Thursday 7 August, 2008

மீண்டும் மீண்டும் அத்துமீறும் பாக்கிசுதான்

ஜம்மு_காஷ்மீர் மாநிலத்தில் உள்ள எல்லைப் பகுதியில், பாகிஸ்தான் தரப்பிலிருந்து கடந்த ஒருவார காலமாக துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுவருகிறது.

இரு தரப்புக்கும் இடையே தொடர்ந்து 16 மணி நேரம் துப்பாக்கிச் சண்டை நடந்ததுவருவதும் சகஜமாகிவருகிறது. அவ்வப்போது இரு நாட்டு அதிகாரிகளும் சந்தித்து பேசி சண்டை முடிவுக்கு வந்தாலும், மீண்டும் பாகிஸ்தான் தரப்பிலிருந்து துப்பாக்கிச் சூடு தொடர்கிறது.

கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரை 19 முறை பாகிஸ்தானிய ராணுவம் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இருப்பதாகப் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே. அந்தோனி தெரிவித்திருக்கிறார்.

இவ்வாரம் புதன்கிழமை பகல் 12.15 மணிக்கு பாகிஸ்தான் தரப்பிலிருந்து இந்திய ராணுவச் சாவடியை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.
துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் தீவிரவாதிகளா அல்லது பாகிஸ்தான் ராணுவத்தினரா என்பது குறித்து பல்வேறு கருத்துக்கள் பத்திரிக்கைகளில் வந்திருக்கிறன. தீவிரவாதிகளையும் பாக்கிஸ்தான் ராணுவத்தையும் ஏன் பிரித்துப் பார்க்கவேண்டும் என்பது எனக்கு விளங்கவில்லை.

எல்லைப் பகுதி மாநிலங்களின் உள்ள பதற்ற நிலையை சாதகமாக பயன்படுத்திக்கொண்டு ராணுவஉதவியுடன் தீவிரவாதிகள் எல்லையை கடந்துவருவதுதான் காலகாலமாக நடந்துவரும் நிலை. பாரத இராணுவத்தின் பதிலடியில் பல பாகிஸ்தான் ராணுவ பன்றிகள் அழிக்கப்பட்டிருக்கின்றனர். அதுமட்டுமல்லாமல் தீவிரவாதிகளும் பலமுறை ஊடுருவ முயற்சி மேற்கொண்டு தோல்வி கண்டுள்ளனர்.

என்றாலும், கடந்த சில தினங்களுக்கு முன் எல்லையில் ஈகிள் போஸ்ட் என்ற பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில், எல்லையோர ராணுவ முகாமைச் சேர்ந்த ஜவான் ஒருவர் வீரமரணம் அடைந்தார். பாரத மாதாவின் எல்லைகளை காக்கும்பொருட்டு இன்னுயிர் நீத்த அந்த ஜவானுக்கு எனது வணக்கங்கள்.

ஜெய்ஹிந்த்

No comments: