Thursday 9 April, 2009

விஸ்வாமித்ராவின் பழைய திண்ணைக் கட்டுரை

Friday October 6, 2006
தீவீரவாதிகளுக்குப் பால் வார்க்கும் தமிழ் எழுத்தாளர்கள்
விஸ்வாமித்திரா

பாரத தேசத்தில் ஓட்டுப் பொறுக்குவதற்காக எதையும் விற்கும், காசுக்காக நாட்டையே விலை பேசும் அரசியல்வாதிகளை நாம் அன்றாடம் சந்திக்கிறோம். அது போன்ற கேடு கெட்ட தேசத் துரோக அரசியல்வாதிகள் நமக்குப் புதிததல்ல. காஷ்மீரத்து குலாம் நபி ஆசாத்தில் இருந்து கேரள அச்சுதானந்தன் வரை அரசியல் பிழைப்பிற்காக தீவிரவாதிகளுக்குத் துணை போகும் கேடு கெட்ட மானம் கெட்ட அரசியல்வாதிகள் நமக்குப் புதிதல்ல. நாட்டின் பாராளுமன்றத்தைத்தையே தாக்கி 11 இந்திய வீரர்களைக் கொன்று குவித்த ஒரு கொடிய மிருகத்துக்கு வக்க்காலத்து வாங்கிக் கொண்டிருக்கிறது தேசத் துரோக காங்கிரஸ¤ம், கம்னியுஸ்டுகளும். சீனப் போரில் சீனாவை ஆதரித்த கம்னியுஸ்டுகளின் இன்றைய முதல்வர் அச்சுதானந்தன் 100 பேரைக் கொன்ற கொடிய மிருகத்துக்கு விடுதலை கோரி சென்னைக்கு காவடி எடுத்த அக்கிரமம் சமீபத்தில் நடந்தேறியது. ஒரு விஸ்கி பாட்டிலுக்காகவும், சிற்றினபங்களுக்காகவும் தேசத்தின் பாதுகாப்பு ரகசியங்களையே விலை பேசிய அதிகாரிகளை நாம் அறிவோம். சுவிஸ் வங்கிகளிலும், செயிண்ட் கிட்ஸ் தீவுகளிலும் குவியப் போகும் பணத்துக்காக சவப்பெட்டியில் கூட ஊழல் செய்த அதிகாரிகள் நமக்குப் புதிதல்ல. ஆனால் இந்தக் கேடுகெட்ட, நாசகார, சதிகார, காசுக்காக தன் வீட்டுப் பெண்களைக் கூட விற்கத் தயங்காத அரக்கக் கும்பலுடன் இன்று இன்னொரு நாசகாரக் கும்பலும் சேர்ந்திருக்கிறது, அந்தக் கும்பல் வேறு எதுவும் அல்ல, தங்கள் எழுத்துக்களால் மக்களை உய்விக்க அவதாரம் எடுத்த நமது மாண்புமிகு எழுத்தாளர்கள்தாம்.

அருந்ததி ராய் போன்ற தேசத் துரோக எழுத்தாளர்கள் வடக்கில் ஏற்கனவே பிரபலம்தான். பாக்கிஸ்தானில் சென்று கூசாமல் இந்திய எதிர்ப்புப் பிரச்சாரம் செய்வதும், இந்திய நலன்களுக்கு எதிராகவே எழுதுவதும் பேசுவதுமே தனது தொழிலாகக் கொண்ட அருந்ததி ராய் போன்ற பிறவிகளுக்கு இப்பொழுது தென்னாட்டில் இருந்து ஒரு கும்பல் சேர்ந்து கும்மியடிக்கக் கிளம்பியிருக்கிறது.

தமிழ் நாட்டை தங்கள் எழுத்துக்கள் மூலமாக உய்விக்க அவதாரம் எடுத்த எழுத்தாளர்கள் பலர் சேர்ந்து ஒரு போராட்டம் நடத்துகிறார்கள். கையெழுத்து வேட்டை நடத்துகிறார்கள், அந்த தார்மீக மனித உரிமைப் போராட்டத்தில் குதித்து தங்களது கோரிக்கைகளை வைத்திருக்கிறார்கள். கோரிக்கை என்ன தெரியுமா ?

தமிழ் நாட்டில் வறுமையில் வாடும் எழுத்தாளர்களின் குடும்பங்களுக்கு உதவி கேட்டோ,

தமிழ் நாட்டு வியாபார நிறுவனங்களில் கொத்தடிமையாக வேலை செய்யும் இளம் சிறார்களின் விடுதலை கோரியோ

தமிழ் நாட்டில் இருந்து கேரளாவுக்கும் கர்நாடகாவுக்கும், பம்பாய்க்கும் கடத்தப் பட்டு விபச்சாரத்தில் சீரழியும் இளம் பெண்களின் நல்வாழ்வு குறித்தோ

தமிழ் நாட்டுச் சிறைகளில் நீதி கிடைக்காமல் போராடும் அப்பாவி ஏழைகளுக்கு விடுதலை கோரியோ

தமிழ் நாட்டில் தலை விரித்தாடும் லஞ்ச லாவண்யங்களுக்கு எதிரான கோரிக்கையோ

தமிழ் நாட்டின் தலைமைக் குடும்பத்தால் நடத்தப்படும் தொலைக்காட்சி மா·பியாக் கும்பலை எதிர்த்தோ

தமிழ் நாட்டில் மக்களின் வரிப்பணத்தைக் கொள்ளையடித்து தங்கள் குடும்ப டி வி கொழிக்க அளிக்கப் படும் இலவச டி வி கொடுமைகளை எதிர்த்தோ
தமிழ் நாட்டு அரசியல்வியாதிகளால் கண்டு கொள்ளாமல் மக்களைக் கொல்லும் சிக்குன் குனியா நோய் குறித்தோ

தமிழ்நாட்டின் அன்றாடம் களவாடப் பட்டு அழிக்கப் படும் இயற்கை வனக்களைக் குறித்தோ, மண் கொள்ளை குறித்தோ, மரக் கொள்ளை குறித்தோ, இவை போக தமிழ் நாட்டு மக்கள அன்றாடம் அலைக்கழிக்கும் ஆயிரக்கணக்கான பிரச்சினைகளைக் குறித்தோ அல்ல இந்த கேடுகெட்ட எழுத்தாளர்களின் போராட்டம். இந்தக் கேவலமான பிறவிகள் போராடுவதோ ஒரு தீவிரவாதியின் விடுதலைக்காக. ஆம், அப்துல் நசார் மதானியென்ற மனித உருவில் திரிவும் ஒரு மிருகத்துக்கு ஜாமீன் விடுதலை கேட்டு. யார் இந்த மதானி ?

1998 கேயம்புத்தூரில் குண்டு வைத்து 60 மேற்பட்ட ஏழை இந்துக்களை, நடைபாதைக் கடைக்காரர்களை, ஜவுளிக் கடையில் வேலை பார்க்கும் அப்பாவி ஏழை பெண்களை கோடூரமாகக் கொன்று தீர்த்தது ஒரு அரக்கக் கூட்டம். அந்த அரக்கக் கூட்டத்தை வேறு வழியில்லாததால் காவல் துறை கைது செய்து இன்று அந்த மிருகங்களுக்கு சிறைச்சாலைகளில் ராஜ உபசாரம் அளித்து வருகிறது தமிழ் நாடு அரசு. அந்தக் கொடூரமானக் கோரக் கொலையைத் திட்ட மிட்டு நடத்தியவன் அப்துல் நசார் மதானி என்ற தீவிர மத வெறியன். கேரளாவில் தனது ரவுடித்தனத்தாலும், மிரட்டல்களாலும் , வன்முறையாலும், பண பலத்தாலும், பாக்கிஸ்தான் உதவியினாலும் மதத்தீவீரவாதத்தைப் பரப்பி வந்தக் கயவன் மதானி. கோவை குண்டு வெடிப்பை திட்டமிட்டு அதற்கான வெடி பொருட்களைத் தருவித்துக் கொடுத்து கோடூரமான படுகொலைகளின் காரணக்ர்த்தா. தமிழகப் போலீசாரால் பல்வேறு கொடூரமான குற்றங்களுக்காக கோர்ட்டில் குற்றம் சாட்டப் பட்டவன். இவனது விடுதலை இந்தியாவின் அமைதியையும், மத நல்லிணக்கத்தையும் குலைத்து, ஆயிரக்கணக்கான இந்துக்களின் உயிர்களுக்கு ஆபத்து ஏற்படுத்தக் கூடியது. அசுர குணங்களின் மொத்த உருவம்.

இது போன்ற ஒரு கொடிய விலங்குக்கு விடுதலை கேட்கிறார்கள் தமிழகத்தின் மேன்மை தங்கிய எழுத்தாள பெருமக்கள் சிலர். காறி உமிழ வேண்டாம் இந்தக் கயவர்களின் மூஞ்சியில் ? ஒரு தீவீரவாதிக்குக் வக்காலத்து வாங்கும் இந்தப் பிறவிகள் எல்லாம் எழுத்தாளர்கள்!! படித்தவன் சூது செய்தால் அய்யோ என்று போவான் என்று கூறினான் பாரதி. இங்கு ஒன்றல்ல இரண்டல்ல 42 படித்த எழுத்தாளர்கள், கவிஞர்கள் சூது செய்துள்ளார்கள். எதற்காக இந்த சூது என்பதை ஊகிப்பது ஒன்று சிரமமான காரியம் அல்ல. அரசியல்வாதிகள் ஓட்டுக்காக தீவிரவாதிகளை ஆதரிக்கின்றனர் என்றால் இந்த வெட்கம் கெட்ட ஜென்மங்கள் எதுக்காக ஆதரிக்கிறார்கள் என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
இந்த எழுத்தாளர்கள் என்றைக்காவது கோவை குண்டு வெடிப்பில் தன் குடும்பத்து ஒரே சம்பாதிக்கும் நபரை இழந்து அநாதை ஆன குடும்பத்தைப் பற்றி எண்ணியிருப்பார்களா, எழுதி இருப்பார்களா ?

கோவை குண்டு வெடிப்பில் சுக்கல் சுக்கலாகச் சிதறிய ஏழை நடைபாதை வியாபாரியையும் அவனோடு சிதறிய அவனது குடும்பத்தையும் பற்றி ஒரு வரியாவது எங்காவது ஒரு கவிதை ஒரு வரிக் கதையையாவது இதில் ஒருவராவது எழுதியிருப்பார்களா ?

கோவை குண்டு வெடிப்பினால் தன் தந்தையை, தாயை இழந்து அநாதையான குழ்ந்தைகளைப் பற்றி ஒரு நாளாவது இந்த கேடு கெட்ட ஜென்மங்கள் நினைத்தாவது பார்த்திருப்பார்களா ?

ஒவ்வொரு சிறைச்சாலையிலும் ஆயிரக்கணக்கான அப்பாவிகளும் ஏழைகளும் உரிய மருத்துவ வசதி இன்றி செத்துக் கொண்டிருப்பார்களே அவர்களுக்கெல்லாம் ஜாமீன் வேண்டி இந்த எழுத்தாளப் பெருமக்கள் என்றைக்காவது கையெழுத்து வேட்டை நடத்தி இருபார்களா?

அதென்ன மதானிக்கு மட்டும் இவ்வளவு அக்கறை, ஒரு வேளை குறைந்த பட்சம் நூறு பேர்களையாவது கொன்ற மத வெறி பிடித்த மிருகங்களுக்கு மட்டும்தான் வக்காலத்து வாங்குவார்களா இந்த அறிவு ஜீவிகள் ? மதானி பெரிய தலைவராம், மதிப்புக்குரியவராம் வெட்கம் இன்றி சொல்லுகிறார்கள் இந்த மனித குல விரோதிகள். இவர்களது கோரமான நிஜ முகம் இன்று வெளீப்பட்டு விட்டது, இவர்கள் யார் பக்கம் என்பது இன்று தெளிவாகி விட்டது. மக்களை குண்டு வைத்துக் கொல்லும் கொடிய தீவீரவாதிகளை விட ஆபத்தானவர்கள் இந்த அறிவுத் தீவீரவாதிகள். மதானியை விடக் கொடுமையான தண்டனை அடைய வேண்டியவர்கள் மக்களுக்கு அன்பையும், மனித நேயத்தையும் போதிக்க வேண்டிய இந்த எழுத்தாளர்களும் கவிஞர்களும். தீவிரவாதிக்கு வக்காலத்து வாங்கும் இந்தப் பிறவிகளை எழுத்தாளர்கள் என்றும் கவிஞர்கள் என்று அழைப்பது உண்மையான எழுத்தாளர்களுக்கும் கவிஞர்களுக்கும் நாம் செய்யும் துரோகமாகும்.

மனித உரிமை என்பது தீவீரவாதிகளுக்கு மட்டும் கிடையவே கிடையாது. அவர்கள் மனிதர்கள் அல்லர், அரக்கர்கள், மிருகங்கள் அந்த கொடூரமான மிருகங்களுக்கு வக்காலத்து வாங்கக் கிளம்பியிருக்கிறது தமிழ் நாட்டில் இருந்து எழுத்தாளர் என்ற போர்வையைப் போர்த்திக் கொண்ட ஓநாய்க் கூட்டம் ஒன்று.

தேச நலனில் அக்கறை கொண்ட, தீவீரவாதிகளை அழிப்பதில் அக்கறை கொண்ட, இந்த தேசத்தின் பாதுகாப்பிலும் இறையாண்மையிலும் அக்கறை கொண்ட ஒவ்வொரு இந்தியனும் எதிர்க்க வேண்டும் இந்தக் கேடு கெட்டக் கும்பலை. இந்தக் கயவர்களை நாம் அடையாளம் கொள்வதுடன், தீவீரவாதிக்கு ஆதரவு காட்டும் இந்தக் சதிகாரக் கும்பல் அனைவரையும இந்தியாவில் நியாயமான ஒரு அரசாங்கம் நடக்குமானல் குண்டர் சட்டத்திலோ, போட்டா சட்டத்திலோ தேசத்துரோக சட்டத்திலோ உடனடியாக உள்ளே தள்ளி தக்க விசாரணை நடத்தி தயவு தாட்சண்யமின்றி தூக்கில் போட வேண்டும். ஆனால் கேடு கெட்ட இந்த பாரத தேசத்தில் மக்களைக் காக்க வேண்டிய அரசாங்கமே பாராளுமன்றத் தீவீரவாதி அப்சலுக்கு மன்னிப்பு வேண்டி மண்டி போட்டுக் கெஞ்சும் பொழுது, மக்களின் அறிவுக் கண்களைத் திறக்க வைக்க வேண்டிய எழுத்தாளர்கள் அதே தீவீரவாதிகளின் விடுதலைக்காக போராடுவதில் அதிசயம் ஒன்றும் இல்லைதான்.

மதானியை விடுவிக்கக் கோரி எழுத்தாளர் என்ற போர்வையில் திரியும் குள்ள நரிக் கும்பல் ஒன்றின் கோரிக்கைகளையும் அந்தக் கோரிக்கையை வலியுறுத்திக் கையெழுத்திட்ட தேசத் துரோக, மக்கள் விரோத, தீவீரவாதக் கைக் கூலிகளையும் இங்கு இட்டுள்ளேன். நண்பர்களே நாம் கண்டு கொள்ளுங்கள் இந்தக் கயவர்களை, காறி உமிழுங்கள் இந்த தேசத்துரோகிகளை. மனித குலத்துக்கே எதிரிகளாக எழுத்தாளர்கள் என்ற போர்வையில் உலவும் ஓநாய் கும்பலின், கயவர்களின் அடையாளாங்கள் இதோ:

இந்த எழுத்துத் தீவீரவாதிகளின் கோரிக்கைகளையும் அதுக்கு ஆதரவாகப் கையெழுத்திட்டவர்களின் பட்டியலையும் கீழே படியுங்கள்

*****************************************************************************************************
தமிழக சிறையிலிருக்கும் கேரளாவின் மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் அப்துல் நாசர் மதானியை உடனடியாகப் பிணையில் விடுதலை செய்ய, தமிழக அரசு ஆவன செய்ய வேண்டுமென சமீபத்தில் வெளியிடப்பட்ட எழுத்தாளர்கள் - மனித உரிமை ஆர்வலர்கள் கூட்டறிக்கை கேட்டுக் கொண்டுள்ளது.

கோவை குண்டுவெடிப்பு வழக்கில், கடந்த 1998 மே மாதம் கைது செய்யப்பட்டு, எட்டு ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டிருக்கும், மதானியின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலை உள்ளது. கடுமையான நீரிழிவு நோய், மூட்டு வலி, முதுகுத் தண்டு பாதிப்பு எனப் பல்வேறு வகையில் அவரது உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டபோது 108 கிலோவாக இருந்த அவரது உடல் எடை, தற்போது 54 கிலோவாக குறைந்துள்ளது. அவரது வலது காலுக்கு பொருத்தப்பட்டுள்ள செயற்கை கால் மாற்ற வேண்டி உள்ளதால், அவர் எழுந்து நடக்கக் கூட முடியாத நிலையில் உள்ளார்.

மதானிக்கு சிகிச்சை அளிக்க சிறையில் போதிய வசதிகள் இல்லை. தற்போது சிகிச்சை அளித்து வரும் கோட்டக்கல் ஆயுர்வேத சிகிச்சை மையமும் கூட, சிறையில் சிகிச்சை அளிக்கப் போதிய வசதியில்லை என சான்று அளித்துள்ளது. இந்நிலையில், அவருக்கு நவீன வசதிகள் கொண்ட சிறைக்கு வெளியே உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட வேண்டியது மிகவும் அவசியமாகும்.

மக்கள் ஜனநாயக கட்சி கேரளாவில் மக்கள் செல்வாக்குடன் செயல்படும், தேர்தலில் பங்கேற்கும் கட்சியாகும். இது, வன்முறையை நோக்கமாகக் கொண்ட கட்சி அல்ல. மதானி இதுநாள் வரையிலும் எந்த வழக்கிலும் தண்டனை அடைந்தவர் அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.

உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யர் அவர்கள், கடந்த ஆட்சியின் போது மதானியை பிணையில் விடுதலை செய்ய தமிழக அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். அண்மையில்கூட கேரள முதல்வர் அச்சுதானந்தன், தமிழக முதல்வரை நேரில் சந்தித்து மதானியை விடுதலை செய்யக் கோரியுள்ளார். கேரளாவிலுள்ள அரசியல் கட்சியில் எதுவும் மதானிக்கு பிணை வழங்க எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
எனவே, கேரளாவின் மக்கள் செல்வாக்குடைய அரசியல் தலைவரான அப்துல் நாசர் மதானியை அவரது உடல்நிலையை கவனத்தில் கொண்டு, உடனடியாக பிணையில் விடுதலை செய்ய தமிழக அரசு ஆவன செய்ய வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறோம்

பா. செயப்பிரகாசம், கவிஞர், சிறுகதை ஆசிரியர் -
அ.மார்க்ஸ், எழுத்தாளர், விமர்சகர் -

கோ.சுகுமாரன், செயலாளர், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு, புதுவை -
டாக்டர் ப.சிவக்குமார், கல்வியாளர், முன்னாள் அரசுக் கல்லூரி ஆசிரியர் கழகத் தலைவர் -

பொ. இரத்தினம், மூத்த வழக்கறிஞர், சமூக நீதி வழக்கறிஞர்கள் மையம்-
சி.நீலகண்டன், ஆசிரியர், ‘அநிச்ச’- இருமாத இதழ் -

சுகிர்தராணி, தலித் கவிஞர், பெண்ணுரிமையாளர் -
வெளி.ரங்கராஜன், எழுத்தாளர், அரங்க விமர்சகர் -
சாரு நிவேதிதா, நாவலாசிரியர், பத்தி எழுத்தாளர் -
சுகுணா திவாகர், எழுத்தாளர், பத்திரிகையாளர் -
ஆ.இரமேசு, தமிழ் ஆய்வு மாணவர் -
வசுமித்ரா, கவிஞர் -
புனிதபாண்டியன், எழுத்தாளர், ஆசிரியர் ‘தலித் முரசு’ -
வீராச்சாமி, எழுத்தாளர் -
கே.எம்.வேணுகோபால், எழுத்தாளர், பத்திரிகையாளர் -
ஜெ. ?¡ஜ?¡ன் கனி, கவிஞர் -
இன்குலாப், கவிஞர் -
கவிக்கோ அப்துல் ரகுமான் -
வ.கீதா, விமர்சகர், வரலாற்றாசிரியர், பெண்ணுரிமையாளர் -
சே.கோச்சடை, தலைவர், தமிழ் மொழிபெயர்ப்பு எழுத்தாளர் சங்கம் -
கோணங்கி, நாவலாசிரியர் -
குட்டி ரேவதி, கவிஞர் -
மதிவண்ணன், கவிஞர் -
ச.பாலமுருகன், நாவலாசிரியர், பொதுச் செயலர், மக்கள் சிவில் உரிமைக் கழகம் (P.U.C.L) -
கடற்கரய், கவிஞர், பத்திரிகையாளர் -
இரத்தின கரிகாலன், கவிஞர் - சு.தமிழ்ச்செல்வி, நாவலாசிரியர் -
அழகிய பெரியவன், தலித் நாவலாசிரியர் -
விடியல் சிவா, பதிப்பாளர் -
லட்சுமி மணிவண்ணன், கவிஞர், நாவலாசிரியர், ஆசிரியர் ‘சிலேட்’ -
தளவாய் சுந்தரம், எழுத்தாளர், பத்திரிகையாளர் -
கவிதா சரண், எழுத்தாளர், ஆசிரியர் ‘கவிதா சரண்’ -
ஜெயந்தன், எழுத்தாளர் -
யூமா வாசுகி, நாவலாசிரியர், ஓவியர் -
சி.மோகன், எழுத்தாளர், விமர்சகர் -
கண்மணி, எழுத்தாளர் -
ஓடை துரை அரசன், விமர்சகர் -
சுதாகர் கத்தக், தலித் எழுத்தாளர் -
கண்ணன். எம், எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர் -
சிவக்குமார், எழுத்தாளர், மொழிப்பெயர்ப்பாளர் -
வெ.கோவிந்தசாமி, மொழிபெயர்ப்பாளர் -
பெரம்பூர் கந்தன், எழுத்தாளர், ஆசிரியர் ‘அறிவுக் கொடி’
**********************************************************************************************
தமிழகச் சிறைகளில் இதை விடக் கடுமையான கொடிய நோய்களில் தவிக்கும் ஆயிரக்கணக்கான சிறைக் கைதிகள் இருப்பார்களே, அவர்களில் பலரும் சாதாரண குற்றவாளிகளாகக் கூட இருப்பார்களே,
அவர்களுக்கெல்லாம் என்றைக்காவது வக்காலத்து வாங்கியுள்ளார்களா இந்த எழுத்தாளர்கள் ? ஒரு கைதிக்கு உரிய மருத்துவ உதவி அளிக்கப் படவில்லையென்றால் அரசாங்கம் தனது மருத்துவமனைகளில் மட்டுமே உரிய மருத்துவ சிகிச்சை அளிக்க இயலும். அதைத்தான் பிற சாதாரண கைதிகள் பெற்று வருகிறார்கள். இவருக்கு மட்டும் சிறப்புச் சலுகை கேட்க இந்த அறிவு ஜீவிகளுக்கு ஏன் தீடீர் அக்கறை ? ஓட்டுப் பொறுக்கி அரசியல்வாதிகள் மதானியின் விடுதலையை கேட்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. எலி ஏன் எள்ளூருண்டைக்குக் காய்கிறது என்பது புரிகிறது. ஆனால் இந்த எலிப் புளுக்கைகள் எதற்காகக் காய்கின்றன ? யாருக்காகக் காய்கின்றன ? கிடப்பது கிடக்க கிழவியைத் தூக்கி மனையில் வை என்று தீடீரென்று ஏன் மதானியின் விடுதலைக்குக் கோரிக்கை. படிப்பவர்கள் இவர்களின் நோக்கத்தைப் புரிந்து கொள்வார்கள். எழுத்தாளன் என்பவன் ஒரு சமுதாயத்தின் அறிவீனத்தைக் களைந்து, மக்களின் அறியாமையைப் போக்கி அவர்களை சிந்திக்க வைக்க வேண்டும். ஆனால் இந்த எழுத்தாளர்களோ ஒரு கொடிய தீவீரவாதியை விடுதலை செய்ய பாடு படுகிறார்கள் என்றால் யார் இவர்கள்? இவர்களின் நோக்கம் என்ன ? கொள்கை என்ன ? எதற்காகச் செய்கிறார்கள் என்பதை நாம் அனைவரும் சிந்தித்து, இவர்களை அடையாளம் காண வேண்டியது அவசியமாகிறது.

மத வெறி பிடித்த , ரத்த வெறி பிடித்த ஒரு மிருகத்துக்கு விடுதலை கோரும் இந்த மனித குல விரோதிகளையும் நாம் தீவீரவாதிகளாகவும், தீவீரவாதத்திற்கு தூபம் போடுபவர்களாகவும் தீவீரவாதிகளின் கைக்கூலிகளாகவும் அடையாளம் காண வேண்டும். நமது கடுமையான கண்டனங்களைத் தெரிவிப்பதுடன் இவர்களைப் புறக்கணிப்பது தேசப் பற்றுள்ள ஒவ்வொரு இந்தியரின் கடமையும் ஆகும்.

Copyright:thinnai.com 

Thursday 2 April, 2009

பாகிஸ்தான் பற்றிய தொடர் (24)

******************

1 April 2009

*****************
மர்மம் நிறைந்த தேசம்!


ஆடிப்பார்ப்பது என்று முடி வாகிவிட்டது. பிறகு, அது நீச்சல்குளமாக இருந்தால் என்ன... நீதிமன்றமாக இருந்தால் என்ன? நீதிபதி இஃப்திகாரை உச்ச நீதிமன்றத்துக்குள் நுழைந்து, ராணுவம் கைது செய்தது. இதற்காக நெடிய குற்றப்பத்திரிகை ஒன்று இஃப்திகாருக்குஎதிராகத் தயார் செய்யப்பட்டிருந்தது. ஊழல், லஞ்சம், அதிகார துஷ் பிரயோகம் இன்ன பிற குற்றச்சாட்டுகள்.

முஷ்ரப்பின் அடுத்தடுத்த நகர்வுகள் ஒவ்வொன்றும் பீதியைக் கொடுத்தன.
நவம்பர் 3, 2007. குற்றுயிரும் குலையுயிருமாக இருந்த ஜனநாயகத்தைத் தூக்கி ஐ.சி.யூ. சிகிச்சைப் பிரிவில் வைத்தார். எமர்ஜென்சி, அவசரத்துக்குப் பயன்படுத்தும் ஆயுத மாக மாறியிருந்தது. வழக்கம் போல வானொலி, தொலைக்காட்சி, விமான நிலையம், பத்திரிகைகள் என்று அனைத்து அத்தியாவசியக் கேந்திரங்களும் ராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் வந்தன.
விநோதமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார் முஷ்ரப். நீதிபதிகள் எல்லோரும் மீண்டும் பதவிப்பிரமாணம் எடுத்துக்கொள்ள வேண்டும். எமர்ஜென்சி ஸ்பெஷல் இது. நினைத்ததை எல்லாம் செயல் வடிவத்துக்குக் கொண்டுவர இதைவிட்டால் வேறு உசிதமான தருணம் கிடைக்காது அல்லவா? ஆகவே, அத்தனைக்கும் ஆசைப்பட்டார் முஷ்ரப். எதிர்ப்பு தெரிவிக்கலாமா என்ற யோசனையில் ஈடுபட்டவர் களைக்கூட கொத்துக் கொத்தாகக் கைது செய்து, சிறைக்கு அனுப்பியது ராணுவம்.

எதிர்க்கட்சியினர்,ஆசிரியர்கள், வழக்கறிஞர்கள், மாணவர்கள். எல்லோரையும் சாலைக்கு வந்து சத்தம் போட்டவர்கள் அத்தனை பேரும், சிறைக்குஅனுப்பப்பட்டனர்.

இத்தனை கூத்துகளும் கொஞ்ச காலத்துக்குத்தான். ஏற்கெனவே அறிவித்திருந்தபடி தேர்தல் வேலைகள் சூடுபிடித்தன. இந்தத் தேர்தலில் முஷ்ரப்புக்கு எதிராக இரு பெரும் தலைவர்களான பெனாசிரும் நவாஸ§ம் கைகோத்திருந்தனர். வாருங்கள்... பொது எதிரியைப் பொது வில் வைத்துத் தோற்கடிப்போம். இருவருமே தலையசைத்தனர். காரணம், இருவருக்குமே வேறு வழியில்லை.தேர்தல் பிரசாரம் சூடுபிடித்தது. உற்சாகம் பொங்கப் பொதுக்கூட்டங்களில் பேசிக் கொண்டிருந்தார் பெனாசிர்.

விதி விளையாடியது. டிசம்பர் 27, 2007 அன்று பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தபோது, தீவிரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார் பெனாசிர். மிகப்பெரிய இழப்பு. பாகிஸ் தான் மக்கள் ஒரு கணம் நிலைகுலைந்து போனார்கள்! தந்தை, மகள் இருவருடைய மரணங்களுமே தேசத்தை உலுக்கியெடுத்த நிகழ்வுகள்.
மெள்ள சுதாரித்த பாகிஸ்தான் மக்கள் கட்சியினர், பெனாசிரின் மகன் பிலாவல் புட்டோவை கட்சியின்தலைவராகத் தேர்வு செய்தனர். வயதில் மிகவும் இளையவரான பிலாவலின் படிப்பு முடியும் வரை பெனாசிரின் கணவர் ஆசிப் அலி சர்தாரி கட்சி நிர்வாகத்தைக் கவனித்துக் கொள்வார் என்று அறிவிக்கப்பட்டது.

முஷ்ரப்புக்கு எதிரான அணி தன்னு டைய மிகப்பெரிய பிரசார பீரங்கியை இழந்திருந்தது. ஆனாலும், அவர் சிந்திய ரத்தம் வெற்றியைக் கொடுக்கும் என்று அந்தக் கட்சியினர் பரிபூரணமாக நம்பினர். பிப்ரவரி 18, 2008 அன்று தேர்தல் நடத்தப்பட்டது. முடிவுகள் முஷ்ரப்புக்கு முடிவுரையாக அமைந்தன.
பாகிஸ்தான் மக்கள் கட்சி மற்றும் நவாஸின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் என்ற இரண்டு கட்சிகளுக்கும் மக்கள் பெருவாரியான ஆதரவை வழங்கியிருந்தனர். பாகிஸ்தான் மக்கள் கட்சியைச் சேர்ந்த யூசுஃப் ராஸா கிலானி, பாகிஸ்தானின் பிரதமராகத் தேர்வு செய்யப்பட்டார். 'மக்கள் தீர்ப்பை ஏற்றுக்கொள்கிறேன். பிரதமருக்கு ஒத்துழைப்புக் கொடுப்பேன்.'

இப்படிச் சொல்வதைத் தவிர முஷ்ரப்புக்கு அப்போது வேறு வழியில்லை. ஆனாலும், 'கடந்த காலப் பிரச்னைகளுக்குக் கணக்கு தீர்த்தே ஆகவேண்டும்!' என்று இரண்டு கட்சிகளின் தலைமையும் முடிவுசெய்தன. அப்போது அவர்களுக்குத் தோன்றிய யோசனை இதுதான். நம்பிக்கையில்லாத் தீர்மானம். முஷ்ரப்புக்கு எதிராக.

தர்மசங்கடத்தில் நெளிந்தார் முஷ்ரப். சிங்கம் போல சிலிர்த்துக் கொண்டு திரிந்த தன்மீது இப்படியரு தீர்மானம் கொண்டுவரப்பட்டு, அதன் மூலம் வீட்டுக்குப் போவதை அவர் துளியும் ரசிக்க வில்லை. அவமானம் என்று நினைத்தார். ஆகஸ்ட் 18, 2008 அன்று தன்னுடைய அதிபர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.

'நான் எந்தத் தவறும் செய்யவில்லை. என்மீது ஒரு குற்றச்சாட்டைக்கூட அவர்களால் நிரூபிக்க முடியாது. ஜனாதிபதி மீது தங்களுக்குள்ள ஈகோ காரணமாக நம்பிக் கையில்லாத் தீர்மானம் கொண்டுவருகிறார்கள். அதிபர் பதவியைவிட, பாகிஸ்தான் எனக்குப் பெரியது. உடனடியாகப் பதவி விலகுகிறேன். இந்த முடிவை என்னுடைய ஆதரவாளர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும். அடுத்து நான் என்ன செய்யவேண்டும் என்பதை மக்களிடமே விட்டுவிடுகிறேன். அவர்கள் தீர்ப்பு வழங்கட்டும்!'

அதிபர் நாற்காலி இப்போது காலியாக இருந்தது. வாஞ்சை நிறைந்த கண்களோடு அந்த நாற்காலியைப் பார்த்தார் ஆசிப் அலி சர்தாரி. அதிபர் ராஜினாமா செய்த முப்பது நாட்களுக்குள் தேர்தல் நடத்தப்பட்டு, புதிய அதிபர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்பது பாகிஸ் தானின் சட்டம். ஆசிப் அலி சர்தாரியை அதிர்ஷ்டம் வாரி அணைத்துக்கொள்ள விரும்பியது. உடனடியாக நடத்தப் பட்ட தேர்தலில் போட்டியிட்ட சர்தாரி, கணிசமான வாக்கு கள் பெற்று அதிபர் நாற்காலியில் அமர்ந்தார்.

அப்போது சர்தாரி மீது பல குற்றச்சாட்டுகள் காற்றில் பறந்துகொண்டிருந்தன. எல்லாமே அரதப் பழசான குற்றச்சாட்டுகள். 'தீவிரவாதிகளுடன் சிநேகம் வளர்த்தவர்... ஊழல்வாதிகளுடன் ஊர் சுற்றியவர்... கமிஷன் ஏஜென்ட்களுடன் கலந்துரையாடியவர்...' இப்படி நிறைய குற்றச்சாட்டுகள். சிலவற்றுக்கு ஆதாரங்கள் இருந்தன. சில ஆதாரங்கள், சேதாரம் ஆகியிருந்தன. எல்லா குற்றச்சாட்டுகளையும் தூக்கிக் கடாசிவிட்டுப் போய்விட்டார் சர்தாரி.
தேர்தல் பிரசாரத்தின்போது முஷ்ரப்பால் பதவி நீக்கம் செய்யப்பட்ட உச்ச நீதிமன்ற நீதிபதி இஃப்திகார் உள்ளிட்ட நீதிபதிகளை, தான் ஆட்சி அமைத்ததும் மீண்டும் நியமனம் செய்வேன் என்பது பெனாசிர் கொடுத்த வாக்குறுதி. அதை நிறைவேற்றவேண்டும் என்ற கோரிக்கை அவ்வப்போது எழுந்தது. ஆனால், இஃப்திகாரை நியமிப்பதில் சர்தாரிக்குத் துளியும் ஆர்வமில்லை.

முஷ்ரப் எந்த விஷயத்துக்காகப் பயந்துகொண்டு அவரை வீட்டுக்கு அனுப்பினாரோ, அதே பயம்தான் சர்தாரிக்கும். ஊழல் வழக்குகள் தூசி தட்டப்படுமோ என்று பயந்தார். கோரிக்கை எழுந்ததே தவிர வலுக்கவில்லை. இந்த சமயத்தில்தான் மும்பையில் லஸ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள் அதிரடித் தாக்குதலை நிகழ்த்தி, மிகப் பெரிய அதிர்ச்சி அலைகளைப் பரவவிட்டிருந்தனர். பாகிஸ்தான் ஆதரவுடன் மட்டுமே இந்தத் தாக்குதலை நிகழ்த்தியிருக்க முடியும் என்பது இந்திய அரசின் சந்தேகம். ஆனால், இந்தக் குற்றச்சாட்டை அடியோடு மறுத்தது பாகிஸ்தான்.

இரு தரப்பு அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் இடையே நிகழ்ந்த வாதப் பிரதிவாதங்கள் இரு நாடு களுக்கும் இடையே போர் மூண்டுவிடுமோ என்று உலகநாடுகள் அச்சப்படும் அளவுக்குச் சென்றன. ஆனால், அப்படியரு நிலை ஏற்படவில்லை. இங்கிருந்து ஆதாரங்கள் அனுப்பப்பட்டன. அங்கிருந்து கேள்விக் கணைகள் வந்துவிழுந்தன. வட்டியும் முதலுமாக பதில் கடிதம் அனுப்பியது இந்தியா. தகவல் பரிமாற்றம் தங்கு தடையின்றி நடந்து கொண்டிருக்கிறது.

தற்போது இந்தியா, பாகிஸ்தான் இடையே பெரிய அளவிலான பதற்றம் ஏதும் இல்லை. ஆனால், உள்நாட்டுக்குள் ஏதோ ஒரு விவகாரம் புகைந்து கொண்டுதான் இருக்கிறது. கிரிக்கெட் விளையாட பாகிஸ்தானுக்கு வந்த இலங்கை கிரிக்கெட் வீரர்கள், தீவிரவாதிகளால் தாக்கப்பட்டது பலத்த அதிர்வுகளை ஏற்படுத்தியது. இது யாருடைய கைங்கர்யம் என்பது இன்னமும் தெளிவாகவில்லை.

இத்தனை கூத்துகளும் நடந்து கொண்டிருக்கும் சமயத்தில், அங்கே ஒருவர் மட்டும் நுணுக்கமாகச் சிந்தித்துக் கொண்டிருந்தார். அவர் நவாஸ் ஷெரீப். ஆயிரத்தெட்டு ஆத்திரங்கள் அவருக்கு. வசதியான நாற்காலி கிடைக்கவில்லை. தேர்தலில் போட்டியிடுவதற்கு நீதிமன்றம் தடையை வேறு விதித்து வைத்திருந்தது. சகோதரர் ஷாபா ஷெரீப்புக்கும் அதுதான் நிலைமை. ஏதாவது செய்யவேண்டும் என்று விரும்பினார்.

சட்டென்று அவருடைய கவனத்தை ஈர்த்தது உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி இஃப்திகார் பதவி நியமன விவகாரம். ஏற்கெனவே இது விஷயமாகப் போராடிக் களைத்துப் போயிருந்த வழக்கறிஞர்களை அழைத்துப் பேசினார். 'நண்பர்களே, நான் இருக்கிறேன், போராடுங்கள்!' என்று ஊக்கப்படுத்தினார். நீதிபதி நியமனக் கோரிக்கையை வலியுறுத்தி நாடாளுமன்றம் நோக்கிப் பேரணி நடத்தப்போவதாக அறிவித்தார்.

நெற்றியைச் சுருக்கினார் ராணுவத் தளபதி பர்வேஸ் கயானி. 'என்ன இவர்? பேரணி, போராட்டம் அது இது என்று மிரட்டல் விடுத்துக் கொண்டிருக்கிறார். ம்ஹ¨ம். எதுவும் கூடாது. பிரசிடென்ட் சர்தாரி நவாஸ் அண்ட் கோ-வுக்கு கால் கட்டுப் போடுங்கள். இல்லாவிட்டால், அதை ராணுவம் செய்யவேண்டியிருக்கும்!' என்று சீறித்தள்ளினார்.

அலறிப் புடைத்துக்கொண்டு எழுந்த சர்தாரி, பேரணிக்குத் தடை விதித்தார். ஆனாலும், போராட்டம் விஸ்வரூபம் எடுத்தது. மீண்டும் ராணுவ ஆட்சி வந்துவிடுமோ என்று எல்லோரும் பயந்த நேரத்தில் பிரதமர் கிலானி கொஞ்சம் இறங்கிவந்து பேசினார்.

'அவசரம் வேண்டாம் நண்பர்களே, எதுவாக இருந்தாலும் பேசித் தீர்க்கலாம். எதற்காகப் பேரணி, ஊர்வலம் என்று தேவையில்லாமல் அலட்டிக் கொள்கிறீர்கள். உங்களுக்கு என்ன வேண்டும்? நீதிபதி இஃப்திகார் உள்ளிட்டோருக்கு மீண்டும் பதவி வழங்கப்பட வேண்டும். அவ்வளவுதானே... ஆவன செய்கிறோம் போதுமா?'

தற்போது பாகிஸ்தானில் நிலைமை சகஜமாகியிருக்கிறது, தாற்காலிகமாக. இந்த சகஜ நிலைமையின் ஆயுள் எத்தனை மாதங்கள் அல்லது நாட்கள் என்று தெரியாது. அதுதான் பாகிஸ்தான் என்ற மர்மதேசத்தின் அடையாளம்.
குழப்பம். பதற்றம். இந்த இரண்டு வார்த்தைகளால் நிரம்பியதுதான் பாகிஸ்தான் அரசியல். எந்த நேரத்தில் எவர் குழப்பம் ஏற்படுத்துவார் என்பது யாருக்குமே தெரியாது. ஆனால், பதற்றம் மக்களுக்கு; ஆபத்தும் மக்களுக்குத்தான்! இழப்புகளும் அவர்களுக்கே. விநோதங்களின் விளைநிலமான பாகிஸ்தானில், அடுத்து என்ன நடக்கும் என்று உலக நாடுகள் அனைத்தும் விழிகள் விரியப் பார்த்துக்கொண்டிருக்கின்றன. சிலர் ஏக்கத்துடன்... பலர் ஏளனத்துடன்!

இதை பாகிஸ்தான் அரசியல்வாதிகள் புரிந்து கொண்டால்தானே..!

(அலசல்கள் நிறைந்தன... 'அரசியல்' தொடர்கிறது.)