Friday 18 September, 2009

Incursion indicates China's unease over India's rise: Experts

Incursion indicates China's unease over India's rise: Experts
New Delhi A US think-tank has said that China’s recent aggression on Indian border is direct result of Beijing’s "nervousness over India's rise."

"Well, I think China is becoming increasingly nervous about India's rise. It's something that they have to deal with that perhaps 10-15 years ago they didn't believe was something that was necessary to focus on," said Lisa Curtis of the Heritage Foundation.

We saw this when they to tried scuttle at the last minute, the civil nuclear deal at the Nuclear Supplier Group meeting last year and so that was sort of an indication that China is not completely comfortable with India's rise on the world stage," said Curtis.

Recently, two soldiers of the Indo-Tibetan Border Police (ITBP) were reportedly injured in firing from across the border on the Line of Actual Control in Arunachal Pradesh.
India, however, denied that two of its border guards were injured in firing by Chinese forces.
Curtis said both the sides were mutually mistrustful of each other on the border issue.

"The border issue has lingered for a long time and I think both sides created mistrust on both sides. Perhaps since China is dealing with its internal issue, it has not been interested in completely resolving the border issue but that said. I do not think so either side is interested in any kind of conflict. But I do not see the negotiation moving forward either," Curtis added.
India and China fought a short war in 1962 and, despite burgeoning trade in recent years, mistrust remains.

The two countries have faced off at multi-lateral forums, including Chinese objections to a 60 million dollar Asian Development Bank loan for a project in Arunachal Pradesh.

Reports of Chinese "incursions" have become more frequent of late.

Army launches annual maintenance of forward posts

The Indian Army has launched a massive effort at strengthening forward posts along the Line of Actual Control (LAC) with China, which they described as "routine."

The effort, aimed at operational alertness and kick-started this week, comes at this time annually just before the weather gets worse during winters.

"Nothing much should be attached to this effort, which is carried out annually for maintenance of the forward posts before the weather makes it impossible. This is a matter of routine," Army sources said.

The effort will go on for a month and for the purpose, the Army has employed about half of its strength posted along the 4,057-km-long LAC in Jammu and Kashmir, Himachal Pradesh, Uttarakhand, Sikkim and Arunachal Pradesh in active duty, they said.

This maintenance effort comes at a time when there have been reports of incursions by Chinese troops in Chumar region of Ladakh in Jammu and Kashmir where they brought in a military helicopter to air-drop food cans and painted Mandarin letters on some of the stones to lay claim to the territory.

These incursions, the Army had said, were "nothing unusual" due to differing perceptions of LAC on both sides.

Other media reports of Chinese fighter jets violating Indian airspace and firing at ITBP jawans in Sikkim and Arunachal Pradesh in the last three months have been denied by the government.

copyright(c) expressindia.com 18 Sept 2009

china strikes back on Arunachal Pradesh

china strikes back on Arunachal

New Delhi 18 Sept.2009
Barely weeks after it failed in its attempt to block Asian Development Bank (ADB) funds to a project in Arunachal Pradesh, china has successfully struck back.

Last month, in a development New Delhi has been quiet about, china won a vote on a “disclosure agreement,” which prevents ADB from formally acknowledging Arunachal Pradesh as part of India. (A disclosure agreement is a formal notification of a project once it’s approved by the ADB Board).

On June 16, India had successfully isolated china — the entire ADB Board except beijing had voted in India’s favour — and secured approval for its $2.9-billion country plan. china had raised objections to the plan because it included $60-million projects in Arunachal Pradesh. It argued that ADB cannot fund projects in “disputed areas” like Arunachal Pradesh.

Clearly, china did not give up after that defeat and the reversal is symptomatic of its growing clout. It’s learnt that India lost the vote despite US and most of the Western bloc voting in India’s favour. In what was relatively a narrow margin, the scales were tilted in china’s favour by japan, australia and a group of other South East Asian countries. Despite US support, India was also surprised by the fact that australia chose to go with china. pakistan, of course, also went with china.

In particular, sources said, the role of japan has come as a shock to India. Being the current chair of the ADB board, japan allowed the matter to be put to vote.
Once that happened, japan backed china indicating a shift in its political approach.

It now transpires that since the first vote where china was humiliated, it left no stone unturned in increasing pressure on South East Asian countries, and japan and South Korea.

The defeat has caused considerable concern in official circles here. One view is that India should not take the $60 million meant for projects in Arunachal Pradesh. It’s quite possible that India will not use ADB funding for the state. In future, sources said, India will also have to be careful when it lists projects in “sensitive areas” for external funding.

The more serious ramification is diplomatic. There is a view that after the June 16 victory, India didn’t anticipate the chinese response and so did not plan its lobbying as well as it did the first time. Incidentally, before the June vote, India had sent demarches to all 66 countries represented at the ADB.

சீன 'டிராகனை' வெல்ல முடியுமா?

சீன 'டிராகனை' வெல்ல முடியுமா?

பாகிஸ்தான் பக்கம் ஓங்கி ஒலித்துக்கொண்டிருந்த நமது யுத்த பேரிகைகள், இப்போது சீனாவின் திசை நோக்கி முழங்க ஆரம்பித்துள்ளன.

'இந்தியாவுக்குள் சீனப் படைகள் ஊடுருவின. லடாக் பகுதிக்குள் நுழைந்து அங்கே பாறைகளில் சிவப்பு பெயின்ட் அடித்துவிட்டுச் சென்றிருக் கிறார்கள்' என கடந்த வாரத்தில் செய்திகள் வெளிவந்தன. அதை சீனத் தரப்பு மறுத்ததில் வியப்பில்லை. ஆனால், நமது வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவும் சேர்ந்து மறுத்ததுதான் குறிப்பிடத்தக்கது!

லடாக் பகுதியில் மட்டுமல்ல... ஜம்மு காஷ்மீர் பகுதி யிலும்கூட அண்மையில் இரண்டு முறை சீன ராணுவ ஹெலிகாப்டர்கள் அத்துமீறி நுழைந்ததாகச் செய்திகள் வெளி யாகின. அதையும்கூட நமது ஆட்சியாளர்கள் சீரியஸாக எடுத்துக்கொள்ளவில்லை. இந்தியா ஏன் இப்படி அடக்கி வாசிக்கவேண்டும்?

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே யுத்தம் நடந்து சுமார் அரை நூற்றாண்டு ஆகப்போகிறது. ஆனால், இரு நாட்டுக்கும் இடையிலான உறவு சீரடையவில்லை. அதேசமயம், மியான்மர் என்றழைக்கப்படும் பர்மா, பாகிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய நாடுகளோடு சீனா இணக்கமான உறவைப் பேணி வருகிறது. நேபாளமும் கொஞ்சகொஞ்சமாக சீனாவிடம் ஒட்டி உறவாடுகிறது. இலங்கை அரசோடு சீனாவுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கமும் அண்மை யில் அங்கு நடைபெற்ற தமிழின அழிப்புப் போருக்கு சீனா அளித்த ஆதரவும்கூட நமக்குத் தெரிந்ததுதான்.

சுருக்கமாகச் சொன்னால், இந்தியாவைச் சுற்றி சீனா வின் செல்வாக்கு மண்டலம் நாளுக்குநாள் பலமடைந்து வருகிறது.

சீனாவுக்கும், இந்தியாவுக்கும் இடையே 3,500 கிலோமீட்டர் தூரம்கொண்ட எல்லைப் பகுதி இருக்கிறது. இரண்டு நாடுகளுக்கும் இடையிலான எல்லை எது என்பது பல காலம் வரை துல்லியமாக வரையறுக்கப்படாமலே இருந்தது. இந்தியாவை ஆட்சி செய்த பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள், 1914-ம் ஆண்டு இந்தியாவுக்கும் திபெத்துக்கும் இடையே ஏற்பட்ட சிம்லா ஒப்பந்தத்தின் அடிப்படையில் வரையறுக்கப் பட்டதுதான் 'மக்மேஹன் கோடு' என்பதாகும். ஆனால், அந்த ஒப்பந்தத்தையும் எல்லைக்கோட்டையும் சீனா ஒப்புக்கொள்ளவில்லை.

இந்தியா சுதந்திரம் அடைந்து சுமார் 10 ஆண்டுகள் கழித்து, இந்தியாவுக்கு சொந்தமானதென்று அதுவரை நம்பப்பட்டு வந்த அக்சாய்சின் பீடபூமிப் பகுதியை சீனா, தனக்கு சொந்தமானதாக அந்த தேசப் படத்தில் குறிப்பிட்டிருந்தது. இந்திய அரசு அதற்கு எதிர்ப்புக் காட்ட... வரைபடத்தில் ஆக்கிரமிப்பு

கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து 1962-ம் ஆண்டில் இரு நாட்டுக்கும் முழுமையான யுத்தமாக வெடித்தது. சீனத் துருப்புகள் இந்தியாவுக்குள் அத்துமீறி நுழைந்து, சுமார் 15 ஆயிரம் சதுர மைல் பரப்பளவை கைப்பற்றின. அருணாசலப் பிரதேசத்தில் இருந்த இந்திய காவல் அரண்களையும் அவர்கள் அழித்துவிட்டார்கள். அதற்குப் பிறகு நடைபெற்ற பேச்சுவார்த்தை காரணமாக தனது படைகளை சீனா வாபஸ் பெற்றுக்கொண்டது.

சுதந்திர இந்திய வரலாற்றில் மிகப்பெரிய அவமானமாக வர்ணிக்கப்படும் அந்தத் தோல்வியிலிருந்து இந்தியா இன்னும்கூட பாடம் கற்றுக்கொள்ளவில்லை என்பதுதான் வேதனை. 1962 போருக்குப் பிறகு இரண்டு நாடுகளுக்கும் இடையில் ஏற்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தின் காரணமாக, அவற்றுக்கிடையே எல்லைக்கோடு ஒன்று வரையறுக்கப்பட்டது. ஆனால், இப்போதும்கூட சீனா இந்தியாவுக்கு சொந்தமான 5,180 சதுர கிலோ மீட்டர் பரப்பளவுகொண்ட நிலப்பரப்பைப் பிடித்து வைத்திருப்பதாக இந்தியா 'சாத்வீகமாக' குற்றம் சாட்டி வருகிறது. சீனாவோ தனக்கு சொந்தமான 90,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவு நிலத்தை அருணாசலப் பிரதேசப் பகுதியில் இந்தியா ஆக்கிரமித்துக் கொண்டிருப்பதாக அபாண்டமாகப் பழி சுமத்தி வருகிறது.

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையில் நல்லுறவு ஏற்பட்டு, இரு நாடுகளும் ஒன்றிணைந்து செயல்பட்டால், ஆசியப் பிராந்தியத்தில் வேறு யாரும் மூக்கை நுழைக்க முடியாது என்ற யோசனையைப் பலரும் இப்போது தெரிவித்து வருகிறார்கள். இந்திய அதிகாரவர்க்கத்திலும்கூட இந்த யோசனையை ஆமோதிக்கும் ஒரு பிரிவினர் இருக்கின்றனர். தற்போது மத்திய அமைச்சராக இருக்கும் ஜெய்ராம் ரமேஷ் அதில் முக்கியமானவர். சீனாவையும் இந்தியாவையும் சேர்த்து 'சிந்தியா' என்று ஒரு புதிய ஃபார்முலாவை அவர் உருவாக்கினார். இந்தியாவும் சீனாவும் சேர்ந்து செயல் பட்டால், மிகப்பெரிய பொருளாதார சக்தியாக அவை உருப்பெறுவது மட்டுமின்றி, ராணுவரீதியிலும் பலமான கூட்டணியாக அது இருக்கும் என்பது அவரது கணிப்பு. அது மறுக்க முடியாத உண்மை என்றாலும்கூட, அப்படியரு கூட்டணி ஏற்படுவதற்குத் தடையாகப் பல விஷயங்கள் உள்ளன. அவற்றுள் ஒன்று இந்த எல்லைப் பிரச்னை.

இந்திய - சீன உறவு பலமடையக் கூடாது என்பதில் அமெரிக்காவும் மேற்கத்திய நாடுகளும் உறுதியாக இருக்கின்றன. ஆனால், இந்திய - சீன உரசல்கள் எல்லாவற்றுக்குமே நாம் அமெரிக்காவையும் மேற்கு நாடுகளையும் குற்றம் சாட்டிக்கொண்டிருக்க முடியாது. நம்முடைய வெளியுறவுக் கொள்கை தெளிவாக இல்லாத வரை, இப்படியான நெருக்கடிகளை நாம் சந்தித்துதான் ஆகவேண்டும். சீனாவோடு போட்டி போட்டுக்கொண்டு நமது அண்டை நாடுகளில் இருக்கும் அடக்குமுறை ஆட்சிகளை நாம் ஆதரிக்க முயல்வது, வம்பை விலை கொடுத்து வாங்கும் செயலாகும். அந்த நாடுகளின் மக்கள், ஜனநாயகத்துக்காக ஏங்குகின்றனர். அவர்களின் அபிலாஷைகள் நிறைவேறி, அங்கெல்லாம் ஜனநாயக ஆட்சிகள் ஏற்பட்டுவிட்டால்... அவை தாமாகவே சீனாவின் செல்வாக்கிலிருந்து வெளியேறிவிடும். இதை இந்திய ஆட்சியாளர்கள் புரிந்து கொள்ளவேண்டும்.
சீனாவின் பொருளாதார வளர்ச்சியை இந்தி யாவோடு ஒப்பிட்டுப் பேசுகிற நிபுணர்கள் பலரும், சீனாவில் இருக்கும் அதிகாரத்துவ அரசமைப்புதான் அதன் பொருளாதார வளர்ச்சிக்கு அடிப்படை என்று சொல்கிறார்கள். 'சீனாவில் ஒரு அதிவிரைவு நெடுஞ்சாலையை அமைக்கவேண்டுமானால், அந்த புராஜெக்ட்டுக்குத் தேவையான நிலத்தைக் கையகப்படுத்தி சுலபமாக அதை சீன அரசு செய்துவிடும். ஆனால், அதே திட்டத்தை இந்தியாவில் நிறைவேற்ற வேண்டுமானால் ஏகப்பட்ட தடைகள்! நிலத்தைக் கொடுக்க முடியாது என்று அவரவரும் கோர்ட்டுக்குப் போய்விடுவார்கள்' என அந்த நிபுணர்கள் கூறுகின்றனர்.

இது சீனாவுக்கு பெருமை சேர்ப்ப தாகக் கருதமுடியாது. இதுவொரு ஆபத்தான வாதம். சீனாவைப் போல இந்தியாவும் அதிகாரத்துவ நாடாக மாறவேண்டும் என்று சொல்லாமல் சொல்லும் இந்த வாதம், அடிப்படையில் தவறானதும்கூட.

சீனாவின் வளர்ச்சிக்கு முக்கியக் காரணம் அடக்குமுறை அல்ல... அந்நாட்டில் அடிப்படை வசதிகள் அடித்தட்டு மக்களையும் மனதில்கொண்டு சிறப்பாக நிறைவேற்றப் படுவதுதான். நம்முடைய ஆட்சியாளர்கள் ஒரு சில பணக்காரர்களை மட்டுமே மனதில்கொண்டு திட்டங்களை உருவாக்குகிறார்கள்.

இந்திய-சீன எல்லைப் பிரச்னையும், அவற்றுக் கிடையிலான பொருளாதாரப் போட்டியும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்துள்ளன. எனவே, இந்திய அரசு எதைத் திட்டமிட்டாலும் ஒருங்கிணைந்த முறையிலேயே திட்டமிட வேண்டும். ராஜீவ்காந்தி இருந்தபோது சீனாவுக்குப் பயணம் மேற்கொண்டு இந்த விஷயத்தில் நல்ல முன்னுதாரணத்தை ஏற்படுத்தினார். அதைப் பின்பற்ற மன்மோகன் சிங் முன்வர வேண்டும்.

இப்படியே விட்டால், சீனா பற்றிய சிந்தனை நம்மை எல்லா நேரமும் அரித்துக்கொண்டேதான் இருக்கும்!
copyright(c) vikatan.com

Tuesday 15 September, 2009

எல்லைகளில் அச்சுறுத்தும் சீனா


எல்லைகளில் அச்சுறுத்தும் சீனா

ம. விஸ்வநாதன்

First Published : 09 Sep 2009 01:22:00 AM IST
Last Updated :

இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே சர்வதேச எல்லையாக அங்கீகரிக்கப்பட்டுள்ள கியா மலைப் பகுதியில் சீன ராணுவம் சுமார் 1.5 கி.மீ. தூரம் ஊடுருவி பாறைகளில் சிவப்பு வண்ணத்தைப் பூசி, அதில் சீனா என்று எழுதிவிட்டுச் சென்றுள்ளது என்ற செய்தி அதிர்ச்சி அளிப்பதாகும்.

22,420 அடி உயரமுள்ள கியா மலை, "பனிமலைகளின் ராணி' என்று அழைக்கப்படுகிறது. ஜம்மு காஷ்மீரில் உள்ள லடாக், இமாசலப் பிரதேசத்தின் ஸ்பிடி, திபெத் ஆகிய மூன்றும் சந்திக்கும் இடத்தில் கியா மலை அமைந்துள்ளது.

இங்கு, ஜுலுங் லா கணவாய் பகுதியில் ஊடுருவிய சீன ராணுவத்தினர், மலைப் பகுதிகளில் பாறைகள் மீது சிவப்பு வண்ணத்தைப் பூசியதுடன் அதன் மீது சீனா என்று எழுதியுள்ளனர். இதை கடந்த ஜூலை 31-ம் தேதி இந்திய எல்லை ரோந்துப் படையினர் கண்டறிந்துள்ளனர்.

கடந்த ஜூனில் சீன ஹெலிகாப்டர்கள் அத்துமீறி கட்டுப்பாட்டு எல்லைக் கோடு அருகே இந்திய வான்வெளியில் பறந்ததுடன் காலாவதியான உணவுப் பொட்டலங்களையும் கீழே வீசியுள்ளன.

இந்த இரண்டு சம்பவங்களும் இந்தியாவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
ஒருபுறம் சீனா, இந்தியாவுடன் நட்பு பாராட்டி வருகிறது. மறுபுறம் இதுபோன்ற செயல்களிலும் ஈடுபட்டு வருகிறது. பாகிஸ்தானையாவது எதிரி நாடு என இனம் கண்டு கொள்ள முடியும். ஆனால், சீனாவை இந்திய அரசு அப்படி நினைத்துப் பார்ப்பதில்லை.

அதன் பலனைத்தான் 1962-ல் இந்தியா அனுபவித்தது. 1950-களில், காஷ்மீரின் ஒரு பகுதியான அக்சாய் சினை (சுமார் 37 ஆயிரம் சதுர கி.மீ.) தனது கட்டுப்பாட்டுக்குள் சீனா கொண்டுவந்தது.

அத்துடன், ஜின்ஜியாங் மாகாணத்தையும், திபெத்தையும் இணைக்கும் வகையில் 1951-ல் அக்சாய் சினில் சீனா சாலை போட்டது. சீனா இப்படி ஒரு சாலை போட்டதை 1957-ல் தான் இந்தியா தெரிந்து கொண்டது.

இந்தியாவின் பகுதிகளான அருணாசலப் பிரதேசம் (இதை தெற்கு திபெத் என சொல்கிறது சீனா), சிக்கிம், அசாமின் சில பகுதிகளை சீனா தனது என உரிமை கொண்டாடி வருகிறது.

இப்படிப் பிரச்னைகள் இருந்தபோதும், எல்லைகள் குறித்து இந்தியாவுடன் எந்தப் பிரச்னையும் இல்லை என தொடர்ந்து சீனா கூறிவந்தது. 1954-ல் பஞ்சசீலக் கொள்கையை வகுத்து அதன்படி இருநாடுகளும் செயல்படுவது என தீர்மானிக்கப்பட்டது. இதையடுத்து இந்தியர்களும், சீனர்களும் சகோதரர்கள் என அப்போதைய பிரதமர் ஜவாஹர்லால் நேரு முழங்கினார்.

ஆனாலும், தொடர்ந்து தனது வரைபடங்களில் இந்தியாவின் 1.20 லட்சம் சதுர கி.மீ. பகுதியை சேர்த்தே சீனா வெளியிட்டது.

1959-ல் திபெத்தில் போராட்டம் வெடித்தபின் இந்தியாவில் தஞ்சம்புகுந்த ஆன்மிகத் தலைவர் தலாய் லாமாவுக்கு அடைக்கலம் கொடுத்ததும் இருநாடுகள் இடையேயான உறவைப் பாதித்தது.

அக்சாய் சின் அனுபவம் காரணமாக, இந்தியா தனது பகுதியைப் பாதுகாக்க 1962 ஜூனில் எல்லையில் படைகளைக் குவித்தது. இருபுறமும் பதற்றம் அதிகரித்தது.

இந்நிலையில், 1962 அக்டோபர் 3-ம் தேதி புது தில்லிக்கு விஜயம் செய்த சீனப் பிரதமர் சூ யென்லாய் இந்தியாவுடன் போர் கிடையாது என அறிவித்தார். ஆனால், அடுத்த சில நாள்களில் போர் வெடித்தது. இந்தியத் தரப்பில் 3,128 வீரர்கள் கொல்லப்பட்டனர். 3,123 வீரர்கள் சீன ராணுவத்திடம் பிடிபட்டனர்.
சர்வதேச நெருக்கடி அதிகரித்ததையடுத்து நவம்பர் 20-ம் தேதி போர் நிறுத்தத்தை சீனா தன்னிச்சையாக அறிவித்தது. தகுந்த முன்னேற்பாடுகள் இல்லாததாலும், எதிரியை சரியாகப் புரிந்து கொள்ளாததாலும் இந்தப் போரில் இந்தியா தலைகுனிவைச் சந்தித்தது.

தற்போதும், முன்பிருந்ததைப் போன்றே சூழ்நிலை உள்ளது.
சர்வதேச அரங்கில் இந்தியா வலுவாக மாறிவருவதைச் சீனாவால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அதுவும், அமெரிக்காவுக்கு நெருக்கமான நாடாக மாறினால், சர்வதேச அரங்கில் இந்தியாவின் குரலுக்கு அதிக மதிப்பு ஏற்படும் என்பதை சீனா அறிந்து வைத்துள்ளது.

அதனால்தான் ஐக்கிய நாடுகள் சபை பாதுகாப்புக் கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராக இந்தியாவை ஆக்குவதற்கு பல்வேறு நாடுகள் ஆதரவுதந்த போதிலும் சீனா முட்டுக்கட்டை போட்டுவருகிறது.

இந்தியாவில் உள்ள பிரிவினைவாத இயக்கங்களுக்கு ஊக்கமளித்து இந்தியாவைக் குறைந்தது 20 நாடுகளாக உடைக்க வேண்டும் என அண்மையில் சீன இணையதளத்தில் அந்நாட்டு பாதுகாப்பு நிபுணர் ஒருவர் கருத்துத் தெரிவித்துள்ளார்.

ஜனநாயக ரீதியில் தேர்தல் நடத்தப்பட்டு அரசு அமைக்கப்பட்டுள்ள அருணாசலப் பிரதேசத்துக்கு, நமது குடியரசுத் தலைவரோ, பிரதமரோ சென்று வந்தால், சர்ச்சைக்குரிய பகுதி அது என சீனா அங்கலாய்க்கிறது.
இந்தியாவை தனது எதிரியாகவே கருதும் பாகிஸ்தானுக்கு ஏராளமான நிதி, தொழில்நுட்ப, ஆயுத உதவிகளைச் சீனா செய்து வருகிறது.

விடுதலைப் புலிகளை ஒடுக்குவதற்கு உதவி செய்கிறோம் என்ற போர்வையில் இலங்கைக்கு உதவி செய்து, அங்கு கடற்படைத் தளம் அமைத்துக் கொள்ள சீனா வழிவகை செய்து கொண்டுவிட்டது.
நேபாளத்தில் தனது சீடர்களை (மாவோயிஸ்டுகள்) வளர்த்துவிட்டு அங்கும் தனது மேலாண்மையை சீனா நிலைநிறுத்தி உள்ளது.

உலகப் புகழ்பெற்ற பசுபதிநாதர் கோயிலில் இந்திய அர்ச்சகர்கள் மீதான தாக்குதலில் கூட சீன மாவோயிஸ்டுகளின் பின்னணி இருப்பதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

சீனாவில் இரும்புத் திரை ஆட்சி நடந்து வருவதால் அது எந்த அளவுக்கு அணுகுண்டுகளையும், ஆயுதங்களையும் பெருக்கிவைத்துள்ளது என்பது யாருக்கும் தெரியாது.

இப்போது ஹெலிகாப்டர் அத்துமீறல், இந்திய எல்லைக்குள் புகுந்து மலைப்பகுதிகளில் சீனா என எழுதுதல் போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளது.
வரலாற்றில் இருந்து பாடம் கற்காதவர்கள் மீண்டும் அதையே அனுபவிக்க நேரிடும். இலங்கை, நேபாளம், பாகிஸ்தான் என இந்தியாவின் அண்டை நாடுகளில் கால் பதித்துள்ளதுடன் எல்லைகளிலும் இந்தியாவுக்கு பிரச்னைகளை சீனா உருவாக்கி வருகிறது.

இந்தச் சூழ்நிலையில், சீனாவுடன் அமைதிப் பேச்சுவார்த்தைகளை ஒருபுறம் நடத்திவந்தாலும், 1962-ல் ஏமாந்தது போல மீண்டும் ஒரு முறை ஏமாறாமல் இருக்கும் அளவுக்கு இந்தியா தனது எல்லைகளைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
(c) dinamani.com

அங்குலம் அங்குலமாக ஆக்கிரமிக்கும் சீனா!

அங்குலம் அங்குலமாக ஆக்கிரமிக்கும் சீனா!

First Published : 14 Sep 2009 12:43:08 AM IST
Last Updated :
லே (காஷ்மீர்), செப். 13: இந்திய எல்லைப் பகுதியில் சீனா அங்குலம் அங்குலமாக ஆக்கிரமிப்பதாக ஜம்மு காஷ்மீர் மாநில அரசு குற்றம்சாட்டியுள்ளது.

லடாக் பகுதியில் சப்தமே இல்லாமல் ஆக்கிரமிப்பு பணியை அரங்கேற்றும் சீன ராணுவம், சில கட்டுமானப் பணியையும் தொடங்கியுள்ளதாக காஷ்மீர் அரசு தெரிவித்துள்ளது.

இந்தியா-சீனா எல்லைப் பகுதிக்கு இடையே உள்ள கியா மலைப்பகுதியில் சீன ராணுவம் புகுந்து சிவப்பு சாயத்தை பூசிச் சென்றதாக அண்மையில் புகார் எழுந்தது.

இதுபோன்ற நிலையில் இந்திய பகுதியில் கட்டுமானப் பணியை சீனா தொடங்கியுள்ளதாக தற்போது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இரு நாடுகளுக்கு இடையே 1962-ம் ஆண்டு நடைபெற்ற போருக்குப் பின்னர் தற்போதுதான் இந்திய பகுதியை ஆக்கிரமித்து கட்டுமானப் பணியையும் சீனா தொடங்கியுள்ளதாக முதல்தடவையாகப் புகார் எழுந்துள்ளது.

லடாக்கில் காரகோரம் மலைத்தொடரை ஒட்டிய பகுதியில் தேவைப்படும் பட்சத்தில் கூடுதல் வீரர்களை நிறுத்தவும், எல்லைப் பகுதியில் இந்திய ராணுவ வீரர்களின் நடவடிக்கையை கண்காணிக்கக் கேமரா பொருத்தவும் சீனாவுக்கு உரிமை உண்டு. ஆனால், அந்த பகுதியில் கட்டுமானப் பணி செய்வதற்கு எவ்வித உரிமையும் கிடையாது என்று இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

காரகோரம் மலைத்தொடர் புவியல் ரீதியாக இந்தியாவுக்கு பாதுகாப்பு முக்கியத்துவம்வாய்ந்த பகுதியாகக் கருதப்படுகிறது. சீனாவின் தன்னாட்சி பிராந்தியமான ஜின்ஜியாங் பகுதிக்கும் இந்தியாவின் எல்லைப் பகுதிக்கும் மத்தியில் இந்த காரகோரம் மலைத்தொடர் உள்ளது.

இந்த பகுதியில் சீனாவின் அச்சுறுத்தல் உள்ளதால் இந்திய ராணுவ வீரர்கள் எப்போதுமே மிகவும் கவனமாக இருப்பர். மற்ற பகுதிகளைவிட இங்கு கூடுதல் வீரர்களும் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

எனினும், இதையும் மீறி சீன ராணுவ வீரர்கள் அவ்வப்போது அத்துமீறிய செயலில் ஈடுபட முயல்கின்றனர்.

சமீபகாலமாக அவர்கள் இந்திய பகுதியை துணிந்து ஆக்கிரமிக்கத் தொடங்கிவிட்டனர்.

சீன ராணுவத்தின் ஆக்கிரமிப்பு குறித்து ஆய்வு செய்ய ஜம்மு காஷ்மீர் மாநில அரசு ஓய்வு பெற்ற துணை கோட்ட ஆட்சியர் நியோமாவை நியமித்தது. அவரும் எல்லைப் பகுதிக்குச் சென்று ஆய்வு செய்து திரும்பிவிட்டார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், காரகோரம் மலைத்தொடரை ஒட்டிய பகுதியில் நாடோடி மக்கள் பல ஆண்டுகளாக வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் கால்நடைகளை வளர்த்து வாழ்க்கை நடத்தி வருகின்றனர். சமீபகாலமாக இந்த நாடோடி மக்களை சீன ராணுவத்தினர் மிரட்டுகின்றனர். அவர்களை இடத்தைக் காலி செய்யுமாறு அச்சுறுத்துகின்றனர். அந்த பகுதிகளை தங்களுக்கு சொந்தமானது என்றும் சீன ராணுவத்தினர் உரிமை கொண்டாடுகின்றனர் என்றார் நியோமா.

ராணுவம் மறுப்பு: இந்திய எல்லைப் பகுதியை சீனா அங்குலம் அங்குலமாக ஆக்கிரமிப்பதாக ஜம்மு காஷ்மீர் அரசு குற்றம்சாட்டியுள்ள நிலையில், இந்திய ராணுவம் இதை மறுத்துள்ளது.

எல்லைப் பகுதியில் சீனா கட்டுமானப் பணி எதையும் செய்யவில்லை. நிலத்தை தோண்டும் பணியில்தான் ஈடுபட்டுள்ளது. இந்த பணியைக்கூட அவர்களது பகுதியில்தான் செய்துவருகிறார்கள் என்று ராணுவ செய்தித்தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
(c) dinamani.com

Tuesday 8 September, 2009

பாஸ்மதி சாப்பாடு, பிரியாணி வேண்டும்: அடம் பிடிக்கும் கசாப்

பாஸ்மதி சாப்பாடு, பிரியாணி வேண்டும்: அடம் பிடிக்கும் கசாப்

First Published : 08 Sep 2009 12:05:03 AM IST

மும்பை, செப்.7: மும்பை தாக்குதல் சம்பவத்தில் முக்கியக் குற்றவாளியாகக் கருதப்படும் கசாப், சிறைச்சாலையில் தனக்கு பாஸ்மதி அரிசிச் சோறும் பிரியாணியும் வேண்டுமென்று அடம் பிடிக்கிறார். தற்போது கசாப், ஆர்த்தர் சாலை மத்திய சிறை வளாகத்தில் அடைக்கப்பட்டுள்ளார். இதற்கு முன் மட்டன் பிரியாணி வேண்டுமென்று கேட்டிருந்தார்.

இந்நிலையில் மசாலா உணவும், பாஸ்மதி அரிசிச் சோறும் வேண்டுமென்று தற்போது வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர் விரும்பும் உணவு தரப்படவில்லையெனில் மிகுந்த கோபமடைவதுடன், சிறை அலுவலர்களுக்கு ஒத்துழைப்பும் தருவதில்லை என்று சிறைத் துறை கண்காணிப்பாளர் ராஜேந்திரா தாம்னே திங்கள்கிழமை தெரிவித்தார். கடந்த சில தினங்களாக கசாப் சிறையில் மிகவும் மூர்க்கத்தனமாக நடந்து கொள்கிறார். தனக்கு அளிக்கப்படும் உணவை சாப்பிட மறுக்கிறார். நீதிமன்றத்துக்கு செல்வதற்கு உரிய நேரத்தில் உடையணிவதில்லை. அவரை கவனித்துக் கொள்ளும் சிறைத் துறை அலுவலர்களுக்கு ஒத்துழைப்புக் கொடுப்பதில்லை. கசாபின் முரட்டுத்தனம் குறித்து மும்பை தாக்குதல் சம்பவத்தை விசாரித்து வரும் சிறப்பு நீதிமன்றத்தில் சிறைத் துறை அதிகாரிகள் முறையிட்டுள்ளனர்.

சிறைச்சாலை விதிகளின்படிதான் அனைத்து சிறைவாசிகளுக்கும் உணவு அளிக்கப்பட்டு வருகிறது என்றார் தாம்னே. கசாபின் முரட்டுத்தனம் குறித்து நீதிமன்றம் இன்னும் விசாரணை நடத்தவில்லை. ஆயினும் கசாபின் ஒழுங்கீனமான நடவடிக்கைகளுக்காக அவரை நீதிமன்றம் முன்பே எச்சரித்துள்ளது. ஒழுக்கமாக நடக்கவில்லையெனில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்திருந்ததாக சிறைத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கசாப்பின் நடவடிக்கைகள் குறித்து நீதிபதி எம்.எல்.தஹாலியானி கண்டிக்கும்போதெல்லாம் கசாப் மிகவும் நல்ல பிள்ளையாக நடந்து கொள்கிறார். சில மணி நேரத்துக்குப் பிறகு மீண்டும் தனது குணத்தை காட்ட ஆரம்பித்து விடுகிறார் என்கின்றனர் சிறைத்துறை அதிகாரிகள். சிறையில் கசாப் அடைக்கப்பட்டுள்ள அறையில் ஒரு கேமரா பொருத்தப்பட்டுள்ளதாகவும், கசாபின் நடவடிக்கைகள் முழுவதும் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. அவரது அறையைச் சுற்றிலும் மூன்று கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

dinamani.com

தர்காவில் பாகிஸ்தான் கொடி !!

தர்காவில் பாகிஸ்தான் கொடியேற்றிய 4 பேர் கைது

First Published : 08 Sep 2009 12:06:44 AM IST

ஆனந்த் (குஜராத்), செப். 7: குஜராத் மாநிலம் ஆனந்தில் உள்ள உம்ரெத் நகர் பகுதியில் உள்ள தர்கா ஒன்றில் பாகிஸ்தான் தேசியக் கொடியேற்றிய 4 பேரை போலீஸôர் கைது செய்தனர்.

தர்காவில் உள்ள 2 வேப்ப மரங்களில் பாகிஸ்தான் கொடி பறக்க விடப்பட்டிருந்தது. இது குறித்து போலீஸýக்கு உள்ளூர் மக்கள் தகவல் தெரிவித்தனர். இது தொடர்பாக போலீஸôர் 5 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதில் தர்காவின் 2 அறங்காவலர்களும் அடங்குவர். மற்ற மூவரும் பள்ளிவாசல் ஊழியர்களாவர். இவர்களில் ஒரு அறங்காவலர் மற்றும் மூன்று ஊழியர்களையும் போலீஸôர் கைது செய்துள்ளனர். மற்றொரு அறங்காவலரின் உடல் நிலை சரியில்லாத காரணத்தால் அவர் கைது செய்யப்படவில்லை.

முதல் கட்ட விசாரணையில் இது பாகிஸ்தான் தேசியக் கொடி அல்ல என்றும், கொடியின் ஒரு பக்கத்தில் மட்டுமே அச்சிடப்பட்டிருந்ததாகவும் போலீஸôர் தெரிவித்தனர்.

dinamani.com

Monday 7 September, 2009

இதுதான் மலே'ஷரியா'!



இதுதான் மலே'ஷரியா'!


பீர் குடிச்சா பிரம்படி...

'பில்லா'வில் அஜீத்தும், 'குருவி'யில் வரும் 'கோச்சாவும்' மலேசியாவை மையமாகக் கொண்டு கள்ளக் கடத்தல், போதை என்று வில்லத்தனம் பண்ணுவ தாகக் காட்டுவதெல்லாம் தமிழ் சினிமாவில்தான். ஆனால், ஆங்காங்கே தலை எடுக்கும் வில்லத்தனங்களைக் கடுமையான சட்டங்கள் மூலம் கட்டுப்படுத்த முயன்றுகொண்டே இருக் கிறது மலேசிய அரசு.


மற்றவர்கள் விஷயத்தில் எப்படியோ... இஸ்லாமிய சமுதாயத்தினர் அப்படி இப்படி தப்பு பண்ணும்போதெல்லாம் அதிரடி புதிரடியாக தண்டனைகள் அளிக்கப்படும். இதற்கென்றே எல்லா மதத்தினரையும் சமமாக பாவிக்கும் சிவில் மற்றும் கிரி மினல் சட்டங்களைத் தவிர, ஷரியா சட்டங்களும் அமலாக்கப்படுகின்றன. இஸ்லாமிய சமுதாயத்தினர் மதம் விதிக்கும் கட்டுப்பாடுகளைத் தீவிரமாகக் கடைப் பிடிக்கிறார்களா என்று இந்த 'ஷரியா' சட்டம் கண்காணித்துக் கொண்டே இருக்கும். மலேசியாவில் இதற்கென்றே இயங்கும் ஷரியா கோர்ட்களும், பறக்கும் படை ரேஞ்சுக்கான ஷரியா பேட்ரோல் படையும்கூட இங்கு உண்டு.


அப்படித்தான் 'பீர் குடித்தார்' என்று என்பதற்காக 32 வயது மாடல் அழகியை லபக்கென்று பிடித்து, ஆறு பிரம்படி என தண்டனை விதித்தார்கள். சிங்கப்பூரில் குடும்பத்துடன் வசிக்கும் கார்த்திகா சாரி தேவி சுகர்ணோ என்ற அந்த இஸ்லாமியப் பெண், மலேசியாவில் உள்ள செராடிங்க் பகுதியில் ஜூலை மாதம், பீர் குடித்ததற்காக 5,000 ரிங்கெட் (இந்திய மதிப்பில் சுமார் 60,000 ரூபாய்) அபராதத்தோடு, பிரம்படி தண்டனையையும் நிறைவேற்ற 'இஸ்லாமிக் அதிகாரிகள்' சுகர்ணோவை வண்டியில் ஏற்றி சிறைச்சாலைக்கு அழைத்துச் சென்றனர். இதற்குள் அட்டார்னி ஜெனரல் அலுவலகத்திலிருந்து 'புனித ரம்ஜான் மாதத்தில் இந்தத் தண்டனையை நிறை வேற்ற வேண்டாம்' என்று வந்த உத்தரவால் தற்காலிகமாகத் தப்பி, வீடு திரும்பி... அந்த திக்திக் நாளுக்காக காத்திருக்கிறார்.

'நேஷனல் ஃபத்வா கவுன்சில்' வெளியிடுகிற கட்டுப்பாடுகளை அமல்படுத்துவதற்கென்றே சுறுசுறுவென சுற்றிக்கொண்டிருக்கும்ஷரியா கண் காணிப்புப் படையினர், நம்மூர் சிவசேனாக்காரர்கள் போலத்தான்! வித்தியாசமான மாரல் விஷயங்களை முன்வைக்கிறார்கள்.

பொது இடங்களில் கைகோத்து நிற்கும் கல்யாணமாகாத முஸ்லிம் ஜோடிகள், நைட் கிளப்களில் மது அருந்தும் முஸ்லிம்கள், பந்தயம், சூதாட்டங்களில் ஈடுபடும் முசல்மான்கள் ஆகியோரைக் கண்டிப்பதும், தண்டிப்பதும்தான் இவர்களுக்கு வேலை. ரம்ஜான் மாதத்தில், விரத நேரத்தில் உணவருந்தும் முஸ்லிம்களைப் பார்த்துவிட்டால், உண்டு இல்லை என்றாக்கிவிடுவார்கள். ஒரு முறை ஒரு அபார்ட்மென்ட்டில் ரெய்டு செய்து, கல்யாணமாகாத ஜோடிகளைக் கப்பென்று அமுக்கினார்கள்... அப்புறம் அவர்கள் முஸ்லிம்கள் இல்லையென்றும், அமெரிக் காவிலிருந்து வந்த கிறிஸ்துவ பார்ட்டிகள் என்றும் தெரியவந்தபோது மலேசிய அரசாங்கம் மன்னிப்புக் கேட்டது.

மதத்தின் கட்டுப்பாடுகள் அவசியம்தான் என்று உறுதியாகக் கூறும் இஸ்லாமிய அறிஞர்கள் சிலரேகூட, என்னென்ன தண்டனைகளுக்கு பிரம்படி பனிஷ்மென்ட் என்பதில் மாறுபட்ட கருத்துகள் சொல்ல ஆரம்பித்து இருக்கிறார்கள். பலாத்காரம், போதை மருந்துக் கடத்தல் ஆகியவற்றுக்கு மலேசிய கோர்ட்களே மிக கடுமையான தண்டனை கொடுக்கின்றன, பிரம்படி உட்பட!

சரி, மாடல் அழகி 'பீர்' குடித்த கதைக்கு வருவோம்... ஆகஸ்ட் 21-ம் தேதி தன்னை சந்திக்க வந்த பத்திரிகை யாளர்கள் சிலரிடம், தண்டனை குறித்துக் கருத்துச் சொல்ல உறுதியாக மறுத்துவிட்டாராம் கார்த்திகா. ''போன வருடம், ஹோட்டல் லவுஞ்சில் 'பீர்' குடித்துக் கொண்டிருக்கும்போது கையும் களவுமாக ஷரியா அதிகாரிகளிடம் பிடிபட்டீர்களா?'' என்று கேட்டபோது, கார்த்திகா சொன்னது வித்தியாசமானது -

''பிரம்படி தண்டனை சீக்கிரம் நிறைவேற்றப்பட வேண்டும் என்றே விரும்புகிறேன். காரணம், ஷரியா சட்டத்தை உயிராக மதிக்கிறேன்!'' என்றாராம்! கலங்கிப் போயிருந்த அவரைக் கட்டியணைத்தபடி, ''தண்டனை ஏன்தான் தள்ளிப்போகிறதோ... நாட்கள் ஓட ஓட, அந்த சிந்தனையிலேயே இவள் நிலைகுலைந்து போகிறாள்'' என்று சொல்லியிருக்கிறார் கார்த்திகாவின் சகோதரி ரத்னா. மலேசியா பார் கவுன்சிலின் தலைவரான ரகுநாத் கேசவசேனா, ''இந்தத் தீர்ப்பு எனக்கு அதிர்ச்சி அளிக்கிறது. என் கண்டனங்களை இஸ்லாமிய மதவாத அமைப்புக்கு எதிராகப் பதிவு செய்யப் போகிறேன்!'' என திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

அம்னெஸ்டி இன்டர்நேஷனல் உள்ளிட்ட உலகளாவிய அமைப்புகள், ''முஸ்லிம் மெஜாரிட்டி நாடாக இருந்தாலும், ஒரு பெண்ணுக்கு இத்தகைய தண்டனை தருவது இந்த நவீன யுகத்தில் மலேசியாவின் மதிப்பை குறைத்துவிடும்!'' என்று கூறியுள்ளனர். மத அடிப்படைவாதிகளோ, ''குடித்ததற்காக ஒரு முஸ்லிமை மூன்று வருடம் வரை சிறை யில் வைத்துப் பிரம்படி தரலாமென்று ஷரியா சட்டம் சொல்கிறது. முஸ்லிம் அல்லாதவர்கள் குடிப்பதைப் பற்றி கண்டு கொண்டோமா? மற்றவர்கள் குடிப்பதை குற்றமாகக் கருதாத மலேசிய பொது சட்டத்தை நாங்கள் குறைதான் சொன்னோமா?'' என்று சொல்லும் இவர்கள், ''பிரம்படி தண்டிப்பதற்கு அல்ல, போதிப்பற்கே. வழக்க மாக ஆண்களை அடிக்கும் பிரம்பைவிட மெல்லிய பிரம்பைத்தான் கார்த்திகாவுக்கு பயன்படுத்துவோம். பிரம்படி கொடுக்குமிடத்தில் ஆடையைக் களையச் சொல்லி மன வேதனையும் தரமாட்டோம்!'' என்கிறார்கள்.

இப்படி ஒருபக்கம் இஸ்லாமிய அமைப்புகள் கண்டிப்புடன் கண்காணிக்க, மறுபுறமோ... பொழுது சாய்ந்தாலே போதும், தெருவெங்கும் வண்ணமயமான விழாக்கோலம்தான். கோலாலம்பூரின் கேளிக்கைப் பகுதியான பாங்க்சார் உள்பட பப், கரோக்கி, டிஸ்கோ விடுதிகள் என்று வார நாட்களிலும் ஜாஸ் மியூஸிக்கில் அதிரும் இடங்கள் நிறைய!

கர்நாடகாவில் மங்களூரில் 'பப்'புக்குள் இருந்த பெண்களைத் தாக்கி மிரட்டிய ராம் சேனா அமைப்பை நினைவிருக்கும். அந்த விவகாரம் இந்திய மீடியாக்களில் புயல் கிளப்பியதும் மறந்திருக்காது. இந்த தாக்குதலுக்குக் காரணகர்த்தாவான முத்தலிக் என்பவருக்கு எதிராக அன்றைய மத்திய அமைச்சர் ரேணுகா சௌத்ரி காட்டிய வேகமும், ''பெண்களின் ஒழுக்கம் குறித்துப் பேச இந்த போலி மதவாதிகளுக்கு யார் அதிகாரம் தந்தது? பெண்ணுலகமே புறப்படு! பப் நிரப்பும் போராட்டம் நடத்துவோம்!'' என்று உரிமைக்குரல்கள் 'பீரி'ட்டன அப்போது..!

அது இந்தியா... ஆனால், இது மலேசியா!


copyright(c) vikatan.com

இந்திய எல்லைக்குள் சீன ராணுவம்

செப். 6: சமீபத்திய ஹெலிகாப்டர் ஊடுருவலைத் தொடர்ந்து சீன ராணுவம் சர்வதேச எல்லைக் கோட்டை மீறி லடாக் பிராந்தியத்தில் நுழைந்து அங்குள்ள மலைப் பகுதிகளில் பாறைகளில் சிவப்பு வண்ணத்தை பூசியுள்ளது.

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் கியா மலைப் பகுதி சர்வதேச எல்லையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் சீன ராணுவம் சுமார் 1.5 கி.மீ. தொலைவு ஊடுருவி பாறைகளில் சிவப்பு வண்ணத்தை ஸ்பிரே செய்து, அதில் சீனா என்று எழுதிவிட்டு திரும்பிச் சென்றுள்ளது.

22,420 அடி உயரமுள்ள கியா மலை, "பனிமலைகளின் ராணி' என்று அழைக்கப்படுகிறது. ஜம்மு காஷ்மீரில் உள்ள லடாக், இமாசல மாநிலத்தின் ஸ்பைடி, திபெத் ஆகிய மூன்றும் சந்திக்கும் இடத்தில் அமைந்துள்ளது. பிரிட்டிஷ் காலத்தில் எல்லை வரையறை செய்யப்பட்டு இந்தியா, சீனா இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லைக்கோடாக நிர்ணயிக்கப்பட்டது.

ஜுலு லாங் கணவாய் பகுதியில் ஊடுருவிய சீன ராணுவத்தினர் மலைப் பகுதிகளில் பாறைகள் மீது சிவப்பு வண்ணத்தை பூசியதுடன் அதன் மீது சீனா என்று எழுதியுள்ளனர். இதை கடந்த ஜூலை மாதம் 31-ம் தேதி இந்திய எல்லை ரோந்துப் படையினர் கண்டறிந்துள்ளனர்.

சீன ராணுவத்தின் இந்த நடவடிக்கை இந்திய அதிகாரிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்திய எல்லைப் பகுதிக்குள் சீன ராணுவம் அத்துமீறி ஊடுருவி சுமார் 1.5 கி.மீ தொலைவுக்கு பாறைகளில் சிவப்புச் சாயத்தை பூசியுள்ளது இதுவே முதன்முறையாகும் என்று அவர்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த ஜூன் மாதம் சீன ஹெலிகாப்டர்கள் அத்துமீறி கட்டுப்பாட்டு எல்லைக் கோடு அருகே இந்திய வான்வெளியில் பறந்ததுடன் காலாவதியான உணவுப் பொட்டலங்களையும் கீழே வீசியுள்ளன.

ஏற்கெனவே இந்தியா, சீனா இடையே எல்லைப் பிரச்னை நீடித்து வருகிறது. இரு நாடுகளும் இது தொடர்பாக வரைபடங்களைப் பரிமாறிக்கொண்டும் பிரச்னை தீர்ந்தபாடில்லை. இந்நிலையில் சீன ராணுவத்தின் இந்த அத்துமீறல் இந்திய அதிகாரிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.