Tuesday 24 June, 2008

இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தை ஆதரித்தால் முகமதியர் ஒட்டு கிடைக்காது ‍__ சி.பி.எம் எச்சரிக்கை !!

இன்றய இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதளில் வந்த செய்தியொன்று.

இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தை ஆதரித்தால் "முகமதியர்" ஒட்டு கிடைக்காது...!!

சமஜ்வாதி கட்சித்தலைவருக்கு சி.பி.எம் கட்சியின் பொலிட்பீரோ விடுத்துள்ள எச்சரிக்கையிது. பெரும்பாலான "முகமதியர்கள்" இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தை எதிர்த்து வருவதாகவும், சமஜ்வாதி கட்சி இந்த அணுசக்தி உடன்பாடை ஆதரித்தால் அடுத்த தேர்தலில் "முகமதியர்கள்" ஓட்டு கிடைக்காமல் போய்விடும் என்று எச்சரிக்கைவிடப்பட்டு இருக்கிறது.

இந்த எச்சரிக்கை அணுசக்தி உடன்பாடை ஆதரிக்கும் பெரும்பான்மை ஹிந்துக்களுக்கு விடப்பட்ட எச்சரிக்கையாக எடுத்துக்கொண்டு, இந்த தீய சக்திகள் வளர ஒருபோதும் வாய்ப்பு தரலாகாது.

"அப்புறம் ஏன் நம்மூரில் குண்டு வெடிக்காது" !!

**********************************************
N-deal support may cost Muslim votes: CPM warns SP

Posted online: Monday , June 23, 2008 at 05:42:10Updated: Monday , June 23, 2008 at 07:14:03

New Delhi, June 23: Amid reports that Samajwadi Party would consider supporting the nuclear deal, the CPI(M) on Monday subtly cautioned SP chief Mulayam Singh Yadav that his party might lose the support of Muslims if it decides to go with the UPA on the issue.

CPI(M) Politburo member M K Pandhe asked Yadav to ‘think twice’ before deciding to support the nuclear deal as overwhelming number of Muslims, his party's perceived votebank, were against the agreement.

He said the SP chief, who enjoys a good relationship with the Left parties, will have to give a lot of explanation if he decides to support the deal, one which he has opposed earlier.

"Mulayam will have to think twice before supporting the deal as an overwhelming majority of Muslims are not in favour of the deal. Mulayam's support is much more among Muslim masses," he told reporters in New Delhi.

He was responding to a question about speculation that the Uttar Pradesh-based party was cosying up to Congress to support the deal, which was strongly opposed by the Left.
Noting that such reports were ‘no doubt’ a serious development, Pandhe said, "He will have to explain it to people how suddenly he has become a supporter of the deal. He has been very strongly opposing the deal."

The role of the 39-member strong party in Lok Sabha could be crucial in a trial of strength if Left allies withdraw support to the deal.

Mulayam said in Lucknow that a decision on supporting the deal would be taken only after consulting leaders of UNPA allies.
------------------------------------------

Friday 20 June, 2008

உலக வளங்கள் நோக்கி நீளுகின்ற சீனக்கரங்கள்

உலக வளங்கள் நோக்கி நீளுகின்ற சீனக்கரங்கள் குறித்த சிறிய பதிவொன்றை நேற்றுமுந்தினம் பதிந்திருந்தேன். இன்றய தினமணியிலும் இன்று வெளியான திண்ணையிலும் இதுகுறித்த மேலதிக புள்ளிவிபரங்க‌ளுடன் கட்டுரைகள் வெளியாகியிருக்கின்றன.

இம்மாதிரியான விபரங்கள் சேரவேண்டியோரிடம் சேர்ந்து சரியான சமயத்தில் விழித்துக்கொள்வோம் என்று நம்புவோமாக. அதற்குமுன் இணைய வாசகர்கள் மத்தியிலும் இதுகுறித்த தகவல் பரிமாற்றங்களும் விவாதங்களும் ஏற்படவேண்டும் என்பது எனது ஆவல்.
**********************************************
Thursday June 19, 2008
சீனப்புலியும், ஆப்பிரிக்க ஆடுகளும்
நரேந்திரன்

"Quand la chine s'eveillera, le monde tremblera" (when China awakes, the world will tremble).
- Napoleon Bonaparte

கடந்த இருபது ஆண்டுகளில் சீனா பிரமிக்கத்தக்க வளர்ச்சி அடைந்திருக்கிறது. மனிதகுல வரலாறு இதுவரை கண்டிராத அளவிற்கு, மிகக் குறுகிய காலத்தில், ஏறக்குறைய 300 மில்லியன் சீனர்களை வறுமையிலிருந்து கரையேற்றி இருக்கிறது சீனா. ஒப்பீட்டளவில், ஐரோப்பியாவில் நிகழ்ந்த பெரும் தொழிற்புரட்சிக்குப் பின்னர், இதுபோன்ற முன்னேற்றம் காண ஐரோப்பிய நாடுகளுக்கு இரண்டு நூற்றாண்டுகள் பிடித்தன. அந்தவகையில் இது ஒரு மாபெரும் சாதனையே.

சீனப் பொருளாதாரம் உயர உயர, சீனர்களின் வாழ்க்கைத் தரமும் உயர்ந்து கொண்டிருக்கிறது. அதற்கேற்ற வகையில் அவர்களின் தேவைகளும் அதிகமாகிக் கொண்டு வருகின்றன. ஏறக்குறைய 1.3 பில்லியன் மக்கள் தொகை கொண்ட, உலக மக்கள் தொகையில் ஐந்தில் ஒருபகுதி உடைய சீனா இன்றைக்கு உலகின் மிகப்பெரும் நுகர்வோர் சந்தையாக மாறிப்போயிருக்கிறது. அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யுமளவிற்கு இன்றைய சீனாவில் இயற்கை, மற்றும் கனிம வளங்கள் இல்லை.
சீனாவின் இன்றைய முன்னேற்றம் இதுபோலவே தொய்வில்லாமல் நிகழ்ந்தால், இன்றைக்கு $6500 டாலர்களாக இருக்கும் சீனர்களின் தனிநபர் வருமானம், இன்னும் இருபது ஆண்டுகளில் தென் கொரியாவின் தனி நபர் வருமானத்திற்கு நிகராக உயரும் சாத்தியங்கள் உண்டு. அவ்வாறு நிகழ்ந்தால், சீனாவின் அலுமினயம் மற்றும் இரும்பின் உபயோகம் இப்போது இருப்பதைப் விடவும் ஐந்து மடங்கு உயரும் எனக் கணக்கிட்டிருக்கிறார்கள். அத்துடன் நில்லாது, சீனாவின் எண்ணெய் உபயோகம் எட்டு மடங்காகவும், வெண்கலம் மற்றும் பிற உலோகங்களின் உபயோகம் ஒன்பது மடங்காகவும் உயரும். இன்றைக்கு சீனாவில் இருக்கும் இயற்கை வளங்களைக் கொண்டு அதனை சமாளிப்பது கடினம் என்பதால், சீன அரசாங்கம் அவ்வாறான உலோகங்கள் கிடைக்கும் ஏழை நாடுகளை, குறிப்பாக ஆப்பிரிக்க நாடுகளைத் தனது பிடிக்குள் வைத்துக் கொள்ள முனைந்து கொண்டிருக்கின்றது.

வறண்டு கிடக்கும் மிகப்பெரிய ஆப்பிரிக்காவின் சஹாரா பாலைவனப்பகுதியில் 49 நாடுகள் இருக்கின்றன. உலகின் ஐந்தில் ஒருபகுதி நிலப்பரப்பு அந்தப்பகுதியில் இருக்கிறது. இருப்பினும் அந்தப் பகுதியின் மொத்தப் பொருளாதாரமும், அமெரிக்க ·புளோரிடா மாநிலத்தின் பொருளாதாரத்தை விடவும் மிகவும் சிறியது. ஏறக்குறைய 300-லிருந்து 400 மில்லியன் மக்கள் ஒவ்வொரு நாளும் $1 டாலருக்கும் குறைவான வருமானத்துடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். உலகின் மிகப்பெரிய சவக்குழியாக மாறிவிட்ட ஆப்பிரிக்கக் கண்டத்தில், 1960-ஆம் ஆண்டுகளை ஒப்பிடுகையில், ஏறக்குறைய இரண்டு மடங்கு ஐந்து வயதிற்கும் குறைவான குழந்தைகள் ஒவ்வொரு நாளும் நோயினால் மரித்துக் கொண்டிருக்கிறார்கள். உலக நாடுகள் இதுவரை அளித்துள்ள 500 பில்லியன் டாலர் உதவித்தொகை இக் கண்டத்தின் ஏழ்மையைச் சிறிதளவு குறைக்கவில்லை. தொடர்ச்சியான போர்களினாலும், எய்ட்ஸ் போன்ற நோய்களினாலும், உணவுப் பஞ்சங்களாலும் ஆப்ரிக்கா தொடர்ந்து பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. உலகமயமாக்கலினால் போட்டி அதிகரித்துக் கொண்டிருக்கின்ற இந்நாட்களில் ஆப்பிரிக்க நாடுகளின் பங்களிப்பு ஏறக்குறைய இல்லை என்றே கூறலாம்.
பணம், விவசாயம், முதலீடு, கட்டமைப்பு என்று எல்லாவிதத்திலும் பின் தங்கி இருக்கும் ஆப்பிரிக்க நாடுகள், தங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் திறனற்று இருக்கின்றன.

கடந்த கால காலனி ஆதிக்கம் அவர்களின் வளங்களைச் சுரண்டி ஒட்டாண்டிகளாக்கியது. இன்றைக்கு சீனா அதே செயலை மிகத் திட்டமிட்டு, திறனுடன் செய்து வருகிறது. உலகம் இதுவரை காணாத சுரண்டல் முறைகளைக் கையாண்டு ஆப்பிரிக்க நாடுகளை ஒட்டாண்டிகளாக்கும் சீனாவின் தந்திரங்கள் உலக நாடுகள் இதுவரை காணாத ஒன்று.
உலகின் மிக வலிமையான நாடாகிய அமெரிக்கா தனது சக்தியை இராக்கியச் சண்டையில் வீணாகச் செலவழித்துக் கொண்டிருக்கும் வேளையில், குறைந்து வரும் உலகின் இயற்கைச் செல்வங்கள் உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் வேளையில், அதுகுறித்து பொருளாதார வல்லுனர்கள் தொடர்ந்து எச்சரித்து வருகையில், கம்யூனிச சீனத் தலைமை உலகில் எந்தப்பகுதியிலும் கண்ணில் தட்டுப்படும் எந்த வித சந்தர்ப்பங்களையும் விடுவதாக இல்லை. துவங்கிய சில வருடங்களிலேயே, ஆப்பிரிக்காவில் முதலீடு செய்யும் மிகப்பெரிய நாடாக மாறியிருக்கிறது சீனா. இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய மிகப்பெரும் "வணிக ஆக்கிரமிப்பு" இதுவே. உலகப் பொருளாதார வரைபடத்தினை மாற்றியமைக்க வல்லதாக ஆகியிருக்கின்றன சீனாவின் எதிர்கால நோக்கத்துடன் கூடிய அந்த முதலீடுகள். ஆப்பிரிக்காவின் பல பகுதிகள் இன்றைக்கு "சின்-ஆப்பிரிக்கா" என்றழைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

நைஜீரியா, இங்கிலாந்திடம் அடிமைப்பட்டுக் கிடந்தபோது அங்கு வாழ்ந்த பிரிட்டிஷ்காரர்களை விடவும் பலமடங்கு சீனர்கள் இன்றைக்கு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் அங்கே. ஆப்பிரிக்க அரசுகளினால் நடத்தப்படும் தொழிற்சாலைகளிலில் துவங்கி, தனியார் தொழில் அமைப்புகள் வரை அனைத்து இடங்களிலும் சீனர்கள் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறார்கள். ஏறக்குறைய 1 மில்லியன் சீனர்கள் நைஜீரியாவில் இருக்கிறார்கள். சீன அரசாங்கம் அறிவிக்கும் ஒவ்வொரு மெகா-தொழிற் திட்டத்தின்போதும் அதிர்வலைகள் நைஜீரியாவில் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது என்று கூறுவதில் தவறில்லை.

பெய்ஜிங், 2006-ஆம் ஆண்டினை "ஆப்பிரிக்க வருடமாக (Year of Africa)" அறிவித்த பின் சீனத்தலைவர்கள் ஒருவர் பின் ஒருவராக ஆப்பிரிக்க நாடுகளுக்கு பிரயாணம் செய்தார்கள். அமெரிக்காவின் கனவான "ஜனநாயக இராக்" போர் போலல்லாது, சீனர்கள் தங்களின் நாட்டுப் பொருளாதார வளர்ச்சிக்குத் தேவையான மூலப் பொருட்களை சுரண்டுவதை மட்டுமே தங்களின் குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது இங்கே.

உலகின் ஆறு மிகப்பெரும் எண்ணெய் நிறுவனங்களில் ஒன்றான "ராயல் டச் ஷெல்" நிறுவனத்தின் சமீபத்திய ஆய்வரிக்கை ஒன்று இங்கு கவனத்தில் கொள்ளத்தக்கது. அடுத்த பத்து ஆண்டுகளில், உலக நாடுகள் பலவும் எரிபொருள், மற்றும் இயற்கைச் செல்வங்கள் (Natural Resources) கிடைக்கும் இடங்களைக் கைப்பற்ற முயலும் எனவும், அதன் காரணமாக உலகின் பல பகுதிகளில் போர்களும், சுற்றுச் சூழல் அழிப்பும் நடக்கும் என்கிறது அந்த ஆய்வறிக்கை. அம்மாதிரியான நடவடிக்கை நிறுத்தப்பட வேண்டுமெனில் உலக நாடுகள் பலவும் ஒன்று கூடி தங்களுக்குள் ஒப்பந்தம் செய்து கொள்வதனைத் தவிர நடக்கவிருக்கும் இப்பேரழிவிலிருந்து தப்ப வேறுவழியில்லை என்கிறது.

இப்போதைக்கு ஒன்றுமட்டும் உறுதி. இது பறக்கும் நேரம். சீனா அதனை மிகச் சிறப்பாகச் செய்து கொண்டிருக்கிறது. சீனாவின் உற்பத்தியில் 40% வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது. அதில் பெரும்பகுதி அமெரிக்காவிற்கு ஏற்றுமதியாகிக் கொண்டிருக்கிறது. ஏற்கனவே கூறியபடி, பெருமளவு அன்னிய செலாவனியினை ஈட்டித் தரும் அம்மாதிரியான ஏற்றுமதிகளுக்குத் தேவையான கச்சாப் பொருட்கள் சீனாவில் குறைந்து வருகிறது. எனவே தனது கவனத்தை உலகின் கனிம வளம் நிறைந்த, ஏழ்மையான ஆப்பிரிக்க நாடுகளை நோக்கித் திருப்பி இருக்கிறது சீனா.

இன்றைய நிலைமையில், மொசாம்பிக்கிலிருந்து மரமும், ஜாம்பியாவிலிருந்து வெண்கலமும், காங்கோவிலிருந்து பல்வேறுபட்ட கனிமங்களும், ஈக்குவெட்டாரியல் கினியாவிலிருந்து என்ணெயும் சீனாவை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றன. எதுவும் செய்ய இயலாத மேற்கத்திய நாடுகளின் முன், பணத்தில் மிதக்கும் சீன நிறுவனங்கள் வெகு வேகமாக அந்நாடுகளுடன் ஒப்பந்தங்களிட்டு தனக்குத் தேவையான எண்ணெய், மரம், இயற்கை எரிவாயு, ஸின்க், கோபல்ட், இரும்பு எனக் கண்ணில் தென்படும் அத்தனை கனிமங்களையும் வாயு வேகத்தில் கடத்திக் கொண்டிருக்கிறது.
2008-ஆம் ஆண்டில் பெய்ஜிங்கில் நடக்கவிருக்கும் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கான நாட்கள் நெருங்க, நெருங்க, சீனா தனது வல்லமையை உலகிற்குக் காட்ட விழைகிறது. உண்மை, ஏறக்குறைய 300 மில்லியன் மக்களை வறுமைக் கோட்டிலிருந்து மிக வேகமாக உயர்த்திய சாதனையைச் செய்திருக்கிறது சீனா. அதே சமயம் சீனா உலகில் தயாராகும் போலிப் பொருட்களை (counterfeit products) தயாரிப்பதில் முன்னனியில் இருக்கிறது. அதேசமயம், ஆப்பிரிக்கா உலகின் போலிப்பொருட்களை அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவிற்குக் கடத்தும் வழித்தடமாக (transit point) மாறியிருக்கிறது. Transparency International's Bribe Payers Index -இன்படி உலகில் இந்தியாவிற்கு அடுத்தபடியாக "இலஞ்சம் கொடுத்து காரியம் சாதிக்கும் (Payola)" நாடுகளில் முதன்மையானதாக சீனா இடம்பிடித்து இருக்கிறது. உலக வங்கி ஏறக்குறைய 68 ஆப்பிரிக்க நாடுகளில் எடுத்த சர்வே ஒன்றின்படி ஏறக்குறைய 43% அரசாங்க ஒப்பந்தங்கள் "பரிசுகள்" மூலமே தீர்மானிக்கப்படுவதாக அறியப்படுகிறது.

ஒன்றுமட்டும் தெளிவு, உலக நாடுகளின் இயற்கை வளம் தீர்ந்து போகப்போகிறதோ இல்லையோ, சீனா அதனை உறுதியுடன் நம்பிச் செயல்படுவதாகத்தான் தெரிகிறது. அல்லது அதுபோல நடந்து கொள்கிறது. சீனாவின் இத்தகைய போக்கு உலக நாடுகளிடையே அச்சத்தைத் தோற்றுவிப்பதில் ஆச்சரியமில்லை. எனவே, உலகச் சுற்றுப்புறச் சூழல் மாசடைவது குறித்து யாரும் கவலை கொள்வதில்லை. சீனா எல்லாவற்றையும் அபகரிப்பதற்கும் முன் நாமும் சிறிதளவாவது அதனைக் கைப்பற்றி விடவேண்டும் என்ற எண்ணமே மேலோங்கி நிற்கிறது இன்று.
இதனை அடிப்படையாகக் கொண்டு பார்க்கையில், அமெரிக்காவின் இராக்கிய கைப்பற்றலும் இதற்கான ஒரு காரணமாக இருக்கக்கூடும். சதாம் தனது எண்ணெய்க் கிணறுகளை சீனா மற்றும் இந்தியாவிற்கு தாரை வார்க்குமுன் அவற்றை அபகரித்துக் கொள்வது அமெரிக்காவின் நோக்கமாக இருக்கலாம். "குளோபல் வார்மிங்" பாதிப்பின் பலனாக உலகின் வளர்ந்து வரும் மக்கள் தொகைக்குத் தேவையான உணவினை உற்பத்தி செய்வது கேள்விக்குறியாக மாறியிருக்கிறது. உணவு தானிய விலைகள் சமீப காலங்களில் உயர்ந்து வருவது அதற்கான கட்டியமாக இருக்கக்கூடும். உலக நாடுகள் பலவும் அதுகுறித்தான கவலைகளை எழுப்பி வருகின்றன.

"சீனா விழிக்கையில் உலகம் அதிரும்" என்றார் ·பிரான்சின் நெப்போலியன் போனபார்ட்டெ. இன்று சீனா விழித்து எழுந்து கொண்டது மட்டுமல்லாமல், உலகையே தனது காலை உணாவாக மாற்றிக் கொண்டிருக்கின்றது. மிகக் குறைந்த காலகட்டத்தில் உலகின் மிகப்பெரிய மர நுகர்வாளராக (top consumer of timber) மாறியிருக்கிறது. அதுமட்டுமல்லாமல் உலக உற்பத்தியில் 30% zinc, இரும்பு மற்றும் எ·கு 27%, அலுமினியம் 23%, வெண்கலம் 22%, மற்றும் ஈயம், தகரம், நிலக்கரி, பருத்தி, ரப்பர் என்று அத்தனை பொருட்களையும் விழுங்கிக் கொண்டிருக்கின்றது சீனா. ஒப்பீட்டளவில், ஆப்பிரிக்காவின் சஹாரா பாலைவனத்தில் அமைந்துள்ள நாடுகள் அனைத்தும் உபயோகிக்கும் எ·கின் அளவு, சீனா உபயோகிக்கும் எ·கில் இருபதில் ஒருபகுதி மட்டுமே. அத்துடனில்லாது உலகின் இரண்டாவது எண்ணெய் நுகர்வாளராக, அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக மாறிக்கொண்டிருக்கிறது.

முன்பே குறிப்பிட்டபடி, ஆப்பிரிக்காவில் சீனர்கள் அங்கிங்கெனாதபடி எங்கும் பரவி இருக்கிறார்கள். மொசாம்பிக்கின் மழைக் காடுகளை அழித்துக் கொண்டு, சூடானில் புதிய எண்ணெய்க் கிணறுகளைத் தோண்டிக் கொண்டு, ஜாம்பியாவில் வெண்கலச் சுரங்கங்களை அமைத்துக் கொண்டு, அங்கோலாவில் சாலைகளை அமைத்துக் கொண்டு என எங்கும் எதிலும் சீனர்களே.

நைஜீரியாவிலிருந்து சாட்டிலைட்டுகளை விண்ணுக்கு அனுப்பி இருக்கிறது சீனா. கானா மற்றும் சுற்றுப்புற நாடுகளில் தொலைத் தொடர்பு வசதிகளையும் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. மருத்துவ மனைகள், தண்ணீர் குழாய்கள் அமைத்தல், அணைகள், இரயில்கள், விமான நிலையங்கள், ஹோட்டல்கள், கால்பந்து மைதானங்கள், பார்லிமெண்ட் கட்டிடங்கள் என ஆப்பிரிக்க நாடுகள் அனைத்திலும் சீனாவின் கைவண்ணமே மிளிர்ந்து கொண்டிருக்கின்றது.

பில்லியன் கணக்கிலான டாலர்களை நிதி உதவியாக ஆப்பிரிக்க நாடுகள் சீனாவிடமிருந்து பெற்றிருக்கின்றன. எந்தவொரு சமயத்திலும் ஏறக்குறைய 800 சீன அரசாங்கத்திற்குச் சொந்தமான நிறுவனங்கள் ஆப்பிரிக்காவில் இயங்கிக் கொண்டிருக்கின்றன. சீனாவின் ஏற்றுமதி-இறக்குமதி நிறுவனம் ஏறக்குறைய 36 ஆப்பிரிக்க நாடுகளில் 300க்கும் மேற்பட்ட திட்டங்களைச் செயல்படுத்திக் கொண்டிருக்கின்றது இன்று. ஆயிரக்கணக்கான தனியார் சீன நிறுவனங்களும் அங்கே கால் பதித்திருக்கின்றன.

சின்னஞ் சிறிய ஆப்பிரிக்க நாடான லெசாத்தோவில் ஏறக்குறைய பாதிக்கும் மேற்பட்ட சூப்பர் மார்கெட்டுகள் சீனர்களால் நடத்தப்பட்டு வருகின்றன. சீனத் தொழிற்சாலைகள் நிறைந்த மொரீஷியசில், சீன மொழி பள்ளிப்பாடமாக்கப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது. ஆப்பிரிக்காவிற்கு அளிக்கப்பட்ட சீன உதவித்தொகையானது உலக வங்கியின் உதவித்தொகையை விடவும் அதிகமாகி இருக்கிறது.
உலகின் பல பாகங்களில் காணப்படும் இயற்கை வளம் ஏறக்குறைய தீர்ந்து போன நிலையில், ஆப்பிரிக்கா மட்டுமே இன்னும் வளங்களைத் தன்னகத்தே கொண்டதாக விளங்குகிறது. எனவே ஆப்பிரிக்க நாடுகளின் மீது சீனாவின் கண் பதிந்ததில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை. உலகின் 90 சதவீத கோபால்ட்டும், 90 சதவீத பிளாட்டினமும், ஐம்பது சதவீத தங்கமும், 98 சதவீத குரோமியமும், 64 சதவீத மாங்கனீசும், உலகின் மூன்றிலொரு பங்கு யுரேனியமும் ஆப்பிரிக்காவில் இருக்கிறது. உலகின் மிகத் தூய்மையான மழைக்காடுகள் பலவும் ஆப்பிரிக்காவில் இருக்கின்றன. வைரங்களும், வட அமெரிக்காவை விட அதிகமான எண்ணெய் வளமும் ஆப்பிரிக்காவிற்கு உரித்தானது. ஏறக்குறைய 40% நீர் மின் நிலையங்கள் அமைப்பதற்கான நீர்வளமும் அங்கு உண்டு. சீனாவிற்குத் தேவையான எண்ணெயில் மூன்றில் ஒருபகுதி ஆப்பிரிக்காவிலிருந்தே செல்கிறது இன்று.

சீனாவின் இந்த அதிரடியான செயல்களைக் கண்டு செய்வதறியாது திகைத்து நிற்கின்றன மேற்கத்திய நாடுகள். சீன அரசாங்கத்தைத் தட்டிக் கேட்கும் துணிச்சல் அவர்களில் ஒருவருக்கும் இல்லை. அமெரிக்கா உட்பட.

**

சீனாவின் முன்னர் இந்தியாவின் நிலைமை பரிதாபகரமாக மாறியிருக்கிறது. இந்தியாவைச் சுற்றி நான்கு புறங்களிலும் நெருக்கடியை அதிகரித்திருக்கிறது சீனா. நேபாளத்தில் எந்தவித எதிர்ப்புமில்லாமல் மாவோயிஸ்ட்டுகளை வெற்றிகரமாக ஆட்சியில் அமர்த்தி இருக்கிறது எல்லைப்புற மாநிலங்களான பீஹார் மற்றும் சட்டீஸ்கர் நக்ஸலைட்டுகளின் அட்டகாசங்கள் இனி அதிகரிக்கும் என்பதில் எந்தவிதச் சந்தேகமும் இல்லை.

சீனாவின் பழைய கூட்டாளியான பாகிஸ்தான் மேற்குப்பகுதியிலும், பர்மா, பங்களாதேஷ் போன்ற சீன அடிப்பொடி நாடுகள் கிழக்குப்பகுதியிலும் இருக்கின்றன. தெற்கில் இலங்கை அரசாங்கம் புலிகளை அழிப்பது என்ற போர்வையில் பாகிஸ்தானிடமிருந்தும், சீனாவிடமிருந்தும் ஆயுதங்களை வாங்கிக் குவித்துக் கொண்டிருக்கின்றது. சரியான சமயத்தி சீனாவுடன் சேர்ந்து கொண்டு இந்தியாவின் கால்களை வாரிவிடத் தயங்காது இலங்கை அரசாங்கம். இந்திய-பாகிஸ்தான் போரின்போது தனது துறைமுகங்களையும், விமான தளங்களையும் பாகிஸ்தானின் உபயோகத்திற்குத் திறந்து விட்ட பெரும் பேறு அந்நாட்டிற்கு உண்டு என்பது வரலாறு.

காலத்திற்கு உதவாத, பிற்போக்குத் தனமான கம்யூனிச கந்தல் சட்டையைக் கழற்றி எரிந்து விட்டு முன்னேற்றப் பாதையில் சீனா சென்று கொண்டிருக்கும் இந்நேரத்தில், இந்திய கம்யூனிஸ்ட்டுகள் ஏறக்குறைய கோமாளிகளாக மாறியிருக்கிறார்கள். அமெரிக்க இந்திய அணு ஒப்பந்தத்திற்கு தேவையற்ற முட்டுக்கட்டைகள் இட்டுக் கொண்டிருப்பதன் மூலம். பாதகங்கள் சில இருந்தாலும், சாதகங்கள் அதிகம் இருக்கும் இந்த அணுசக்தி ஒப்பந்தம் நிறைவேறுவது எதிர்கால இந்தியாவிற்கு மிகவும் அவசியம். இல்லாவிட்டால் சீனாவின் காலனி நாடுகளில் ஒன்றாக இந்தியா மாறிவிடும் அபாயம் இருக்கிறது. நமது 'காம்ரேட்கள்' இதனை உணருவார்கள் என்று நம்புவோம்.

narenthiranps@yahoo.com
Copyright:thinnai.com 

எல்லையோர ஆபத்துகள்

ஹிந்துஸ்தானத்தின் எல்லையோர பகுதிகளுக்கு எற்படும் ஆபத்துகள் குறித்து இன்றய தினமணியில் தலையங்க கட்டுரை ஒன்று வெளியாகியிருக்கிறது. இதுகுறித்த சிறு பதிவு ஒன்றை நேற்று பதிந்திருந்தேன். மேலும் அதிகமான விபரங்களை தருகிறது இந்த கட்டுரை.

******************************************
Friday June 20 2008 00:00 IST
எல்லையோர ஆபத்துகள்
வி. சண்முகநாதன்

அண்டை அயல் நாடுகளுடன் நட்புடனும் நல்லுறவுடனும் விளங்கவே இந்தியா முயன்று வருகிறது. இந்திய அரசு எந்த நாட்டுடனும் வலியப்போய் சண்டையைத் துவக்கியது கிடையாது. சமாதானத்தையே எப்போதும் விரும்பி வந்துள்ளோம்.

அண்மைக்காலமாக நமது நாட்டின் எல்லையோரத்தில் ஊடுருவல்கள் அதிகரித்து வருகின்றன. இந்திய எல்லைக் கோட்டுக்குள் சீனா மற்றும் பாகிஸ்தானிய ராணுவத்தினர் அத்துமீறி நுழைந்து துப்பாக்கிப் பிரயோகம் செய்து வருகின்றனர். எந்த நேரத்திலும் எதுவும் நிகழலாம். இன்று நமது எல்லைகள் பாதுகாப்புடன் இல்லை. விழிப்புணர்வுடனும் முழுத் தயாரிப்புடனும் செயல்பட வேண்டிய காலம் இது.

ஆயிரக்கணக்கான கி.மீ. நீளமுள்ள எல்லைக் கோட்டை நாம், பக்கத்து நாடுகளான பாகிஸ்தான், நேபாளம், சீனா, பர்மா, வங்கதேசம் ஆகியவற்றுடன் பகிர்ந்து கொள்கிறோம். பாகிஸ்தான் ராணுவத்தினர், நமது ஜம்மு - காஷ்மீர் மாநில எல்லைக்குள் அன்றாடம் புகுந்து அராஜகம் செய்வதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர்.

இந்தியாவுக்கும் நேபாளத்துக்கும் கலாசார சிறப்புடன் கூடிய நட்புறவு நீண்ட காலமாக இருந்து வந்துள்ளது. சமீபத்திய தேர்தலுக்கு முன்பும் பின்பும் மாவோயிஸ்டுகளின் பேச்சும் செயலும் இந்தியாவுக்குச் சாதகமானதாக இல்லை. இந்தியாவையும் இந்திய நலன்களையும் மாவோயிஸ்டுகளின் தலைவராகிய பிரசண்டா தாக்கி வருகிறார்.

இந்திய - சீன எல்லைக்கோடு 4,056 கி.மீ. நீளம் கொண்டது. இரு நாடுகளும் "லைன் ஆப் ஆக்சுவல் கண்ட்ரோல்' பற்றி இறுதி வடிவம் கொடுக்கப் பல அமர்வுகளாகப் பேச்சு நடத்தி வருகின்றன. "அக்ஷய் சீன்' என்று அழைக்கப்படும் 38,000 சதுர கிலோ மீட்டர் நிலப்பரப்பை 1962-ஆம் ஆண்டு சீனா கையகப்படுத்திக் கொண்டுவிட்டது. காஷ்மீரின் வடபகுதியை ஆக்கிரமித்த பாகிஸ்தான், அதில் 5,180 சதுர கிலோ மீட்டர் நிலப்பகுதியை சீனாவுக்குத் தாரைவார்த்துக் கொடுத்தது. அக்ஷய் சீன் பகுதியையும் திபெத்தையும் இணைத்து சாலைப் போக்குவரத்து மேற்கொண்டுவிட்டது.

கடந்த ஆண்டு மட்டும் சீன ராணுவத்தினர் அருணாசலப் பிரதேசத்துக்குள் 270 முறை ஊருவியுள்ளனர். எல்லையோரம் வாழும் மக்கள் தங்கள் ஆடு, மாடுகளை எல்லைப்பகுதியில் மேய்ப்பதற்கு அனுமதி மறுக்கப்படுகிறது.
அருணாசலப் பிரதேச எல்லையை ஒட்டிய இந்தியப் பகுதிக்குள் ஒரு புத்தர் ஆலயம் இருந்தது. உள்ளூர் மக்கள் புத்தரைத் தரிசித்து வழிபாடு நடத்தி வந்தனர். சமீபத்தில் அந்த புத்தர் சிலையை அகற்றியாக வேண்டும் என்று சீனக் கமாண்டர் கூறினார். ""புத்தர் சிலை இந்திய எல்லைக்குள் உள்ளது. அதை அகற்றும் பேச்சுக்கே இடமில்லை'' என்று நமது ராணுவத்தினர் கூறியுள்ளனர். சீனர்கள் இந்திய எல்லைக்குள் புகுந்து புத்தர் சிலையை வெடிவைத்துத் தகர்த்து விட்டனர். பிரதமர் மன்மோகன் சிங்கின் அருணாசலப் பிரதேச வருகையை சீனா எதிர்த்துள்ளது.

சீனர்கள் தங்களது வளர்ந்துவரும் பொருளாதார வலிமையை ராணுவ பலமாக மாற்றி வருகின்றனர். நிலம், கடல், வான்வழி தாக்கும் தளங்களை சீனா அமைத்து வருகிறது.

இந்தியா தம் பக்கத்து நாடுகளால் ஏற்படக்கூடிய ஆபத்துகளைப் புரிந்து கொள்ள வேண்டும். துரிதமாகச் செயல்படக்கூடிய எல்லையோரத் தயாரிப்புகள் இருக்க வேண்டும். அத்துமீறல்களை அடியோடு நிறுத்தும் ஆற்றல் வேண்டும். எல்லையோரத்துப் பதற்றங்களைத் தடுக்கவும், நிறுத்தவும், பதிலடி கொடுக்கவும் இந்திய அரசுக்கு ஒரு ஸ்ட்ராடிஜி தேவை. யுத்த தந்திரங்களும் உபாயங்களும் மிகவும் முக்கியமானவை. பலம் வாய்ந்த ராணுவம், நவீன போர் தளவாடங்கள், கருவிகள் அவற்றை உபயோகப்படுத்தும் பயிற்சிகள் அனைத்தும் தேவை.

இந்தியாவிடம் சுமார் 15 லட்சம் ராணுவ வீரர்கள் உள்ளனர். சுகோய் போர் விமானங்கள் விமானப்படைக்கு வந்துள்ளன. கப்பல் படையில் ஐசந ஜலேஷ்வா என்ற போர்க் கப்பல் சேர்க்கப்பட்டுள்ளது. அதே சமயம் சிக்கிம், அருணாசலப் பிரதேசம், பர்மா எல்லைப் பகுதிகளில் போக்குவரத்துக்கு உகந்த சாலைகள்கூட இல்லை. துரிதமான சாலைகள், ரயில், விமான வசதிகளையும் ஏற்படுத்த வேண்டும்.

நமது ராணுவத்தினருக்கு பல இடர்ப்பாடுகள் உள்ளன. அவர்களது சங்கடங்களைத் தீர்க்க வேண்டும். முப்படையிலும் அதிகாரிகளின் எண்ணிக்கை போதுமானதாக இல்லை. போர் விமானங்களில் பல பழசாகிப் போய்விட்டன. போர்க் கப்பல்களின் எண்ணிக்கையும் குறைவு. எதிர்காலத்தில் ஏற்படும் சவால்களுக்கு உகந்த தயாரிப்பு தேவை. புதிய தளவாடங்கள் வாங்குவதில் வெளிப்படையான திட்டமும் செயல்முறையும் இல்லை. ""தெஹல்கா'' மூலம் வெளியான ஊழல்களாலும் தவறான அணுகுமுறைகளாலும் புதிய முயற்சிகளில் தடுமாற்றம் தென்படுகிறது.
பாதுகாப்புத் தளவாடங்களை வாங்குவதிலும் மேலும் பல சிரமங்கள் உள்ளன. நாம் ஒரு "டாங்கு' வாங்குவதற்கு ஆர்டர் கொடுத்து தயாராகி வருவதற்குள் புதுப்புது யுக்திகளுடன் கூடிய அதி நவீன ரக டாங்குகள் வந்துவிடுகின்றன. விஞ்ஞான, தொழில்நுட்ப வளர்ச்சிகளைக் கவனத்தில் கொண்டு முன்கூட்டியே திட்டமிட்டுச் செயல்பட வேண்டும். பாதுகாப்புத் துறைக்குப் போதுமான நிதி ஒதுக்கீடும் அவசியம். நடப்பு ஆண்டில் 1,05,600 கோடி ரூபாயை இந்திய அரசு பாதுகாப்புத் துறைக்கு ஒதுக்கியுள்ளது.

சீனாவும் பாகிஸ்தானும் அவர்களின் பாதுகாப்புத் துறைக்கு ஒதுக்கியதில் பாதி அளவுதான் இந்தியா ஒதுக்கீடு செய்துள்ளது.

இத்தகைய பல குறைபாடுகளுக்கு நடுவிலும் இந்திய ராணுவத்தினர் அடைந்து வரும் வெற்றிக்கு அவர்களது உறுதிமிக்க கட்டுப்பாடும், வீரம் செறிந்த தியாமும் தான் காரணம் என்பதை உலகம் அறியும்.
கார்கில் போரில் பெற்ற வெற்றி போற்றத்தக்கது. தொலைக்காட்சி மூலம் கார்கில் யுத்தத்தை உலகம் நேரடியாகப் பார்த்தது. பனிமலைச் சிகரங்களின் உச்சியில் இந்திய ராணுவத்தினர் தீரத்துடன் போரிட்டு வென்ற வீச சாகசங்களைப் பாராட்டாதவர்களே இருக்க முடியாது.

மலை உச்சியில் நடந்த சண்டைகளிலேயே "மாண்டே காஸினோ' யுத்தம்தான் உலகப் பிரசித்தி பெற்றது.

இரண்டாம் உலகப் பெரும் போரின்போது அனைவரையும் வியப்பில் ஆழ்த்திய யுத்தம் மாண்டே காஸினோ.

கார்கில் மலைச் சிகரங்களில் இந்திய ராணுவத்தினர் ஆற்றிய மயிர்க்கூச்செறியும் யுத்தம் மாண்டே காஸினோவையும் வென்றுவிட்டது என்று உலகின் ராணுவ நிபுணர்கள் மதிப்பீடு செய்துள்ளனர்.
எல்லையில் இந்திய வீரன் துப்பாக்கி ஏந்தி இரவு பகலாகக் கண்விழித்து, வெற்றி வேட்கையுடன் போரிடுகிறான். அவனது தியாகத்துக்கு இணையாக இந்திய அரசும் மக்களும் துணை நிற்க வேண்டும். முழுத் தயாரிப்பும் முதலீடும் செய்ய வேண்டும்.

(கட்டுரையாளர்: பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர்).

Thursday 19 June, 2008

பாரதத்தின் நான்கு பக்கமும் வட்டமிடும் கழுகுகள்

பாரதத்தின் நான்கு பக்கமும் வட்டமிடும் கழுகுகள்...

பாகிஸ்தான், சீனா, பங்ளாதேஷ், இலங்கை என நான்கு திசைகளிலிருந்தும் பாரதம் மீது ஏவப்படும் அரசியல் தீவிரவாதம் மற்றும் மத தீவிரவாத செய‌ல்கள் குறித்து, பத்திரிக்கைகள் மற்றும் இனைய பக்கங்களில் நம்மில் பெரும்பாலோர் அடிக்கடி வாசித்துவருகிறோம்.

பாகிஸ்த்தானிலிருந்து ஏவப்படும் மதத்தீவிரவாதத்துக்கு சற்றும் சளைத்ததல்ல சீனாவிலிருந்து ஏவப்படும் அரசியல் தீவிரவாதம். பாகிஸ்தான் உதவியுடன் உள்ளூர் முல்லாக்கள் கைகோர்த்து நமது மண்ணில் நிகழ்திவரும் பயங்கரவாத செயல்களை நாம் நேரடியாக அனுபவித்து வருவத்தால் மக்களிடையே ஓரளவு விழிப்புணர்வு சமீபகாலங்களில் உண்டாகிவந்திருந்தாலும், பல்வேறு ஓட்டுவங்கி அரசியல் கார‌ணங்களாலும், சரியான வழிகாட்டுதல் கொண்ட தலைமை குறைபாடுகளாலும் தீவிரவாத வெறியாட்டங்கள் நாளுக்குநாள் அதிகரித்துவருவதை கைகட்டி பார்த்துக்கொண்டிருக்கிறோம்.

தனது பொருளாதார வளர்ச்சிக்காக‌ நாலாபுறமும் நீளும் சீனாவின் கொடுங்கரங்களும் அடாவடித்தங்களும், அதனால் பாதிபிபடைந்த மக்கள் நாடுகள் குறித்த விழிப்புணர்வு நமக்கு கொஞ்சம் குறைவுதான்.

சீனாவின் ஒரு பகுதியாக(திபெத் உள்பட)பெரும்பாலான நாடுகளால் அங்கீகரிக்கப்பட்ட திபெத் நாட்டு மக்கள், பெய்ஜிங் ஒலிம்பிக்கை சாதகமாக பயன்படுதிக்கொண்டு தாம் அனுபவித்து வரும் துன்பங்களை உலகத்து மக்களின் பார்வைக்கு எடுத்துச்செல்லும் முயற்தியில் ஓரளவு வெற்றி கண்ட செய்திகள் ஊடகங்களில் பரபரப்பாக பேசப்பட்டு அடங்கியது சமீப நிகழ்வு.

சூடான் நாட்டு சர்வாதிகார ஆட்சியாளர்கள் தமது நாட்டு மக்களையே கொன்று குவித்து பல்வேறு நாட்டு மக்களின் கண்டனங்களுக்கு உள்ளானபோதிலும், காசுக்காகவும், எண்ணைவளங்களுக்காகவும் ஆயுத சப்ளை செய்துவரும் இந்த சீன வியாபாரிகளின் செய்திகளயும் வாசித்து வருகிறோம்.

இரு நாட்டின் எல்லைக்கோடு அருகில் எண்ணை வளங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால், அந்த எண்ணை வளத்தை எப்படி பங்குபோட்டுக்கொள்ள வேண்டும் ?. ஒருபக்கமாக எண்ணை வளங்களை உறிஞ்சி குடித்தால் அது அண்டை நா‍ட்டையும் பாதிக்காதா? இரு நாடுகளும் இணைந்து செயல்படுவதுதான் நியாயமல்லவா ?.

இப்படிதான் சீனா ஜப்பானுக்கிடையே உள்ள கடல் எல்லைப்பகுதியில் நடந்துகொண்டது சீனா. ஜப்பான் இதுகுறித்து ஆட்சேபம் எழுப்பியதுதான் தாமதம்... "அது எல்லைக்கோடே இல்லை... ஜப்பானிலிருந்து சிலநூறு மைல்கள் வரை சீனாவின் எல்லைதான்" என்று ஒரு புதிய உலகவரைபடம் ஒன்று சீனாவினால் தயாரிக்கப்பட்டது. எண்ணைவள தேடுதல்களின் ஒரு பகுதியாக, ஜப்பான் கடல் பகுதிக்குள் சீனாவின் நீர்மூழ்கி கப்பல்கள் அடிக்கடி தென்படுவதும், ஆட்சேபம் எழும்போதெல்லாம், "தொழில் நுட்ப கோளாறு" என்று அடாவடியான பதில்கள் சர்வசாதாரணமாக வரும்.

பாரதத்தை விட்டுவிட்டு எங்கோ போய்விட்டேன்...

இராணுவ பலம், அரசியல் பலம் குறைந்த நாம், நமது கைலாயம் உள்பட பல பகுதிகளை இழ‌ந்து நிற்கிறோம். இனியாவது இழக்காமல் இருக்கக்கூடிய சாதுர்யமும் நமக்கு இல்லை.

அருணாச்சல பிரதேசத்துக்கு நீண்டகாலமாக‌ சீனா உரிமை கொண்டாடிவருவதும், பிரச்சனைகள் தீர்க்கப்படாமல் நீண்டுகொண்டேபோவதும் அடிக்கடி செய்திகளாக வந்துகொண்டுதான் இருக்கிறது. (அருணாசல பிரதேச பிரச்சனைகள் எழும்போது, சீன அரசின் ஸ்போக்ஸ்மேன் கடுகடுப்பான முகத்துடன் "the so called Arunachal Pradhesh" என்று விளிப்பதை தொலைக்காட்சியில் பார்த்திருக்கிறேன். காரி முகத்தில் உமிழவேண்டும் என்று தோன்றும்...)

அடாவடியாக நமது மண்ணை உரிமை கொண்டாடுவதும், நமது அரசியல் தலைவர்கள் சீன அரசின்முன் கைகட்டி நிற்பது கண்டும் நமது இயலாமை குறித்து நிறைய யோசித்திருக்கிறேன்.... சீன அரசின் கைக்கூலித்"தோழர்கள்" உதவியுடன் அரசாளும் அரசியல்வாதிகளால் வேறு என்னதான் செய்யமுடியும் ?

இன்றய (19 ஜூன்) செய்திதாளில், சிக்கிம் மாநிலத்தின் எல்லையிலிருந்து பல கிலோமீட்டர் தொலைவுவரை மோட்டார்சைக்கிளில் வந்து போயிருக்கிறான் சீன இராணுவத்தைச்சேர்ந்த ஒரு அதிகாரி. இவ்வளவிற்கும் சிக்கிம் ஹிந்துஸ்தானத்தின் ஒரு பகுதியாக சீனாவினால் அதிகாரப்பூர்வமாக ஒப்புக்கொள்ளப்பட்ட ஒரு மாநிலம். விரைவில், சிக்கிம் மாநிலத்தின் ஒருபகுதியை உரிமைகோரும் அறிவிப்பு வெளிவரலாம்.

நமது எல்லையோற மாநிலங்களின் பிரச்சனைகளை தமக்கு சாதகமாக சீனா பயன்படுத்திவருவது கண்கூடு. நமது மத்திய அரசாங்கம், குறைந்த பட்ச்சம் இந்த எல்லையோர மாநிலங்களின் குறைகளை கண்டறிந்து நிவர்த்தி செய்வதும், அம்மாநில மக்கள் கல்வி/பொருளாதார மேம்பாடு அடைவதின் மூலமாகவே இத்தகைய சவால்களை எதிர்நோக்கமுடியும் என்று கருதுகிறேன்.

இன்னொரு காஷ்மீர் பிர‌ச்ச‌னை உருவாக‌ம‌ல் த‌டுக்க‌வும், சீனாவிட‌மும் பாக்கிஸ்தானிட‌மும் மேலும் ந‌ம‌து நில‌ப்ப‌ர‌ப்பை இழ‌க்காம‌ல் இருக்க‌வும், மேலும் மேலும் அதிக‌ப்ப‌டியான‌ விழிப்புண‌ர்வும் தேச‌ப‌க்தியும் ந‌ம்மிடையே உருவாக‌ வேண்டும். ம‌ண்ணாசையால் அழிந்த புராண மன்னர்கள் குறித்து நமது இதிகாசங்கள் சொல்லும் செய்திகள் பொய்த்துப்போகாது....‌

நேரம் கிடைத்தால் இன்னும் கொஞ்ச‌ம் விளக்கமாக இவ்விஷயங்கள் குறித்து பதிய எண்ணம். ப‌ல‌ இணைய‌ ந‌ண்ப‌ர்க‌ள் "முக‌ம‌திய‌" தீவிர‌வாத‌ம் குறித்து திண்ணை போன்ற இணைய‌ இதள்களிலும், தமது வலப்பக்கங்களிலும் எழுதிவருகிறார்கள். இதுபோன்று சீனா குறித்த கட்டுரைகளும் விவாதங்களும் அதிகப்படியாக பதியப்படவேண்டும் என்பது எனது விருப்பம்.‌திண்ணை 26 செப்ட்.2007‍ல் பெரிய‌வ‌ர் எழுதிய "சொன்னாலும் சொல்வார்கள், திருக் கயிலாயம் வெறும் பாறை என!" என்ற‌ த‌லைப்பில் எழுதிய‌ க‌ட்டுரையை இன்று மீண்டும் ஒருமுறை வாசித்தேன்.

Tuesday 3 June, 2008

"முகமதியர்"களுக்கு பதில்கட்டுரைகள், திண்ணையில்

இவ்வார திண்ணையில் "முகமதியர்"களுக்கு கண்ணன், ராம்கி எழுதிய பதில் கட்டுரைகள் வாசித்தேன். மிக இயல்பாக எந்தவொரு சாதாரண மனிதனுக்குள்ளும் எழுகின்ற எளிமையான கேள்விகள்.

சுஜாதா கட்டுரை பற்றி... கைரேகை ஜோஸ்யம் பாக்கிறவன் "எம்ஜியார், கருணாநிதி, ரஜினி, கமல் போன்று எல்லோருடனும் புகைப்படம் எடுத்து வைத்துக்கொள்வது போல்" என்ற வரிகள் சிரிப்பை வரவழைப்பதுடன், இதைத்தவிர வேறெந்த காரணமும் இல்லை என்பதை சுருக்கமாக குறிப்பிடும் வரிகள்.

அந்த கட்டுரைகள் கீழே...
*************************

Thursday May 29, 2008
கடிதம்
ராம்கி

ஐயா,
சுஜாதாவிற்கு அஞ்சலி செலுத்தும் சாக்கில் தமது சொந்த கடையை விரித்திரிக்கிறார் தாஜ். இஸ்லாத்தை சுஜாதா ஏற்றார் என்பது இயல்பான செய்தி. தாஜ் பிற மதங்களை ஏற்கிறாரா என்பதே. கேள்வி மேலும் எல்லா மதங்களும், நாளை தோன்ற இருப்பவை உட்பட, இறைவனை ஒன்று போலவே விவரிக்கும். இதில் பெரிய வியப்பென்ன! அந்த நம்பிக்கையை இழப்போரை அல்லது இல்லாதோரை அந்த மதம் எவ்வாறு நடத்துகிறது என்பதே கேள்வி. விடை தேடி எங்கும் அலைய வேண்டாம். சென்ற வாரத் திண்ணையிலேயே பதில் கிடைக்கிறது.

''யூதர்களும், கிறிஸ்தவர்களும் தங்கள் இறைத்தூதர்களின் மண்ணறைகளை வணக்கத் தலங்களாக ஆக்கி விட்டனர். இதனால் அவர்களுக்கு அல்லாஹ்வின் சாபம் ஏற்படும்'' என்று தமது மரணப் படுக்கையில் நபி (ஸல்) அவர்கள் எச்சரிக்கை செய்தனர். (நூல்: புகாரி) -- அபூ முஹை

'கிறிஸ்தவர்கள் மர்யமின் மகன் ஈசாவை (அளவுக்கு மீறிப் புகழ்ந்து கடவுள் நிலைக்கு) உயர்த்திவிட்டதைப் போல் நீங்கள் என்னை உயர்த்தி விடாதீர்கள். ஏனெனில், நான் அல்லாஹ்வின் அடியான் தான். (அப்படி ஏதாவது என்னைப் பற்றிச் சொல்வதாயிருந்தால்) 'அல்லாஹ்வின் அடியார்' என்றும் 'இறைத்தூதர் என்றும் சொல்லுங்கள்' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்" என மிம்பரின் (உரை மேடை) மீதிருந்தபடி உமர்(ரலி) சொல்ல கேட்டிருக்கிறேன். (அறிவிப்பவர் இப்னு அப்பாஸ் (ரலி) - நூல்: புகாரி) -- இப்னு பஷீர்

இதை சுஜாதா படித்திருப்பாரா தெரியவில்லை. பொதுவாக அவர் மதம் அரசியல் போன்ற சிக்கல்களை தவிர்த்தார் என்றே நம்புகிறேன்.. தாஜ் கூறும் கட்டுரையை நான் கருத்தில் கொண்டே சொல்கிறேன். கைரேகை, வாஸ்து போன்ற தொழில் செய்வோர் எம்ஜியார், கருணாநிதி, ரஜினி, கமல் போன்று எல்லோருடனும் புகைப்படம் எடுத்து வைத்துக்கொள்வது போல் இது நம்மூர் அரசியல் வியாதி.

இஸ்லாமியர்கள் சற்று வலைபரப்புகளை நிரப்புவதை விடுத்து, உள்முகமாக சிந்தித்து, உங்கள் மத இளைஞர்களுக்கு இணக்கமாக வாழப் பயிற்சியளியுங்கள். நாட்டிற்கும், நாநிலத்திற்கும் நலம் !
என்ன, துல் பிகர் நம்ம நாட்டாமை சரி தானே!

இவ்வளவிற்கும் இடமளிக்கும் திண்ணை ஆசிரியர் குழுவிற்குத் தலை வணங்குகிறேன்.
regards,
ramki
vijiramki@yahoo.com



Copyright:thinnai.com
*************************

Thursday May 29, 2008
ஈஸ்வர அல்லா தேரே நாம்
கண்ணன்

ஈஸ்வர அல்லா தேரே நாம்
கடந்த திண்ணை இதழில் திரு குரான் பற்றிய ஸ¤ஜாதாவின் கட்டுரையை திரு. தாஜ் வெளியிட்டிருந்தார்.

அந்தக் கட்டுரையப் படித்தவுடன் எனக்கு திரு. கா¢ச்சான் குஞ்சு(இவர் தி.ஜானகிராமன், எம்.வி. வெங்கட்ராம் காலத்து எழுத்தாளர்) கணையாழியில் எழுதியிருந்த "ஈஸ்வர அல்லா தேரே நாம்" என்ற நாடகம்தான் நினைவிற்கு வந்தது.

அதில் ஒரு பிராமணன் 'எல்லாம் ஒன்றே, இதுவே உபனிஷத்துக்களின் முடிவு - ஈஸ்வரன் என்றாலும் அல்லா என்றாலும் ஒரே இறை தத்துவம்தான்" என்று தன் சகாக்களிடம் வாதித்துக் கொண்டிருப்பார். அவரது சகாக்கள் உங்கள் வாதம் நமக்கு பொ¢ய ஆபத்தைக் கொண்டுவந்து சேர்க்கும் என்று எச்சா¢ப்பார்கள். அவர் கேட்கமாட்டார், "நான் வேதம் படித்தவன் எனக்குத் ¦தி¡¢யாதா!" என்று கொக்கா¢ப்பார்.

அப்போது அங்கு ஆட்சியாளன் ஸ¤ல்தானின் படை வீரர்கள் வருவார்கள்; அந்த பிராமணனை ஸ¤ல்தான் அழைத்து வரச்சொன்னதாகச் சொல்வார்கள். அந்த பிராமணனும், "பார்த்தீர்களா ! ஸ¤ல்தான் என் கருத்தைப் பாராட்டி விருது கொடுக்க அழைத்திருக்கிறார்" என்று தன் சகாக்களியடம் பெருமையடித்துக்கொண்டு புறப்படுவார். அவரது சகாக்கள் அவரை எச்சா¢ப்பார்கள். ஆனாலு அவர்களை அலட்சியம் செய்துவிட்டு ஸ¤ல்தானைப் பார்க்க செல்வார்.

சபையில் ஸ¤ல்தான் ஈஸ்வரனும் அல்லாவும் ஒன்றுதான் என்ற அவரது கருத்து உண்ம்தானா என்று கேட்பான். இவரோ, "ஆமாம் அதில் சந்தேகமென்ன? வேதங்களும் உபனிஷத்துக்களும் அப்படித்தான் கோஷிக்கின்றன" என்று ததுவமாகப் பொழிவார். ஸ¤ல்தானும் பல முறைகள் கேட்பான், "இரண்டும் ஒன்றுதான் என்ற உங்கள் கருத்து சத்தியந்தானா?" இவரும் அதில் சந்தேகமென்ன, நான் கற்ற வேதம் சொல்வது சத்தியம்தான் என்று சொல்வார்.

"அப்படியானால் நான் சொலவதைக் கேட்பீர்களா" என்று ஸ¤ல்தான் அவா¢டம் கேட்பான். அவரும், "அதில் சந்தேகமென்ன ராஜா விஷ்ணுவின் அம்சம் என்று சாஸ்திரங்கள் சொல்கின்றன நீங்களோ எங்கள் ராஜா, நீங்களே மகாவிஷ்ணு" என்றெல்லாம் வசனம் பேசுவார்.

ஸ¤ல்தான், "உடனே அரண்மனை நாவிதனை அழைத்து வாருங்கள்" என்று ஏவலர்களுக்கு உத்தரவிடுவான். நாவிதரும் வருவார். அவா¢டம் ஸ¤ல்தான், அந்த பிராமணனின் தலையைச் சரைத்து ஸ¤ன்னத்தும் பண்ணிவிடச்சொல்லி உத்தரவிடுவான்.

அந்த பிராமணனோ நடு நடுங்கி "ராஜா ! இது என்ன !" என்று பதறுவான். "இரண்டும் ஒன்றுதான் என்று சத்தியம் செய்திருக்கிறீர் அப்படியானால் அல்லாவே இறைவன் என்று ஏற்றுக் கொள்வதில் தடையென்ன; தலையச் சரைக்கும் கத்தி வேண்டுமா அல்லது தலையைச் சா¢க்கும் கத்தி வேண்டுமா என்பதை முடிவு செய்துகொள்." என்று ஸ¤ல்தான் முடித்துவிடுவான்.
சா¢த்திரத்தை நாம் அறிந்து கொள்வதுமில்லை, நினைவில் கொள்வதுமில்லை. "ஸத் குண விக்ருதி"(நற்குண தி¡¢பு) என்று அறிஞர்களும் சொல்லியிருக்கிறார்கள்.

ஸ¤ஜாதாவின் கட்டுரையைப் படித்தவுடன் இதுவே என் நினைவிற்கு வந்தது.
கண்ணன், கும்பகோணம்.

--------------------------------------------------------------------------------
kannankumbakonam@yahoo.com

Copyright:thinnai.com