Tuesday 1 December, 2009

இந்திய பகுதியில் சாலைப்​பணியை தடுத்து நிறுத்தியது சீனா

Dinamani.com
First Published : 01 Dec 2009 12:53:52 AM IST
Last Updated : 01 Dec 2009 03:52:07 AM IST
லே,​ நவ. 30:​ ஜம்மு காஷ்​மீர்​மா​நி​லம் லடாக் மாவட்​டத்​தில் உள்ள ​ டெம்​ஷோக் பகு​தி​யில் தேசிய வேலை​வாய்ப்பு உறு​தித்​திட்​டத்​தின் கீழ் மேற்​கொள்​ளப்​பட்ட இணைப்​புச்​சா​லைப்​பணி சீன ராணு​வத்​தின் ஆட்​சே​பத்​தின் கார​ண​மாக நிறுத்​தப்​பட்​டது.

ஒரு மாதத்​துக்கு முன் இந்த சம்​ப​வம் நடந்​துள்​ளது.​ ​ லே மாவட்ட ​ தலை​மை​ய​கத்​திற்கு தென்​கி​ழக்கே 300 கிமீ தொலை​வில் இந்​திய எல்​லைப் பகு​தி​யில் இந்த கிரா​மம் அமைந்​துள்​ளது. இந்த கிரா​மத்​தில் மேற்​கொள்​ளப்​பட்ட சாலை போடும் பணியை அக்​டோ​பர் மாதத்​தில் தடுத்து நிறுத்​தி​யது சீன ராணு​வம் என்று அதி​கார வட்​டா​ரங்​கள் தெரி​வித்​தன.​ ​

இந்த விவ​கா​ரத்தை சீனா​வி​டம் மத்​திய அரசு எழுப்​பும் என்று தெரி​வித்​துள்​ளார் மத்​திய பாது​காப்​புத்​துறை இணை அமைச்​சர் பல்​லம் ராஜு.​ லடாக்,​ ஹிமா​ச​லப்​பி​ர​தே​சம்-​திபெத்தை ஒட்​டிய ஸ்பிடி மற்​றும் திபெத் ஆகிய மூன்று பகு​தி​க​ளும் சந்​திக்​கும் இட​மான இந்த கயா சிக​ரப்​ப​கு​தி​யை​யொட்டி இந்த சம்​ப​வம் நடந்​துள்​ளது.

இதே பகு​தி​யில் கடந்த ஜூ​லை​யில் சீன ராணு​வம் ஒன்​றரை கிமீ தொலை​வுக்கு இந்​திய பகு​திக்​குள் அத்​து​மீறி நுழைந்து மலை​கள்,​ பாறை​க​ளில் சிவப்பு வண்​ணத்தை பயன்​ப​டுத்தி சீன மொழியை எழு​தி​னர்.

இப்​போது வேலை​வாய்ப்பு உறு​தித்​திட்​டத்​தின் கீழ் மேற்​கொள்​ளப்​பட்ட சாலைப்​ப​ணியை தடுத்து நிறுத்​தி​யுள்​ளது.​ சீன-​இந்​திய கட்​டுப்​பாட்டு கோடு பகு​தி​யில் இந்​தி​யா​வுக்கு உட்​பட்ட பகு​தி​யில் இரு கிரா​மங்​கள் உள்​ளன. இந்த கிரா​மங்​களை சாலை மூலம் இணைக்​கத் திட்​ட​மிட்ட லே மாவட்ட நிர்​வா​கம் மத்​திய அர​சின் வேலை​வாய்ப்பு உறு​தித்​திட்​டத்​தின் கீழ் அதற்​கான பணியை மேற்​கொண்​டது.

சுமார் 3.8 கிமீ தொலை​வுக்கு சாலைப் பணி நடந்த நிலை​யில் சீன ராணு​வத்​தி​னர் குறுக்​கிட்டு சர்ச்​சைக்​குள்ள பகுதி இது;​ இங்கு சாலை போடு​வதை அனு​ம​திக்​க​மு​டி​யாது என ஆட்​சே​பித்​த​னர். இது பற்றி இரு தரப்பு ராணுவ அதி​கா​ரி​கள் நிலை​யில் பேசி​யாக வேண்​டும் என​வும் கூறி​னர்.​

இந்த விவ​கா​ரத்தை மத்​திய அர​சின் கவ​னத்​துக்கு மாநில அரசு கொண்டு சென்​றுள்​ள​தாக ஜம்மு காஷ்​மீர் முதல்​வர் உமர் அப்​துல்லா தெரி​வித்​தார்.​ ​ சாலை போடும் பணியை ஒரு மாதத்​துக்கு முன் சீன ராணு​வம் தடுத்து நிறுத்​திய விஷ​யத்தை ​ டோம்​ஷு கிராம தலை​வர் தன்​னி​டம் தெரி​வித்​த​தாக லடாக் தன்​னாட்சி கவுன்​சில் தலைமை அதி​காரி செரிங் டோர்ஜி கூறி​னார்.

சாலை போடப்​பட்ட பகுதி இந்​தி​யா​வுக்கு உட்​பட்​ட​து​தான். ஆனால் சீன ராணு​வத்​தி​னர் சர்ச்​சைக்கு உரிய பகுதி என்று கூறி சாலை போடும் பணியை தடுத்து நிறுத்​தி​னர் என்​றும் டோர்ஜி தெரி​வித்​தார். ​​ ​ இந்​திய எல்​லைக்​குட்​பட்ட இந்த பகு​திக்​குள் சமீப கால​மாக சீன ராணு​வம் அடிக்​கடி அத்​து​மீறி நுழை​கி​றது என்​றும் டோர்ஜி குறிப்​பிட்​டார்.​

மத்​திய அர​சின் திட்​டத்​தின் கீழ் சாலை போடும் பணி பாதி ​ முடிக்​கப்​பட்ட நிலை​யில் சீன ராணு​வம் அந்த பணி​யைத் தடுத்து நிறுத்​திய தக​வலை அங்​குள்ள கிரா​ம​வா​சி​கள் என்​னி​டம் தெரி​வித்​துள்​ள​னர் என்று அந்த பகுதி மக்​க​ளவை உறுப்​பி​னர் ஹசன் கானும் தெரி​வித்​தார்.​ மாவட்ட அதி​கா​ரி​கள் தலை​யிட்டு இந்த பிரச்​னைக்கு தீர்வு காண​வேண்​டும் என்று கிராம மக்​கள் வலி​யு​றுத்​தி​யுள்​ள​னர்.​

சம்​பந்​தப்​பட்ட இடத்தை மாவட்ட துணை ஆட்​சி​யர் அஜித் குமார் சாஹு பார்​வை​யிட்டு அது தொடர்​பான அறிக்​கையை மாநில அர​சி​ட​மும் முதல்​வ​ரி​ட​மும் தாக்​கல் செய்​துள்​ளார். சீன-​இந்​திய எல்​லை​யில் உள்ள கடை​கோடி பகுதி இது. கர​டு​மு​ர​டான மலை​க​ளும் பாறை​க​ளும் நிறைந்த இந்த பகுதி கிரா​மங்​களை சாலை​க​ளால் இணைத்​தால் பொது மக்​கள் எளி​தில் சென்​று​வர உத​வு​வ​து​டன் வேலை​வாய்ப்​பும் அதி​க​ரிக்​கும் என்ற நோக்​கத்​தில் நியோமா மற்​றும் ​ டெம்​ஷோக் பகு​தி​யில் 7 இணைப்​புச் சாலை​களை அமைக்க மாநில அரசு திட்​ட​மிட்​டி​ருந்​தது.​ சீனா​வு​டன் 3000 கிமீ நீள எல்​லை​யைக்​கொண்​டுள்​ளது இந்​தியா. சீன உயர் தலை​வர்​கள் தூண்​டுத​லில் இத்​த​கைய அத்​து​மீ​றல்​கள் நடப்​ப​தில்லை என்று ஏற்​கெ​னவே வெளி​யு​றவு அமைச்​சர் எஸ்.எம்.கிருஷ்ணா தெரி​வித்​துள்​ளார்.​

No comments: