Monday 29 June, 2009

பாகிஸ்தானில் ஹிந்துக்கள் மீது ரூ. 60 லட்சம் "ஜிஸியா' வரி

பாகிஸ்தானில் ஹிந்துக்கள் மீது ரூ. 60 லட்சம் "ஜிஸியா' வரி: தலிபான்கள் எச்சரிக்கை

First Published : 28 Jun 2009 11:58:07 PM IST
Last Updated : 29 Jun 2009 03:43:28 AM IST

இஸ்லாமாபாத், ஜூன் 28: பாகிஸ்தானின் வடமேற்கு மாகாணத்தில் பட்டகிராம் என்ற ஊரில் வசிக்கும் ஹிந்துக்கள் ஆண்டுதோறும் 60 லட்ச ரூபாயை "ஜிஸியா'வாகத் தங்கள் அமைப்பிடம் தர வேண்டும்; இல்லாவிட்டால் இந்தப் பகுதியைவிட்டே வெளியேற வேண்டும் என்று தலிபான்கள் எச்சரித்துள்ளனர்.

இந்தியாவில் மொகலாயர்கள் ஆண்டபோது ஒüரங்கசீப் இந்த ஜிஸியா என்ற வரியை ஹிந்துக்கள் மீது விதித்தார் என்று வரலாறு கூறுகிறது. வடமேற்கு எல்லைப்புறத்தில் பட்டகிராம் என்ற ஊரில் ஹிந்துக்கள் பாரம்பரியமாக வசித்து வருகின்றனர். இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையின்போதுகூட அவர்கள் அங்கிருந்து வெளியேறாமல் அங்கேயே தொடர்ந்து வாழ்வது என்று முடிவெடுத்தனர்.

""எல்லோரும் இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்க வேண்டும், அதற்குச் சம்மதம் இல்லை என்றால் இடத்தைவிட்டு வெளியேற வேண்டும், அதுவும் முடியாதென்றால் ஹிந்துக்களாக இருக்கும் பாவத்துக்குப் பரிகாரமாக தங்களுக்கு ஆண்டுக்கு 60 லட்ச ரூபாய் கப்பம் செலுத்த வேண்டும்'' என்று தலிபான் இயக்கம் எச்சரிக்கை விடுத்திருக்கிறது. ஹிந்து சமூகத்தைச் சேர்ந்த பிரகாஷ் என்ற டாக்டரைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு இந்த எச்சரிக்கையைத் தலிபான்கள் விடுத்துள்ளனர்.

தலிபான்கள் யாருக்கும் கட்டுப்பட்டவர்கள் அல்லர். அவர்களை ஒடுக்க ராணுவத்தாலேயே முடியவில்லை. உள்ளூர் போலீஸôர் அவர்களை நெருங்குவதே இல்லை. இந்த நிலையில் இந்த எச்சரிக்கையை ஹிந்துக்கள் அலட்சியப்படுத்தவே முடியாது. இப்படி ஒரு மிரட்டல் வந்திருப்பது குறித்து மாவட்ட காவல்துறைத் தலைவர் சோஹைல் காலித் என்பவரைத் தொடர்புகொண்டு கேட்டபோது, எனக்கு எந்தப் புகாரும் வரவில்லையே என்றார். டாக்டருக்கு வேண்டாத யாராவது இப்படி பணம் பறிப்பதற்காக மிரட்டியிருக்கலாம் என்றும் குறிப்பிட்டார்.

ஆனால் இதே போல ஒüராக்சாய் என்ற இடத்தில் மிரட்டல் வந்தபோது அலட்சியம் செய்த 35 சீக்கிய குடும்பங்களின் வீடுகள், கடைகள் தாக்கி உடைத்து நொறுக்கப்பட்டன. வீடு, கடைகளில் உள்ள சாமான்கள், சரக்குகளுக்கு தீ வைத்து எரிக்கப்பட்டது. வீட்டில் உள்ளவர்கள் அடித்து அகதிகளாக விரட்டப்பட்டனர். உயிர் பிழைத்தால் போதும் என்று அனைவரும் வீடு வாசலை விட்டுவிட்டு வெளியேறினர். இன்றுவரை அவர்களை மறு குடியமர்த்த பாகிஸ்தான் அரசு எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை என்பதால் ஹிந்துக்கள் அச்சப்பட ஆரம்பித்துள்ளனர்.
**********

Copyright(c) dinamani.com

Wednesday 24 June, 2009

சரப்ஜித் கருணைமனு நிராகரிப்பு

சரப்ஜித்-ன் கருணைமனுவை நிராகரித்து, தூக்குத் தண்டனையை உறுதிசெய்திருக்கிறது பாகிஸ்தானின் உச்ச(ஷரியத்)நீதிமன்றம்.


சரப்ஜித் பாரதத்தின் சாதாரண குடி மகன். தவறுதலாக பாகிஸ்தான் எல்லைக்குள் சென்று அந்நாட்டின் ராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்ட அப்பாவி குடிமகன். உளவு பார்க்க வந்தவர் என்றும் அங்கே 1990ம் ஆண்டு நடந்த வெடிகுண்டு சம்பவத்தில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப் பட்டு அவருக்குத் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. அவர் சார்பாக வாதாட சரியான வக்கீல் குழு இல்லாமையாலும் பாரத் பஞ்சாபில் உள்ள அவருடைய உறவினர்கள் மன்றாடி வருவதால் அவரது தூக்கு அரசிடமிருந்து போதுமான ஆதரவு இல்லாததாலும் வழக்கு ஆரம்பித்த ஒரே வருடத்தில் அவருக்கு தூக்குத்தண்டனையை விதித்து தீர்ப்பளித்தது ஷரியத் நீதிமன்றம். அவர் சார்பாக ஆஜராகவேண்டிய வக்கீல் குழு, சரப்ஜித் குடும்பத்தினரிடமிருந்து வழக்கு கட்டணமாக பல லக்‌ஷங்களை சுருட்டிக்கொண்டும் கோர்ட் பக்கமே வருவதில்லை என்று பத்திரிக்கைகளில் செய்திகள் வெளிவந்தன. எரிகிற வீட்டில் பிடிங்கியவரை ஆதாயம் என்பதுபோல்... (குரானில் முகமதுவால் அனுமதிக்கப்பட்டிருக்கலாம் யார் கண்டது)

பல்வேறு போராட்டங்களுக்குப்பின் தண்டனையை பாகிஸ்தான் நிறுத்தி வைத்தது. இன்றுவரை 19 ஆண்டுகள் தான் செய்யாத குற்றத்திற்கு பாகிஸ்தான் சிறையில் வாடிக்கொண்டுதானிருக்கிறார்.

பாகிஸ்தானின் மதச் சட்டம் காடுமிராண்டித்தனமானது. அங்கு நியாயமான தீர்ப்பு என்பது சாத்தியமில்லாதது. குற்றம் சாட்டப் பட்டவன் முகமதியனா அல்லது ஹிந்து போன்ற சிறுபான்மை மத்தினரா என்பதைப்பொறுத்தே அங்கு தீர்ப்புகள் எழுதப்படும். மனிதநேயமற்ற கேவலமான முகமதிய சட்டம் நிலவும் நாடு அது. மனித நாகரீகத்திற்கு அப்பாற்பட்ட சட்டம் ஒன்றால் 19 ஆண்டுகள் தான் செய்யாத குற்றத்திற்கு பாகிஸ்தான் சிறையில் அடைத்து தண்டனை தரத்துடிக்கிறது இந்த காட்டுமிராண்டி முகமதிய தேசம்.

இந்திய பாகிஸ்தானிய முகமதிய தீவிரவாதிகள் நமது நாட்டில் எவ்வாறு நடந்துகொள்கிறார்கள் அல்லது எவ்வாறு நடத்தப்படுகிறார்கள் என்பதை இங்கே நினைவு கொள்ள வேண்டும்.

கோவையில் குண்டுவைத்த மதானிக்கு கிடைக்காத சலுகைகளா ? மும்பை தாக்குதல்களில் பிடிபட்ட அஜ்மலுக்கு கிடைக்காத மரியாதையா?

எந்தநாட்டிலோ விசாரணைக் கைதிகளாக வைக்கப்பட்டிருக்கும் பாரத முகமதிய இளைஞர்களின் தாய்மார்கள் அளிக்கும் கண்ணீர்ப் பேட்டிகளைப் பார்த்துத் தாமும் கண்ணீர் மல்க இரவெல்லாம் உறக்கமின்றி உழன்றதாகச் சொன்னார் நமது மாண்புமிகு பிரதமர். அந்தத் தாய்மார்களுக்கு ஆறுதலும் தைரியமும் அளித்தார். நமது நாட்டு தூதரகங்கள் அந்த விசாரணைக் கைதிகளின் நலனைக் கவனித்துக் கொள்ளும் என உறுதி கூறினார்.

முன்னாள் உள்துரை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் கூறுகிறார்...

நாம் அப்சல் குருவை தூக்கில் போட வேண்டும் என்று விரும்புகிறோம். அதே சமயத்தில் சரப்ஜித்சிங்குக்கு பொது மன்னிப்பு அளிக்க வேண்டும் என்று கேட்டுள்ளோம். நாம் எப்போதுமே மற்றவர்கள் தூக்கில் போடப்படுவதையே விரும்புகிறோம். அங்கே சரப்ஜித்சிங்கை தூக்கில் போடாதே என்று கூறி விட்டு, இங்கே அப்சல் குருவை தூக்கில் போட வேண்டும் என்று கூறுகிறோம். எப்படி இந்த கோரிக்கையை விடுக்க முடியும்? இந்த விவகாரத்தில் சட்டம் தனது கடமையை செய்யும்.

என்று... மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வியுற்ற போதிலும் மிகப்பொறுப்பு வாய்ந்த உள்துறை அமைச்சர் பதவியை அளித்த மன்மோகன் (சோனியா ?)த்தான்குறைசொல்லவேணும்.

தற்போது சட்ட அமைச்சராகியிருக்கும் வீரப்ப மொய்லி என்கிற மேதாவியும் இதே ரீதியில் பயணப்பட்டுக்கொண்டு அஃப்சலின் விடுதலைக்கு படாதபாடு பட்டுக்கொண்டிருக்கிறார்.

எப்படியோ....
எதாவது அதிசயம் நிகழ்ந்த்தாவது சரப்ஜித் விடுதலையாகி நாடுதிரும்ப இறைவனை வேண்டிக்கொள்வதைத்தவிர வேறென்ன செய்யமுடியும்.

Wednesday 17 June, 2009

சீனாவின் கீழ்த்தரமான சதி

தலையங்கம்: வாளாவிருக்கிறோமே, ஏன்?

First Published : 17 Jun 2009 02:23:00 AM IST
Last Updated : 17 Jun 2009 02:29:19 AM IST

உலகமயமாக்கலின் பயனை இப்போதுதான் இந்தியா மெல்ல மெல்ல அனுபவிக்கத் தொடங்கி இருக்கிறது. இத்தனை காலமும் பன்னாட்டு நிறுவனங்களால் இந்தியா சுரண்டப்பட்டது போக, இப்போதுதான் இந்திய நிறுவனங்கள் பன்னாட்டு நிறுவனங்களாக மாறி, உலக அரங்கில் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கி இருக்கின்றன. இந்தியாவின் நியாயமான வளர்ச்சிக்கு என்னவெல்லாம் தடைகளை ஏற்படுத்த முடியுமோ அதையெல்லாம் செய்து கொண்டிருக்கின்றன ஏனைய வளர்ச்சி அடைந்த நாடுகள்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், சீனா ஒரு கீழ்த்தரமான சதியில் இறங்கி இருக்கிறது என்பதைப் பார்த்தால், எந்த அளவுக்கு நம்மை மறைமுக எதிர்ப்பும், சதியும் சூழ்ந்து கொண்டிருக்கிறது என்று தெரிகிறது. ராணுவ ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும், ராஜதந்திர ரீதியாகவும் இந்தியாவைத் தனிமைப்படுத்தவும், சிறுமைப் படுத்தவும் சீனா தயாராக இருக்கிறது என்பது இப்போது தெளிவாகி இருக்கிறது.

சமீபகாலமாக, இந்தியா மருந்து உற்பத்தியில் உலக அரங்கில் தடம் பதித்து வருகிறது. குறிப்பாக, பல ஆப்பிரிக்க நாடுகள் இந்தியாவிலிருந்து மருந்துகளை இறக்குமதி செய்கின்றன. முன்பு அமெரிக்கா மற்றும் ஜெர்மனியின் சந்தையாக இருந்த ஆப்பிரிக்கா கண்டத்தில், இப்போது இந்திய மருந்துகளுக்குத்தான் முன்னுரிமை தருகிறார்கள். குறிப்பாக, ஆப்பிரிக்காவிலுள்ள பல அரசுகள் பொது மருத்துவமனைகளுக்கான மருந்துகளை இந்தியாவிடமிருந்துதான் வாங்குகின்றன.

நைஜீரியாவில் விற்பனைக்காக இறக்குமதி செய்யப்பட்ட மருந்துகளை சுங்க இலாகாவினர் சோதனையிட்டபோது அவை அத்தனையும் போலி மருந்துகள் என்று கண்டுபிடிக்கப்பட்டது. அந்த மருந்துகளில் "இந்தியாவில் தயாரிக்கப்பட்டவை' என்று அச்சிடவும் பட்டிருந்தன. இந்தியாவிலிருந்து போலி மருந்துகள் ஏற்றுமதி செய்யப்படுகிறது என்கிற சந்தேகம் எழுந்ததில் ஆச்சரியம் என்ன இருக்கிறது?

சோதனைக்குப் பிறகு தெரியவந்த அதிர்ச்சி தரும் விஷயம் என்ன தெரியுமா? அந்த மருந்துகள் அனைத்தும் சீனாவில் தயாரிக்கப்பட்டு, சீனாவிலிருந்து நைஜீரியாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டிருக்கிறது. வேண்டுமென்றே அந்தப் போலி மருந்துகளில் "இந்தியாவில் தயாரிக்கப்பட்டவை' என்கிற வாசகத்தையும் அச்சிட்டிருக்கிறார்கள். சீனா ஒரு சுதந்திர நாடல்ல. அந்த அரசாங்கத்தின் பார்வையில் இருந்து சிறு துரும்புகூடத் தப்பிக்க முடியாது என்பது உலகறிந்த ரகசியம். வேண்டுமென்றே, இந்தியாவின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்துவதற்காகவே, சீன அரசின் அனுமதியுடன் இப்படிப் போலி மருந்துகள் ஏற்றுமதி செய்யப்பட்டன என்று நம்புவதற்கு இடமுண்டு.

நல்லவேளையாக, சுங்க அதிகாரிகளின் பார்வையில் இந்தப் போலி மருந்துகள் பட்டதால் ஒரு மிகப்பெரிய பேராபத்து தவிர்க்கப்பட்டது எனலாம். சுமார் 6,42,000 பேருக்கு விநியோகம் செய்யப்பட இருந்த மலேரியா தடுப்பு மருந்துதான் போலி என்று கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இதன் தொடர்ச்சியாக நடந்த விசாரணையில் இன்னொரு அதிர்ச்சியும் வெளியாகி இருக்கிறது. நைஜீரியாவில் விற்பனையாகும் மருந்துகளில் மூன்றில் ஒன்று போலி என்பதும், அவை சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுபவை என்பதும், அந்த மருந்துகளில் "இந்தியாவில் தயாரிக்கப்பட்டது' என்கிற முத்திரை அச்சிடப் பட்டிருக்கிறது என்பதும்தான்.

நைஜீரியாவில் போலி மருந்துகள் பிடிக்கப்பட்டிருக்கின்றன. ஏனைய ஆப்பிரிக்க நாடுகளில் இதுபோன்று எத்தனை காலமாக, எத்தனை கோடி மருந்துகள் சீனாவால் ஏற்றுமதி செய்யப்படுகிறது என்பதை யாரறிவார்? நல்லவேளையாக, சீனாவின் இந்தக் கபட நாடகம் வெளிப்பட்டுவிட்டது. இல்லையென்றால், போலி மருந்துகளால் ஏற்படும் ஆபத்துக்கு இந்தியாவைப் பொறுப்பாக்கி உலக அரங்கில் இந்திய மருந்துகள் என்றாலே போலி மருந்துகள் என்று அவப் பெயர் ஏற்பட்டிருக்குமே!

இத்தனை நடந்திருக்கிறது, நமது வணிக அமைச்சகமோ, வெளியுறவுத் துறையோ எதுவும் பேசக் காணோமே! சீனாவுக்கு எதிராக இந்த ஒரு விஷயத்தை வைத்தே நாம் உலகச் சந்தையில் பிரசாரத்தை முடுக்கி விட்டிருக்க வேண்டாமா? குறைந்தபட்சம், சீனாவுக்குக் கண்டனம் தெரிவிக்கலாமே. ஐக்கிய நாடுகள் சபையில் நியாயம் கேட்கலாமே.
ஒருபுறம், அருணாசலப் பிரதேசம் எங்களுடையது என்கிறது சீனா. இன்னொரு புறம், இலங்கையுடன் கைகோர்த்து இந்துமகா சமுத்திரத்தில் இந்தியாவின் ஆதிக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கிறது. இதெல்லாம் போதாதென்று, நேபாளத்தில் தனது செல்வாக்கை நிலைநிறுத்திக் கொள்ள ஆவன செய்கிறது. உலக அரங்கில், எந்தத் துறையை எடுத்தாலும் இந்தியாவுக்கு மிகப்பெரிய போட்டியாக எதிரே நிற்பது சீனாதான்.

"இந்தி-சீனி பாய் பாய்...' கோஷம் எங்கே கொண்டு வந்து நிறுத்தியது என்பது நமக்குத் தெரியும். சரித்திரத்திலிருந்து பாடம் படிக்காதவர்களை என்னவென்று சொல்வது? நாம் சீனாவுக்குப் பயப்படுகிறோமா, அடிபணிகிறோமா? இந்தியாவுக்குக் களங்கம் கற்பிக்கும் முயற்சி நடக்கிறது. இதை நமது அரசும் வேடிக்கை பார்க்கிறது. அதுதான் ஏன் என்று புரியவில்லை!

Copyright(c) Dinamani.com

Wednesday 10 June, 2009

பாகிஸ்தான் குறித்த தினமணி தலையங்கம்

05 Jun 2009 தினமணியில் வெளியான தலையங்க கட்டுரை.

காங்கிரஸும் ஆட்சிக்கு வந்தாகிவிட்டது. அடுத்த குண்டுவெடிப்பு(ஜிஹாத்)க்கு ஆயத்தமாகவேண்டியதுதான்...

“”””””””””””””””

தலையங்கம்: பாகிஸ்தானின் பொய்முகம்!

First Published : 05 Jun 2009 12:13:00 AM IST
Last Updated : 06 Jun 2009 01:47:50 AM IST


"உங்கள் பிள்ளைகளில் நல்ல பிள்ளை யார்?' என்றால், "அதோ அங்கே கூரைக்கு தீ வைக்க கொள்ளிக்கட்டையோடு நிற்கிறானே அவன் தான்' என்று சொன்ன கதையாக இருக்கிறது பாகிஸ்தானில் ஜமாத்-உத்-தவா தலைவர் முகமது சய்யீத் விடுதலையாகியிருப்பது!

லஷ்கர்-இ-தொய்பா ஒரு தீவிரவாத இயக்கம் என்பது உலகம் முழுவதும் தெரிந்த விஷயம். இந்த அமைப்புக்கு நிதியுதவி வழங்கும் தாய் அமைப்பாக இருப்பது ஜமாத்-உத்-தவா என்பதும் அனைவருக்கும் தெரியும். ஆனால் அதன் தலைவர் ஹஃபீஸ் முகமது சய்யீத் மட்டும் தீவிரவாதி அல்ல என்று சொல்ல முடியும் என்றால், அதை பாகிஸ்தான் தவிர யாராலும் கூச்சமின்றி சொல்லுதல் இயலாது.

முகமது சய்யீத் மீது போதுமான குற்றச்சாட்டை நிரூபிக்க எந்த விதமான ஆதாரத்தையும் அளிப்பதற்கு பாகிஸ்தான் அரசு இதுநாள்வரையிலும் எந்த முயற்சியும் செய்யவில்லை என்பதுதான், வீட்டுக்காவலில் இருந்த அவரை விடுதலை செய்ய அந்நாட்டு உயர்நீதிமன்றம் உத்தரவிடுவதற்கு ஒரேயொரு காரணம்.

ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சில், ஏற்கெனவே ஜமாத்-உத்- தவா அமைப்பை தீவிரவாத அமைப்பு என்று அறிவித்திருக்கிறது. மும்பை தாக்குதல் நடைபெற்றபோது, அதற்கு மூளையாக இருந்தது இந்த அமைப்புதான் என்று அமெரிக்காவும் வெளிப்படையாக உலகுக்கு அறிவித்தது. எல்லாருக்கும் இந்த அமைப்பு தீவிரவாத அமைப்பு என்று தெரிகிறது. ஆனால் அத்தகைய ஒரு அமைப்பின் தலைவருக்கு எதிராக ஒரேயொரு ஆவணத்தைக்கூட நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய பாகிஸ்தானால் முடியவில்லை என்றால் அதற்குக் காரணம் அவர்களுக்கு மனமில்லை என்பதாகத்தான் இருக்க முடியும்.

தொடக்கத்திலிருந்தே, இந்தியாவுக்கு எந்த வகையிலும் உதவிடக்கூடாது என்பதுதான் பாகிஸ்தான் அரசின் முதல் நோக்கமாக இருந்துவருகிறது. மும்பைத் தாக்குதல் நடைபெற்று, செல்போன் மூலம் அவர்கள் பேசிய இடங்களை அறிந்த பிறகுதான், தாக்குதல் நடத்தியவர்கள் பாகிஸ்தானியர்கள் என்று இந்திய அரசு அறிவித்தது. ஆனால் அதை பாகிஸ்தான் மறுத்தது.
அதிர்ஷ்டவசமாக உயிருடன் பிடிபட்ட தீவிரவாதி கசாபுவின் சொந்த கிராமம் பற்றிய விவரங்களை இந்திய அரசு வெளியிட, ஊடகங்கள் அவரது கிராமத்துக்குச் சென்று உறுதிப்படுத்தியபோதும்கூட, பாகிஸ்தான் அரசு ஏற்காமல் மறுத்துவந்தது. அதன்பிறகு போதுமான ஆவணங்கள் கொடுக்கவில்லை என்றது. எப்படியாவது தட்டிக் கழிக்க வேண்டும் என்பதில்தான் குறியாக இருந்தது என்பது ஊரறிந்த ரகசியம்.

அமெரிக்காவே வெளிப்படையாக இந்தத் தாக்குதலுக்கு காரணம் ஜமா-உத்-தவா என்று சொன்ன பிறகு, "பெரியஅண்ணன்' பேச்சுக்கு மறுபேச்சு பேச முடியாமல் அவரை கைது செய்தது பாகிஸ்தான் அரசு. ஆனால் இப்போதோ ஆவணங்களை கொடுத்து நிரூபிக்காமல் விடுதலையாகும் நிலையை உருவாக்கியுள்ளது. இதனால், உலக அளவில் அசிங்கப்பட்டு போவதையும் பொருட்படுத்தாமல் தீவிரவாதத்தை ஆதரிக்கும் தனது நிலைப்பாட்டினை அம்பலப்படுத்தியிருக்கிறது பாகிஸ்தான்.

முகமது சய்யீத் இதுவரை 4 முறை கைது செய்யப்பட்டு, நான்குமுறையும் எந்த ஆதாரங்களும் இல்லை என்று விடுவிக்கப்பட்டவர். இதற்குக் காரணம் அவர் உண்மையிலேயே தீவிரவாதி அல்ல என்பதல்ல. பாகிஸ்தான் அரசு அவரை செல்லப்பிள்ளையாக பாதுகாக்க விரும்புகிறது என்பது தான்.
இதன் மூலம், பாகிஸ்தான் அரசு தன்னிச்சையாக எதையும் செய்ய முடியாத நிலையில் இருப்பதும், தீவிரவாத அமைப்புகளின் கைப்பாவையாக மட்டுமே பாகிஸ்தான் அரசு செயல்படுகிறது என்பதும் வெளிப்பட்டுள்ளது.

இந்நிலையில், பயங்கரவாதத்தை தங்கள் நாட்டில் ஒழித்துக்கட்டுவோம் என்று பாகிஸ்தான் சொல்வது உலக நாடுகளுக்காகப் பேசப்படும் வீரவசனமே தவிர, வேறில்லை.

தற்போது சய்யீத்தின் விடுதலை, இந்தியாவில் மறைவில்
செயல்பட்டுக்கொண்டிருக்கும் தீவிரவாத அமைப்புகளுக்குக் கூடுதல் ஊக்கமாக அமையும். ஆகவே, பாகிஸ்தானை குறை சொல்லிக்கொண்டிருக்காமல், இந்திய எல்லைக்குள் தீவிரவாத அமைப்பின் செயல்பாட்டை ஒடுக்கி, அயல்நாட்டிலிருந்து பணம் வரும் வழிகளை அடைக்க வேண்டும். வாக்குவங்கியை மனதில் கொண்டு மெத்தனமாகச் செயல்பட்டால், இழப்புகளைச் சந்திக்கப்போவது இந்திய மக்களும் இந்திய அரசும் மட்டுமே என்பது நினைவிருக்கட்டும்!


copyright(c) Dinamani.com

Monday 8 June, 2009

மறைந்த மாதவிக்குட்டி(எ)கமலாதாஸ்(எ)கமலா(எ)சுரையா

சமீபத்தில் காலமான கேரளத்தின் எழுத்தாளர் கமலாதாஸ் (எனக்குத் தெரிந்த அத்தனை பெயர்களையும் எழுதிவிட்டேன்) குறித்து இவ்வார திண்ணையில் வஹ்ஹாபி கிழிகிழியென்று கிழித்துக்குதறியிருக்கிறா.

கமலாதாஸ் குறித்து பல்வேறு ஆதாங்களுடனான கட்டுரைகள் இதே திண்ணையில் கடந்த காலங்களில் எழுதப்பட்டிருக்கின்றன.

வாசகர்களுக்கு மறந்துபோயிருக்கும் என்ற எண்ணத்தினாலோ என்னவோ, மறுபடி தவறான விபரங்களுடன் வம்புக்கு இழுக்கும் நோக்கில் எழுதப்பட்டு வெளியாகியிருக்கிறது இவ்வார திண்ணைக்கட்டுரை.

கொஞ்ஞம் தேடியதில் கிடைத்த விபரங்கள் கீழே...


************* (1) *************
Thursday August 24, 2006
நேச குமார்
.......
தைரியமுள்ள பெண்மணி என்றவுடன் எனக்கு, சுரையாவாக மதம்மாறி பின்பு ஒரு இஸ்லாமியனின் காதல்வார்த்தைகளால் ஏமாறினேன் என்று இஸ்லாத்துக்கு எதிராக கருதக்கூடிய கருத்துக்களை வெளியிட்டு தாம் பழையபடி மாதவிக்குட்டியாகவே ஆகிவிட்டேன் என்று அறிவித்த கமலாதாஸ் நினைவுக்கு வந்தார்.அவர் தாம் மாதவிக்குட்டி என்பதை நிரூபிக்க நினைத்தாரோ என்னவோ, தஸ்லிமா நஸ்ரீனை தலையில் போட்டிருந்த வெள்ளை தலையங்கியுடன் தம்வீட்டில் வரவேற்றிருந்தார் - அதை பத்திரிகைகள் புகைப்படம் சொல்லும் செய்தியாக பிரசுரித்திருந்தன. மாதவி சுரையா என்று நான் மனதில் நினைத்துக் கொண்டேன். அல்லாஹ்வாக உருவெடுக்கும் கிருஷ்ணனின் குல்லாவுக்குள் மயிலிறகு இருக்கும் - அதுவே இந்திய மண்ணின் மகிமை.
Copywrite(c) Thinnai.com

************** (2) ************

Thursday January 20, 2005
மதம் அலுத்துப் போனது - மாதவிக்குட்டியின் கட்டுரை
தமிழில் : இரா முருகன்

(கடந்த வாரம் மாத்ருபூமி ஞாயிறு மலரில், மலையாள எழுத்தாளர் மாதவிக் குட்டி - சுரையா - கமலாதாஸ் எழுதிய ஒரு கட்டுரை முழுப் பக்கத்துக்கு வந்துள்ளது.

'மதம் மடுத்து ' (மதம் அலுத்துப் போனது) என்ற தலைப்பில் முழுக்க பேச்சு மலையாளத்தில் அமைந்த அந்தக் கட்டுரையின் சுருக்கம். இரா.மு)
----
நான் கொஞ்ச நாள் நானாகவே இருந்தேன். அப்போ கொஞ்சம் போல காதல் எல்லாம் வந்தது. கொஞ்ச நாள் விதவையா வாழறேன்.

அப்படி இருக்கறபோது, நேசம் தரேன்னு ஒருத்தன் சொன்னான். நானும் ஒரு பெண்ணில்லையா ? அவனெ நம்பினேன். பெண்ணுக்கு எப்பவும் ஒரு பாதுகாப்பாளன் வேணும். அவன் என்னை மதம் மாறச் சொன்னான். நானும் மாறினேன். காதலுக்காக எதையும் துறக்க நாம் தயார் ஆச்சே. ஆனா, அவன் ஒரு கோழையாக இருந்தான். என்னோட துணிச்சல் அவனுக்கு இல்லாமப் போனது. என் மாதிரி ஒரு துணிச்சலான பெண்ணுக்கு ஒரு கோழையைக் காதலிக்க முடியுமோ ? நான் புலி. அவன் ஒரு செம்மறியாடு. அவன் கோழை அப்படின்னு தெரிஞ்ச அப்புறம் காதலாவது ஒண்ணாவது. நான் அவனைக் (கல்யாண பந்தத்திலிருந்து ) விடுதலையாக்கி விட்டேன். எனக்கும் வ்ிடுதலைதான். காதல் எல்லாம் கரைஞ்சு போச்சு. இப்போ இந்த வேஷம் (தலையில் முக்காடாக வந்து, முகம் மறைக்காத பர்தா) தான் பாக்கி. இது மோசமில்லைன்னு தோணுது. என் முடியெல்லாம் நரைச்சுப் போனது வெளியிலே தெரியாதில்லையா ?

மதமெல்லாம் எனக்கு அலுத்துப் போச்சு. இப்ப எந்த மதத்திலும் எனக்கு நம்பிக்கை இல்லை. அன்பு வைக்க சுதந்திரம் இல்லாத எந்த மதமும் எனக்கு வேணாம். மதத்தை எல்லாம் விட்டுட்டு, இப்போ கடவுள் மேலே முழு நம்பிக்கை வந்திருக்கு. இந்த உலகத்திலே ஆட்டை, மாட்டை, மனுஷனை, நிலாவை, பாம்பை எல்லாம் பிறப்பித்துவிட்ட ஒரே ஒரு தெய்வத்தோடு தான் என் நம்பிக்கை. எது எப்படி இருந்தாலும், மதத்திலே இருந்து, பாவப்பட்டமுஸ்லீம்களை எதுக்காக நான் இன்னும் வேதனைப்படுத்தணும் ? சுரையாம்மா, எங்களை விட்டுடுன்னு அவங்க எல்லாம் சொல்றாங்களே. ஐயோ, பாவம் இல்லியா அவங்க.

மதம்னு சொல்றது மதகுருமார் ஜீவிக்க ஏற்படுத்தப்பட்ட வழி. தெய்வத்தை நெருங்கிப் பழகினதுக்கு அப்புறம் மதம் எதுக்கு ? ரோட்டரி கிளப், லயன்ஸ் கிளப்னு எல்லாம் சொல்றாங்களே. மதமும் அதுபோலத்தான். எல்லாருமாக் கூடி மதத்தோட பேரில் தெய்வத்தைச் சிறுத்துப்போக வைக்கறாங்க.
ஜாதி, மதம் இதுங்களோட வலிமை கூடறபோது தெய்வத்தோட சக்தி குறைஞ்சு குறைஞ்சு போய் .. இதோ, என்னை மாதிரி எழுந்து நிக்க முடியாத தளர்ச்சி. கோவில்களிலும், பள்ளிவாசல், சர்ச்சிலே எல்லாம் மதச் சொற்பொழிவு நடக்குது. கடவுள் எங்கேன்னு கேட்டுப் பாருங்க. அங்கே எங்கியும் தெய்வத்தைப் பார்க்க முடியாது. பாவம், கடவுள்.

மசூதிக்கும், கோவிலுக்கும் போயிட்டு வரவங்க முகத்தைப் பார்த்தா எனக்குப் பயமா இருக்கு. எல்லாம் சுயநலம். தன்னோட காரியம் மட்டும் நிறைவேற பிரார்த்தனை. மத்தவங்க எல்லாம் அழியணும் அப்படின்னு இவங்களுக்கு மனசிலே நினைப்பு. அதுக்கா பத்தாயிரம் ரூபாய்க்கு வழிபாடு. கேளுங்க, இங்கே பக்கத்துலே சாப்பாட்டுக்கே வழியில்லாத ஏழைகளோட ஒரு குடியிருப்பு இருக்கு. அவங்க எல்லோருக்கும் நூறு ரூபாய்க்காவது அரிசி வாங்கித் தருவாங்களா இவங்க ? அப்படின்னா, தெய்வத்துக்கு அதுதான் ரொம்பப் பிடிச்ச காரியம்.

முப்பது வருஷமா நான் கோவிலுக்குப் போய்வந்தேன். இப்போ குனிஞ்சு நமஸ்கரிக்க முடியலே. உடம்பை அசைக்கறதுலே பயன் இல்லே. மனசு அசையணும். அதான் முக்கியம்.

இது ஆபாசம் அப்படான்னு தெய்வத்துக்குத் தோணாதது எல்லாம் நான் எழுதுவேன். புரணி பேசறது, அடுத்தவங்களைக் கேலி செய்யறது, அப்பாவிகளைப் பரிகசிக்கறது இந்த மாதிரி ஒண்ணும் நான் எழுதினதில்லே. நான் எழுதறதெல்லாம் ஆபாசம் அப்படின்னா வேறே என்னத்த எழுத ? காதலிக்கிறவங்களுக்கு சிற்றின்பத்தில் இச்சை வராதா என்ன ? கண்ணனும் ராதையும் போகத்திலே ஈடுபட்டு இருக்கறதைச் சொல்றதுதானே கீத கோவிந்தம் ? எவ்வளவு அழகான புத்தகம் அது. அது வெறும் காமம்னு சொல்லிப் புத்தகத்தைக் கொளுத்திப் போடணுமா ?

தெய்வத்தின் முன், காதலுக்கு முன் நாம் நம்முடைய ஜீவிதத்தை சமர்ப்பிக்கணும். எனக்குன்னு இந்த உலகத்திலே எதுவும் இல்லை. நாம இருக்கும்போது நான், என்னுதுன்னு நினைப்போம். இந்த 'நான் ' என்பதுக்கு அம்மாவும் அப்பாவும் கொடுத்த பெயரைச் சொல்லிக் கூப்பிடப்படுவோம். முகக் கண்ணாடியில் பார்த்து நம்மை நாமே பிரியப்படுவோம். ஆனா அதெல்லாம் எத்தனை காலம் ? எழுபது வருஷம் அப்படான்னு சொல்றது ஏழு நொடியிலே கடந்து போயிடறது நமக்குத் தெரியாது. எதைக் கொடுத்தாலும் கூடவே அன்பையும் கொடுங்க.

கொடுப்பதற்குக் கற்றுத் தரணும் குழந்தைகளுக்கு. இப்போ எல்லோருக்கும் எடுக்க மட்டும்தான் தெரியும். கையில் ஏதுமில்லாவிட்டாலும் அன்பைக் கொடுக்கவாவது நாம் கற்றுக் கொள்ளணும். அப்போதான் தெய்வத்தை நமக்கு அடையாளம் தெரியும்.

யாரும் யாரையும் சதியில் தள்ளமுடியும். அதுவும் காதல்னு சொல்லி. ராத்திரி பன்னிரெண்டு மணிக்கு எழுப்பி, ஃபோனில் கவிதையோ பாட்டோ பாடிக் கொடுத்தால், எந்தப் பெண்ணும் காதலிப்பாள்.

காதலிக்காமல் எப்படிக் கல்யாணம் செய்துக்கறது ? சட்டுனு பார்த்த ஒருத்தனோடு கட்டிப் பிடிச்சுக் கிடக்க என்னாலே முடியாது.

என் கதைகளிலே வர ஜானுவைத் தெரியும்தானே ? என் கூடத்தான் இருக்கா. என்னை விட கொஞ்சம் வயசு அதிகம். அவளுக்கு சின்ன வயசா ஒரு காதலன் இருக்கான். அதுனாலே வயசு தெரியலை.

இப்பவும் எனக்குக் கிருஷ்ண பகவானை ரொம்பப் பிடிக்கும். ஒரு காதலானாக. கணவனாக. தெய்வமாக இல்லை. 'உன்னிகிருஷ்ணன், உன்னிகிருஷ்ணன் ' அப்படான்னு தேவநாமம் கேட்டு வளர்ந்தவளாச்சே நான். முஸ்லீம் ஆனபோது, நாயர் பெண்களிலிருந்து எனக்கு சுதந்திரம் கிடைச்சது. அவங்க சரியான குசும்பு பிடிச்சவங்க. விதவையானா, பாகவதம் படிச்சு வீட்டுலே கிடக்கணுமாம். எனக்கு அதெல்லாம் முடியாது.

நான் இப்பவும் சைவம்தான். முஸ்லீம் ஆனபோது பலபேர் கேட்டாங்க - மாமிசம் எல்லாம் இனி சாப்பிட வேண்டி வருமே அப்படான்னு. நான் ஒரு கொசுவைக் கூடக் கொன்னது இல்லே. அது கடிச்சா ஒரு துளி ரத்தம் போகும். போகட்டுமே. அதுக்கும் உயிர் வாழறதுக்கும் ஒரு துளி ரத்தம் குடிக்கறதுக்கும் உரிமை இருக்கு.

வயசாச்சு. என் அழகு எல்லாம் போயாச்சு. நான் எதுக்கு இனியும் பவுடர் எல்லாம் பூசிக்கணும் ? ஃபோட்டோ எடுக்க பவுடர் போடணுமாம். சுகுமார் அழிக்கோடு சாருக்கு பவுடர் பூசித்தான் ஃபோட்டோ பிடிப்பீங்களா ? (சுகுமார் அழிக்கோடு - மூத்த இலக்கிய விமர்சகர்).

இந்த எழுதும் அறை, படுக்கை அறை இது ரெண்டும் தான் என் உலகம் இப்போ. தள்ளாமை. எங்கேயும் போக முடியலை.

ஜெயில்லே இருந்து விடுதலையானவங்க, சித்தப் பிரமை உள்ளவங்க, குழந்தைகள் இப்படி எத்தனையோ பேர் என்னைத் தேடி வராங்க. என் கையில் அன்பும் பாசமும் உண்டு. அதுனாலே தான். அதை நான் அவங்களுக்குத் தரும்போது எனக்குக் கடவுளை அறிய முடிகிறது. ஒரு ஷாக் போல், கைவிரல் நுனியில் தெய்வத்தின் இருப்பு எனக்குத் தெரியுது.

டி.வி சீரியலில் எப்பவும் அழுதபடி வரும் பெண்களைக் குற்றம் சொல்லிட்டு இருந்த நானும் இப்போ அழ ஆரம்பிச்சுட்டேன். துன்பம் தாங்கலை. இதை என்னால் பார்க்க முடியாது. பெண்ணு, பிள்ளைன்னு இருக்கறது நல்லதுதான். ஆனால் புது வருட வாழ்த்து சொல்லக்கூட அவங்க வராட்ட துக்கம்தான்.
கொஞ்ச நாள் முன் எட்டு தினம் பரோலில் வெளியே வந்த ஒரு கொலைக் குற்றவாளி என்னைப் பார்க்க வந்தான். அவன் என்னை ஏதாவது செய்திடுவான்னு இங்கே இருக்கப்பட்டவங்க பயந்து போனாங்க. உங்க மடியிலே தலை வைச்சுக்கட்டுமா அம்மான்னு அவன் கேட்டான்.
குளிக்காமல், தலையெல்லாம் பரட்டையாக இருந்த அவனுக்கு அதுதான் ஆறுதல் தரும் அப்படான்னா, சரிதான்னு சொன்னேன். அவன் தலையை வருடினேன். எப்படிக் கொலை செய்தான்னு கேட்டேன். வயிற்றிலே குத்தி குடலை உருவியெடுத்தானாம். அது கஞ்சி கொதிக்கறது போல சூடாக இருந்ததாம். ஏன் கொலை செய்தேன்னு கேட்டேன். பதில் சொல்லலே. வீட்டில் யாரெல்லாம் உண்டுன்னு கேட்டேன். யாரும் இல்லேன்னான். ஜெயில்லே என் புத்தகம் எல்லாம் படிச்சானாம். பரோல்லே வந்ததும் நேரே என்னைப் பார்க்க வந்திருக்கான். கல்யாணம் ஆச்சான்னு கேட்டேன். இல்லேன்னான். ஏதாவது எனக்குச் சொல்லுங்கன்னான். எனக்கு என்ன சொல்லத் தெரியும் ?
சொன்னேன் - 'நான் இப்படி ஜெயில்லே இருந்து எட்டு நாள் பரோல் கிடைச்சா, யார் மேலாவது அன்பு வைப்பேன். பாசத்தோட அவங்க கூட இருப்பேன் '.

கொஞ்ச நாள் கழிச்சு மாத்ருபூமியிலே அவன் பரோல்லே இருக்கும்போதே கல்யாணம் செஞ்சுக்கிட்டான்னு படிச்சேன். மகிழ்ச்சியா இருந்தது. எனக்கு இப்படித்தான் சொல்ல முடியும். அன்போடு இரு. உயிரோடு இருக்கற வரை அன்போடு இரு.

எல்லா வருஷமும் அமீரக வானொலிக்காக நான் புத்தாண்டு வாழ்த்துச் சொல்வது வழக்கம். இந்த ஆண்டும் அவங்க என்னைக் கூப்பிட்டாங்க. நான் அழுதேன். எல்லாரும் செத்துப்போய் மண்மறைஞ்சு போயாச்சே. அழாமல் எப்படி முடியும் ?

நான் இப்போ ஒரு நாவல் எழுதிட்டு இருக்கேன். அது ஒரு முஸ்லீம் பெண் எழுதக்கூடியதில்லை. அதனால் ஒருவேளை என்னை மதத்தை விட்டு விலக்கலாம். இந்த நாவலை எழுதும்போது நான் பழைய மாதவிக்குட்டிதான். நாலப்பாட்டு மாதவிக்குட்டிக்குத்தான் அதை எழுத முடியும். சில உண்மைகளை இன்னும் நான் உலகத்துக்குச் சொல்ல வேண்டி இருக்கு. எல்லாம் சொல்லிய பிறகு நான் போய்ச் சேர்ந்திடுவேன்.

(நன்றி மாத்ருபூமி)
----
eramurukan@yahoo.com
Copyright:Thinnai.com 

*******************(3) **************


Friday October 6, 2006
கருத்துக்கள் குறித்து சில கருத்துக்கள் - ரசூல், பாபுஜி,விஸ்வாமித்ரா,ரூமி, வெ.சா
நேசகுமார்

.........


காரத்தைத் தவிர்த்துப் பார்த்தால், விஸ்வாமித்ரா அவர்களின் கடிதம் மிகவும் சிறப்பான முறையில் நாகூர் ரூமி அவர்களின் படைப்பை விமர்சித்திருந்தது. கமலா சுரைய்யா விஷயத்தில் அவர் சொல்லியுள்ள இந்த கருத்தோடு அப்படியே உடன்படுகிறேன்:

'எழுத்துச் சுதந்திரமும் பேச்சுச் சுதந்திரமும் பரிபூரணமாய் நிலவும் நெதர்லாண்டிலேயே ஒரு தியோ வான்கோ பட்டப் பகலில் கழுத்தை அறுத்துப் பயங்கரமாகக் கொல்லப் படுகிறார் என்றால், ஒரு படித்த டாக்டர் பட்டம் பெற்ற ரூமியே ஒரு ருஷ்டியை கல்லை விட்டு எறிந்து கொல்லப் பட வேண்டும் என்று பரிந்துரைக்கிறார் என்றால், எவ்விதப் பாதுகாப்பும் இல்லாத ஒரு மாதவிக் குட்டி கமலா தாஸ் எங்கனம் தன் மனதில் தோன்றிய கருத்தைச் சுதந்திரமாகச் சொல்ல முடியும் ? சர்வ வல்லமையுள்ள போப் பெனடிக்டே இன்று வெளியே தலை காட்ட இயலாத அளவுக்கு வன்முறை பரவுகிறது என்றால் ஒரு அய்யோ பாவம் கமலா தாஸ் என்ன செய்வார் ? இஸ்லாத்தை ஆதரித்து அறிக்கை வெளியிடுவதை விட ? அவர் சொல்ல வேண்டிய செய்திகளைத் தெளீவாகவே சொல்லி விட்டார். இனிமேல் தன் உயிரைக் காத்துக்கொள்ள வேண்டி, ஒரு வயதான பெண்மணி செய்யும் தற்காப்பு முயற்சிகளே கமலாதாசின் பேட்டிகள் என்றுதான் உண்மையை உணர்ந்தவர்கள் எடுத்துக் கொள்வார்கள். ஒரு தீவீரவாத, வன்முறை மதத்தின் முன்னால் ஒரு வயதான எழுத்தாளர் அதுவும் இந்தியா போன்ற தனி மனித பாதுகாப்பு இல்லாத ஒரு நாட்டில் உள்ள ஒரு முதிர்ந்த பெண்மணி விடும் அறிக்கைகளில் ஏதும் வியப்பு இல்லை.'

நான் எனது முதலாக்கத்திலேயே இதைத்தான் சொல்லியிருந்தேன். வெளிப்படையாக தமது ஈமானிழப்பை காட்டிக் கொள்ள இயலாத நிலையில் இருக்கும் கமலாதாஸ் (எ) மாதவிக்குட்டி(எ) கமலா சுரையா, இஸ்லாத்தை விஷப்பாம்பு என்று வெளிப்படையாக அறிவித்து தீவிரமாக அதை விமர்சிக்கும் தஸ்லிமா நஸ்ரீனை வரவேற்று அவரிடம் தாம் இஸ்லாத்தைத் தழுவியது குறித்து வருந்துகிறேன் என்று உணர்த்தியதையும், தஸ்லிமாவே தனது பேட்டியில் இதைக் குறித்து சொன்னதையும் சுட்டியோடு எழுதியிருந்தேன். பரவாயில்லை இஸ்லாமிஸ்ட் பூனைகள் கண்ணை மூடிக்கொண்டு உலகமே ஜஹிலியா இருட்டில் ஆழ்ந்திருப்பதாக கற்பனை செய்து கொள்ளட்டும், அதில் எனக்கு எவ்வித பிரச்சினையும் இல்லை.
......
Copyright:Thinnai.com 

********************** (4) **************


Thursday September 7, 2006
கடிதம் - மதம் மடுத்த சுரையா
நேசகுமார்

பாபுஜி என்பவர் 1செப்டம்பர்,2006 திண்ணையில் ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். அதில் எனது எண்ணச்சிதறல்களில் வந்துள்ள இரு தகவல்கள் பிழையானது என்று தெரிவித்துள்ளார்.
அவர் சுட்டிக் காட்டியுள்ள இரண்டாவது பிழையைப் பற்றி நான் சொல்வதற்கு ஒன்றுமில்லை. ஏனெனில் காலச்சுவடு மற்றும் டெஹல்காவில் வந்துள்ள தலையங்கம் மற்றும் கட்டுரைகள்(முறையே) பற்றிய எனது மதிப்பீடுகளை ' பிடிவாதமான புரிதல்' என்று விமர்சிக்க அவருக்கு சுதந்திரம், உரிமை உண்டு. அதை எதிர்கொள்ள வேண்டும் என்கிற நிர்ப்பந்தமும் எனக்கில்லை. கருத்துப் பரிமாற்றங்களின் அடிப்படையே இந்த மாறுபட்ட கருத்துக்கள், புரிதல்கள்தாம்.

ஆனால், முதல் குற்றச்சாட்டாக அவர் முன்வைத்திருப்பது, நான் தவறான தகவலை வாசகர்களுக்கு முன்வைப்பது போன்ற பிம்பத்தை ஏற்படுத்துவதால் அதை மட்டும் விளக்க, ஆதாரங்களை முன்வைக்க முயற்சிக்கிறேன்.

முதலாவதாக, கமலா சுரையாவாக மதம் மாறிய மாதவிக்குட்டி(எ)கமலாதாஸ் தமக்கு மதம் அலுத்துப் போனது (மதம் மடுத்து) என்கிற தலைப்பில் எழுதியிருந்த நீண்ட, அழகிய கட்டுரையின் தமிழ் மொழியாக்கம் இதே திண்ணையில் ஜனவரி 20, 2005 அன்று வெளியாகியிருந்தது. மொழியாக்கம் செய்தவர், தமிழிலக்கிய உலகம் நன்கு அறிந்த திரு.இரா.முருகன். அக்கட்டுரையை இங்கே காணலாம்( http://www.thinnai.com/?module=displaystory&story_id=60501205&format=html).
நான் குறிப்பிட்டிருந்த அனைத்து விஷயங்களையும் மாதவிக்குட்டி(எ)எக்ஸ்-சுரையா(எ)கமலாதாஸ்(எ) கமலா சுரையா அவர்கள் விளக்கமாக அந்தக் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்:

"நான் கொஞ்ச நாள் நானாகவே இருந்தேன். அப்போ கொஞ்சம் போல காதல் எல்லாம் வந்தது. கொஞ்ச நாள் விதவையா வாழறேன். அப்படி இருக்கறபோது, நேசம் தரேன்னு ஒருத்தன் சொன்னான். நானும் ஒரு பெண்ணில்லையா ? அவனெ நம்பினேன். பெண்ணுக்கு எப்பவும் ஒரு பாதுகாப்பாளன் வேணும். அவன் என்னை மதம் மாறச் சொன்னான். நானும் மாறினேன். காதலுக்காக எதையும் துறக்க நாம் தயார் ஆச்சே."

மேலே கண்ட வரிகளில் கமலாதாஸ் தெளிவாகக் குறிப்பிடுகிறார், தாம் மதம் மாறியது தன்னை காதலிப்பதாக சொன்ன ஒருவனின் நிர்ப்பந்தத்தால்தான் என்று. காதலினால் மதம் மாறினேன் என்று கமலாதாஸே ஒப்புக் கொண்டபின் இதை ஒப்புக் கொள்வதில் யாருக்கும் எவ்வித பிரச்சினையும் இருக்காது என்றே கருதுகிறேன்.

மேலும் எழுதுகிறார் கமலாதாஸ்:

"இப்போ இந்த வேஷம் (தலையில் முக்காடாக வந்து, முகம் மறைக்காத பர்தா) தான் பாக்கி. இது மோசமில்லைன்னு தோணுது. என் முடியெல்லாம் நரைச்சுப் போனது வெளியிலே தெரியாதில்லையா ?...."

தாம் பர்தா அணிந்திருப்பது மதநம்பிக்கையால் அல்ல, தலையில் உள்ள நரைமுடிகள் வெளியில் தெரியாமலிருக்கத்தான் என்று.

தாம் எந்த மதத்திலும் தற்போது நம்பிக்கை வைக்கவில்லை என்று இன்னொரு வரியில் குறிப்பிடுகிறார்:

"மதமெல்லாம் எனக்கு அலுத்துப் போச்சு. இப்ப எந்த மதத்திலும் எனக்கு நம்பிக்கை இல்லை."

மதத்தில் நம்பிக்கை போய்விட்டது என்று சொல்கிறவர் இன்னமும் இஸ்லாத்தில் இருக்கிறார் என்று நம்பிக்கொண்டிருக்க யாருக்கும் உரிமை உண்டு, ஆனால் அதற்கு முற்றுப் புள்ளி வைக்கும் வண்ணம் கடைசிப் பாராவில் மீண்டும் தெளிவாக இப்படி அறிவிக்கிறார்:

"நான் இப்போ ஒரு நாவல் எழுதிட்டு இருக்கேன். அது ஒரு முஸ்லீம் பெண் எழுதக்கூடியதில்லை. அதனால் ஒருவேளை என்னை மதத்தை விட்டு விலக்கலாம். இந்த நாவலை எழுதும்போது நான் பழைய மாதவிக்குட்டிதான். நாலப்பாட்டு மாதவிக்குட்டிக்குத்தான் அதை எழுத முடியும். சில உண்மைகளை இன்னும் நான் உலகத்துக்குச் சொல்ல வேண்டி இருக்கு. எல்லாம் சொல்லிய பிறகு நான் போய்ச் சேர்ந்திடுவேன்."

பழைய மாதவிக்குட்டிதாம் தான் என்று ஜனவரி, 2005ல் எழுதிய கமலாதாஸ், இஸ்லாம் இன்றைய உலகிற்கு தேவையில்லை என்று சொல்லும், எழுதும் தஸ்லிமா நஸ்ரீனை தம் வீட்டில் வரவேற்று பேசும்போது இஸ்லாத்துக்கு மதம் மாறியது குறித்து வருந்தியிருக்கிறார். இது பற்றிய பிடிஐ செய்தி:

"On Kamala Surayya's decision to embrace Islam, Nasreen said: "I asked her why did you do that. She was silent. I asked whether she regretted it. She said "yes," Nasreen revealed at a meet-the-press programme here.

Nasreen said Kamala Surayya was now in a cage and she should have the freedom to come back and "live the life she likes."

http://www.outlookindia.com/pti_news.asp?id=408787

மற்ற பத்திரிகைகளிலும் வந்திருக்கிறது இது. பார்க்க:

"Controversial Bangladeshi writer Taslima Nasreen said here on Tuesday that Anglo-Indian poet and novelist Kamala Surayya (also known as Kamala Das) had told her that she regretted converting to Islam.Talking to mediapersons at the Press Club, Ms Nasreen said that she had met Surayya the other day and had asked her whether she regretted becoming a Muslim. "She replied yes," said Ms Nasreen. "She has understood that Islam does not provide equality," she added. Kamala Das had made a much-publicised conversion to Islam some years ago. Ms Nasreen said that Islam was not compatible with the ethos of the 21 st century. "Islam and its scriptures are out of place in the modern world," she said. "It still follows the laws of the seventh century.""

http://news.sulekha.com/newsitemdisplay.aspx?cid=140749

***
இஸ்லாம் என்பது இரண்டு நம்பிக்கைகளை அடிப்படையாகக் கொண்டது. ஒன்று, அல்லாஹ்வே கடவுள் என்பது. இரண்டாவது முகமதுவே கடவுளின் தூதர்(கடைசித் தூதர் என்று இன்று அர்த்தப்படுத்தப்படுகிறது). இந்த இரண்டிலும் நம்பிக்கை வைக்காத சுரையா இன்னமும் இஸ்லாத்தில் தான் இருக்கிறார் என்றால் அது வெறும் நம்பிக்கைதான் - நிதர்சனம் அல்ல. வஹாபிசத்தைப் பற்றி விலாவாரியாக எழுதும் பாபுஜிக்கு இது நிச்சயம் தெரிந்திருக்கும்.

எந்தவொரு விதத்திலும், அல்லாஹ்வின் மீதோ முகமதுவின் நபித்துவத்தின் மீதோ அவநம்பிக்கையை வெளிப்படுத்துவது, ஒருவர் இஸ்லாத்தை விட்டு வெளியேறிவிட்டார் என்று அறிவிப்பதற்கொப்பாகும் என்றே இஸ்லாமிய அறிஞர்கள் தெரிவிக்கின்றனர்.

இதெல்லாம் சரி, அவர் ஏன் வெளிப்படையாக தான் இஸ்லாமிய மார்க்கத்திலிருந்து வெளியேறிவிட்டேன் என்று அறிவிக்கவில்லை என்ற அறிவுஜீவித்தனமான கேள்வி அடுத்து எழலாம்.

இஸ்லாத்திலிருந்து வெளியேறுபவர்களுக்கு மரண தண்டனை என்று மதம் போதிக்கும்போது, அப்படிப்பட்ட போதனைகள் கடவுளால் சொல்லப்பட்டது என்று ஒரு பெரும் கூட்டம் நம்பும்போது, வெளியேறுபவர்களுக்கு - வெளிப்படையாகப் பேசுபவர்களுக்கு தகுந்த பாதுகாப்பை சிவில் சமூகம் வழங்காமல் இருக்கும்போது கமலா சுரையாதான் என்ன செய்வார்? வயோதிக காலத்தில் ஒரு இஸ்லாமியனின் ஆசை வார்த்தைகளால் வன்கோட்பாட்டொன்றில் சென்று அகப்பட்டுக்கொண்டு வெளியேறினால் எதோ ஒரு அடிப்படைவாதியினால் கழுத்தறுபட்டு சாக அவருக்கு நிச்சயமாக விருப்பம் இருக்காது.

எனவே காலம்காலமாக இஸ்லாத்தில் மாட்டிக்கொண்டவர்கள் செய்யும் அதே விஷயத்தை அவரும் செய்துள்ளார். அதாவது symbolic ஆக தமது எதிர்ப்பை, தமது அவநம்பிக்கையை தெரிவிப்பது. அதன் எதிரொலியே "இஸ்லாம் என்பது விஷப்பாம்பு" என்று வெளிப்படையாக எழுதும், பேசும் தஸ்லிமா நஸ்ரீனை(பார்க்க அவரின் அயான் ஹிர்ஸி அலியின் The Caged Virgin
நூல் விமர்சனம் - Outlookindia 28th August 2006 Issue -
http://www.outlookindia.com/full.asp?fodname=20060828&fname=Booksa&sid=1- பதிவு செய்தால் தான் அவுட்லுக்கைப் படிக்க முடியும். இல்லையேல் இங்கே பார்க்கலாம்: ttp://64.233.183.104/search?q=cache:kZn4QClz4m0J: www.outlookindia.com/full.asp%3Fsid%3D1%26fodname%3D20060828%26fname%3DBooksa+I+Say,+Three+Cheers+For+Ayaan&hl=en&gl=in&ct=clnk&cd=1 ) வீட்டுக்கு அழைத்து தமது ஆதரவைத் தெரிவிப்பதன் மூலம் இந்த செய்தியை உலகிற்கு வழங்கியிருக்கிறார்.

***

இப்படி எதிர்ப்பை தெரிவிக்கும் முறை இஸ்லாத்தில் வன்முறை மூலம் விமர்சனங்களை, முகமது மீதான அவநம்பிக்கையை அடக்க முற்பட்ட காலம்தொட்டே தொடங்கிவிட்டது.

இதன் நல்ல உதாரணமாக முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீ·ப் அவர்களின் சகோதரரின் மனைவி தெஹ்மினா துர்ராணி எழுதிய Blasphemyயைக் குறிப்பிடலாம். சல்மான் ருஷ்டி வெளிப்படையாக முகமதுவை விமர்சித்த சாத்தானின் கவிதைகள் இஸ்லாமியர்களிடம் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில், அதே விஷயத்தை மிகவும் சாதுர்யமாக முகமதுவை புகழ்ந்துகொண்டே ஆனால் பூடகமாக எழுதிய தெஹ்மினாவின் புத்தகம் Blasphemy, எங்கும் விற்பனையில் சக்கைபோடு போட்டுக் கொண்டிருக்கிறது - சென்னையிலும் பிரபல புத்தகக் கடைகளில் கிடைக்கின்றது.

***

வேறெதும் 'அபாண்டங்கள்' எனது கட்டுரைகளில் எங்கேனும் தென்பட்டால் சகோதரர் பாபுஜி அவர்கள் அவற்றையும் தெரிவிக்கலாம். விளக்கத்தயாராகவுள்ளேன்.

அன்புடன்,
நேசகுமார்
nesakumar@gmail.comCopyright:thinnai.com 
******************************************

வஹ்ஹாபியின் கட்டுரையும், ஜெயமோகன் அவர்களது கட்டுரையும்
__________________


Thursday June 4, 2009
செத்தும் கிழித்த கமலா சுரையா
வஹ்ஹாபி

'கமலாதாஸ்' என்ற பெயரில் ஆங்கிலத்தில் கவிதைகளும் 'மாதவிக்குட்டி' என்ற பெயரில் மலையாள மொழியில் சிறுகதைகளும் சுயசரிதமும் எழுதிய 75 வயதான கமலா சுரையா, கடந்த 31.06.2009 அதிகாலை 2 மணியளவில் புனேயிலுள்ள ஜஹாங்கீர் மருத்துவமனையில் காலமானார். அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மலையாள இதழ்களும் தொலைக்கட்சிகளும் அவரைப் பற்றிய செய்திகளைப் பதிவு செய்தன. தன் மண்ணின் மகளுக்கு மலையாள உலகம் மரியாதை செய்வது வியப்பொன்றுமில்லை. அவருக்குத் தமிழ் இணைய உலகிலும் அஞ்சலிகள் செலுத்தப் படுவதைக் காணும்போது அவரது எழுத்தின் வலிமையை, பரவலை உணர முடிகிறது.

"கேரளத்தில் தூக்குத்தண்டனை பெற்ற ஒரு கைதி, சிறையில் இவருடைய எழுத்தை வாசித்தார். பிறகு தண்டனைக்குறைவு பெற்று விடுதலையாகி மாதவிக்குட்டியின் வீட்டுக்கு வந்து, 'அம்மயுட மடியில் தலைவைத்துக் கிடக்கணும்' எனக் கோரினார்; அது நிறைவேறியது"

என்று 'மாதவிக்குட்டிக்கு அஞ்சலி' என்ற பதிவில் நாகார்ஜுனன் குறிப்பிடுகிறார் [சுட்டி-1]. மேலும் மாதவிக்குட்டியைத் தான் சந்திக்க நேர்ந்த நிகழ்வைப் பற்றிச் சொல்லும்போது,

"டைம்ஸ் ஆஃப் இந்தியா அலுவலகத்துக்கு அகஸ்மாத்தாக நான் சென்றபோது அங்கே காரில் இவர் ஏறிக்கொண்டிருந்தார். உளவுத்துறை விசாரணை பற்றிய யோசனையிலேயே நான் சென்றதால் என் மோட்டார் சைக்கிள் இவர் காரை உரசிவிட்டது. ஓட்டுநர் என்னை ஏதும் சொல்வதற்குள் 'எந்தா மோனே..' என்று வந்து என் தோளைத் தட்டிச் சிரித்தார். நிறைய நகை அணிந்திருந்தார். கைவளை ஒலி காதுவரை சென்று மீண்டும் சிலிர்த்தேன். அப்போதுதான் தொட்டது மாதவிக்குட்டி என உணர்ந்தேன்.

"ஓ, என் தப்புதான்.. ஸாரி.... உங்கள் கதைகளை வாசித்திருக்கிறேன்..."
"எந்தினா ஸாரி மோனே, என் கதைகளை வாசித்ததற்காகவா.." என் கன்னத்தில் லேசாகத் தட்டிவிட்டு சட்டென்று காரில் ஏறிச் சென்றார்"
என்று குறிப்பிட்டு விட்டு, மாதவிக்குட்டியின் நினைவாக அவரது "நெய்ப்பாயாசம்" கதையைத் தமிழாக்கித் தந்திருக்கிறார் நாகார்ஜுனன். ஏற்கனவே கீற்று இதழில் குருமூர்த்தியும் நெய்ப்பாயாசத்தை, மெருகேற்றிய தமிழில் பதித்திருக்கிறார் [சுட்டி-2]. அச்சிறுகதையின் இறுதிப் பகுதியான, "அவர்கள் சாப்பிடட்டும்.... அவளுடைய கைப்பட்ட சமையல் இனிமேல் அவர்களுக்கு கிடைக்கப் போவதில்லையல்லவா" என்று முடிவதைப் படித்தபோது இனிமேல் கமலா சுரையா எழுதப் போவதில்லை என்ற உண்மையின் ஒலியும் நமக்குள் அங்குப் பேசாமல் பேசுகிறது.
"பொதுவாக, ஏறத்தாழ எல்லா இலக்கியவாதிகளுமே தங்களது குழந்தைப் பருவத்தைப் பற்றி எழுதும்போது, அது வறுமை நிறைந்த சூழலுடன் இருந்திருந்தாலும் தாங்கள் அனுபவித்த குழந்தைப் பருவத்தை ஒரு கனாக் காலமாகவே எழுதுவர். ஆனால், கமலாதாஸ் தனது குழந்தைப் பருவத்தைப் பற்றி, 'Punishment in kindergarten' என்ற கவிதையில் எழுதும் அம்சம் முற்றிலும் மாறுபட்டது"

என்று 'அஞ்சலியும் ஆசையும்' எனத் தலைப்பிட்டு 'குளோபன்' எழுதுகிறார் [சுட்டி-3] அந்தக் கவிதையில் கமலாதாஸின் உணர்ச்சிகள் ஆங்கிலப் புலமையோடு இரண்டறக் கலந்திருப்பதைக் காண முடிகிறது!.
மலையாளத்தில் அவர் எழுதிய சுயசரிதையான 'எண்ட கதா' (என் கதை) குமுதத்தில் தமிழில் தொடராக வெளிவந்தபோது தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை அது கிளப்பியது.

"என் கதை"யை நீங்கள் எழுதியபோது மக்கள் அதிர்ந்து போயினரே? என்ற ரீடிஃப் ஷோபா வாரியர் விடுத்த கேள்விக்கு, "அதெல்லாமில்லை; அதிர்ந்ததுபோல் பாசாங்குதான் செய்தனர்" என்று தனது வெளிப்படையான எழுத்தை நியாயப் படுத்தினார் கமலா [சுட்டி-4].

"தனது கதைகளூடாக, துரோகத்தை அதன் கொடூரத்தை தயவுதாட்சண்யமே இல்லாத அதன் இருப்பை, கமலாதாஸ் போல அடித்தவர்கள் யாரும் கிடையாது"

என்று அவர் எழுதிய 'பொய்கள்' என்ற கதையை மேற்கோள் [சுட்டி-5] காட்டுகிறார் இலங்கைத் தமிழ் எழுத்தாளர் 'பொடிச்சி':

பிள்ளையைத் தகப்பனுடன் விட்டுவிட்டு வேலைக்குப்போகிற தாய். தாய் சென்ற பிறகு, வருகிற அப்பாவின் காதலி(கள்?). அவர்கள் அப்பாவோடு இருப்பதை –அம்மா வருகிற நேரத்திற்குமுன் போய்விடுவதை- பார்க்கும் பிள்ளை. அந்தக் காதலிகள் பிள்ளையை அணைத்தும் கொஞ்சியும் இனிப்புகள் தந்து செல்வார்கள். பிள்ளையின் பார்வை மட்டும்தான் அங்கிருக்கும். இதைத் தன் தாயிடம் தன்னுடைய மொழியில் இனிப்புகளின்/அவர்கள் அணிந்து வந்த ஆடைகளின் வாசனையைக் குறிப்பிட்டுப் பிள்ளை சொல்லும்போதெல்லாம், பிள்ளை 'பொய்' சொல்வதாகவும் வரவர அவன் பொய்கள் கூடுவதாகவும் தகப்பன் சொல்லுவார். பொய் கூடக்கூட அடிப்பாரோ என்னவோ! தாய் அமைதியாக அவனிடம் அவன் சொல்லுகிற கதைகளைக் கேட்டபடி, "ஏதேனும் கனவு கண்டியோடா?" எனத் தடவிக் கொடுப்பாள். "உண்மையாத்தான்" என அழுவான் - கதையின் முடிவு வரை!

"அரசியல் கட்சிகளை அளவுகடந்து நேசிக்கும் மனிதர்களைப் பார்க்கிறேன்; மதத்தை அளவுகடந்து நேசிக்கும் மனிதர்களைப் பார்க்கிறேன்; ஆனால் மனிதத்தை நேசிக்கும் மனிதர்களைப் பார்ப்பது அபூர்வமாகி விட்டது!" "நான் தேடிய அன்பு இஸ்லாத்தில் கிடைத்தது. அதனை ஒரு போதும் இழக்க விரும்பவில்லை." "எனக்கு இஸ்லாம் பிடித்திருக்கிறது. அது சொல்கிற வாழ்க்கை எனக்குத் திருப்தியாக இருக்கிறது." "நான் முஸ்லிமாக வாழ்கிறேன். என் மூத்த மகன் புத்த மதத்தைத் தழுவியிருக்கிறான். என் இளைய மகன், 'நீதான் எனக்கு மதம், கடவுள் எல்லாமே!' என்று தாய்மையைக் கொண்டாடுகிறான். எல்லோரும் ஒரே வீட்டில் வாழ்ந்தாலும் யாரும் யாரையும் தொந்தரவு செய்வதில்லை. யாரும் யாரையும் தாழ்வாகக் கருதுவதில்லை. என் வீட்டுக்குள் சாத்தியமான இந்த நிலை, என் நாட்டுக்குள்ளும் இருந்தால், இந்த கமலாதாஸ் வேறு ஏதாவது எழுதிக்கொண்டு இருக்கலாம்" என்ற கமலா சுரையாவின் ஆசையை, தம் அஞ்சலிப் பதிவாக்கி இருக்கிறார் மரைக்காயர் என்ற முஸ்லிம் பதிவர்

[சுட்டி-6].

இதுவரைக்கும் எல்லாம் சரிதான்.

சுவையான 'நெய்ப்பாயாச'த்தில் கிடக்கும் பொடிக்கல்லைப்போன்ற ஒரு பதிவையும் படிக்க நேர்ந்தது. அது ஜெயமோகனின் பதிவு:
கேரள சாகித்ய அகடாமி அலுவலகத்தில் கமலாதாஸைச் சந்தித்ததாக தொடங்கும் ஜெயமோனின் 'அஞ்சலி: கமலா சுரையா' என்ற தலைப்பில் அவர் எழுதியுள்ள பதிவைப் படிப்பவர்களுக்கு [சுட்டி-7] அவர் கமலாதாஸைத்தான் சந்தித்தாரா அல்லது வேறு யாரையோவா என்ற ஐயத்தை ஏற்படுத்தும் வண்ணம் அவர் எழுதுகிறார்:

"கமலாவின் பிரச்சினைகளின் ஊற்றுமுகம் ஒன்றுதான். அவர் அழகி அல்ல. கறுப்பான குண்டான கிட்டத்தட்ட அவலட்சணமான பெண். அழகிகளின் குடும்பத்தில் பிறக்கவும் நேரிட்டது. இந்த தாழ்வுணர்ச்சியில் இருந்து உருவான திரிபு பட்ட ஆளுமை அவருடையது"

இதழ்கள், தொலைக்காட்சிகள் நமக்குக் காட்டுகின்ற இப்போதைய கிழவி கமலாவே ஜெயமோகன் குறிப்பிடும்படி 'அவலட்சணமாக' இல்லை என்பதால் அவரது அப்போதைய 'சந்திப்பு' நிகழ்வு என்பதே கற்பனையோ என்று எண்ணத் தோன்றுகிறது. இங்குக் கமலா சுரையாவின் படமும் இணைத்திருக்கிறேன். வாசகர்கள் முடிவு செய்யட்டும்.

இராக் அதிபர் சத்தாம் ஹுஸைன் கைது செய்யப் பட்டபோதுமின்றி, அவரைத் தூக்கிலிட்டுக் கொன்ற பிறகும் "அவர் சத்தாம் அல்ல; அவரைப்போல் உருவம் கொண்ட டூப்ளிகேட்" என்று சொன்ன முஸ்லிம்களையும் அண்மையில் சிங்கள இராணுவத்தால் கொல்லப் பட்ட விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் "மாவீரர் தினத்தன்று தோன்றுவார்" என்று திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருக்கும் புலி ஆதரவாளர்களையும் காணும்போது, உண்மைகளை ஏற்றுக் கொள்ளப் பிடிவாதமாக மறுக்கும் மனப்பான்மை அவர்களிடம் குடிகொண்டிருப்பதை உணர்கிறோம். அதேபோன்ற தன் உள்ளக்கிடக்கையில் ஒளிந்து கொண்டிருக்கும் 'அல்ப ஆசை'களை ஜெயமோகன் தனது எழுத்துகளில் வெளிப்படுத்துகிறார்:

"... அதற்கு ஆறுமாதம் கழித்து கமலா தாஸ் மதம் மாறி கமலா சுரையா ஆக ஆனார். அவரை அவரது 65 வயதில்! ஒரு புகழ்பெற்ற இஸ்லாமிய பேச்சாளர் அவரை திருமணம் செய்துகொள்வதாகச் சொல்லி மதம் மாற்றியதாகச் சொல்லப்பட்டது. கமலாவே 'பாதுகாப்பான துணை தேடி' மதம் மாறியதாக ஊடகங்களிடம் சொன்னார். ஆனால் நினைத்தது போல திருமணம் நடக்கவில்லை. ஆகவே கடுமையான அதிருப்தியை வெளிக்காட்டினார். மீண்டும் குருவாயூரப்பனின் பக்தையாக ஆகிவிட்டதாகவும் ஒரு இந்துவாக வாழ்வதாகவும் சொன்னார். ஆனால் இம்முறை ரகசியமாக மிரட்டலுக்கு ஆளானதனால் மீண்டும் மதம் மாறும் உத்தேசத்தைக் கைவிட்டார்"
செத்துப் போனவர் திரும்ப வந்து மறுக்கப் போவதில்லை என்ற தைரியத்தில், நாலாந்தர எழுத்தாளனைப்போல் ஜெயமோகன் எழுதியிருப்பதைப் படிப்பதற்கே அருவருப்பாக இருக்கிறது!

இவ்வாக்கத்தின் தலைப்பை ஒருமுறை படித்துக் கொள்வோம்.
'செத்தும் கொடை கொடுத்த சீதக்காதி வள்ளல்' என்று சொல்வதுபோல் செத்த பிறகும் ஜெயமோகன் என்ற எழுத்தாளனின் முகமூடியைக் கிழித்தார் கமலா சுரையா. 'செத்த பிறகும்' என்பதை நினைவில் கொள்ள வேண்டுகிறேன்.
"என்னைப் பற்றி அவதூறுகள் பரப்புபவர்களையும் தவறாக எழுதுபவர்களையும் பலவேளைகளிலும் சபிக்க வேண்டும் என்று தோன்றும். அந்த அளவுக்கு அவர்கள் என்னைத் துன்பப்படுத்துகின்றனர். என் மீது இந்த அளவிற்கு அவர்களுக்கு வெறுப்பு வர நான் அவர்களுக்கு என்ன தீமை செய்தேன்?. அன்பு அல்லாமல், யார் மீதும் நான் வெறுப்பு காட்டியதே இல்லை. என்னைக் குறித்துத் தவறான கதைகள் எழுதியதைக் கேள்விப்படும்போது 'நாசமாப் போக' என்று சபிக்கத் தோன்றும். இந்துவாக இருந்திருந்தால் அதைச் செய்திருப்பேன். ஆனால், இப்போது என்னால் முடியாது! துன்பம் இழைப்பவர்களுக்கும் இஸ்லாம் நன்மை செய்யுமாறு கூறுகிறதே! அவர்கள் நன்றாக எழுதட்டும். என்னால் அவர்களைச் சபிக்க இயலாது!"

மேற்காண்பவை, புனாவிலுள்ள கமலா சுரையாவின் மகன் ஜெயசூர்யாவுடைய வீட்டில் வைத்து (சென்ற மாதம்) கைரளி தொலைக்கட்சிக்குக் கமலா சுரையா அளித்த பேட்டியின்போது அவர் கூறியவையாகும். கடந்த 02.06.2009 இரவு கைரளி மக்கள் தொலைக்காட்சி ஒளிபரப்பியபோது அவர் கூறியதாக மளையாள நண்பர் ஒருவர் எனக்குத் தமிழாக்கித் தந்தவை. எழுதி இரண்டு நாட்களுக்குள் ஜெயமோகனின் முகமூடி கிழிபட்டது இப்படித்தான்.

மேலும்,

"பூனாவில் சொந்தமாக வீடு வாங்கும் அளவுக்குக் கையில் போதிய பணம் ஏதும் இல்லை. அந்த அளவுக்குச் சேமிக்கவில்லை. எழுதிக் கொண்டிருந்த காலத்தில் கணவருக்கும் தனியாக நல்ல வருமானம் கிடைத்துக் கொண்டிருந்ததால், எனக்கு எழுத்தின் மூலம் கிடைத்த வருமானத்தைப் பிறருக்குக் கொடுப்பதில் மகிழ்ச்சியடைந்தேன்! அதற்கு என் கணவரும் எவ்வித எதிர்ப்பும் சொல்லவில்லை. மற்றவர்களுக்கு உதவுவது என்பதே தனி ஒரு மகிழ்ச்சிதானே?. கிடைப்பதை எல்லாம் நமக்கே என்று சேர்த்து வைத்து நாம் எதைக் கொண்டு போகப் போகிறோம்? மற்றவர்களுக்குக் கொடுக்க வேண்டும். அதிகமதிகம் கொடுக்க வேண்டும். ஒருவேளை நான் இஸ்லாத்திற்கு மாறியதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம். மற்றவர்களுக்குக் கொடுப்பதைச் சட்டமாக, கடமையாகவே ஆக்கி வைத்திருக்கும் மார்க்கம் அது. எவ்வளவு அழகான மார்க்கம்! வருமானத்தில் 2.5 சதவீதத்தைக் கட்டாயமாக சக்காத்தாக பிறருக்குக் கொடுக்க இஸ்லாம் கட்டாயப்படுத்துகிறது. முன்னரும் நான் கொடுத்துக் கொண்டிருந்தேன். இப்போது இன்னும் இன்னும் அதிகமதிகம் கொடுக்கிறேன். 2.5% அல்ல, என்னிடமுள்ளதில் பாதியைக் கொடுக்கிறேன்; இன்னும் காலம் செல்ல முக்கால் பாகம், ஏன் முழுவதையுமே நான் கொடுப்பேன். பிறருக்குக் கொடுப்பதில் கிடைக்கும் சந்தோசம், அது ஒரு தனி ரகம். அனுபவித்தவர்களுக்கே அது புரியும்!"

என்று மூச்சுக்கு மூச்சு, தான் தேர்ந்தெடுத்த வாழ்க்கை நெறியான இஸ்லாம் குறித்துப் பெருமை பொங்கப் பேசும் கமலா சுரையாவை, "மீண்டும் குருவாயூரப்பன் பக்தை"யாக்கிப் பார்ப்பதற்கு ஜெயமோகனுக்கு அற்ப ஆசை!
கமலா சுரையாவுக்குக் கொலை மிரட்டல்கள்/கொலை முயற்சிகள் இருந்தன என்பது உண்மைதான். அவை எங்கிருந்து வந்தன என்பதை அவரே கூறுகிறார்:

"கொலை மிரட்டல்கள் ... அது ஏராளம். இஸ்லாத்திற்கு மாறிய நாளிலிருந்து ஆரம்பித்தது அது [சுட்டி-8]. இதனால் யாருக்கு என்ன நஷ்டம்?. அவ்வபோது காவல்துறையினர் வந்து ஆலோசனைகள் கூறிச் செல்வர். இப்போதும் சில நாட்களுக்கு முன்னர், இங்குத் தொலைபேசியை மாற்றி வைத்து, நேரடியாக காவல்துறை கண்ட்ரோல் அறையுடன் இணைத்துள்ளனர். அழைப்பவர்களின் எண்ணும் தெரிவது போல் காலர் ஐடி மிசின் வைத்துள்ளனர்."

"எழுத்தச்சன் விருது வழங்க, என்னை அழைத்தனர். நான் வீட்டை விட்டு இனி எங்கும் போவதில்லை எனக் கூறி விட்டேன். முக்கியமாக பப்ளிக் மீட்டிங்குகளுக்கு நான் வருவதில்லை என அனைத்தையும் ரத்து செய்து விட்டேன். என்னைக் கொல்ல நினைப்பவர்கள், அந்த இடத்தில் ஒரு குண்டைக் கொண்டு வந்து போட்டு விட்டால் போதும் தானே? நான் இந்த வயசுக்குப் பிறகு இறப்பதால் எனக்கொரு இழப்பும் இல்லை. ஆனால், வாழ வேண்டிய இன்னும் ஒரு நூறு பேர் எனக்காக இறப்பதை நான் விரும்பவில்லை"

"கொச்சியில் இருக்கும் போதும் அப்படித்தான். ஆனால், அங்குக் காவல்துறைக்கும் மேலாக எனக்கு 8 கமாண்டோக்கள் பாதுகாப்பாக இருந்தனர். அப்படித்தான் சொல்வேன். கமாண்டோக்கள்தான். 8 பிள்ளைகள். என்னை உம்மா என்று தான் அழைப்பார்கள். என்.டி.எஃபைச் சேர்ந்தப் பிள்ளைகள். யாராவது உணவு தந்தால்கூட வாங்கிச் சாப்பிடக் கூடாது என்று கண்டிப்பாக சொல்லி என்னைக் கண்ணும் கருத்துமாக பாதுகாத்து வந்தனர். அதிலும் குறிப்பாகப் பெண்களிடம்தான் கவனமாக இருக்க வேண்டும் என்றும் கூறியிருந்தனர். சில வேளைகளில் சில பெண்கள் வலுக்கட்டாயமாக என் வாயில் மிட்டாய்களைத் திணிப்பர். அவர்களின் அன்புக்குக் கட்டுப்பட்டு அவர்களை எதிர்ப்பதில்லை. வாயில் வாங்கிக் கொண்டு அவர்களைக் காணாமல், குளியலறைச் சென்று துப்பி விடுவேன். அந்தப் பிள்ளைகள் கண்டால் கொதித்து விடுவார்கள். பின்னர் அவர்கள் சாப்பிட்டுப் பார்த்தப் பின்னரே என்னைச் சாப்பிட அனுமதிப்பர். ஒரு முறை அப்படித்தான், ஒரு பெண் கொண்டு வந்த மிட்டாயை உடனே சாப்பிட்டுத்தான் ஆக வேண்டும் என்று அடம் பிடித்தாள். சமது அதை வாங்கி முதலில் சாப்பிட்டுப் பார்த்தான். அதில் என்னைக் கொல்ல விஷம் வைக்கப்பட்டிருந்தது. மூன்று மணி நேரம், பல மருத்துவர்கள் போராடி சமதைக் காப்பாற்றினர். இப்போதும் என்னால் அதை மறக்க முடியாது. மற்றொரு முறை, ஒரு பெண் பிரியாணி செய்து கொண்டு வந்திருந்தாள். அதையும் முதலில் சாப்பிட்ட சமது மீண்டும் ஒருமுறை அதே போன்று மரணத்தின் விளிம்பு வரைச் சென்று தப்பினான். என்னைக் கொல்வதற்கு அப்படி என்ன நான் அவர்களுக்குத் துரோகம் செய்தேன் என்று தெரியவில்லை. எனக்கும் இந்து மதம் தெரியும் தானே? அதில் அப்படி ஒன்றும் இல்லை."

Kamala Das' son M D Nalapat, who has came to Kochi from Delhi, said that they had received a number of threatening telephone calls. The calls appeared to be from Hindu extremists, he added. One caller threatened that he would kill Kamala Das within 24 hours. Nalapat said that his mother had shown extraordinary courage in embracing Islam [சுட்டி-8].

***
'செத்த பிறகும்' என்பதை நினைவில் கொள்ள வேண்டியிருந்தேன்.

உயிரோடு இருந்தபோது கமலா சுரையா யாருடைய முகமூடியைக் கிழித்தார் என்று சொல்ல வேண்டுமல்லவா?

'முகமூடி கிழித்துக் கொண்ட வெ.சா' என்று தலைப்பிட்டு நாகூர் ரூமி திண்ணை 29.09.2006 இதழில் [சுட்டி-9] எழுதியது:

"நான் கூறாத பலவற்றையும் அவர்கள் செய்தியாக்குகின்றனர். எனக்கு இஸ்லாம் மதம் மடுத்து என்றெல்லாம் பிரச்சாரம் செய்கின்றனர். எதற்காக, யாருக்காக இதெல்லாம் செய்கின்றனர் என்று எனக்குத் தெரியாது. சில பத்திரிக்கையாளர்கள் இங்கு வந்து என் வீட்டின் சமையல்காரிகளிடம் பேசி விட்டுப் போவர். பின்னர் அவற்றையெல்லாம் நான் கூறியதாகக் கூறி செய்தியாக்குகின்றனர். பத்திரிக்கையாளர்கள் இத்தனை சதிகாரர்களாக மாறி விட்டனரே?"

"எனக்கு வாழ்வில் தேடலின் தீர்வை அளித்த என் சமுதாயத்திற்கு நான் என்றைக்கும் துரோகம் செய்ய மாட்டேன். எனக்கு மதம் மடுத்து என்று நான் கூறாததை பரப்பியது போல் ஒவ்வொருவரும் என்னைப்பற்றி நாளுக்கொரு பொய்யை புனைந்து பரப்பிக் கொண்டிருக்கின்றனர். ஒரு எறும்பைக் கூட வேதனைப்படுத்த நினைக்காத என்னை எதற்காக இவர்கள் இப்படி துன்புறுத்துகின்றனர்? எனக்குத் தெரியவில்லை".

"இஸ்லாத்தை மதமாக ஏற்றுப் பின்னர் அதனை எனது வாழ்க்கையாக மாற்றிக் கொண்டேன். ஒரு மதத்தில் இருந்து தேடலின் தீர்வாக மற்றொன்றை ஏற்றுக்கொண்ட நான் இந்த சமுதாயத்திற்கும் இஸ்லாத்திற்கும் ஒரு போதும் துரோகம் இழைக்க மாட்டேன்"

"எனது எல்லாக் கேள்விகளுக்கும் கடைசியில் கிடைத்த ஒரே பதில் தான் இஸ்லாம். ஏளனப்படுத்துபவர் ஏளனப்படுத்தட்டும். பிரபஞ்சத்தின் நாயனாகிய அல்லாஹ்வை நான் விசுவசிக்கின்றேன். எல்லாவற்றையும் அவன் நிச்சயிக்கட்டும்."

(மொழிபெயர்ப்பு அபூ சுமையா, திண்ணை, 7 செப்டம்பர், 2006) [சுட்டி-10].
"எனக்கு இஸ்லாம் பிடித்திருக்கிறது. அது சொல்கிற வாழ்க்கை எனக்குத் திருப்தியாக இருக்கிறது." என்று 02-07-06 தேதியிட்ட ஆனந்த விகடனிலும் அவர் பேட்டி கொடுத்திருந்தார்.
நேசகுமார்களைப்போல பொய் பேசும், வெறுப்புமிழும் குழுவில் இப்போது வெ.சா.

***
கடந்த 28.05.2009 திண்ணை இதழில் குர்ஆன் வசனம் 023:006க்கான விளக்கத்தை நாகூர் ரூமியிடம் வெ.சா கேட்டிருந்தார். நாகூர் ரூமி இவ்விதழில் விளக்கம் தராவிடில் அடுத்த வாரம் நிச்சயம் நான் தருவேன் என்று வெ.சாவுக்கு உறுதி தருகிறேன்.

நன்றி!
ஃஃஃ
to.wahhabi@gmail.co
http://wahhabipage.blogspot.com

சுட்டிகள்:
1 - http://nagarjunan.blogspot.com/2009/05/blog-post_31.html
2 - http://www.keetru.com/literature/short_stories/m_gurumoorthi_12.php
3 - http://globen.wordpress.com/2009/05/31/kamaladas/
4 - http://search.rediff.com/news/1996/3107edas.htm
5 - http://peddai.blogspot.com/2005_05_01_archive.html
6 - http://www.maraicoir.com/2009/05/blog-post_31.html
7 - http://jeyamohan.in/?p=2819
8 - http://www.rediff.com/news/1999/dec/13kamala.htm
9 - http://www.thinnai.com/?module=displaystory&story_id=20609221&format=html
10 - http://www.thinnai.com/?module=displaystory&story_id=20609081&edition_id=20060908&format=html

இணைப்பு:
KamalaSuraya.jpg
Copyright:thinnai.com 

“”””””””””””””””””” (7) “”””””””””””””””””
ஜெயமோகன்
அஞ்சலி:கமலா சுரையாJune 1, 2009 – 1:32 pm

கமலா தாஸ் என்ற மாதவிக்குட்டியை நான் ஒரே ஒருமுறை நேரில் சந்திருத்திருக்கிறேன். கேரள சாகித்ய அக்காதமி அலுவலகத்துக்கு அவர் வந்திருந்தார். நித்ய சைதன்ய யதியின் மாணவரான ஒருவர் என்னை அறிமுகம் செய்து வைத்தார். ”ஆ, எனக்குத்தெரியும்…நித்யா என்னுடைய காதலன்!” என்றார். எனக்கு கமலா தாஸ் எப்படிப்பட்டவர் என்று தெரியும் என்பதனால் ஆச்சரியம் அடையவில்லை. அப்போது கமலா தாஸ் விசித்திரமான கோலத்தில் இருந்தார். எப்படியும் முந்நூறு பவுன் எடையுள்ள நகைகள் அணிந்திருப்பார். இமைகளில் ஜிகினா. உதட்டுச்சாயம். ரூஜ். பளபளக்கும் ‘ஸீ த்ரூ’ சேலை. காதுகளில் அவர் அணிந்திருந்த தொங்கட்டான் மிகமிக விபரீதமாக இருந்தது. அதை சாண்ட்லியரின் குழந்தை எனலாம்.



என்னை அவர் பொருட்படுத்தவில்லை. எவரையுமே பொருட்படுத்தவில்லை. அவரே பேசிக்கொண்டிருந்தார். மிகையான நாடகத்தனம். செயற்கையான உடலசைவுகள். கொஞ்சலான மொழி. அவர் சொல்லிக்கொண்டிருந்த விஷயம் வேடிக்கையானது. அவருக்கு குருவாயூர் கிருஷ்ணனுடன் காதல். காதல் மட்டுமல்ல காமமும் கூட. கிருஷ்ணனை பார்க்கச் சென்றிருந்தார். அவனுடன் பேசிக்கொண்டிருந்தபோது சண்டை வந்துவிட்டது. ”இனி ஆ கள்ளனோடு மிண்டில்ல…”என்றார் நாணத்துடன். ”பக்ஷே அவன் என்னை தேடி வரும்..அவனு ஞான் இல்லாதே ஜீவிக்கான் கழியில்ல” அருகே நின்ற ஒரு ஆசாமி உண்மையான பக்திப்பரவசத்துடன் கேட்டுக்கொண்டிருந்தார்.
விசித்திரங்களும் கிறுக்குத்தனங்களும் நிறைந்த வாழ்க்கை கமலா தாசுடையது. கேரள வரலாற்றில் ஆழமான தடம் பதித்த நாலப்பாட்டு நாயர் ‘தறவாட்டி’ல் பிறந்தார். தாத்தா கெ.பி.கேசவமேனன் சுதந்திரப் போராட்ட தியாகி. மாத்ருபூமி நாளிதழை நிறுவியவர். இன்னொரு தாத்தா நாலப்பாட்டு நாராயண மேனன் கேரளத்தின் முக்கியமான கவிஞர். அப்பா வி.எம்.நாயர் மாத்ருப்பூமி நிர்வாக ஆசிரியர். அம்மா நாலப்பாட்டு பாலாமணி அம்மா கேரளத்தின் முக்கியமான பெண் கவிஞர்.

சிறந்த கல்விக்கூடங்களில் கற்ற கமலா தாஸ் ஆங்கிலத்தில் எழுத ஆரம்பித்தார். முதலில் கவிதைகள். அவை கவனிக்கப்படவில்லை. பின்னர் எழுதிய சுயசரிதை ‘My story’ பெரும் புகழ்பெற்றது. அதில் தன்னுடைய பாலியல் பரிசோதனைகளை கிளர்ச்சியூட்டும்படி எழுதியிருந்தார். இளவயது ‘தோழனின்’ விந்துவின் வாசனையைப்பற்றிய வருணனைகள் அவரை புகழ்பெறச்செய்தன. பின்னாளில் அந்த நூலில் சொன்னவை எல்லாமே பொய்கள் என்றும், பணம் கிடைப்பதற்காக கணவரின் ஆலோசனைப்படி எழுதியவை என்றும் சொன்னார் கமலா.

மாதவிக்குட்டி என்ற பேரில் மலையாளத்தில் எழுத ஆரம்பித்தார். அவருடைய செயற்கையான ஆங்கில எழுத்துக்களுடன் ஒப்பிடும்போது மலையாளத்தில் அவர் எழுதியவை முக்கியமான படைப்புகள். மலையாளச் சிறுகதையை கவிதைக்கு அருகே கொண்டு வந்தார். நடுக்கேரளத்தின் பேச்சு நடையை அழகாக புனைவாக்கினார். காமத்தை மென்மையாக எழுதுவதில் ஒரு சாதனையாளர் அவர். கேரள நவீன புனைகதை இலக்கியத்தின் முதல் பத்து சாதனையாளர்களில் அவரை நிச்சயமாகச் சேர்க்க முடியும்.

ஆனால் அவர் நாலப்பாட்டு குடும்பம் என்பதனாலேயே, அவரது மகன் எம்.டி.நாலப்பாடு மாத்ருபூமி ஆசிரியராக இருந்தமையாலேயே, அவர் மிகையாகப் புகழப்பட்டார். கொண்டாடப்பட்டார். அவரை பற்றி கட்டுரைகள் எழுதிக்குவிக்கப்பட்டன. அந்த வரிகள் வழியாக நாம் அவரை அணுகினால் ஏமாற்றமே ஏற்படும்.

கமலாவின் பிரச்சினைகளின் ஊற்றுமுகம் ஒன்றுதான். அவர் அழகி அல்ல. கறுப்பான குண்டான கிட்டத்தட்ட அவலட்சணமான பெண். அழகிகளின் குடும்பத்தில் பிறக்கவும் நேரிட்டது. இந்த தாழ்வுணர்ச்சியில் இருந்து உருவான திரிபு பட்ட ஆளுமை அவருடையது. எங்கும் எப்போதும் தன்னை முன்னிறுத்திக்கொள்ளும் முனைப்பும் தணியாத விளம்பர வெறியும் கொண்டவர் கமலா. செய்தித்தாள்கள் தன்னைப்பற்றி எழுதுவதற்காக அவர் எதையும் செய்வார். ஆபாசமாகப் பேசுவார். ஒன்றுமே தெரியாத மழலையாக நடிப்பார். உயர்வாகக் கருதப்பட்டவைகளை உடைத்து வீசுவார். கீழ்மைகளைப் போற்றுவார். விபரீதமாகவும் தடாலடியாகவும் எதையாவது செய்வார். ஒரு சிறு சந்திப்பில் கூட அப்படித்தான் நடந்துகொள்வார்.

கமலாவின் அதிரடிகள் பல. சுயேச்சையாக தேர்தலில் நின்றார். அரசியல் கட்சி தொடங்கினார் — ஆம், தேசியக்கட்சி! ஓவியங்களை வரைந்து கண்காட்சி வைத்து உண்மையான ஓவியர்களை கதறி ஓடச்செய்தார். பயங்கரமாகப் பாட்டு பாடினார்.

அந்த தாழ்வுனர்ச்சியினால் விளைந்த அணையாத காம இச்சை கொண்டிருந்தார் என அவரது சுயசரிதை மற்றும் குறிப்புகள் காட்டுகின்றன. தோற்றம் காரணமாக புறக்கணிக்கப்படும் பெண்ணின் ஏமாற்றப்பட்ட காமம் அது. அந்த இச்சையையே அவர் விதவிதமாக வெளிப்படுத்தினார். அல்லது அது ஒருவகை வன்மம்.

நிர்மால்யா மொழியாக்கத்தில் கமலாதாஸ் கதைகள் என்னும் ஒரு தொகுப்பு வெளிவந்தது. கவிதா பதிப்பக வெளியீடு. அதற்கு நான் எழுதிய முன்னுரையில் [கமலாவின் காதல்கள்] கமலாதாசின் இந்த கிறுக்குத்தனத்தைச் சுட்டிக்காட்டியிருந்தேன். அவர் கடுமையாக எதிர்வினையாற்றியதாக என்னிடம் நடுவே உள்ள சில இதழியல் நண்பர்கள் சொன்னார்கள். நான் அவரை கூப்பிடவில்லை. ஆகவே ஆறுமாதம் கழித்து என்னை ·போனில் கூப்பிட்டு வசைபாடினார். கமலாவைப் பொறுத்தவரை அந்த எதிர்வினையேகூட ஒரு விளம்பர உத்தியாக இருக்கலாம் என்பதனால் நான் எதிர்வினையாற்றவில்லை

அதற்கு ஆறுமாதம் கழித்து கமலா தாஸ் மதம் மாறி கமலா சுரையா ஆக ஆனார். அவரை அவரது 65 வயதில்! ஒரு புகழ்பெற்ற இஸ்லாமிய பேச்சாளர் அவரை திருமணம் செய்துகொள்வதாகச் சொல்லி மதம் மாற்றியதாகச் சொல்லப்பட்டது. கமலாவே ‘பாதுகாப்பான துணை தேடி’ மதம் மாறியதாக ஊடகங்களிடம் சொன்னார். ஆனால் நினைத்தது போல திருமணம் நடக்கவில்லை. ஆகவே கடுமையான அதிருப்தியை வெளிக்காட்டினார். மீண்டும் குருவாயூரப்பனின் பக்தையாக ஆகிவிட்டதாகவும் ஒரு இந்துவாக வாழ்வதாகவும் சொன்னார். ஆனால் இம்முறை ரகசியமாக மிரட்டலுக்கு ஆளானதனால் மீண்டும் மதம் மாறும் உத்தேசத்தைக் கைவிட்டார். ஏன், மதம் பற்றிய பேச்சையே கைவிட்டார்.

கடைசிக்காலத்தில் கமலா தாஸ் மிக மிகச் சோர்வடைந்திருந்தார். இனிமேல்
கேரளத்துக்கே வரமாட்டேன் என்று சொல்லி பூனாவுக்குச் சென்றார். அங்கே சென்ற மே 31 மாலை மருத்துவமனையில் மரணமடைந்தார்.

தன் கட்டற்ற இச்சைகளினால் அடித்துச்செல்லபப்ட்ட அலைக்கழிந்த ஓர் ஆத்மா. இதோ அது தன் இயல்பான அமைதியைக் கண்டுகொண்டிருக்கிறது. கவித்துவத்தைத் தொட்ட ஒரு பத்து சிறுகதைகள், பாலியகார நினைவுகள் என்னும் தலைப்பிலான ஆரம்பகால கட்டுரைகள் வழியாக கமலா இலக்கியத்தில் இருந்துகொண்டிருப்பார்.