திபெத் விவகாரங்கள் குறித்த தகவல்களை சேமித்திருக்கிறேன். இந்த தகவல்கள் அடிப்படையில் நீண்ட கட்டுரையொன்றை எழுத ஆவல்.
**********************
தினமணி செய்தி (1)
**********************
Monday March 17 2008 00:00 IST
வன்முறைக்கு எதிராக மக்கள் யுத்தம்: சீனா அறிவிப்பு
திபெத்தியர்களுக்கு எதிரான சீனாவின் நடவடிக்கையைக் கண்டித்து, இமாசல பிரதேசம் தர்மசாலாவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பேரணியில் பங்கேற்ற திபெத்தியர்கள்.
பெய்ஜிங், மார்ச். 16: திபெத்திய வன்முறையாளர்களுக்கு எதிராக மக்கள் யுத்தத்தை சீனா அறிவித்துள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை திபெத் தலைநகர் லாஸôவில் நடந்த வன்முறை சர்வதேச நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
"உலகின் கூரை' என்று அழைக்கப்படும் திபெத்திய தேசம் பல ஆண்டுகளாக சீனாவின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது.
அந்நாட்டில் ஏற்பட்ட அரசியல் குழப்பங்களைத் தொடர்ந்து, 1959-ம் ஆண்டு ஆன்மிகத் தலைவர் தலாய் லாமா இந்தியாவில் தஞ்சமடைந்தார்.
லாமாவிற்கு அடைக்கலம் கொடுத்ததன் விளைவாக, இந்திய-சீனா இடையிலான ராஜாங்க உறவுகள் கடுமையாக பாதிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, பல்வேறு அரசியல் சர்ச்சைகள் அரங்கேறிய போதும், தலாய் லாமா இந்தியாவிலேயே தங்கினார்.
சீனாவின் பிடியிலிருந்து திபெத்தை விடுவிக்கும் படி, பல்வேறு போராட்டங்களில் அவ்வப்போது புத்த பிக்குகள் ஈடுபட்டு வந்தாலும், அதனை இரும்புகரம் கொண்டு சீனா அடக்கி வந்தது.
இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை நடந்த போராட்டத்தின் போது ஏற்பட்ட கலவரத்தில் 10-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
அதன் தொடர்ச்சியாக, வங்கிகள் கொள்ளையடிக்கப்பட்டன. கடைகள் அடித்து நொறுக்கப்பட்டன. வணிக வளாகங்கள் சூறையாடப்பட்டன.
போராட்டம் கலவரமாக உருமாறியதற்கு சில விஷமிகளின் தூண்டுதலே காரணம் என அரசு குற்றம்சாட்டியுள்ளது.
இந்நிலையில், கலவரக்காரர்கள் தாங்களாகவே வந்து சரணடைய, திங்கள்கிழமை வரை திபெத் அரசு கெடு விதித்துள்ளது. அவ்வாறு சரணடையாவிட்டால், கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அந்நாடு எச்சரித்துள்ளது.
இந்த கலவரத்திற்கு பின்னணியில் தலாய் லாமா இருப்பதாக சீனா கருதுகிறது.
சீனாவின் இந்தக் குற்றச்சாட்டை வன்மையாக மறுத்துள்ள தலாய் லாமா, 1989-ம் ஆண்டு நடந்த மோசமான வன்முறைக்கு பிறகு, தான் முற்றிலும் அகிம்சை பாதைக்குத் திரும்பிவிட்டதாக தெரிவித்தார்.
தனது முடிவுக்கு சீன அதிகாரிகள் மற்றும் கல்வியாளர்கள் சிலரும் ஆதரவு தெரிவித்துள்ளதாக கூறிய லாமா, அவர்களது பெயரை வெளியிடவில்லை.
சீனா விடுதலை வழங்காவிட்டாலும், தன்னாட்சி அதிகாரத்தையாவது வழங்க வேண்டும் எனக் கூறினார்.
போராட்டத்தை நிறுத்தாமல் தொடர்ந்து நடத்த தனக்கு திபெத்தியர்களிடமிருந்து ஏராளமான தொலைபேசி அழைப்புகள் வருவதாகக் கூறிய அவர், இப்பிரச்னைக்கு இன்னும் தீர்வு காணப்படாமல் இருப்பதற்கு திபெத்தில் உள்ள சீன அதிகாரிகளே காரணம் என குற்றம்சாட்டினார்.
**********************
தினமணி செய்தி (2)
**********************
Monday March 17 2008 00:00 IST
திபெத் கலவரத்தில் 100-க்கும் அதிகமானோர் சாவு?: தலாய்லாமா அச்சம்
லண்டன், மார்ச். 16: திபெத் நாட்டில் நடைபெற்ற வன்முறையில் பலியானோர் எண்ணிக்கை 100-க்கும் அதிகமாக இருக்கும் என அஞ்சுவதாக தலாய்லாமா தெரிவித்துள்ளார்.
திபெத் தலைநகர் லாஸôவில் புத்த பிக்குகள் மற்றும் பொதுமக்கள் வெள்ளிக்கிழமை நடத்திய போராட்டத்தின் போது வன்முறை வெடித்தது.
இதில் கடைகள் அடித்து நொறுக்கப்பட்டன. பள்ளி, மருத்துவமனைகள் தீவைத்து கொளுத்தப்பட்டன. பொதுச் சொத்துகள் சூறையாடப்பட்டன. இந்த மோதலில் 10 பேர் உயிரிழந்ததாக சீனா தெரிவித்தது. இது குறித்து கருத்து தெரிவித்த, புத்த மதகுரு தலாய்லாமா, திபெத்திய வன்முறையில் நூற்றுக்கும் அதிகமானோர் பலியாகி இருக்கக்கூடும் என தெரிவித்தார்.
திபெத்திய விவகாரத்தில் சீனா தனது கொள்கையை மாற்றி கொண்டாலன்றி இப்பிரச்னை தீராது எனக் கூறினார்.
இருப்பினும், சீனாவின் பெய்ஜிங் நகரில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிக்கு தனது ஆதரவைத் தெரிவித்தார்.
லாமா கண்டனம்: திபெத்தில் நடைபெற்ற வன்முறையை, சீன ஆதரவு 11-வது பஞ்சன் லாமா கண்டித்துள்ளார்.
குறிப்பிட்ட சிலரால் வேண்டுமென்றே நிகழ்த்தப்பட்ட நாசவேலை இது.
கலவரத்தில் ஈடுபட்டவர்கள் தேச நலனுக்கு மட்டும் குந்தகம் விளைவிக்கவில்லை, புத்தரின் நோக்கத்தையே சிதைத்துவிட்டனர் என்று தெரிவித்துள்ளார்.
வன்முறை நடந்த லாஸô நகரில் இயல்பு நிலை திரும்பி, விரைவில் அமைதியும், ஸ்திரத்தன்மையும் ஏற்படும் என தான் நம்புவதாக அவர் கூறினார்.
அமைதி திரும்பியது:
லாஸô நகரில் அமைதி திரும்பியதாக அந்நகர மேயர் டோஜி சிஜூக் தெரிவித்துள்ளார்.
நாட்டில் தற்போது சட்டம்-ஒழுங்கு நிலை சீராகியுள்ளது. எனவே, நெருக்கடி நிலை அமல்படுத்தும் எண்ணம் அரசுக்கு இல்லை என்றார்.
சீனாவிடம் விளக்கம் கோரியது அமெரிக்கா:
திபெத்திய விவகாரத்தில் சீனா தனது கொள்கையை விளக்கு வேண்டும் என அமெரிக்கா கோரியுள்ளது.
இது தொடர்பாக அமெரிக்க வெளியுறவு அமைச்சர் கண்டோலிசா ரைஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், அமைதியாக நடைபெற்ற போராட்டத்தின் போது, திடீரென நிகழ்ந்த வன்முறை பலரது உயிரைக் குடித்துள்ளது வருத்தமளிப்பதாக உள்ளது எனக் கூறியுள்ளார்.
**********************
தினமணி செய்தி (3)
**********************
Wednesday March 19 2008 00:00 IST
திபெத் பிரச்னையில் இணக்கமான நிலைப்பாடு: இந்தியாவுக்கு சீனா பாராட்டு
பெய்ஜிங், மார்ச் 18: திபெத் பிரச்னையில் இந்தியாவின் நிலைப்பாட்டுக்கு சீனா பாராட்டு தெரிவித்துள்ளது.
திபெத் போராட்டக்காரர்களை இந்தியா கையாண்ட விதம் பாராட்டுக்குரியது என்று சீனாவின் பிரதமர் வென் ஜியாபாவ் கூறினார்.
இரண்டாம் முறையாக பிரதமராக பதவியேற்ற பின் செய்தியாளர்களுக்கு அவர் பேட்டியளித்தார்.
திபெத் பிரச்சினை இந்திய - சீன உறவில் மிகவும் சிக்கலான பிரச்னை என்றார் அவர்.
திபெத் பிரச்னையில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே ஏற்பட்டுள்ள ஒப்பந்தத்தை இந்தியா பின்பற்றும் என்று நம்புவதாக வென் கூறினார்.
திபெத் விவகாரத்தில் இந்தியா மிகவும் கவனத்துடன் செயல்படுகிறது என்று இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ள திபெத்திய ஆன்மிகத் தலைவர் தலாய் லாமா கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்தியாவில் சீனாவுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என்று திபெத்தியர்களை இந்திய அரசு கேட்டுக்கொண்டது.
**********************
தினமணி செய்தி (4)
**********************
Wednesday March 19 2008 00:00 IST
"திபெத் பிரச்னையில் ஐ.நா. தலையிடாது'
நியூயார்க், மார்ச் 18: திபெத் பிரச்னையில் ஐ.நா. தலையிடாது என்று கூறப்படுகிறது.
திபெத்தில் தற்போது ஏற்பட்டுள்ள கலவரங்களை அடுத்து அரசின் அடக்குமுறை நடவடிக்கைகளுக்கு கடிவாளம் போட ஐ.நா. சபை தலையிட வேண்டும் என்று திபெத்தின் ஆன்மிகத் தலைவர் தலாய் லாமா மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வன்முறைச் சம்பவங்கள் குறித்து ஐ.நா. சார்பில் தன்னிச்சையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அவர்கள் கோரினர். ஆனால் இந்த விஷயத்தில் ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சில் எந்த நடவடிக்கையும் எடுக்காது. சபையில் இது குறித்து விவாதமும் நடைபெறாது என்று கூறப்படுகிறது. திபெத் பிரச்னையால் சர்வதேச அமைதிக்கும் பாதுகாப்புக்கும் எந்த அச்சுறுத்தலும் இல்லை. எனவே இது குறித்து விவாதிக்கப்படாது. திங்கள்கிழமை கூட்டத்திலும் கூட இது குறித்து விவாதிக்கப்படவில்லை என்று ஐ.நா.வுக்கான சீனத் தூதர் தெரிவித்தார்.
ஐ.நா.வுக்கான ரஷியத் தூதர் விடாலி சுர்கின்னும் இதே கருத்தைத் தெரிவித்தார். மியான்மரில் ராணுவ அடக்குமுறையின்போது கூட ஐ.நா. தலையிடவில்லை என்பதையும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
ஆஸ்திரேலியாவில் போராட்டம்: ஆஸ்திரேலியாவில் உள்ள சீனத் தூதரகம் எதிரே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திபெத்தியர்களை போலீஸôர் பலப் பிரயோகம் செய்து கலைத்தனர். ஆர்ப்பாட்டக்காரர்கள் சீனக் கொடியை தீயில் எரித்தனர்.
ஆஸ்திரேயாவில் சிட்னி நகரில் உள்ள சீனத் தூதரகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட திபெத்தியர்கள் கூடி ஆர்ப்பாட்டம் நடத்தினர். திபெத் கொடியை அவர்கள் பிடித்திருந்தனர். சீனாவுக்கு எதிராக முழக்கமும் எழுப்பினர்.
**********************
தினமணி செய்தி (5)
**********************
Wednesday March 19 2008 00:00 IST
தலாய் லாமாவுடன் பேசத் தயார்: சீனா அறிவிப்பு
பெய்ஜிங், மார்ச் 18: தலாய் லாமாவுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக உள்ளோம் என்று சீனப் பிரதமர் வென் ஜியாபாவ் கூறினார்.
இரண்டாவது முறையாகப் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பின் செய்தியாளர்களுக்கு அவர் பேட்டியளித்தார்.
தனி நாடு கேட்பதைக் கைவிட்டு திபெத் சீனாவின் பகுதி என்று ஏற்றுக்கொள்ளும்பட்சத்தில் அவருடன் பேச சீனா தயாராக உள்ளது.
தைவானும், திபெத்தும் சீனாவின் பகுதிகள். இதை அவர்கள் ஒப்புக்கொள்ள வேண்டும் என்றார் அவர்.
தனி நாடு கோரிக்கையை அவர் கைவிட்டுவிட்டால் பேச்சுவார்த்தைக்கு அவருக்கு கதவுகள் திறந்தே இருக்கின்றன என்றார் ஜியாபாவ்.
திபெத்தில் சீன அரசு கலாசார படுகொலையில் ஈடுபட்டுள்ளது என்று தலாய் லாமா சொல்வதில் சிறிதும் உண்மை இல்லை.
திபெத் தலைநகர் லாசாவில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வன்முறைச் சம்பவங்களுக்கு பின்னணியில் இருந்து தூண்டிவிட்டது தலாய் லாமாவும் அவரது ஆதரவாளர்களும்தான் என்பதற்கு ஏராளமான ஆதாரங்கள் உள்ளன என்றார் ஜியாபாவ்.
லாசா வன்முறைச் சம்பவங்கள் குறித்து உலகம் முழுவதும் பரபரப்பாகப் பேசப்பட்டு வரும் நிலையில், சீனாவில் முக்கியத் தலைவர்கள் அது பற்றி ஏதும் பேசாமல் மெüனம் காத்தனர்.
ஆனால் முதல் முதலாக வென் ஜியாபாவ், அதுபற்றி பேசி தலாய் லாமாவை பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளார்.
**********************
தினமணி செய்தி (6)
**********************
Tuesday March 18 2008 00:00 IST
திபெத்துக்குச் செல்ல சீனா தடை
திபெத் விடுதலைப் போராட்டத்தின்போது சீன ராணுவத் தாக்குதலில் பலியான திபெத்தியர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக தைவான் தலைநகர் தைபேயில் திங்கள்கிழமை மெழுகுவர்த்தி ஏந்தியபடி கூடிய பொதுமக்கள்.
பெய்ஜிங், மார்ச் 17: வெளிநாட்டவர் திபெத்துக்குள் நுழைய சீன அரசு தடை விதித்துள்ளது.
அதுபோல் தற்போது அங்கிருக்கும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் உடனடியாக வெளியேற வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
திபெத் பல ஆண்டுகளாக சீனாவின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. சீனாவின் பிடியிலிருந்து திபெத்தை விடுவிக்கும் படி, பல்வேறு போராட்டங்களில் அவ்வப்போது புத்த பிக்குகள் ஈடுபட்டு வந்தாலும், அதனை இரும்புக்கரம் கொண்டு சீனா அடக்கி வந்தது.
அந்நாட்டில் ஏற்பட்ட அரசியல் குழப்பங்களைத் தொடர்ந்து, 1959-ம் ஆண்டு ஆன்மிகத் தலைவர் தலாய் லாமா இந்தியாவில் தஞ்சமடைந்தார்.
லாமாவிற்கு அடைக்கலம் கொடுத்ததன் விளைவாக, இந்திய-சீனா இடையிலான உறவு கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இருப்பினும் தலாய் லாமா இந்தியாவிலேயே தொடர்ந்து தங்கினார்.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் திபெத் தலைநகர் லாசாவில் கடும் வன்முறை வெடித்தது. புத்த பிக்குகள் மற்றும் பொதுமக்கள் வெள்ளிக்கிழமை நடத்திய போராட்டத்தின் போது வன்முறை வெடித்தது.
இதில் கடைகள் அடித்து நொறுக்கப்பட்டன. பள்ளி, மருத்துவமனைகள் தீவைத்து கொளுத்தப்பட்டன. பொதுச் சொத்துகள் சூறையாடப்பட்டன. இந்த மோதலில் 10 பேர் உயிரிழந்ததாக சீனா தெரிவித்தது.
வன்முறையாளர்களை ஒடுக்க மக்கள் யுத்தத்தை நடத்தப் போவதாக சீனா ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது.
இந்நிலையில் திபெத்துக்கு வெளிநாட்டவர் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதுபோல் தற்போது அங்கிருக்கும் வெளிநாட்டுப் பயணிகள் வெளியேறவும் உத்தரவிட்டுள்ளது.
பாதுகாப்பு கருதியே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். லாசாவில் வன்முறை கட்டுப்படுத்தப்பட்டாலும் தொடர்ந்து பதற்றம் நிலவுகிறது. 20 வெளிநாட்டுப் பயணிகள் அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். 3 ஜப்பானியர்கள் உள்பட 580 பேரை கலவரப் பகுதியிலிருந்து காப்பாற்றியதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர். கலவரத்தை ஒடுக்க சீன பாதுகாப்புப் படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே அமைதியாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது எந்த அடக்குமுறையும் ஏவப்படவில்லை என்று திபெத்திய பிராந்திய நிர்வாகம் மறுப்புத் தெரிவித்துள்ளது. போராட்டக்காரர்களை அடக்க துப்பாக்கிகளையோ அல்லது ஆயுதங்களையோ பயன்படுத்த வில்லை என்று திபெத் பிராந்திய அரசின் தலைவர் புன்கோக் தெரிவித்தார்.
ஆஸ்திரேலியா கவலை: திபெத்தில் நடைபெற்று வரும் வன்முறைச் சம்பவங்கள் குறித்து ஆஸ்திரேலிய பிரதமர் கெவின் ரூட் கவலை தெரிவித்தார்.
**********************
தினமணி செய்தி (7)
**********************
Tuesday March 18 2008 00:00 IST
திபெத்தியர் போராட்டம் எதிரொலி: எவரெஸ்ட் சிகரம் ஏறத் தடை
காத்மாண்டு, மார்ச் 17: உலகிலேயே உயரமான சிகரமான எவரெஸ்ட்டில் ஏறுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
திபெத் வழியாக எவரெஸ்ட் சிகரம் செல்ல சீனா தடை விதித்துள்ளது. அதுபோல் நேபாளம் வழியாகச் செல்ல நேபாளம் அரசும் தடை விதித்துள்ளது. சீனாவின் வேண்டுகோளை ஏற்று நேபாள அரசு இத் தடையை அறிவித்துள்ளது.
திபெத்தியர்களின் போராட்டத்தை அடுத்து இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ள நிலையில், திபெத்தியர்களால் பிரச்னை ஏற்படுவதைத் தவிர்க்கவே இந்தத் தடை என்று கூறப்படுகிறது.
இதற்கிடையே, சீனாவை எதிர்த்து நேபாளத்திலும் திபெத்தியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். காத்மாண்டுவில் உள்ள ஐ.நா. கட்டடம் எதிரே ஆயிரக்கணக்கான திபெத்தியர்கள் கூடி திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
திபெத்தில் படுகொலையை நிறுத்து என்று அவர்கள் முழக்கம் எழுப்பினர். போராட்டத்தில் கலந்து கொண்ட பெண்களின் கண்களில் நீர் வழிந்தது. அவர்கள் திபெத் கொடியை கையில் பிடித்திருந்தனர்.
ஆனால் போலீஸôர் அவர்கள் மீது திடீரென தடியடி நடத்தினர். இதில் போராட்டக்காரர்களில் பலருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
"போராட்டம் அமைதியான முறையில்தான் நடைபெற்றது. நாங்கள் போலீஸôரை அழைக்கவில்லை. ஆனால் ஆர்ப்பாட்டக்காரர்களைக் கலைக்க போலீஸôர் தேவையில்லாமல் பலத்தை பிரயோகித்தனர்' என்று ஐ.நா. அலுவலகத்தில் உள்ள அதிகாரிகள் தெரிவித்தனர்.
Wednesday, 19 March 2008
Friday, 14 March 2008
வஹ்ஹாபி(களு)க்கு நேசகுமார் திண்ணையில் எழுதிய பதில்கட்டுரை
கடந்த வாரங்களில் வஹ்ஹாபி எழுதிய அபத்த கட்டுரைகளுக்கு, தான் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலாக "நீ மட்டும் ஒழுங்கா ? உங்கிட்ட இல்லாத குறையா ?..." என்ற ரீதியில் கட் & பேஸ்ட் செய்து எழுதபட்ட கடிதங்களுக்கு, விடை கிடைக்காது என்றாலும் விடாப்பிடியாக தமது கேள்விகளுக்கு பதில்தரவேண்டி நேசக்குமார் எழுதிய இவ்வார கடிதம் கீழே
-------------------------------------
Thursday March 13, 2008
வஹ்ஹாபி வெளிப்படுத்தும் அடிப்படை முகமதிய மனோபாவம், இஸ்லாமிய தர்க்கம்
நேசகுமார்
பார்ப்பனர், சங்கராச்சாரி, சனாதனம் என்ற தலைப்பில் திரு.வஹ்ஹாபி அவர்கள் எழுதியிருந்த மடலை கடந்த வார திண்ணை இதழில் கண்டேன்
(http://www.thinnai.com/?module=displaystory&story_id=80803061&format=html). எனது கருத்துக்கள் சில:
1. இத்தனை மடல்களுக்குப் பிறகு //"பார்ப்பனர்", "சங்கராச்சாரி" என்ற இரு சொற்களையும் நானே என் கைகளால் எழுதியதாகவே வைத்துக் கொள்வோம்// என்று பெருந்தன்மையுடன் ஒப்புக் கொள்வது போல எழுதிவிட்டு அடுத்த பாராவிலேயே பார்ப்பனர் என்று இன்னின்ன இடங்களில் வருகிறது, சங்கராச்சார் என்று இன்னின்ன செய்திகளில் வந்திருக்கின்றது என்று வழக்கமான வல்லடி வழக்கை முன்வைத்துள்ளார் நம் சகோதரர் வஹ்ஹாபி.
2.
இங்கே இதை சொல்கின்ற நிலையில், இன்னொன்றையும் சுட்டிக் காட்டிட வேண்டியிருக்கிறது - இந்த எனது கடிதத்தின் நோக்கம் அதுவல்ல என்றாலும். எப்படி பார்ப்பனர் என்பது தன்னளவில் சாதாரணச் சொல்லாக இருந்து வசைச் சொல்லாக இன்று மாறிவிட்டதோ, அதே போன்று ஏராளமான சொற்கள் முன்பு சாதாரணமாகப் பிரயோகிக்கப் பட்டுவந்து பின்பு வசைச் சொல்லாக மாறிவிட்டன. 'பாண்டி' தொடங்கி 'பல்லி' வரை இந்த சொற்களெல்லாம் சாதாரணச் சொற்களே, ஆனால், இன்றைய சூழலில் அவை வசைச் சொற்களாகவே கருதப்படும். ஆனால், நான் சுட்டிக் காட்ட விழைந்தது அதுவல்ல. 'பார்ப்பனர்', 'சங்கராச்சாரி' போன்ற பதங்களை பயன்படுத்துவதை நான் ஆட்சேபிக்கவில்லை. இது போன்ற பதங்களை பயன்படுத்திக் கொண்டே தங்களை 'முகமதியர்', தங்களின் சாமியாரை/நபியை அவதூறாகப் பேசுகின்றார்கள் என்று ஓலமிடும் இரட்டை மனப்பான்மையையே நான் சுட்டிக் காட்டினேன். எனது கட்டுரையிலேயே இதை தெளிவாகவும் எழுதியிருந்தேன். பார்க்க:
//
தனியே இதை படிப்பவர்களுக்கு நான் பார்ப்பனர், சங்கராச்சாரி, சனாதனக் குட்டை போன்ற பதங்களைக் கண்டு மனம் புண்பட்டதாகத் தோன்றும். இப்படியெல்லாம் அவரோ மற்ற இஸ்லாமியர்களோ திட்டுவதில் எனக்கு தனிப்பட்ட முறையில் எந்த வருத்தமும், கோபமும் இல்லை. ஒரு ஜாதி அல்லது மதத்தை அவர் எப்படி வேண்டுமானாலும் சாடிவிட்டுப் போகட்டும்.//
http://www.thinnai.com/?module=displaystory&story_id=80802145&format=html
3.
நான் எந்த விஷயத்தை சுட்டிக் காட்டிட விழைந்தேனோ, அதே விஷயத்தை தெளிவாக தனது செயல்களின் மூலம், தர்க்கங்களின் மூலம், மனோபாவத்தின் மூலம், வார்த்தைகளின் மூலம் தெளிவுபடுத்தியுள்ளார் சகோதரர் வஹ்ஹாபி. பார்ப்பனர், சங்கராச்சாரி போன்ற பதங்களை பலர் பயன்படுத்தியுள்ளனர். இப்போது வஹ்ஹாபியுமே தான் பயன்படுத்தியுள்ளேன் என்று ஒப்புக் கொண்டுள்ளார். பின்பு, அதே அளவுகோளின் அடிப்படையில் 'முகமதியன்' என்று நம் தமிழ் இஸ்லாமியச் சகோதரர்களை அழைப்பதையோ, முஹமதை (வஹ்ஹாபி அவர்கள் உணர்ச்சிவயப்பட்டு தூய அரபியில் சல்-புல் என்றெல்லாம் அழைப்பதைவிட்டு) பற்றி பேசுவதையொ கண்டு வஹ்ஹாபியும் ஏனைய இஸ்லாமிஸ்ட் நண்பர்களும் குமுறுவது ஏன்?
4.
இங்கே திண்ணை வாசகர்கள் அனைவருக்கும் நான் வஹ்ஹாபியின் எள்ளல், வசவுகள், பயன்படுத்தியுள்ள வார்த்தைகள் (மனப்பிறழ்வு, அரைகுறை, மந்தி, பன்றி, இன்னபிற) ஆகியவற்றின் மூல காரணத்தை, தோற்றுவாயை சுட்டிக் காட்ட விரும்புகிறேன். இது அச்சு அசலாக முகமது 1400 வருடங்களுக்கு முன்பு பயன்படுத்திய அதே யுக்தி, தர்க்கம், வசவுகள். பிறந்ததிலிருந்து தினம் தினம் கேட்டு, ஓதி, சிந்தித்து வருகின்ற வஹ்ஹாபி போன்ற சகோதரர்கள் இப்படி மாறிப்போயுள்ளதில் என்ன வியப்பிருக்கின்றது? மவுலானா மவுதூதி தனது குத்பா பிரசங்கங்களில் சொல்வார், ஒரு முஃமீனான முஸ்லீம் தொழுகை செய்வது,இஸ்லாத்தின் மார்க்கக் கடமைகளை நிறைவேற்றுவது எல்லாமே ஜிகாதுக்கு அவரைத் தயார் படுத்திவிடும் என்று. எப்படி நன்கு படித்த, வசதியான குடும்பங்களிலிருந்து வருகின்றவர்கள் கூட பால் வார்க்கும் கையை பதம் பார்க்கும் நாகம் போல நமது சமுதாயத்துக்கெதிராக குண்டு வைக்கிறார்கள், கொலை செய்கிறார்கள், வன்முறையில் ஈடுபடுகின்றார்கள் என்றால் ... இப்படி மதத்தால் சிறுவயதிலிருந்து காழ்ப்பை கொட்டி வளர்க்கப் படுவதால்தான். இதை வஹ்ஹாபியின் வார்த்தைகளும் வசவுகளும் மெய்ப்பிக்கின்றன.
5.
அடிப்படையில் நான் சுட்ட வந்த விஷயத்தை கடைசியாகவாவது குறிப்பிட்டு பதிலெழுதியுள்ளார் சகோதரர் வஹ்ஹாபி. ஆனால், வழக்கம் போல நான் கேட்டதற்கு பதில் சொல்வதை விட்டு வசைகளை அள்ளி வீசுவதிலேயே கவனம் செலுத்தியிருக்கின்றார்:
///////...
அஹமதி உருவாக்கிய மதத்தைச் சார்ந்தவர்களை, பஹாவுல்லாஹ் உருவாக்கிய மதத்தைச் சார்ந்தவர்களை பஹாய்கள் என்றழைப்பதும் தவறுதானே? இவர்களையெல்லாம் முஸ்லீம்கள் என்று வஹ்ஹாபிகள் ஒப்புக் கொள்வார்களா?// என்று 27 பிப்ரவரி 2008 திண்ணை இதழில் கேள்வி கேட்கும் இவரை மனம் பிறழ்ந்து நிதானமிழந்தவர் என்று குறிப்பதில் தவறேதுமுண்டோ? இவருடைய பேதலிப்புக்கு எத்தனை முறைதான் எழுத்து வைத்தியம் பார்ப்பது?
அவர் கேள்வி வைத்த ஒரு வாரத்திற்கு முன்னரே (21 பிப்ரவரி 2008) பதிப்பான எனது திண்ணைக் கடிதத்திலிருந்து மீண்டும்:
"
ஒரே இறைவனான அல்லாஹ்வைத் தன் கடவுளாக ஏற்றுக் கொண்டு, ஆதம் முதல் ஈசா வரை அவன் அனுப்பி வைத்தத் தூதர்களைத் தொடர்த் தூதர்களாகவும் அத்தொடரில் இறுதியாக வந்தவர் முஹம்மது (ஸல்) அவர்கள்" என்றும் ஏற்றுக் கொண்டு, இஸ்லாமிய வாழ்க்கை நெறிகளைச் செயல் படுத்துகின்ற அனைவரும் முஸ்லிம்கள்தாம் என்ற வரையறை இஸ்லாத்தில் ஏற்கனவே உண்டு. எனவே, யாரும் யாரையும் 'முஸ்லிம்' என்று ஏற்றுக் கொள்ள வேண்டும்; அல்லது 'இல்லை' என்று மறுதலிக்க வேண்டும் போன்ற அறிவுரைகள் தருவதற்கு அரைகுறைகளின் தேவை முஸ்லிம்களுக்கு இல்லை.////////
6.
மேலே குறிப்பிட்டிருப்பது சிதைக்கப்பட்ட எனது கேள்வி தான் என்பதை ஒதுக்கிவிட்டு, கேள்விக்கு பதிலாக என்ன சொல்லியிருக்கின்றார் என்பதை பார்ப்போம். நான் ஒரு கேள்வி கேட்டால், அதற்கு 'இஸ்லாம்' இப்படித்தான் சொல்கிறது எனவே இதுவே உண்மை என்கிறார். இது தான் சராசரியான இஸ்லாமிஸ்ட் மனோபாவம், கட்டுப்படுத்தப்பட்ட மனதின் குறைபட்ட சிந்தனை. இப்படி என்றால் எந்தக் கேள்விக்குமே 'இஸ்லாம் இதைத் தான் சொல்கிறது' என்ற ஒரே வரியிலேயே பதில் சொல்லிவிடலாமே? உலகம் தட்டையா என்றால், அது தட்டை இல்லை என்று நிரூபிக்க வேண்டியதில்லை, இஸ்லாம் இப்படித்தான் சொல்கிறது என்று சொல்லிவிடலாம். மேலே நட்சத்திரம் தெரிகிறது என்றால், இல்லை மேலே கடவுள் விளக்குகளைத் தொங்கவிட்டிருக்கிறார் - ஏனென்றால் இஸ்லாம் இப்படித்தான் சொல்கிறது என்று சொல்லிவிடலாம். எல்லாக் கேள்விகளுக்கும் விடை, தனது மதத்தின் வாக்குகளில் உள்ளது என்று சொல்லிவிட்டு , ஒரு ரோபோ போல இருந்துவிடலாம். பின்பு சிந்தனை எதற்கு, தர்க்கம் எதற்கு, விவாதம் எதற்கு, அட திண்ணையில் எழுதுவது விவாதிப்பது எல்லாமே எதற்கு?
7.
ஆனால், இந்த அடிப்படைவாதிகளின் வாதம், தர்க்கம் எல்லாமே இப்படித்தான் இருக்கிறது. 'எனவே, யாரும் யாரையும் 'முஸ்லிம்' என்று ஏற்றுக் கொள்ள வேண்டும்; அல்லது 'இல்லை' என்று மறுதலிக்க வேண்டும் போன்ற அறிவுரைகள் தருவதற்கு அரைகுறைகளின் தேவை முஸ்லிம்களுக்கு இல்லை' என்றால், இந்த அறிவுரையைத் தானே முஹமது தன்னைச் சுற்றியிருந்தவருக்கு தந்தார்? முகமது சொன்னதைத் தானே 'அகமது' (அகமதியாக்களின் இறைத் தூதர்)சொன்னார்? பகாவுல்லாவும் இதைத்தானே சொன்னார்? முகமதை நம்புகிறவர்கள் தங்களை முஸ்லீம்கள் என்று அழைத்துக் கொள்ள உரிமை இருக்கும்போது, அகமதை நம்புகிறவர்கள் தங்களை முஸ்லீம்கள் என்று அழைத்துக் கொள்வதற்கும் உரிமை இருக்கிறது அல்லவா? ஈசா நபியின் வழியில் வந்தவராக தம்மை முகமது அறிவித்துக் கொள்ளும்போது, ஈசா நபி, முகமமது நபி வழியில் வந்தவராக, உண்மையான இஸ்லாத்தை முன்வைப்பவராக தன்னை அகமது அறிவித்துக் கொள்வதும் சரிதானே?
8.
இஸ்லாமே தன்னது என்று அகமதிக்கள் வாதிடும்போது, வகாபிகள் வந்து இஸ்லாம் இப்படி சொல்கிறது என்று சொல்வதன் முரண் வஹ்ஹாபிக்கு புரிபடவில்லை அல்லது அதை அவர் புரிந்து கொள்ள விரும்பவில்லை. ஏனெனில், அதை புரிந்து கொண்டுவிட்டால் பின்பு அவரது 'நம்பிக்கை' எனும் மண் கோட்டை கரைந்துவிடும் என்பது இதை 'ஈமான்' இல்லாமல் பார்க்கும் எந்த சுயசிந்தனையாளருக்கும் விளங்கிவிடும். ஆம், முகமது அவர்கள் தாம் இறைத்தூதர் என்பதற்கு இருக்கும் 'ஒரே வலுவான' ஆதாரம் அந்த மனிதரின் வாக்கு மட்டுமே. அந்த நம்பிக்கையை சிந்திக்காமலும், நிர்ப்பந்தத்தின் பேரிலும் ஏற்றுக் கொண்டு இன்றும் சிந்திக்காமல் அடிகரைந்து கொண்டிருப்பதையும் பார்க்க விரும்பாமல் மண்கோட்டையின் உப்பரிகையில் வன்முறைக் கனவுகளோடு உலவிக்கொண்டிருக்கும் வஹ்ஹாபிகளின் தடுமாற்றங்களும் தர்க்கங்களும் இன்று உலகில் எல்லோராலும் எள்ளி நகையாடப்படுவதில் வியப்பென்ன?
வஹ்ஹாபி சொல்லியிருக்கும் அதே விஷயத்தைல் ஒரு வார்த்தையை மட்டுமே மாற்றி அஹமதிக்கள் இப்படி சொன்னால் அதற்கு வஹ்ஹாபியின் பதிலென்ன?
**"
ஒரே இறைவனான அல்லாஹ்வைத் தன் கடவுளாக ஏற்றுக் கொண்டு, ஆதம் முதல் ஈசா வரை அவன் அனுப்பி வைத்தத் தூதர்களைத் தொடர்த் தூதர்களாகவும் அத்தொடரில் இறுதியாக வந்தவர் அஹம்மது (ஸல்) அவர்கள்" என்றும் ஏற்றுக் கொண்டு, இஸ்லாமிய வாழ்க்கை நெறிகளைச் செயல் படுத்துகின்ற அனைவரும் முஸ்லிம்கள்தாம் என்ற வரையறை இஸ்லாத்தில் ஏற்கனவே உண்டு. எனவே, யாரும் யாரையும் 'முஸ்லிம்' என்று ஏற்றுக் கொள்ள வேண்டும்; அல்லது 'இல்லை' என்று மறுதலிக்க வேண்டும் போன்ற அறிவுரைகள் தருவதற்கு அரைகுறைகளின் தேவை முஸ்லிம்களுக்கு இல்லை**
மேலே கண்டதில்
முகமதியர்களின் 'மு' வுக்குப் பதிலாகஅகமதியர்களின் 'அ' இருக்கிறது. ஒரு வார்த்தை மாற்றினால், அவர்கள் இவர்களுக்கு காபிர்களாகிறார்கள், இவர்கள் அவர்களுக்கு காபிர்களாக ஆகிறார்கள். எந்தப் பக்கம் அதிக வன்முறை இருக்கிறது, எந்தத் தரப்பு வன்முறையின் மூலமும், மூளைச் சலவையின் மூலமும், பெண்கள், பணம், அதிகாரம் போன்றவற்றின் மூலம் அதிக நபர்களை தன்னிடமிழுத்து வன்முறையின் மூலம் பிறரை 'அமைதிப் படுத்துகிறதோ' (இங்கே அமைதி என்பதற்கு அழித்தொழிப்பு என்று அர்த்தம் கொள்க), அதுவே உண்மையான, 'சத்திய மார்க்க'மாகிறது.
9.
ஆம், இதுதான் இஸ்லாத்தில் நிகழ்ந்தது. இதுவே வஹ்ஹாபியிசத்தில் நிகழ்ந்தது. இதுவே இஸ்லாத்தின் அடிப்படை. இந்த அஸ்திவாரக் கொணலிலிருந்துதான், அடிப்படையே வெறும் வன்முறையையும், மூடநம்பிக்கையையும், பின்பற்றுபவர்களை சிந்திக்கவிடாமல் இருப்பதையும் நம்பி இருப்பதால்தான் தொடர்ந்து உலகெங்கும் ஜிகாதி வன்முறை இன்று கோரத் தாண்டவமாடிக் கொண்டிருக்கிறது.
10.
கடைசியாக 'சனாதனக் குட்டை' என்று யார் சொன்னார்கள் என்று கூகிளிட்டுப் பார்த்தேன், கிடைக்கவில்லை. ஆனால், வஹ்ஹாபி மற்ற வார்த்தைகள் என்னென்னவெல்லாம் பயன்படுத்தியுள்ளார் என்பதற்கு ஒரு பெரும் லிஸ்டே இருக்கிறது. இஸ்லாமிஸ்டுகளின் தொடர்ந்த வசவுகளைப் பார்த்து வருகிற நேரத்தில் அதுவும் புனை பெயரில் பல வஹ்ஹாபிகள் ஒரே பாணியில் தொடர்ந்து எழுதிவருகிற நிலையில் இந்த வஹ்ஹாபி இந்த வார்த்தையை பயன்படுத்தியிருக்கலாம், அல்லது வேறெதாவது ஒரு வஹ்ஹாபி பயன்படுத்தியிருக்கலாம். நெருக்கித் தேடினால், யார் பயன்படுத்தியுள்ளார் என்பதையும் கூட கண்டுபிடித்துவிடலாம்தான். அதற்கு நான் முயல்வதற்கு முன்பு ஒரு விஷயத்தை வஹ்ஹாபி தெளிவுபடுத்திவிட வேண்டும். இப்படி ஒற்றை வார்த்தையை ஒரு மத அடிப்படைவாதிகளின் கும்பலில் எந்த அடிப்படைவாதி பயன்படுத்தினார் என்று சரியாக சொல்லத் தெரியாததனால் ஒருவருக்கு மனப்பிறழ்வு என்று முடிவு செய்துவிடலாமா என்பதை தெளிவுபடுத்தினால் நல்லது.
11.
இந்த விவாதம் நீண்டு கொண்டே போவதால், கெடு வைக்க விருப்பமில்லாவிட்டாலும் அடுத்த வாரத்திற்குள் வஹ்ஹாபி மேலே கண்டவற்றிற்கு, என் கேள்விகளுக்கு பதில் சொல்லிவிட்டால் மிகவும் சந்தோஷமடைவேன். ஏனெனில், குறைந்த பட்சம் ஈமான் கண்ணையும் இதயத்தையும் சிந்தனையையும் மறைக்காத பலருக்கு பாரிய விழிப்புணர்வும், எதிர்காலத்தில் தமிழில் இது குறித்த படைப்புகள் பல்கிப் பெருகிடவும் இந்த விவாதங்கள் வழி செய்யும் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது. ஏற்கெனவே தனியாக இருந்த இந்த இஸ்லாமிய விமர்சன மரம் இன்று தோப்பாகியுள்ளது - இந்த வஹ்ஹாபி சொல்லி குதூகலித்த பெரியாரிஸ்டுகளிலிருந்து, மார்க்ஸிஸ்டுகளிலிருந்து, இந்துத்துவிஸ்டுகளிலிருந்து, கிறித்துவர்களிலிருந்து இன்று தமிழ் வலையுலகில் ஆளாளுக்கு இஸ்லாம் பற்றிய எண்ணற்ற கேள்விகளை முன்வைக்கத் துவங்கியுள்ளனர், முதன்முறையாக இந்த ஆயிரம் ஆண்டுகளில் தமிழ்ச் சமுதாயம் இஸ்லாம் குறித்த பல கேள்விகளையும் விமர்சனங்களையும் பகிரங்கமாக முன்வைக்க ஆரம்பித்துள்ளது. இதற்கு 'அலிஃப் பே' வேண்டுமானால் சூஃபியிஸ நம்பிக்கைக்காரர்கள் போட்டிருக்கலாம். ஆனால், இதை பாரிய அளவில் எங்கும் பற்ற வைத்த புண்ணியம், வசவுகளையும் மிரட்டல்களையுமே நம்பி களத்தில் இறங்கிய அரை டஜன் வஹ்ஹாபிகளையே சாரும். வேகமாக வீசிய அலை கடந்து சென்றதை கற்பனையில் ஃப்ரீஸ் செய்து கடந்த காலகட்டத்திலேயே திளைத்திருக்க விரும்பும் 'தூய்மையான' இஸ்லாமிஸ்டுகள் தங்கள் காலடியில் மீண்டு செல்லும் அலையுடன் மண்ணும் கரைந்து செல்வதை அவதானிக்க முடியாவிட்டாலும், காலடி மண் மட்டுமல்ல, கோட்டையே கரைந்து கொண்டிருப்பதை வெளியிலிருந்து பார்க்கும் என்னால் அவதானிக்க முடிகிறது. பலரையும் சோம்பலிலிருந்து மீட்டு மீண்டும் மீண்டும் தமிழ் வாசக சமூகம் அறியாத பல தகவல்களை, கோணங்களை வெளிக்கொணர வைப்பதையும் எல்லாம் வல்ல இறையின் செயலாகவே நான் காண்கிறேன். ஒரு பெரிய தாழ்வுக்குப் பின்னால் மகத்தான உயர்வுகளை மனிதகுலம் சந்திக்கும் என்ற இறையின்/இயற்கையின் விதி இங்கே செயல்படுவதையும் காண்கிறேன்.
வஹ்ஹாபி அவர்களின் பதிலை எதிர்நோக்கியபடி - மாறா அன்புடனும் நம்பிக்கையுடனும்,
நேசகுமார்.
-------------------------------------
Thursday March 13, 2008
வஹ்ஹாபி வெளிப்படுத்தும் அடிப்படை முகமதிய மனோபாவம், இஸ்லாமிய தர்க்கம்
நேசகுமார்
பார்ப்பனர், சங்கராச்சாரி, சனாதனம் என்ற தலைப்பில் திரு.வஹ்ஹாபி அவர்கள் எழுதியிருந்த மடலை கடந்த வார திண்ணை இதழில் கண்டேன்
(http://www.thinnai.com/?module=displaystory&story_id=80803061&format=html). எனது கருத்துக்கள் சில:
1. இத்தனை மடல்களுக்குப் பிறகு //"பார்ப்பனர்", "சங்கராச்சாரி" என்ற இரு சொற்களையும் நானே என் கைகளால் எழுதியதாகவே வைத்துக் கொள்வோம்// என்று பெருந்தன்மையுடன் ஒப்புக் கொள்வது போல எழுதிவிட்டு அடுத்த பாராவிலேயே பார்ப்பனர் என்று இன்னின்ன இடங்களில் வருகிறது, சங்கராச்சார் என்று இன்னின்ன செய்திகளில் வந்திருக்கின்றது என்று வழக்கமான வல்லடி வழக்கை முன்வைத்துள்ளார் நம் சகோதரர் வஹ்ஹாபி.
2.
இங்கே இதை சொல்கின்ற நிலையில், இன்னொன்றையும் சுட்டிக் காட்டிட வேண்டியிருக்கிறது - இந்த எனது கடிதத்தின் நோக்கம் அதுவல்ல என்றாலும். எப்படி பார்ப்பனர் என்பது தன்னளவில் சாதாரணச் சொல்லாக இருந்து வசைச் சொல்லாக இன்று மாறிவிட்டதோ, அதே போன்று ஏராளமான சொற்கள் முன்பு சாதாரணமாகப் பிரயோகிக்கப் பட்டுவந்து பின்பு வசைச் சொல்லாக மாறிவிட்டன. 'பாண்டி' தொடங்கி 'பல்லி' வரை இந்த சொற்களெல்லாம் சாதாரணச் சொற்களே, ஆனால், இன்றைய சூழலில் அவை வசைச் சொற்களாகவே கருதப்படும். ஆனால், நான் சுட்டிக் காட்ட விழைந்தது அதுவல்ல. 'பார்ப்பனர்', 'சங்கராச்சாரி' போன்ற பதங்களை பயன்படுத்துவதை நான் ஆட்சேபிக்கவில்லை. இது போன்ற பதங்களை பயன்படுத்திக் கொண்டே தங்களை 'முகமதியர்', தங்களின் சாமியாரை/நபியை அவதூறாகப் பேசுகின்றார்கள் என்று ஓலமிடும் இரட்டை மனப்பான்மையையே நான் சுட்டிக் காட்டினேன். எனது கட்டுரையிலேயே இதை தெளிவாகவும் எழுதியிருந்தேன். பார்க்க:
//
தனியே இதை படிப்பவர்களுக்கு நான் பார்ப்பனர், சங்கராச்சாரி, சனாதனக் குட்டை போன்ற பதங்களைக் கண்டு மனம் புண்பட்டதாகத் தோன்றும். இப்படியெல்லாம் அவரோ மற்ற இஸ்லாமியர்களோ திட்டுவதில் எனக்கு தனிப்பட்ட முறையில் எந்த வருத்தமும், கோபமும் இல்லை. ஒரு ஜாதி அல்லது மதத்தை அவர் எப்படி வேண்டுமானாலும் சாடிவிட்டுப் போகட்டும்.//
http://www.thinnai.com/?module=displaystory&story_id=80802145&format=html
3.
நான் எந்த விஷயத்தை சுட்டிக் காட்டிட விழைந்தேனோ, அதே விஷயத்தை தெளிவாக தனது செயல்களின் மூலம், தர்க்கங்களின் மூலம், மனோபாவத்தின் மூலம், வார்த்தைகளின் மூலம் தெளிவுபடுத்தியுள்ளார் சகோதரர் வஹ்ஹாபி. பார்ப்பனர், சங்கராச்சாரி போன்ற பதங்களை பலர் பயன்படுத்தியுள்ளனர். இப்போது வஹ்ஹாபியுமே தான் பயன்படுத்தியுள்ளேன் என்று ஒப்புக் கொண்டுள்ளார். பின்பு, அதே அளவுகோளின் அடிப்படையில் 'முகமதியன்' என்று நம் தமிழ் இஸ்லாமியச் சகோதரர்களை அழைப்பதையோ, முஹமதை (வஹ்ஹாபி அவர்கள் உணர்ச்சிவயப்பட்டு தூய அரபியில் சல்-புல் என்றெல்லாம் அழைப்பதைவிட்டு) பற்றி பேசுவதையொ கண்டு வஹ்ஹாபியும் ஏனைய இஸ்லாமிஸ்ட் நண்பர்களும் குமுறுவது ஏன்?
4.
இங்கே திண்ணை வாசகர்கள் அனைவருக்கும் நான் வஹ்ஹாபியின் எள்ளல், வசவுகள், பயன்படுத்தியுள்ள வார்த்தைகள் (மனப்பிறழ்வு, அரைகுறை, மந்தி, பன்றி, இன்னபிற) ஆகியவற்றின் மூல காரணத்தை, தோற்றுவாயை சுட்டிக் காட்ட விரும்புகிறேன். இது அச்சு அசலாக முகமது 1400 வருடங்களுக்கு முன்பு பயன்படுத்திய அதே யுக்தி, தர்க்கம், வசவுகள். பிறந்ததிலிருந்து தினம் தினம் கேட்டு, ஓதி, சிந்தித்து வருகின்ற வஹ்ஹாபி போன்ற சகோதரர்கள் இப்படி மாறிப்போயுள்ளதில் என்ன வியப்பிருக்கின்றது? மவுலானா மவுதூதி தனது குத்பா பிரசங்கங்களில் சொல்வார், ஒரு முஃமீனான முஸ்லீம் தொழுகை செய்வது,இஸ்லாத்தின் மார்க்கக் கடமைகளை நிறைவேற்றுவது எல்லாமே ஜிகாதுக்கு அவரைத் தயார் படுத்திவிடும் என்று. எப்படி நன்கு படித்த, வசதியான குடும்பங்களிலிருந்து வருகின்றவர்கள் கூட பால் வார்க்கும் கையை பதம் பார்க்கும் நாகம் போல நமது சமுதாயத்துக்கெதிராக குண்டு வைக்கிறார்கள், கொலை செய்கிறார்கள், வன்முறையில் ஈடுபடுகின்றார்கள் என்றால் ... இப்படி மதத்தால் சிறுவயதிலிருந்து காழ்ப்பை கொட்டி வளர்க்கப் படுவதால்தான். இதை வஹ்ஹாபியின் வார்த்தைகளும் வசவுகளும் மெய்ப்பிக்கின்றன.
5.
அடிப்படையில் நான் சுட்ட வந்த விஷயத்தை கடைசியாகவாவது குறிப்பிட்டு பதிலெழுதியுள்ளார் சகோதரர் வஹ்ஹாபி. ஆனால், வழக்கம் போல நான் கேட்டதற்கு பதில் சொல்வதை விட்டு வசைகளை அள்ளி வீசுவதிலேயே கவனம் செலுத்தியிருக்கின்றார்:
///////...
அஹமதி உருவாக்கிய மதத்தைச் சார்ந்தவர்களை, பஹாவுல்லாஹ் உருவாக்கிய மதத்தைச் சார்ந்தவர்களை பஹாய்கள் என்றழைப்பதும் தவறுதானே? இவர்களையெல்லாம் முஸ்லீம்கள் என்று வஹ்ஹாபிகள் ஒப்புக் கொள்வார்களா?// என்று 27 பிப்ரவரி 2008 திண்ணை இதழில் கேள்வி கேட்கும் இவரை மனம் பிறழ்ந்து நிதானமிழந்தவர் என்று குறிப்பதில் தவறேதுமுண்டோ? இவருடைய பேதலிப்புக்கு எத்தனை முறைதான் எழுத்து வைத்தியம் பார்ப்பது?
அவர் கேள்வி வைத்த ஒரு வாரத்திற்கு முன்னரே (21 பிப்ரவரி 2008) பதிப்பான எனது திண்ணைக் கடிதத்திலிருந்து மீண்டும்:
"
ஒரே இறைவனான அல்லாஹ்வைத் தன் கடவுளாக ஏற்றுக் கொண்டு, ஆதம் முதல் ஈசா வரை அவன் அனுப்பி வைத்தத் தூதர்களைத் தொடர்த் தூதர்களாகவும் அத்தொடரில் இறுதியாக வந்தவர் முஹம்மது (ஸல்) அவர்கள்" என்றும் ஏற்றுக் கொண்டு, இஸ்லாமிய வாழ்க்கை நெறிகளைச் செயல் படுத்துகின்ற அனைவரும் முஸ்லிம்கள்தாம் என்ற வரையறை இஸ்லாத்தில் ஏற்கனவே உண்டு. எனவே, யாரும் யாரையும் 'முஸ்லிம்' என்று ஏற்றுக் கொள்ள வேண்டும்; அல்லது 'இல்லை' என்று மறுதலிக்க வேண்டும் போன்ற அறிவுரைகள் தருவதற்கு அரைகுறைகளின் தேவை முஸ்லிம்களுக்கு இல்லை.////////
6.
மேலே குறிப்பிட்டிருப்பது சிதைக்கப்பட்ட எனது கேள்வி தான் என்பதை ஒதுக்கிவிட்டு, கேள்விக்கு பதிலாக என்ன சொல்லியிருக்கின்றார் என்பதை பார்ப்போம். நான் ஒரு கேள்வி கேட்டால், அதற்கு 'இஸ்லாம்' இப்படித்தான் சொல்கிறது எனவே இதுவே உண்மை என்கிறார். இது தான் சராசரியான இஸ்லாமிஸ்ட் மனோபாவம், கட்டுப்படுத்தப்பட்ட மனதின் குறைபட்ட சிந்தனை. இப்படி என்றால் எந்தக் கேள்விக்குமே 'இஸ்லாம் இதைத் தான் சொல்கிறது' என்ற ஒரே வரியிலேயே பதில் சொல்லிவிடலாமே? உலகம் தட்டையா என்றால், அது தட்டை இல்லை என்று நிரூபிக்க வேண்டியதில்லை, இஸ்லாம் இப்படித்தான் சொல்கிறது என்று சொல்லிவிடலாம். மேலே நட்சத்திரம் தெரிகிறது என்றால், இல்லை மேலே கடவுள் விளக்குகளைத் தொங்கவிட்டிருக்கிறார் - ஏனென்றால் இஸ்லாம் இப்படித்தான் சொல்கிறது என்று சொல்லிவிடலாம். எல்லாக் கேள்விகளுக்கும் விடை, தனது மதத்தின் வாக்குகளில் உள்ளது என்று சொல்லிவிட்டு , ஒரு ரோபோ போல இருந்துவிடலாம். பின்பு சிந்தனை எதற்கு, தர்க்கம் எதற்கு, விவாதம் எதற்கு, அட திண்ணையில் எழுதுவது விவாதிப்பது எல்லாமே எதற்கு?
7.
ஆனால், இந்த அடிப்படைவாதிகளின் வாதம், தர்க்கம் எல்லாமே இப்படித்தான் இருக்கிறது. 'எனவே, யாரும் யாரையும் 'முஸ்லிம்' என்று ஏற்றுக் கொள்ள வேண்டும்; அல்லது 'இல்லை' என்று மறுதலிக்க வேண்டும் போன்ற அறிவுரைகள் தருவதற்கு அரைகுறைகளின் தேவை முஸ்லிம்களுக்கு இல்லை' என்றால், இந்த அறிவுரையைத் தானே முஹமது தன்னைச் சுற்றியிருந்தவருக்கு தந்தார்? முகமது சொன்னதைத் தானே 'அகமது' (அகமதியாக்களின் இறைத் தூதர்)சொன்னார்? பகாவுல்லாவும் இதைத்தானே சொன்னார்? முகமதை நம்புகிறவர்கள் தங்களை முஸ்லீம்கள் என்று அழைத்துக் கொள்ள உரிமை இருக்கும்போது, அகமதை நம்புகிறவர்கள் தங்களை முஸ்லீம்கள் என்று அழைத்துக் கொள்வதற்கும் உரிமை இருக்கிறது அல்லவா? ஈசா நபியின் வழியில் வந்தவராக தம்மை முகமது அறிவித்துக் கொள்ளும்போது, ஈசா நபி, முகமமது நபி வழியில் வந்தவராக, உண்மையான இஸ்லாத்தை முன்வைப்பவராக தன்னை அகமது அறிவித்துக் கொள்வதும் சரிதானே?
8.
இஸ்லாமே தன்னது என்று அகமதிக்கள் வாதிடும்போது, வகாபிகள் வந்து இஸ்லாம் இப்படி சொல்கிறது என்று சொல்வதன் முரண் வஹ்ஹாபிக்கு புரிபடவில்லை அல்லது அதை அவர் புரிந்து கொள்ள விரும்பவில்லை. ஏனெனில், அதை புரிந்து கொண்டுவிட்டால் பின்பு அவரது 'நம்பிக்கை' எனும் மண் கோட்டை கரைந்துவிடும் என்பது இதை 'ஈமான்' இல்லாமல் பார்க்கும் எந்த சுயசிந்தனையாளருக்கும் விளங்கிவிடும். ஆம், முகமது அவர்கள் தாம் இறைத்தூதர் என்பதற்கு இருக்கும் 'ஒரே வலுவான' ஆதாரம் அந்த மனிதரின் வாக்கு மட்டுமே. அந்த நம்பிக்கையை சிந்திக்காமலும், நிர்ப்பந்தத்தின் பேரிலும் ஏற்றுக் கொண்டு இன்றும் சிந்திக்காமல் அடிகரைந்து கொண்டிருப்பதையும் பார்க்க விரும்பாமல் மண்கோட்டையின் உப்பரிகையில் வன்முறைக் கனவுகளோடு உலவிக்கொண்டிருக்கும் வஹ்ஹாபிகளின் தடுமாற்றங்களும் தர்க்கங்களும் இன்று உலகில் எல்லோராலும் எள்ளி நகையாடப்படுவதில் வியப்பென்ன?
வஹ்ஹாபி சொல்லியிருக்கும் அதே விஷயத்தைல் ஒரு வார்த்தையை மட்டுமே மாற்றி அஹமதிக்கள் இப்படி சொன்னால் அதற்கு வஹ்ஹாபியின் பதிலென்ன?
**"
ஒரே இறைவனான அல்லாஹ்வைத் தன் கடவுளாக ஏற்றுக் கொண்டு, ஆதம் முதல் ஈசா வரை அவன் அனுப்பி வைத்தத் தூதர்களைத் தொடர்த் தூதர்களாகவும் அத்தொடரில் இறுதியாக வந்தவர் அஹம்மது (ஸல்) அவர்கள்" என்றும் ஏற்றுக் கொண்டு, இஸ்லாமிய வாழ்க்கை நெறிகளைச் செயல் படுத்துகின்ற அனைவரும் முஸ்லிம்கள்தாம் என்ற வரையறை இஸ்லாத்தில் ஏற்கனவே உண்டு. எனவே, யாரும் யாரையும் 'முஸ்லிம்' என்று ஏற்றுக் கொள்ள வேண்டும்; அல்லது 'இல்லை' என்று மறுதலிக்க வேண்டும் போன்ற அறிவுரைகள் தருவதற்கு அரைகுறைகளின் தேவை முஸ்லிம்களுக்கு இல்லை**
மேலே கண்டதில்
முகமதியர்களின் 'மு' வுக்குப் பதிலாகஅகமதியர்களின் 'அ' இருக்கிறது. ஒரு வார்த்தை மாற்றினால், அவர்கள் இவர்களுக்கு காபிர்களாகிறார்கள், இவர்கள் அவர்களுக்கு காபிர்களாக ஆகிறார்கள். எந்தப் பக்கம் அதிக வன்முறை இருக்கிறது, எந்தத் தரப்பு வன்முறையின் மூலமும், மூளைச் சலவையின் மூலமும், பெண்கள், பணம், அதிகாரம் போன்றவற்றின் மூலம் அதிக நபர்களை தன்னிடமிழுத்து வன்முறையின் மூலம் பிறரை 'அமைதிப் படுத்துகிறதோ' (இங்கே அமைதி என்பதற்கு அழித்தொழிப்பு என்று அர்த்தம் கொள்க), அதுவே உண்மையான, 'சத்திய மார்க்க'மாகிறது.
9.
ஆம், இதுதான் இஸ்லாத்தில் நிகழ்ந்தது. இதுவே வஹ்ஹாபியிசத்தில் நிகழ்ந்தது. இதுவே இஸ்லாத்தின் அடிப்படை. இந்த அஸ்திவாரக் கொணலிலிருந்துதான், அடிப்படையே வெறும் வன்முறையையும், மூடநம்பிக்கையையும், பின்பற்றுபவர்களை சிந்திக்கவிடாமல் இருப்பதையும் நம்பி இருப்பதால்தான் தொடர்ந்து உலகெங்கும் ஜிகாதி வன்முறை இன்று கோரத் தாண்டவமாடிக் கொண்டிருக்கிறது.
10.
கடைசியாக 'சனாதனக் குட்டை' என்று யார் சொன்னார்கள் என்று கூகிளிட்டுப் பார்த்தேன், கிடைக்கவில்லை. ஆனால், வஹ்ஹாபி மற்ற வார்த்தைகள் என்னென்னவெல்லாம் பயன்படுத்தியுள்ளார் என்பதற்கு ஒரு பெரும் லிஸ்டே இருக்கிறது. இஸ்லாமிஸ்டுகளின் தொடர்ந்த வசவுகளைப் பார்த்து வருகிற நேரத்தில் அதுவும் புனை பெயரில் பல வஹ்ஹாபிகள் ஒரே பாணியில் தொடர்ந்து எழுதிவருகிற நிலையில் இந்த வஹ்ஹாபி இந்த வார்த்தையை பயன்படுத்தியிருக்கலாம், அல்லது வேறெதாவது ஒரு வஹ்ஹாபி பயன்படுத்தியிருக்கலாம். நெருக்கித் தேடினால், யார் பயன்படுத்தியுள்ளார் என்பதையும் கூட கண்டுபிடித்துவிடலாம்தான். அதற்கு நான் முயல்வதற்கு முன்பு ஒரு விஷயத்தை வஹ்ஹாபி தெளிவுபடுத்திவிட வேண்டும். இப்படி ஒற்றை வார்த்தையை ஒரு மத அடிப்படைவாதிகளின் கும்பலில் எந்த அடிப்படைவாதி பயன்படுத்தினார் என்று சரியாக சொல்லத் தெரியாததனால் ஒருவருக்கு மனப்பிறழ்வு என்று முடிவு செய்துவிடலாமா என்பதை தெளிவுபடுத்தினால் நல்லது.
11.
இந்த விவாதம் நீண்டு கொண்டே போவதால், கெடு வைக்க விருப்பமில்லாவிட்டாலும் அடுத்த வாரத்திற்குள் வஹ்ஹாபி மேலே கண்டவற்றிற்கு, என் கேள்விகளுக்கு பதில் சொல்லிவிட்டால் மிகவும் சந்தோஷமடைவேன். ஏனெனில், குறைந்த பட்சம் ஈமான் கண்ணையும் இதயத்தையும் சிந்தனையையும் மறைக்காத பலருக்கு பாரிய விழிப்புணர்வும், எதிர்காலத்தில் தமிழில் இது குறித்த படைப்புகள் பல்கிப் பெருகிடவும் இந்த விவாதங்கள் வழி செய்யும் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது. ஏற்கெனவே தனியாக இருந்த இந்த இஸ்லாமிய விமர்சன மரம் இன்று தோப்பாகியுள்ளது - இந்த வஹ்ஹாபி சொல்லி குதூகலித்த பெரியாரிஸ்டுகளிலிருந்து, மார்க்ஸிஸ்டுகளிலிருந்து, இந்துத்துவிஸ்டுகளிலிருந்து, கிறித்துவர்களிலிருந்து இன்று தமிழ் வலையுலகில் ஆளாளுக்கு இஸ்லாம் பற்றிய எண்ணற்ற கேள்விகளை முன்வைக்கத் துவங்கியுள்ளனர், முதன்முறையாக இந்த ஆயிரம் ஆண்டுகளில் தமிழ்ச் சமுதாயம் இஸ்லாம் குறித்த பல கேள்விகளையும் விமர்சனங்களையும் பகிரங்கமாக முன்வைக்க ஆரம்பித்துள்ளது. இதற்கு 'அலிஃப் பே' வேண்டுமானால் சூஃபியிஸ நம்பிக்கைக்காரர்கள் போட்டிருக்கலாம். ஆனால், இதை பாரிய அளவில் எங்கும் பற்ற வைத்த புண்ணியம், வசவுகளையும் மிரட்டல்களையுமே நம்பி களத்தில் இறங்கிய அரை டஜன் வஹ்ஹாபிகளையே சாரும். வேகமாக வீசிய அலை கடந்து சென்றதை கற்பனையில் ஃப்ரீஸ் செய்து கடந்த காலகட்டத்திலேயே திளைத்திருக்க விரும்பும் 'தூய்மையான' இஸ்லாமிஸ்டுகள் தங்கள் காலடியில் மீண்டு செல்லும் அலையுடன் மண்ணும் கரைந்து செல்வதை அவதானிக்க முடியாவிட்டாலும், காலடி மண் மட்டுமல்ல, கோட்டையே கரைந்து கொண்டிருப்பதை வெளியிலிருந்து பார்க்கும் என்னால் அவதானிக்க முடிகிறது. பலரையும் சோம்பலிலிருந்து மீட்டு மீண்டும் மீண்டும் தமிழ் வாசக சமூகம் அறியாத பல தகவல்களை, கோணங்களை வெளிக்கொணர வைப்பதையும் எல்லாம் வல்ல இறையின் செயலாகவே நான் காண்கிறேன். ஒரு பெரிய தாழ்வுக்குப் பின்னால் மகத்தான உயர்வுகளை மனிதகுலம் சந்திக்கும் என்ற இறையின்/இயற்கையின் விதி இங்கே செயல்படுவதையும் காண்கிறேன்.
வஹ்ஹாபி அவர்களின் பதிலை எதிர்நோக்கியபடி - மாறா அன்புடனும் நம்பிக்கையுடனும்,
நேசகுமார்.
Subscribe to:
Posts (Atom)
