரிமை இருக்கும்போது, அகமதை நம்புகிறவர்கள் தங்களை முஸ்லீம்கள் என்று அழைத்துக் கொள்வதற்கும் உரிமை இருக்கிறது அல்லவா? ஈசா நபியின் வழியில் வந்தவராக தம்மை முகமது அறிவித்துக் கொள்ளும்போது, ஈசா நபி, முகமமது நபி வழியில் வந்தவராக, உண்மையான இஸ்லாத்தை முன்வைப்பவராக தன்னை அகமது அறிவித்துக் கொள்வதும் சரிதானே?

8.
இஸ்லாமே தன்னது என்று அகமதிக்கள் வாதிடும்போது, வகாபிகள் வந்து இஸ்லாம் இப்படி சொல்கிறது என்று சொல்வதன் முரண் வஹ்ஹாபிக்கு புரிபடவில்லை அல்லது அதை அவர் புரிந்து கொள்ள விரும்பவில்லை. ஏனெனில், அதை புரிந்து கொண்டுவிட்டால் பின்பு அவரது 'நம்பிக்கை' எனும் மண் கோட்டை கரைந்துவிடும் என்பது இதை 'ஈமான்' இல்லாமல் பார்க்கும் எந்த சுயசிந்தனையாளருக்கும் விளங்கிவிடும். ஆம், முகமது அவர்கள் தாம் இறைத்தூதர் என்பதற்கு இருக்கும் 'ஒரே வலுவான' ஆதாரம் அந்த மனிதரின் வாக்கு மட்டுமே. அந்த நம்பிக்கையை சிந்திக்காமலும், நிர்ப்பந்தத்தின் பேரிலும் ஏற்றுக் கொண்டு இன்றும் சிந்திக்காமல் அடிகரைந்து கொண்டிருப்பதையும் பார்க்க விரும்பாமல் மண்கோட்டையின் உப்பரிகையில் வன்முறைக் கனவுகளோடு உலவிக்கொண்டிருக்கும் வஹ்ஹாபிகளின் தடுமாற்றங்களும் தர்க்கங்களும் இன்று உலகில் எல்லோராலும் எள்ளி நகையாடப்படுவதில் வியப்பென்ன?

வஹ்ஹாபி சொல்லியிருக்கும் அதே விஷயத்தைல் ஒரு வார்த்தையை மட்டுமே மாற்றி அஹமதிக்கள் இப்படி சொன்னால் அதற்கு வஹ்ஹாபியின் பதிலென்ன?

**"
ஒரே இறைவனான அல்லாஹ்வைத் தன் கடவுளாக ஏற்றுக் கொண்டு, ஆதம் முதல் ஈசா வரை அவன் அனுப்பி வைத்தத் தூதர்களைத் தொடர்த் தூதர்களாகவும் அத்தொடரில் இறுதியாக வந்தவர் அஹம்மது (ஸல்) அவர்கள்" என்றும் ஏற்றுக் கொண்டு, இஸ்லாமிய வாழ்க்கை நெறிகளைச் செயல் படுத்துகின்ற அனைவரும் முஸ்லிம்கள்தாம் என்ற வரையறை இஸ்லாத்தில் ஏற்கனவே உண்டு. எனவே, யாரும் யாரையும் 'முஸ்லிம்' என்று ஏற்றுக் கொள்ள வேண்டும்; அல்லது 'இல்லை' என்று மறுதலிக்க வேண்டும் போன்ற அறிவுரைகள் தருவதற்கு அரைகுறைகளின் தேவை முஸ்லிம்களுக்கு இல்லை**

மேலே கண்டதில்

முகமதியர்களின் 'மு' வுக்குப் பதிலாகஅகமதியர்களின் 'அ' இருக்கிறது. ஒரு வார்த்தை மாற்றினால், அவர்கள் இவர்களுக்கு காபிர்களாகிறார்கள், இவர்கள் அவர்களுக்கு காபிர்களாக ஆகிறார்கள். எந்தப் பக்கம் அதிக வன்முறை இருக்கிறது, எந்தத் தரப்பு வன்முறையின் மூலமும், மூளைச் சலவையின் மூலமும், பெண்கள், பணம், அதிகாரம் போன்றவற்றின் மூலம் அதிக நபர்களை தன்னிடமிழுத்து வன்முறையின் மூலம் பிறரை 'அமைதிப் படுத்துகிறதோ' (இங்கே அமைதி என்பதற்கு அழித்தொழிப்பு என்று அர்த்தம் கொள்க), அதுவே உண்மையான, 'சத்திய மார்க்க'மாகிறது.

9.
ஆம், இதுதான் இஸ்லாத்தில் நிகழ்ந்தது. இதுவே வஹ்ஹாபியிசத்தில் நிகழ்ந்தது. இதுவே இஸ்லாத்தின் அடிப்படை. இந்த அஸ்திவாரக் கொணலிலிருந்துதான், அடிப்படையே வெறும் வன்முறையையும், மூடநம்பிக்கையையும், பின்பற்றுபவர்களை சிந்திக்கவிடாமல் இருப்பதையும் நம்பி இருப்பதால்தான் தொடர்ந்து உலகெங்கும் ஜிகாதி வன்முறை இன்று கோரத் தாண்டவமாடிக் கொண்டிருக்கிறது.

10.
கடைசியாக 'சனாதனக் குட்டை' என்று யார் சொன்னார்கள் என்று கூகிளிட்டுப் பார்த்தேன், கிடைக்கவில்லை. ஆனால், வஹ்ஹாபி மற்ற வார்த்தைகள் என்னென்னவெல்லாம் பயன்படுத்தியுள்ளார் என்பதற்கு ஒரு பெரும் லிஸ்டே இருக்கிறது. இஸ்லாமிஸ்டுகளின் தொடர்ந்த வசவுகளைப் பார்த்து வருகிற நேரத்தில் அதுவும் புனை பெயரில் பல வஹ்ஹாபிகள் ஒரே பாணியில் தொடர்ந்து எழுதிவருகிற நிலையில் இந்த வஹ்ஹாபி இந்த வார்த்தையை பயன்படுத்தியிருக்கலாம், அல்லது வேறெதாவது ஒரு வஹ்ஹாபி பயன்படுத்தியிருக்கலாம். நெருக்கித் தேடினால், யார் பயன்படுத்தியுள்ளார் என்பதையும் கூட கண்டுபிடித்துவிடலாம்தான். அதற்கு நான் முயல்வதற்கு முன்பு ஒரு விஷயத்தை வஹ்ஹாபி தெளிவுபடுத்திவிட வேண்டும். இப்படி ஒற்றை வார்த்தையை ஒரு மத அடிப்படைவாதிகளின் கும்பலில் எந்த அடிப்படைவாதி பயன்படுத்தினார் என்று சரியாக சொல்லத் தெரியாததனால் ஒருவருக்கு மனப்பிறழ்வு என்று முடிவு செய்துவிடலாமா என்பதை தெளிவுபடுத்தினால் நல்லது.

11.
இந்த விவாதம் நீண்டு கொண்டே போவதால், கெடு வைக்க விருப்பமில்லாவிட்டாலும் அடுத்த வாரத்திற்குள் வஹ்ஹாபி மேலே கண்டவற்றிற்கு, என் கேள்விகளுக்கு பதில் சொல்லிவிட்டால் மிகவும் சந்தோஷமடைவேன். ஏனெனில், குறைந்த பட்சம் ஈமான் கண்ணையும் இதயத்தையும் சிந்தனையையும் மறைக்காத பலருக்கு பாரிய விழிப்புணர்வும், எதிர்காலத்தில் தமிழில் இது குறித்த படைப்புகள் பல்கிப் பெருகிடவும் இந்த விவாதங்கள் வழி செய்யும் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது. ஏற்கெனவே தனியாக இருந்த இந்த இஸ்லாமிய விமர்சன மரம் இன்று தோப்பாகியுள்ளது - இந்த வஹ்ஹாபி சொல்லி குதூகலித்த பெரியாரிஸ்டுகளிலிருந்து, மார்க்ஸிஸ்டுகளிலிருந்து, இந்துத்துவிஸ்டுகளிலிருந்து, கிறித்துவர்களிலிருந்து இன்று தமிழ் வலையுலகில் ஆளாளுக்கு இஸ்லாம் பற்றிய எண்ணற்ற கேள்விகளை முன்வைக்கத் துவங்கியுள்ளனர், முதன்முறையாக இந்த ஆயிரம் ஆண்டுகளில் தமிழ்ச் சமுதாயம் இஸ்லாம் குறித்த பல கேள்விகளையும் விமர்சனங்களையும் பகிரங்கமாக முன்வைக்க ஆரம்பித்துள்ளது. இதற்கு 'அலிஃப் பே' வேண்டுமானால் சூஃபியிஸ நம்பிக்கைக்காரர்கள் போட்டிருக்கலாம். ஆனால், இதை பாரிய அளவில் எங்கும் பற்ற வைத்த புண்ணியம், வசவுகளையும் மிரட்டல்களையுமே நம்பி களத்தில் இறங்கிய அரை டஜன் வஹ்ஹாபிகளையே சாரும். வேகமாக வீசிய அலை கடந்து சென்றதை கற்பனையில் ஃப்ரீஸ் செய்து கடந்த காலகட்டத்திலேயே திளைத்திருக்க விரும்பும் 'தூய்மையான' இஸ்லாமிஸ்டுகள் தங்கள் காலடியில் மீண்டு செல்லும் அலையுடன் மண்ணும் கரைந்து செல்வதை அவதானிக்க முடியாவிட்டாலும், காலடி மண் மட்டுமல்ல, கோட்டையே கரைந்து கொண்டிருப்பதை வெளியிலிருந்து பார்க்கும் என்னால் அவதானிக்க முடிகிறது. பலரையும் சோம்பலிலிருந்து மீட்டு மீண்டும் மீண்டும் தமிழ் வாசக சமூகம் அறியாத பல தகவல்களை, கோணங்களை வெளிக்கொணர வைப்பதையும் எல்லாம் வல்ல இறையின் செயலாகவே நான் காண்கிறேன். ஒரு பெரிய தாழ்வுக்குப் பின்னால் மகத்தான உயர்வுகளை மனிதகுலம் சந்திக்கும் என்ற இறையின்/இயற்கையின் விதி இங்கே செயல்படுவதையும் காண்கிறேன்.

வஹ்ஹாபி அவர்களின் பதிலை எதிர்நோக்கியபடி - மாறா அன்புடனும் நம்பிக்கையுடனும்,

நேசகுமார்.

Friday 7 March, 2008

முகமதிய மன்னன் அவுரங்கசீப் குறித்த தகவல்கள்

Link: http://www.haindavakeralam.com/HKPage.aspx?PageID=3013&SKIN=I

(if the link does not work fine with you, paste the PageID on any working link and try again)

FACT Exhibition-"Aurangzeb, as he was, according to Moghol Records"14/02/2007 08:24:37

FACT invites you to an exhibition on "Aurangzeb, as he was, according to Moghol Records", which for the first time shows Aurangzeb as he was, according to his own court records and not as he has been portrayed by Indian and Western historians

Place: Habitat Centre. Palm Court,New Delhi
Date: 16th to 20th February 2007
Time: 9 Am to 8 Pm

For any information, contact: François Gautier

FACT - Director 41 Jorbagh, New Delhi 110003 Tel: +91-11-24649635 /
+919811118828

Aurangzeb as he was according to Mughal Records Aurangzeb, Emperor Shah Jahan's sixth son, was born on 24th October 1618 at Dohad in Madhya Pradesh, and wrested India's crown from his father before the end of June 1658, after defeating his brother Prince Dara Shukoh's armies, first at Dharmat near Ujjain (15th April 1568) and the second, led by Dara himself, at Samugarh on 29th May 1658. The war of Succession to the richest throne in the world was practically over with this victory, and Aurangzeb secured his position by making Murad, his brother and accomplice in his impetuous pursuit for power, his prisoner, by treachery, on 25th June. He had already made his old father Emperor Shah Jahan a prisoner in the Agra Fort (8th June 1658).

Shah Jahan survived his confinement by nearly eight years and the disgraceful manner of his burial (Exhibit No.5) will ever remain a stigma on this unscrupulous son Aurangzeb's advent to the throne in his father's life time was not welcomed by the people of India, because of the treacherous manner it was achieved; , but public opinion became all the more hostile towards him when Prince Dara Shukoh, the favourite son of Shah Jahan, the translator of the Upanishads (Exhibit No.2), and a truly liberal and enlightened Musalman, was taken prisoner on the Indian border, as he was going to Persia. Dara was paraded in a most undignified manner on the streets of Delhi on 29th August 1659. The French Doctor, Bernier, was an eye-witness to the scene and was deeply moved by the popular sympathy for Dara (Exhibit No.3) which so much alarmed Aurangzeb that he contrived to have a decree from his Clerics announcing death-sentence for his elder brother on the charge of apostasy (Exhibit No.4).

Throughout the War of Succession, Aurangzeb had maintained that he was not interested in acquiring the throne and that his only object was to ward off the threat to Islam, which was inevitable in case Dara Shukoh came to power. Many, including his brother Murad, were deceived by this posture. After his formal accession in Delhi (5th June 1659) he posed as a defender of Islam who would rule according to the directions of the Shariat, and with the advice of the Clerics or Ulama for whom the doctrines, rules, principles and directives, as laid down and interpreted in the 7th and 8th century Arabia, Persia and Iraq, were inviolable and unchangeable in all conditions, in all countries,and for all times to come.

One of the main objectives of Aurangzeb's policy was to demolish Hindu temples. When he ordered (13th October 1666) removal of the carved railing, which Prince Dara Shukoh had presented to Keshava Rai temple at Mathura, he had observed "In the religion of the Musalmans it is improper even to look at a temple", and that it was totally unbecoming of a Muslim to act like Dara Shukoh (Exhibit No.6, Akhbarat, 13th October 1666).

This was followed by destruction of the famous Kalka temple in Delhi (Exhibit No.6, 7, 8, Akhbarat, 3rd and 12th September 1667).

In 1669, shortly after the death of Mirza Raja Jai Singh of Amber, a general order was issued (9th April 1669) for the demolition of temples and established schools of the Hindus throughout the empire and banning public worship (Exhibit Nos.9 & 10). Soon after this the great temple of Keshava Rai was destroyed (Jan.-Feb. 1670) (Exhibit No.12) and in its place a lofty mosque was erected. The idols, the author of Maasir-i-Alamgiri informs, were carried to Agra and buried under the steps of the mosque built by Begum Sahiba in order to be continually trodden upon, and the name of Mathura was changed to Islamabad. The painting (Exhibit No.13) is thus no fancy imagination of the artist but depicts what actually took place.

This was followed by Aurangzeb's order to demolish the highly venerated temple of Vishwanath at Banaras (Persian text, Exhibit No.11),Keshava Rai temple (Jan.-Feb. 1670) (Persian Text, exhibit No.12 and Painting, Exhibit No.13), and of Somanatha (Exhibit No.14). To save the idol of Shri Nathji from being desecrated, the Gosain carried it to Rajputana, where Maharana Raj Singh received it formally at Sihad village, assuring the priest that Aurangzeb would have to trample over the bodies of one lakh of his brave Rajputs, before he could even touch the idol (Exhibit No.15)

Aurangzeb's zeal for temple destruction became much more intense during war conditions. The opportunity to earn religious merit by demolishing hundreds of temples soon came to him in 1679 when, after the death of Maharaja Jaswant Singh of Jodhpur in the Kabul Subah, he tried to eliminate the Rathors of Marwar as a political power in Rajputana. But Maharana Raj Singh of Mewar, in line with the great traditions of his House, came out in open support of the Rathors.. This led to war with both Mewar and Marwar during which the temples built on the bank of Rana's lake were destroyed by his orders (Exhibit No.23, Akhbarat 23rd December 1679) and also about three hundred other temples in the environs of Udaipur. (Exhibit No.25, Text), including the famous Jagannath Rai temple built at a great cost in front of the Maharana's palace which was bravely defended by a handful of Rajputs (Exhibit Nos.20, 21). Not only this, when Aurangzeb visited Chittor to have a view of the famous fort, he ordered the demolition of 63 temples there which included some of the finest temples of Kumbha's time (Exhibit No.22).

From Marwar (in Western Rajasthan) alone were brought several cart-loads of idols which, as per Aurangzeb's orders, were cast in the yard of the Court and under the steps of Jama Masjid (Exhibit No.19). Such uncivilized and arrogant conduct of the Mughal Emperor alienated Hindus for ever, though they continued to be tolerant towards his creed. In June 1681, orders, in a laconic two-liner, were given for the demolition of the highly venerated Jagannath Temple in Orissa (Exhibit No.24, Akhbarat, 1st June 1681)., Shortly afterwards, in September 1682, the famous Bindu-Madhav temple in Banaras was also demolished as per the Emperor's orders (Exhibit No.27, Akhbarat, Julus 26, Ramzan 20). On 1st September 1681, while proceeding to the Deccan, where his rebel son Prince Akbar, escorted by Durga Das Rathore, had joined Chhatrapati Shivaji's son, Shambhaji, thus creating a serious problem for him, Aurangzeb ordered that all the temples on the way should be destroyed. It was a comprehensive order not distinguishing between old and newly built temples (Exhibit No.26, Akhbarat, Julus 25, Ramzan 18). But in the district of Burhanpur, where there were a large number of temples with their doors closed, he preferred to keep them as such, as the Muslims were too few in number in the district. (Exhibit No.28, Akhbarat 13th October 1681). In his religious frenzy, even temples of the loyal and friendly Amber state were not spared, such as the famous temple of Jagdish at Goner near Amber (Exhibit Nos.30, Akhbarat, 28th March and 14th May 1680). In fact, his misguided ardour for temple destruction did not abate almost up to the end of his life, for as late as 1st January 1705 we find him ordering that the temple of Pandharpur be demolished and the butchers of the camp be sent to slaughter cows in the temple precincts (Akhbarat 49-7). The number of such ruthless acts of Aurangzeb make a long list but here only a few have been mentioned, supported by evidence, mostly contemporary official records of Aurangzeb's period and by such credible Persian sources as Maasir-i-Alamgiri. In obedience to the Quranic injunction, he reimposed Jizyah on the Hindus on 2nd April 1679 (Exhibit No.16), which had been abolished by Emperor Akbar in 1564, causing widespread anger and resentment among the Hindus of the country .A massive peaceful demonstration against this tax in Delhi, was ruthlessly crushed (Exhibit No.17), This hated tax involved heavy economic burden on the vast number of the poor Hindus and caused humiliation to each and every Hindu (Exhibit No.18). In the same vein, were his discriminatory measures against Hindus in the form of exemption of the Muslims from the taxes (Exhibit No.31, Akhbarat 16th April 1667) ban on atishbazi and restriction on Diwali (Exhibit No.32), replacement of Hindu officials by Muslims so that the Emperor's prayers for the welfare of Muslims and glory of Islam, which were proving ineffective, be answered (Exhibit Nos.33, 34). He also imposed a ban on ziyarat and gathering of the Hindus at religious shrines, such as of Shitla Mata and folk Gods like Pir Pabu (Exhibit No.35, Akhbarat 16th September 1667), another ban on their traveling in Palkis, or riding elephants and Arab-Iraqi horses, as Hindus should not carry themselves with the same dignity as the Muslims! (Exhibit No.36). In the same vein came brazen attempts to convert Hindus by inducement, coercion (Exhibit No.41) or by offering Qanungoship (Exhibit No.44, 45, 46) and to honour the converts in the open Court. His personal directions were that a Hindu male be given Rs.4 and a Hindu female Rs.2 on conversion (Exhibit No.43,Akhbarat 7th April 1685). "Go on giving them", Aurangzeb had ordered when it was reported to him that the Faujdar of Bithur, Shaikh Abdul Momin, had converted 150 Hindus and had given them naqd (cash) and saropas (dresses of honour) (Exhibit No.40, Akhbarat, 11th April 1667). Such display of Islamic orthodoxy by the State under Aurangzeb gave strength and purpose to the resistance movements such as of the Marathas, the Jats, the Bundelas and the Sikhs (Exhibit No.46). .

On the 12th May 1666, the dignity with which Shivaji carried himself in the Mughal court and defied the Emperor's authority, won him spontaneous admiration of the masses. Parkaldas, an official of Amber (Jaipur State) wrote in his letter dated 29th May 1666, to his Diwan. "Now that after coming to the Emperor's presence Shivaji has shown such audacity and returned harsh and strong replies, the public extols him for his bravery all the more …" (Exhibit No.37). When Shivaji passed away on April 1680 at the age of 53 only, he had already carved a sufficiently large kingdom, his Swarajya, both along the western coast and some important areas in the east as well.

Aurangzeb could never pardon himself for his negligence in letting Shivaji escape from his well laid trap and wrote in his Will (Exhibit No.48) that it made him "to labour hard (against the Marathas) to the end of my life (as a result of it)". He did not realize that it was his own doing: the extremely cruel manner – even for those times - in which he put to death Shivaji's son, Shambhaji (Exhibit No.38) made the Maratha king a martyr in the eyes of the masses and with that commenced the People's War in Maharashtra and the Deccan which dug the grave of the Mughal empire.

Till the very end Aurangzeb never understood that the main pillars of the government are the affection and support of the people and not mere compliance of the religious directives originating from a foreign land in the seventh-eighth centuries. His death after a long and ruinous reign lasting half a century, ended an eventful epoch in the history of India. He left behind a crumbling empire, a corrupt and inefficient administration, a demoralized army, a discredited government facing public bankruptcy and alienated subjects.

Prof. V.S. Bhatnagar

*******************************

Comments on the above articles by the readers

*********************************



Dr.P.E.S.Kartha 17/02/2007 03:30:40
Re: FACT Exhibition-"Aurangzeb, as he was, according to Moghol Records"Who are the worse criminal(s)? Aurangzeb or the present day bigots in the garb of intellectuals, politicians, media barons and the government historians,who want to cover up all the black deeds of Muslim fanatics? Dr.P.E.S.Kartha - http://kartha-pes.sulekha.com

Sudhir PISIPATI 16/02/2007 23:10:47
Re: FACT Exhibition-"Aurangzeb, as he was, according to Moghol Records"It is a pity that we have becomes slaves of our own thought fabric woven by the selfish ruler/politician at all times. We are like the cattle which doesnt think, but just follow. We need truth about history not only for a Hindu cause.. but also for a nationalistic cause. We need to have the strength as a nation to know how we are today and because of what.But with the political appeasement gaining strength with every passing day, I see the hope dwindling of us as a nation having the strength to be honest to our children and being confident that what is being told is true.The situation prevalent today is that we are afraid to speak the truth even when we see it.THis is the nation where the Darul Uloom says that the man who raped his daughter in law is not at fault but the girl who got raped is at fault. And the politicians dont as much as breathe. Do we rely on these selfish, blind and corrupt politicians to show us the way? NO !!!We need to make people aware of the truth... becauseTRUTH WILL SET US FREE...

sg 15/02/2007 02:34:37
Re: FACT Exhibition-"Aurangzeb, as he was, according to Moghol Records"This article should be published in an leading english daily. But I guess none would want to touch it with a barge pole. There is so much history which is wrong and fed to our children which is un true. But we need to start publishing such article (mide you with proof) so that some of the readers staet asing questions.

bhupi 14/02/2007 22:48:50
Re: FACT Exhibition-"Aurangzeb, as he was, according to Moghol Records"Excellent article full of authentic scholarship.One must know the history first hand.Those who forget history live to repeat it again.Lets not forget what happened to our forfathers.Thanks

**************************************************************
Article in Thinnai

http://www.thinnai.com/?module=displaystory&story_id=20702153&format=html




Thursday February 15, 2007

பழமைவாதமும், புதுமைவாதமும் - இரு கண்காட்சிகள்
சேதுபதி அருணாசலம்

“ஈஸ்வர வருஷம், 1938, பங்குனி மாசம், 19-ம் தேதி கோனானூரில் வாழும் பேரம்மாவூர் கட்டையனின் மனைவி குமாரியின் நினைவாக”

*****

ப்ரெஞ்சுப் பேரரசர் நெப்போலியனின் வாழ்க்கை வரலாற்றை அவர் படை வீரன் பாடுவது போலமைந்த சோகம் ததும்பும் நாட்டுப்புறப் பாடல் புத்தகம் ஒன்றைப் படிக்க நேர்ந்தது. அதில் பின் வரும் வரிகள் என் கவனத்தை ஈர்த்தன.

"வீரர்களே! நீங்கள் இப்போது வெற்றிகொள்ளப்போகும் நாட்டு மக்கள், ஏராளமான சிற்பங்களை வழிபடக்கூடியவர்கள். அவற்றை ஏதும் செய்து விடாமல் கவனமாகப் பார்த்துக்கொள்ளுங்கள். வரலாற்றுச்சின்னங்களையும் பாதுகாத்துப் பெறுவதுதான் முழுமையான வெற்றி!"

(நெப்போலியன் எகிப்து நாட்டின் மேல் படையெடுத்துச் சென்றபோது, கைக்கெட்டும் தூரத்தில் இருந்த வெற்றியைச் சுவைக்க ஆர்வமாக இருந்தத் தன் வீரர்களைப் பார்த்துக் கூறுவதாக அமைந்தது).

*****

'தொடரும் தீவிரவாதத்திற்கு எதிரான அமைப்பு' - Foundation Against Continuing Terrorism - FACT என்னும் அமைப்பு 16-பிப்ரவரியிலிருந்து 20 பிப்ரவரி 2007 வரை 'மொகலாயக் குறிப்புகளின் படி - ஒளரங்கசீப்' (Aurangzeb - as he was according to Mughal Records) என்றொரு கண்காட்சியை நடத்துகிறது. இந்தக் கண்காட்சியில் ஒளரங்கசீப்பின் ஆட்சியைப் பற்றிய சமகாலத்திய அதிகாரபூர்வமான மொகலாய அரசுக்குறிப்புகள், அரசாணைகள், மொகலாய ஓவியங்கள் மற்றும் மொகலாயப் புத்தகங்கள் ஆகியவை பார்வைக்கு வைக்கப்படுகின்றன.
இக்கண்காட்சியில் காட்சிக்கு வைக்கப்படும் ஆவணங்களிலிருந்து
தெரியவரும் விஷயங்களைத் தொகுத்து பேராசிரியர் V.S.பட்நாகர் எழுதிய கட்டுரையைப் படித்தேன். அக்கட்டுரையிலிருந்து தெரியவரும் ஒளரங்கசீப்பின் கொடூரச் செயல்களும், மதவெறியும் மிகவும் மனவேதனை அளிப்பவை. அதிலும் ஒளரங்கசீப்பால் இடித்து அழிக்கப்பட்ட இந்துக்கோயில்கள் எண்ணற்றவை.

ஒளரங்கசீப்பின் சகோதரர் தாரா ஷ¤கோக் (Dara shukok) மதுரா(Madura)- வின் கேசவ ராய் கோயிலுக்கு அன்பளிப்பாகக் கொடுத்திருந்த வேலைப்பாடுகள் நிறைந்த கைப்பிடிச்சுவரை நீக்கச் சொல்லி ஆணை பிறப்பித்த ஒளரங்கசீப், “இஸ்லாமிய மதப்படி ஒரு கோயிலைப் கண்ணால் பார்ப்பதுகூட முறையற்ற செயல்” என்று கூறியிருக்கிறார். தாராவைப் போன்று நடந்து கொள்வது ஒரு முஸ்லிம் செய்யக்கூடிய செயல் அல்ல என்றும் கூறினார்.

தாரா ஒரு பரந்த மனம் படைத்த அறிவார்ந்த முஸ்லிம். உபநிடதங்களை மொழிபெயர்த்தவர். தன் தந்தை ஷாஜஹானின் அன்புக்குப் பாத்திரமானவர். மக்களுக்கும் அவர்மேல் பெரும் மதிப்பு இருந்தது. பட்டத்து இளவரசரான அவர்தான் அடுத்து மன்னராக வேண்டியிருந்தது. போரில் அவரைத் தோற்கடித்து மொகலாய கிரீடத்தை சூட்டிக் கொண்டார் ஒளரங்கசீப்.

பட்டத்துக்கு வந்த ஒளரங்கசீப், தன்னை ஒரு இஸ்லாமியக் காவலராகக் காட்டிக் கொண்டிருந்தார். (இதற்கு முன்னர் பதவியிலிருந்த அக்பரும், அவரைத் தொடர்ந்த ஷாஜஹானும் இந்துக்களிடம் அன்பாக நடந்து கொண்டது பல இஸ்லாமிய மதத்தலைவர்களை எரிச்சலுக்குள்ளாக்கியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது). பதவியேற்றபின் ஷரியத்துகளின்படியும், உலாமா(Ulama) எனப்படும் இஸ்லாமியக் கூட்டமைப்பு மற்றும் மதத்தலைவர்களின் அறிவுரைகளின்படியும் நடப்பதாகக் காட்டித் தன்னை ஒரு இஸ்லாமியப் பாதுகாவலராகக் காட்டிக் கொண்டார் ஒளரங்கசீப். இந்த உலாமாவிற்கு ஏழாவது, எட்டாவது நூற்றாண்டில் அரேபியா, பெர்ஸியா மேலும் ஈராக்கில் எழுதப்பட்டு, நடைமுறைப்படுத்தப்பட்ட இஸ்லாமிய விதிகளும், கோட்பாடுகளும் எந்தச் சூழ்நிலையிலும், எந்த நாட்டிலும், எந்தக் காலத்திலும் மாற்றப்படக்கூடாதவை; மீறப்படக்கூடாதவை.

இஸ்லாமியக் கோட்பாடுகளைத் தவறாமல் பின்பற்றுவதாகக் காட்டிக் கொண்ட ஒளரங்கசீப்புக்கு இந்துக்கோயில்களை இடிப்பது ஒரு முக்கிய கோட்பாடாக இருந்தது. பேராசிரியர் V.S.பட்நாகரின் கட்டுரையிலிருக்கும் சில கோயில் இடிப்புச் சம்பவங்களை இங்கே அப்படியே மொழி பெயர்த்துத் தருகிறேன்.

“1669-இல் ஆம்பர் (Amber) ராஜா ஜெய் சிங் இறந்த பின்னர் இந்துக் கோயில்களை இடிக்கச் சொல்லியும், இந்துக்களின் பள்ளிக்கூடங்களை இடிக்கச் சொல்லியும், பொது இடங்களில் இறை வழிபாட்டைத் தடை செய்தும் ஒரு ஆணை வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து மதுராவின் சிறப்பு வாய்ந்த கேசவ ராய் கோயில் இடிக்கப்பட்டு அந்த இடத்தில் ஒரு மிகப்பெரிய மசூதி ஒன்று எழுப்பப்பட்டது. மாஸிர்-இ-ஆலம்கிரி (Maasir-I-Alamgiri) என்ற நூலின் ஆசிரியரின் கூற்றுப்படி, அக்கோயிலில் இருந்த விக்ரகங்கள் ஆக்ராவிற்கு எடுத்துச் செல்லப்பட்டு, தொடர்ந்து எல்லோராலும் மிதிக்கப்பட்டுக் கொண்டே இருக்கவேண்டும் என்ற எண்ணத்தில் பேகம் சாஹிபா (Begum Sahiba) கட்டிய மசூதிப்படிகளின் கீழ் புதைக்கப்பட்டன. மதுரா நகரம் இஸ்லாமாபாத் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. எனவே இதை விளக்கும் ஓவியம் உண்மையாக நடந்த நிகழ்ச்சியை பிரதிபலிப்பதே தவிர, ஓவியரின் கற்பனையில் உதித்ததல்ல.

இந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து இந்து மதத்தினரின் மரியாதைக்குரிய கோயில்களாக விளங்கிய சோமநாதர் ஆலயம், பனாரஸின் விஸ்வநாதர் ஆலயம் ஆகியவற்றை இடிக்கச் சொல்லி ஆணை பிறப்பித்தார் ஒளரங்கசீப். இந்துக்கோயில்களை இடிப்பதில் ஒளரங்கசீப்பிற்கு இருந்த வெறி போர்க்காலங்களில் இன்னும் அதிகமாகியது. நூற்றுக்கணக்கான இந்துக்கோயில்களை இடித்து இஸ்லாமிய நன்னம்பிக்கையைப் பெறும் வாய்ப்பு, ஜோத்பூரின் மஹாராஜா ஜஸ்வந்த்சிங் இறந்த பின்னர் மார்வார் ரதோர்களை ஒழிப்பதற்காக 1679 - இல் நடந்த போர் சமயத்தில் கிடைத்தது. ஆனால் மேவார் ராஜா மஹாராணா ராஜ்சிங் தங்கள் மரபுப்படி ரதோர்களுக்கு வெளிப்படையான ஆதரவுக்கரம் நீட்டினார். ஒளரங்கசீப் மார்வார் - மேவார் படைகளுடன் போரிட நேரிட்டது. அப்போது ராணா ஏரிக்கரையில் அமைந்திருந்த கோயில்களும் உதய்பூரைச் சுற்றியிருந்த நூற்றுக்கணக்கான கோயில்களும் ஒளரங்கசீப்பின் ஆணைப்படி இடிக்கப்பட்டன. அதில் மஹாராணாவின் அரண்மனைக்கு முன்னால் கட்டப்பட்டிருந்த பிரபலமான ஜகன்னாத் ராய் கோயிலும் அடக்கம்.

அதுமட்டுமல்ல. ஒளரங்கசீப் சித்தூரின் பிரபலமான கோட்டையைப் பார்வையிடுவதற்காகச் சென்றபோது அப்பகுதியிலிருந்த 63 கோயில்களை இடிக்கச் சொல்லி ஆணையிட்டார். அதில் கும்பர்களின் காலத்தைச் சேர்ந்த சில மிகச்சிறந்த கோயில்களும் அடக்கம். (மேற்கு ராஜஸ்தானைச் சேர்ந்த) மார்வார் பகுதியிலிருந்து மட்டும் வண்டி வண்டியாக விக்ரகங்கள் எடுத்து வரப்பட்டு ஒளரங்கசீப்பின் ஆணைப்படி அரச சபைக்குக் கீழும், ஜூம்மா மசூதியின் படிகளுக்குக் கீழும் புதைக்கப்பட்டன. இத்தகைய மனிதத்தன்மையற்ற, கொடூரமான ஒளரங்கசீப்பின் நடத்தைகள் இந்துக்களை அவரிடமிருந்து வெகு தொலைவில் தள்ளி வைத்தது. இருப்பினும் அவர்கள் அந்த அரசாட்சியைப் பொறுத்துக் கொண்டுதான் வந்தார்கள்.

ஜூன் 1681 - இல் மிகச்சுருக்கமாக இரண்டு வரிகளில் எழுதப்பட்ட அரசாணையின் மூலம் ஒரிஸ்ஸாவின் மிகப்பிரபலமான பூரி ஜகன்னாதர் கோயிலை இடிக்க உத்தரவிட்டார் ஒளரங்கசீப். அதன் பின்னர் செப்டம்பர் 1682 - இல் பிரபலமான பனாரஸின் பிந்து-மாதவ் கோயிலும் ஒளரங்கசீப்பின் ஆணைப்படி இடிக்கப்பட்டது. துர்கா தாஸ் ரதோரின் வழிகாட்டுதல் மூலம் சத்ரபதி சிவாஜியின் மகன் ஷாம்பாஜியுடன் இணைந்து கொண்டு தன் ஆட்சிக்குத் தலைவலியாக இருந்த தன் மகன் அக்பரை எதிர்ப்பதற்காக தக்காணாத்திற்கு வந்தார் ஒளரங்கசீப். அப்போது (செப்டம்பர் 1, 1681) தான் வரும் வழியிலிருக்கும் அத்தனை கோயில்களையும் இடிக்குமாறு உத்தரவிட்டார் ஒளரங்கசீப். அந்தச் சுருக்கமான அரசாணையில் புதிய கோயில்கள், பழைய கோயில்கள் என்ற பேதம் எதுவும் குறிப்பிடப்படவில்லை. ஆனால் புரண்பூர் மாவட்டத்தில் மூடப்பட்டிருந்த பெரும்பாலான கோயில்களை, அப்பகுதிகளில் முஸ்லிம்களின் எண்ணிக்கை குறைவு என்பதால் இடிக்காமல் அப்படியே விட்டு விடுமாறு முடிவு செய்திருக்கிறார். தனக்கிருந்த மதவெறியின் உச்சத்தில் தன்னுடைய நட்பு நாடான ஆம்பர் (Amber) பகுதியிலிருந்த கோயில்களைக் கூட விட்டு வைக்கவில்லை ஒளரங்கசீப். ஆம்பர் பிரதேசத்தில் இடிக்கப்பட்ட கோயில்களில் ஆம்பருக்கு அருகிலிருக்கும் கோனேர் (Goner) என்ற ஊரைச் சேர்ந்த பிரபலமான ஜகதீஷ் கோயிலும் அடங்கும். தன் வாழ்நாளின் இறுதி வரை கோயில் இடிப்புக் கொள்கையை கைவிடவில்லை ஒளரங்கசீப். ஜனவரி 1, 1705 - இல் பிரபலமான பண்டரிபுரம் கோயிலை இடித்து, கோயிலைச் சுற்றி இருக்கும் பகுதிகளில் கசாப்புக்காரர்களை வைத்து பசுக்களை வெட்டச் சொல்லி உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.”

இப்படியாக இக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருக்கும் நிகழ்ச்சிகள் அத்தனையும் சமகால அதிகாரபூர்வமான குறிப்புகள் மற்றும் பெர்ஸியக் குறிப்புகளான மாஸிர்-இ-ஆலம்கிரி போன்ற FACT கண்காட்சியின் காட்சிப்பொருட்களின் குறிப்புகளே ஆகும்.

இக்கட்டுரையில் கொடுக்கப்பட்டிருக்கும் உதாரணங்கள் அனைத்தும் வட இந்தியக் கோயில்களாகவே இருப்பதால், தென்னிந்தியக்கோயில்கள் எந்தச் சேதமும் ஆகாமல் தப்பி விட்டதாக நினைக்கவேண்டாம். ஒளரங்கசீப்பின் காலத்திற்கு முன்னரே 1300-களில் அலாவுதீன் கில்ஜியின் படைத்தளபதி மாலிக் காபூர் தென்னிந்தியக் கோயில்கள் அனைத்தையும் சூறையாடியிருக்கிறார். பிரபலமான ஸ்ரீரங்கம் கோயிலின் நகைகளைச் சூறையாடிக் கொண்டு, தங்கத்திலான உற்சவர் சிலையையும் தன்னுடன் எடுத்துச் சென்று விட்டார் மாலிக் காபூர். அந்தத் தங்க விக்ரகத்தின் அழகில் மயங்கிய அவருடைய மகள் அந்த விக்ரகத்தின் மேல் காதல் வயப்பட்டு இரவு பகல் பாராமல் தன்னுடனே வைத்துச் சீராட்ட பயந்துபோன மாலிக் காபூர், அதை ஸ்ரீரங்கம் கோயிலுக்கே திருப்பித் தந்துவிட்டார். வேற்று மதக்கடவுள் விக்ரகத்தின் மேல் காதல் வயப்பட்டு, அதற்காக உயிரையே விட்ட ஒரு பெண்மணி தோன்றிய அதே மொகலாயப் பேரரசில்தான், விக்ரகங்களை மசூதிப் படிகளாகப் பயன்படுத்திய ஒளரங்கசீப்பும் தோன்றியிருக்கிறார். இந்துக் கோயில்களுக்கு நன்கொடைகள் கொடுத்துப் பராமரித்த தாராவின் தம்பிதான் அதே கோயில்களை இடித்துத் தள்ளியிருக்கிறார். அங்கே மாடுகளை வெட்டச் சொல்லியிருக்கிறார்.
கோயில் என்பது ஒரு மத அடையாளம் மட்டுமல்ல. அது ஒரு வரலாற்றுப் பெட்டகம். எளிதாக அழிந்து விடக்கூடியப் பல்வேறு கட்டுமானங்களைத் தவிர்த்து, மத அடிப்படையில் நீடித்து நிற்கக்கூடிய கோயில்களில்தான் ஏராளமான கல்வெட்டுகள் எழுதிவைக்கப்பட்டிருக்கின்றன.

அக்கல்வெட்டுகளும், சிற்ப வேலைப்பாடுகளும், சுவரோவியங்களும், கட்டட நுணுக்கங்களும் ஒரு சமுதாயத்தின் வரலாற்றையும், அரசியல், கலை, பண்பாடு ஆகியவற்றில் அந்த சமுதாயம் அடைந்திருக்கும் பரிணாம வளர்ச்சியைச் சுட்டும் காரணிகள். சமீபத்தில் தாராசுரம் கோயிலுக்கு நான் சென்றிருந்த போது, அக்கோயிலின் முதல் தளத்தின் சீரமைப்பு வேலை நடந்து கொண்டிருந்தது. அச்சீரமைப்பு வேலையை அருகிலிருந்து எனக்குப் பார்க்கக் கிடைத்தது. அக்கோயிலைக் கட்டப் பயன்படுத்தப்பட்ட ஒரு செங்கல் இப்போது நாம் உபயோகப்படுத்தும் செங்கலைப் போல நான்கு மடங்கு பெரியது. அப்படியென்றால் அந்தக்காலத்தின் சூளைகள் எவ்வளவு பெரியவையாக இருந்திருக்கும். செங்கல்களை எத்தனை நாட்கள் சூடுபடுத்தியிருப்பார்கள் - என்பதைப்பற்றியெல்லாம் நானும் கோயில் அதிகாரியும் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தோம். இது நான் கூறிய 'சமுதாயப் பார்வை' என்பதற்கான ஒரு மிகச்சிறிய, சாதாரண உதாரணம் அவ்வளவே!

Figure 1 Tharasuram Temple

ஏதோ கடந்த நூற்றாண்டுகளில்தான் என்றில்லை, மதவெறி தலைக்கேறி ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த புத்தர் சிலைகளை தாலிபான் தீவிரவாதிகள் இடித்துத் தள்ளிய கொடுமை சில வருடங்களுக்கு முன்பு நடந்ததுதானே! பேரா.V.S.பட்நாகர் கட்டுரையின் இறுதிப் பத்தி ஒளரங்கசீப்புக்கு மட்டுமல்ல, இன்றைக்கும் சில நாடுகளுக்கும், சில மத அமைப்புகளுக்கும் பொருந்தும். “ஒரு அரசாங்கத்தின் முக்கியமான தூண்கள், பொதுமக்களின் அன்பும், ஆதரவுமேயன்றி, ஏழாம், எட்டாம் நூற்றாண்டில் ஏதோ ஒரு வேற்று நாட்டில் எழுதப்பட்ட மதக்கோட்பாடுகள் இல்லை என்ற விஷயத்தை இறுதிவரை ஒளரங்கசீப் புரிந்துகொள்ளவேயில்லை. அரை நூற்றாண்டுக்கும் மேலாகக் கொடுங்கோல் ஆட்சி புரிந்த ஒளரங்கசீப்பின் சாவு இந்திய வரலாற்றின் ஒரு இதிகாசத்தை முடிவுக்குக் கொண்டு வந்தது. அவர் ஒரு சிதைந்து கொண்டிருந்த பேரரசை, ஊழல் மிகுந்த, திறமையில்லாத நிர்வாகத்தை, மனம் தளர்ந்து போயிருந்த ராணுவத்தை, மக்களிடமிருந்து வெகுதூரம் விலகிவிட்ட ஒரு அரசாங்கத்தைத் தனக்குப் பின்னே விட்டுச் சென்றிருந்தார்.”

****

மத உணர்வுகளை முன்னிறுத்தி வரலாற்றுச் சின்னங்களை அழித்தது ஒருபுறம் இருக்க, அரசியல் கொள்கை ரீதியாக வரலாற்றுச் சின்னங்களை அழித்தக் கொடுமையும் இருக்கிறது.

1966 முதல் 69 வரை சீனாவில் அதன் கம்யூனிஸ அதிபர் மா சே-துங் (Mao Tse-tung) நடத்திய “கலாச்சாரப் புரட்சி” (Cultural Revolution) - யில்தான் அப்படிப்பட்ட அழிப்புகள் நடந்தேறின. ஒளரங்கசீப்புக்குத் தன் மதத்தலைவர்களைச் சரிகட்டித் தன்னை ஒரு அரசனாக அழுத்தமாக நிலைநாட்ட இந்துமத எதிர்ப்பு எப்படி ஒரு உடனடித்தீர்வாக இருந்ததோ, அதே போல் மாவோவுக்குத் தன் கட்சிக்குள்ளே சரிந்து வந்த செல்வாக்கைத் தூக்கி நிறுத்த உதவியது இந்த கலாச்சாரப் புரட்சி.

இப்புரட்சியில் மாணவர்கள் தூண்டிவிடப்பட்டு எண்ணற்ற ஆசிரியர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். அப்புரட்சியில் பலியானவர்களின் அதிகாரபூர்வப் பட்டியல் இன்றுவரை வெளியிடப்படவில்லை. யூகின் வாங் (Youqin Wang) என்ற சீனர் இப்புரட்சியை நேரில் பார்த்தவர்களைப் பேட்டி கண்டு இறந்தவர்கள் பட்டியல் தயாரித்து வலைத்தளம் அமைத்திருக்கிறார். (அந்த வலைத்தளம் சீனாவில் தடை செய்யப்பட்டிருக்கிறது.) இப்புரட்சியில் 'நான்கு பழமைகள்' - Four olds என்று வகைப்படுத்தப்பட்ட “பழைய கருத்துக்கள், பழைய கலாச்சாரம், பழைய வழிமுறைகள், பழைய பழக்கங்கள்” ("Old ideas, old culture, old customs, old habits”) ஆகியவற்றை அழிப்பதை ஒரு பேரியக்கம் போல் நடத்தினார்கள்.

மாவோவின் “சிகப்புப் படை” ஷாங்காய், டியெந்த்ஸின் (Tientsin), சைநிங் (Sining), லாசா (Lhasa) என்று சீனாவின் அத்தனை பகுதிகளிலும் இருந்த பல்வேறு அரண்மனைகள், ஆலயங்கள், கலையரங்குகள், அருங்காட்சியகங்கள், நூலகங்கள், இன்னபிற பழமையான கட்டடங்கள் அத்தனையையும் இடித்துத் தள்ளினார்கள். இந்த இடங்களிலெல்லாம் இருந்த கலைப்பொருட்களையும் விட்டுவைக்காமல் அடித்து நொறுக்கினார்கள். அதில் சில கட்டடங்களும், கலைப்பொருட்களும் இரண்டாயிரம் வருடப் பழமை வாய்ந்தவை. கடைகள், கல்வி நிறுவனங்கள், தெருக்கள் ஆகியவற்றின் புராதனப் பெயர்கள் நீக்கப்பட்டு, மாவோ தொடர்பான பெயர்களோ அல்லது கம்யூனிஸம் தொடர்பான பெயர்களோ சூட்டப்பட்டன.

ஒரு புறம் - எந்தச் சூழ்நிலையிலும் மீறப்படக்கூடாத ஏழாம் நூற்றாண்டு விதிகளைக் கட்டிக்கொண்டு நிற்கும் பழமைவாதம், இன்னொரு புறம் - பழமை என்று எந்த விஷய்த்தையும் அழித்துத்தள்ளிய பைத்தியக்காரத்தனமான புதுமைவாதம். ஆனால் இரண்டு 'வாதங்களும்' வரலாற்றுச் சின்னங்களை மண்ணோடு மண்ணாக்கின.

இப்படிப் 'புதுமைகள்' செய்த கம்யூனிஸ அரசாங்கம் கலைப்பொருட்களின் கண்காட்சிக்கெல்லாம் அனுமதி கொடுத்ததே கிடையாது. அதிலும் சீனாவின் கலைப்பொருட்களும், கலாச்சார விஷயங்களும் சீனாவைத் தாண்டிப் பிற நாட்டு மக்கள் பார்த்ததே கிடையாது. வரலாற்று ஆர்வலர்களான ஜெஸ்ஸிகா ராஸன் (Jessica Rawson), ஈவிலின் ராஸ்கி (Evelyin Rawski) போன்றோர் சீன கலை, வரலாறு குறித்து ஆய்வு செய்வதற்கு சீன நாட்டுக்குள் நுழையவே அனுமதி மறுக்கப்பட்டது. அவர்கள் சீனாவைப்பற்றித் தெரிந்துகொள்ள புத்தகங்களையும், புலம் பெயர்ந்த சீனர்களையுமே சார்ந்திருக்க வேண்டியிருந்தது. இத்தனை ஏன், சீன மக்களே பெரும்பாலான சீனக் கலைப்பொருட்களைப் பார்த்தது கிடையாது. ஆனால் இப்போது சீனப் பொருளாதாரம் உலகமயமாக்கலைச் சார்ந்து நிற்பதால் தன் கலாச்சாரப் பழம்பெருமைகளைக் காட்டிப் பிற நாடுகளைக் கவரும் கட்டாயத்தில் இருக்கிறது சீனா.

நவம்பர் 2005 - இல் லண்டனில் “மூன்று பேரரசர்கள்” (Three Emperors) என்ற பெயரில் சீனக் கலைப்பொருட்களின் கண்காட்சி நடைபெற்றது. அதில் சீனாவை ஒரு வலுவான நாடாகக் கட்டமைத்த மூன்று முக்கிய க்விங்(Qing) பேரரசர்கள் ஆட்சிக்காலத்திய (1622 - 1795) கலைப்பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. இந்த க்விங் அரச பரம்பரை 19-ஆம் நூற்றாண்டின் இறுதிவரை சீனாவை ஆட்சி செய்து வந்தது.

க்விங் பேரரசர்கள் காலத்தில் சீனாவில் கலைநுட்பங்கள், கைத்தொழில்கள் சிறப்பாக வளர்ந்தன. அரசர் அணிந்திருந்த உடைகள், கண்கவர் பீங்கான் ஜாடிகள், மரகதக்கல் சிற்பங்கள் ஆகியவை “மூன்று பேரரசர்கள்” கண்காட்சியில் மக்களின் சிறப்புக் கவனத்தைப் பெற்றன. இலக்கியம் என்று வந்தபோது க்விங் மன்னர்கள் கொஞ்சம் எச்சரிக்கையாகவே இருந்தார்கள். கவிதைகள் 'சரியான' விஷயத்தை மட்டுமே சொல்ல வேண்டும். அரசுக்கெதிராக ஏதேனும் சொல்லப்பட்டிருக்கிறது, என்று சந்தேகம் வந்தால்கூட போதும், அந்தக் கவிஞர் மட்டுமல்ல, அவர் அப்பா, தாத்தா, சகோதரர்கள், பேரன்கள், கொள்ளுப்பேரன்கள் என அவர் பரம்பரையிலிருக்கும் அத்தனை ஆண் மக்களும் கொல்லப்படுவார்கள். ஒருமுறை பேரரசர் யாங்செங் (Yongzheng) க்யூ டாஜுன் (Qu Dajun) என்ற கவிஞர் எழுதிய கவிதை தனக்குப் பிடிக்கவில்லை என்று அவரைக் கொல்ல உத்தரவிட்டார். ஆனால் ஒரு பிரச்சினை. அந்தக் கவிஞர் ஏற்கனவே இறந்து விட்டிருந்தார். ஆனாலும் அந்தக் கவிஞரின் உடல் தோண்டியெடுக்கப்பட்டு அந்த உடலுக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது. அந்தக் கவிஞரின் படைப்புகள் தடை செய்யப்பட்டன.

தனக்குப் பிடிக்காத கவிஞரின் படைப்புகளைத் தடை செய்த க்விங் அரசர்களின் வெறுப்புணர்வுகளுக்கும், கலாச்சாரப் புரட்சியில் பலியானவர்கள் பட்டியலைத் தடை செய்யும் கம்யூனிஸ அரசாங்கத்தின் உண்மை மீதான வெறுப்புணர்வுகளுக்கும் பெரிய வித்தியாசம் இருப்பதாகத் தெரியவில்லை.
கலாச்சாரப் புரட்சியில் அத்தனை பழம்பொருட்களும் போகி கொளுத்தப்பட்ட பின்னும் கண்காட்சி நடத்துமளவுக்கு வரலாற்றுப் பொருட்கள் அழியாமல் காப்பாற்றப்பட்டதே ஒரு தனிக்கதை. இப்பொருட்கள் பீஜிங்கிலுள்ள (Beijing) “தடை செய்யப்பட்ட நகரம்” (Forbidden City) என்றழைக்கப்படும் அரண்மனை அருங்காட்சியகத்தைச் சேர்ந்தவை. புரட்சியின்போது சிவப்புப் படை இந்த அருங்காட்சியகத்தை அழிப்பதற்காக நுழைந்தது. பல லட்சக்கணக்கான கலைப் பொருட்களைக் கொண்ட அருங்காட்சியகத்தைக் காப்பாற்ற நினைத்த மாவோவின் தளபதி சூ என்-லாய் (Chi En-Lai) அருங்காட்சியகத்தின் சுவர்களில் பெரிய பெரிய மாவோவின் போஸ்டர்களை ஒட்டி வைத்தார். மாவோவின் முகத்தைக் கிழிக்க எந்த வீரனுக்கு தைரியம் வரும்? அருங்காட்சியகமும், அதன் கலைப்பொருட்களும் அழியாமல் தப்பித்தன!

****

இப்போதெல்லாம் கலைப்பொருட்களை கம்யூனிச அரசாங்கமே ஆனாலும் சரி, ஜாக்கிரதையாகக் கீறல் கூட விழாமல் பொத்திப் பாதுகாக்கிறார்கள். அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் மில்லியன் கணக்கில் பணம் கொடுத்து இப்பொருட்களை வாங்கிக்கொள்ள செல்வந்தர்கள் இருக்கிறார்கள். இப்படி கலைப்பொருட்கள் வாங்குவதற்குக் கலையார்வம் ஒரு காரணமாக இருந்தாலும் தங்கள் அந்தஸ்தைக் காட்டிக்கொள்ளும் காரணத்துக்காகவும் இப்பொருட்களை அதிக விலை கொடுத்து வாங்கிக் குவிக்கிறார்கள். எத்தனை ஐம்பொன் சிலைகள், விரித்த சடையுடன் ஒற்றைக்காலைத் தூக்கி நடனம் புரியும் நடராஜர் சிலைகள் தமிழகக் கோயில்களிலிருந்து காணாமல் போயிருக்கும்! தமிழ்நாடு என்றில்லை, ஐரோப்பிய நாடுகளிலிருந்து கூட தேவாலயங்களின் கலைப்பொருட்கள் திருடப்பட்டு விற்கப்படுகின்றன. நீண்டநாட்களாகப் ப்ரான்ஸில் கலைப்பொருட்களைக் கொள்ளையடித்த ஒரு திருடன் கைது செய்யப்பட்டான். விசாரித்ததில் அவன் 174 (!) தேவாலயங்களில் கொள்ளையடித்திருப்பதாகவும் அவனுடைய கொள்ளுத்தாத்தா நெப்போலியன் படைத்தளபதியாக இருந்திருக்கிறார் என்றும் தெரியவந்தது. வரலாற்றுச் சின்னங்களை எதுவும் செய்து விடாமல் பார்த்துக் கொள்ளுமாறு தன் வீரர்களைக் கேட்டுக்கொண்ட நெப்போலியனுக்குத் தெரிந்திருந்தால் வருத்தப்பட்டிருப்பார்.

****

கிராமப் புறங்களில் 'சுமைதாங்கிக்கல்' என்ற ஒரு விஷயத்தைப் பார்த்திருப்பீர்கள். கர்ப்பிணியாக இறந்து போகும் பெண்ணின் நினைவாக அதை நட்டு வைப்பார்கள். அந்த வழியாகச் செல்லும் வழிப்போக்கர்கள் தங்கள் சுமைகளை அந்த சுமைதாங்கிக்கல்லில் இறக்கி வைத்து இளைப்பாறிவிட்டுப் போவார்கள். அப்படி இளைப்பாறுபவர்கள் வாழ்த்துவதால் இறந்து போன அந்தப்பெண்ணின் ஆன்மா சாந்தியடையும் என்பது அதன் தாத்பர்யம். இந்தக் கட்டுரையின் ஆரம்பத்தில் நீங்கள் படித்த அந்த இரண்டு வரிகள் என் கிராமத்துக்குப் பக்கத்துக் கிராமத்திலிருந்த ஒரு சுமைதாங்கிக்கல்லில் எழுதப்பட்டிருந்த வரிகள்தான். சமீபத்தில் ஊருக்குச் சென்றபோது அந்த சுமைதாங்கிக்கல்லைக் காணவில்லை. அந்த கிராமத்தில் கலாச்சாரப் புரட்சியின் புதுமைவாதமோ, மதப் பழமைவாதமோ கிடையாது. சமூகப் பண்பாடுகளின் ஒரு பிரதிபலிப்பான இதுபோன்ற சுமைதாங்கிக்கற்களுக்கு வரும் காலங்களில் கிடைக்கப்போகும் வரலாற்று மதிப்பைத் தெரிந்து கொண்டு யாரேனும் எடுத்துச் சென்று விட்டார்களோ என்னவோ?

-sethupathi.arunachalam@gmail.com

பின்குறிப்புகள்:

1) 'தொடரும் தீவிரவாதத்திற்கு எதிரான அமைப்பு' - Foundation Against Continuing Terrorism - FACT என்னும் அமைப்பு 16-பிப்ரவரியிலிருந்து 20 பிப்ரவரி 2007 வரை டில்லியில் நடத்தும் 'மொகலாயக் குறிப்புகளின் படி - ஒளரங்கசீப்' (Aurangzeb - as he was according to Mughal Records) கண்காட்சி பற்றிய மேல் விவரங்கள்:

Place: Habitat Centre. Palm Court
Date:16th to 20th February 2007
Time: 9 Am to 8 Pm
For any information, contact:
Franவூois Gautier
41 Jorbagh, New Delhi 110003
Tel: 24649635 / 9811118828

2) பேரா.V.S.பட்நாகர் கட்டுரையின் மூலம்:
http://www.agni.nl/cms/download.php?id=89366,425,1

3) யூகின் வாங் (Youqin Wang) ன் - 'கலாச்சாரப் புரட்சியில்' இறந்தவர்களைக் குறித்த இணையதளம்: http://www.chinese-memorial.org/