Thursday 7 August, 2008

ஆந்திரமாநில அரசின் ஓட்டு பொறுக்கும் அரசியல் _ முகமதியர்களுக்கு 4% இடஒதுக்கீடு

கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் ஆந்திர அரசின் சட்டத்துக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

அடுத்த ஆண்டு தேர்தல் நடக்கவிருக்கும் சூழ்நிலையை மனதில்கொண்டு பார்த்தால், அந்த மாநிலத்தை ஆளும் காங்கிரஸ் கட்சியின் நோக்கம் புரியாமல்போக வாய்ப்பில்லை. முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்கும் நோக்கத்தில், ஏற்கெனவே இடஒதுக்கீடு பெற்றுவந்த ஹிந்துக்களில் பிற்படுத்தப்பட்ட சில சமுதாயத்தினரை, பிற்பட்டோர் பட்டியலில் இருந்து ஆந்திர அரசு நீக்கியிருப்பதாக செய்திகள் வருகின்றன.

முகமதியர்க‌ளின் வாக்குகளைப் பெறும் நோக்கத்தில் இயற்றப்பட்டுள்ள இந்த இடஒதுக்கீடு சட்டத்தால் சமுதாயத்தில் மேலும் பிளவு ஏற்படவே வாய்புகள் அதிகம். இடஒதுக்கீடு சட்டத்தால் முகமதிய சமுதாயம் மேம்படும் என்ற கருத்தில் துளியும் அர்த்தமில்லை.

ஆந்திர முகமதியர்க‌ளில் 65 சதவீதத்தினர் வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழ்வதாக இன்றய தினமணி செய்தியொன்று தெரிவிக்கிறது. இந்த நிலைக்கு காரணம் மிகத்தெளிவானது. அவர்களில் எழுத்தறிவு பெற்றவர்கள் 18 சதவீதம் மட்டுமே. சமஉரிமை கொடுத்திருப்பதாக முகமதிய‌கர்கள் பீற்றிக்கொண்டாலும், ஆந்திர மாநில‌ முஸ்லிம் பெண்களில் 4 சதவீதத்தினர் மட்டுமே எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள். மதரஸாக்களை மட்டுமே கல்விநிலையங்களாக கொண்ட இந்த சமுதாயத்துக்கு இடஒதுக்கீட்டால் என்ன நன்மை விழைந்துவிடப்போகிறது.

No comments: