Thursday 19 November, 2009

சாத்தானின் தோட்டம் அல்லது கண்ணி வெடிகள்

இவ்வார ஆனந்த விகடனில் வந்த கட்டுரையிது. உலகெங்கும் புதைத்துவக்கப்பட்டிருக்கும் கண்ணிவெடிகளை கணக்கிட்டால் அவற்றின் பெரும்பாலானவை முகமதிய நாடுகளில். கண்ணிவெடிகளில் சிக்கி மாண்டுபோவோர் பெரும்பாலும் அப்பாவி பொதுஜனம்.

தன்னையும் தனது நாட்டினரையும் குண்டுவைத்து கொல்வதற்கு இந்த முகமதியர்களால் மட்டுமே இயலும்.

"தலைவன்" எவ்வழியோ மக்களும் அவ்வழி...
*******

போரைவிடக் கொடுமையானது கண்ணி வெடி. போர்கூட முடிந்துவிடும். ஆனால், கண்ணி வெடிகளின் தாக்குதல் ஆண்டுக்கணக்கில் தொடர்ந்து மக்களைக் காவு வாங்கும். போரில், யார் எங்கே கண்ணி வெடிகளைப் புதைத்துவைத்தார்கள் என்பது யாருக்கும் தெரியாது. விளைவு...
எந்தவிதத்திலும் போருடன் தொடர்பு இல்லாத சாதாரண மக்கள், உயிரையும் உறுப்புகளையும் இழக்கிறார்கள்.

எகிப்து: கண்ணி வெடியால் கதிகலங்கிப்போயிருக்கும் நாடு எகிப்து. சுமார் 2 கோடியே 30 லட்சம் கண்ணி வெடிகள் நாடு முழுக்க இருக்கின்றனவாம். 1956, 1967 மற்றும் 1973-களில் நடந்த எகிப்து - இஸ்ரேல் போர்கள்தான் நாட்டை இப்படிக் கண்ணி வெடி தேசமாக்கிவிட்டன. 'எதிரி நாட்டு டாங்கிகள் முன்னேறி வந்தால், சின்னா பின்னமாக வேண்டும்' எனப் புதைக்கப்பட்ட இவற்றில் பெரும்பாலானவை அவ்வப்போது வெடித்து மக்களைக் கொன்றுகொண்டு இருப்பதுதான் வேதனை. இவற்றை அகற்ற 15 வருடங்கள் கடுமையாகப் போராடியது எகிப்து. கடைசியில் மேற்குப் பாலை நிலப் பகுதியில் 70 லட்சம் கண்ணி வெடிகளையும், சீனாய் பாலைவனப் பகுதியில் இருந்து 30 லட்சம் கண்ணி வெடிகளையும் கண்டெடுத்தனர். தொட்ட இடமெல்லாம் கண்ணி வெடியாகக் காட்சியளிப்பதால் இதைச் சாத்தானின் தோட்டம் என்கிறார்கள்.

இரான்:

தென்மேற்கு இரான் கண்ணி வெடிகளால்சூழப் பட்டு இருக்கிறது. இரான்-இராக் இடையேயான ஜென்ம விரோதம்தான், இந்தக் கண்ணி வெடி விதைப்புக்குக் காரணம். 1980 -களில் இரான் அரசு புதைத்துவைத்த கண்ணி வெடிகளின் எண்ணிக்கை 1 கோடியே 60 லட்சம். இரான் - இராக் எல்லையில் சுமார் 42 ஆயிரம் சதுர கிலோமீட்டர் பரப்பளவில் இவை புதைக்கப்பட்டுள்ளன. இதனால், அந்தப் பகுதியே எந்தப் பயனும் இல்லாமல் கிடக்கிறது. விவசாயம், தொழிற்சாலைகள், பள்ளிக்கூடம் எதுவும் கிடையாது. அவ்வப்போது கண்ணி வெடியில் சிக்கி கால்களை இழப்பது மட்டும்தான் மிச்சம்!

அங்கோலா:

அங்கோலாவின் மொத்த மக்கள் தொகையைவிட அங்கு புதைக்கப்பட்டு இருக்கும் கண்ணி வெடிகளின் எண்ணிக்கை அதிகம். விவசாயம் செய்ய நிலத்தைத் தோண்டினால் வெடிக்கிறது, சாலை வெட்டினால் வெடிக்கிறது, அவசரத்துக்கு ஓரமாக ஒதுங்கினால்கூட வெடிக்கிறதாம். அங்கோலாவில் இப்படி வெடிக்கு மடிந்தவர்கள் சுமார் 70,000 பேர் என்கிறது ஐக்கிய நாடுகள் அறிக்கை. இரண்டு கோடி கண்ணி வெடிகள் இங்கு புதைத்துவைக்கப்பட்டு உள்ளன. இந்தச் சிக்கலில் இருந்து எப்படி மீள்வது என முழி பிதுங்கி நிற்கிறது அங்கோலா அரசு.

ஆப்கானிஸ்தான்:

சராசரியாகத் தினமும் 10 முதல் 12 பேர் கண்ணிவெடியை மிதித்துக் காலியாகிறார்கள். ஆப்கனில் நீக்கமற நிறைந்திருக்கும் கண்ணிவெடிகளின் எண்ணிக்கை சுமார் ஒரு கோடி! 1979-க்கும் 1992-க்கும் இடைப்பட்ட காலத்தில் புதைக்கப்பட்டவை. இராக்: இங்கு புதைக்கப்பட்டு இருக்கும் கண்ணி வெடிகளின் எண்ணிக்கை 1 கோடிக்கு மேல். இரான்-இராக் எல்லைப் பகுதியில்தான் அதிகபட்சம் இருக்கின்றன. எதிரிக்கு வைத்த வெடியில் வைத்தவர்களே சிக்கிக்கொள்கிறார்கள். நாட்டில் சுமார் 1.5 லட்சம் குடும்பங்கள் கண்ணி வெடிகளினால் ஏதோ ஒரு வகையில் பாதிக்கப்படுகின்றனர். சுமார் 3,500 இடங்கள் கண்ணி வெடிகளினால் நிரம்பியிருப்பதாக இராக் சொல்கிறது.

No comments: