Thursday 12 July, 2007

விகடன் கட்டுரை - இந்தியாவில் பதுங்கும் இஸ்லாமிய தீவிரவாத பன்றிகள்

உலகை மிரட்டும் ரகசிய நெட்ஒர்க்!

பெங்களூருவில் பதுங்கிய ‘கிரிக்கெட்’ தீவிரவாதிகள்... Junior Vikatan 15 July 2007

சில நாட்களுக்கு முன்பு இங்கிலாந்தை நிலை குலைய செய்யும் வகையில், லண்டன் நகரில் அல்&கொய்தா தீவிரவாதிகள் வைத்த வெவ் வேறு கார் வெடிகுண்டுகளை அந்த நாட்டு போலீஸார் கண்டுபிடித்து, அப்புறப்படுத்தினர். அதேபோல், ஸ்காட்லாந்து மாநிலத்தில் உள்ள கிளாஸ்கோ விமான நிலை யத்தின் மீது மர்ம ஆசாமிகள் பயங்கர தீ ஜுவாலையுடன் ஜீப்பை ஓட்டிவந்து மோதினர். இந்தத் தாக்குதலும் தோல்வியில் முடிந்தது!

இந்த ஜீப் மோதல் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள், பெங்களூருவைச் சேர்ந்த முஸ்லிம் தீவிரவாதிகள் என்பது தான். பெங்களூருவை மட்டுமின்றி, ஒட்டுமொத்த இந்தியா வையும் பதற்றத்தில் தள்ளியிருக்கிறது.

2005&ம் வருடம் மார்ச் மாதம் இந்தியா&பாகிஸ்தான் கிரிக்கெட் மேட்ச் நடந்தபோது, Ôமேட்ச் பார்க்க வருகிறோம்Õ என்கிற போர்வையில் பாகிஸ்தானிலிருந்து பதினாறு பேர் பெங்களூருவுக்கு வந்தனர். வந்தவர்கள் மேட்ச்சைப் பார்த்ததாகத் தெரியவில்லை. ஊருக்குள்ளேயே எங்கோ பதுங்கிவிட்டனர். அவர்கள் அல்&கொய்தா தீவிரவாதிகளாக இருக்கலாம் என்கிற சந்தேகம் அப்போதே போலீஸ§க்கு வந்தது. ஆனால், அப்படி
ஊடுருவியவர்கள் ‘எங்கே போனார்கள், என்ன செய்துகொண்டிருக்கிறார்கள்?Õ என்று ஒரு தகவலும் நமது நாட்டு போலீஸ§க்குக் கிடைக்க வில்லை. இந்த நிலையில்தான், அந்தப் பதினாறு பேரின் ரகசிய Ôநெட்&ஒர்க்Õகில் உள்ள பெங்களூருவைச் சேர்ந்த முஸ்லிம் இளைஞர்கள் இந்தியாவிலும், இந்தி யாவுக்கு வெளியேயும் தீவிரவாதச் செயல் களில் ஈடுபட்டு வருவதாக அதிர்ச்சிகரத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கிளாஸ்கோ விமான நிலையத் தாக்கு தலில் ஈடுபட்ட இரண்டு பேரை பிரிட்டன் போலீஸார் பிடித்துவிட்டனர். அவர்களில் ஒருவன், கம்ப்யூட்டர் இன்ஜினீயரான கபீல் அகமது.
இன்னொருவன், டாக்டருக்குப் படித்திருக்கும் சபீல் அகமது. இருவரும் பெங்களூருவைச் சேர்ந்த சகோதரர்கள். எரியும் ஜீப்பை ஓட்டிவந்த கபீல், தீக்காயங்களுடன் சிகிச்சையில் இருக்கிறான். எனவே சபீலிடம் தீவிர விசாரணை நடத்தியபோதுதான், பெங்களூருவின் ரகசிய நெட்&ஒர்க் பற்றிய ஒருசில விவரங்கள் தெரியவந்திருக்கின்றன.

கிளாஸ்கோ விமான நிலைய சம்பவத் துக்கு ஐந்து நிமிடங்களுக்கு முன்பு, ஆஸ்திரே லியாவில் பிரிஸ்பேன் நகரில் உள்ள முகமது ஹனீஃப் என்கிற உறவினருடன் கபீலும், சபீலும் செல்போனில் பேசியிருக்கிறார்கள். இதையடுத்து லண்டன் போலீஸார், ஆஸ்திரேலிய போலீஸ§க்குத் தகவல் கொடுத்து, அங்கே விமான நிலையத்தில் இருந்த ஹனீஃபை கைது செய்தனர். இவனும் கர்நாடகாவில்டாக்டர் படிப்புப் படித்தவன். இந்த விஷயங்கள் எல்லாம் வெளி வந்ததும், இம்மூவர் பற்றிய பின்னணியை விசாரித்த பெங்களூரு போலீஸாருக்குத் திடுக்கிடவைக்கும் தகவல்கள் கிடைத்துள்ளன!

பெங்களூரு போலீஸ் வட்டாரத்தில் நாம் விசாரித்தபோது, நமக்குக் கிடைத்த தகவல்கள் இவைதான்&

‘பாகிஸ்தானிலிருந்து இங்கே(பெங்களூரு வில்) கிரிக்கெட் மேட்ச் பார்க்கவந்து தலை மறைவான பதினாறு பேரும் அல்&கொய்தாவின் உத்தரவின் பேரில் பெங்களூருவை சேர்ந்த கபீல் அகமதுவைதான் முதலில் சந்தித்திருக்கிறார்கள். கபீல் கொடுத்த ஆலோசனைக்குப் பிறகு, அவர்கள் பிரிந்து சென்றிருக்கிறார்கள். உலக அளவில் புகழ்பெற்ற அனைத்து கம்யூட்டர் நிறுவனங்களும், இங்கே கால் பதித்துள்ளன. பொருளாதாரரீதியாக ÔகிடுகிடுÕவென வளர்ந்துவரும் இந்த ஊர்மீது பெரிய அளவில் வெடிகுண்டு தாக்குதல் நடத்த முஸ்லிம் தீவிரவாதிகள் பலமுறை முயற்சி செய்தும் பலிக்கவில்லை. இதையெல்லாம் யோசித்த கபீல் அகமது, அடுத்தகட்டமாக சைபர் டெர்ரரிஸம் மூலம் தாக்குதல் நடத்த தீர்மானித்திருக்கிறான். பிரபல கம்யூட்டர் நிறுவனங்களின் Ôநெட்&ஒர்க்Õகளில் வைரஸ்களை அனுப்பி அன்றாடப் பணிகளை நிலைகுலையச் செய்வதுதான் கபீலின் திட்டம்.

இதற்காக, Ôநெட்&ஒர்க் செக்யூரிட்டிÕ என்கிற படிப்பை ஆன்&லைனில் படித்துவந்தானாம் கபீல். இது தவிர இளைஞர்களைத் தயார் செய்து, வெளிநாடுகளில் கம்ப்யூட் டர் நிறுவனத்தில் வேலைக்கு அமர்த்து வதும் இவனுடைய திட்டம். மாஸ்டர் பிரெயினாக கபீல் செயல்பட... அவனது உத்தரவுகளை இந்த இளைஞர்கள் வெளிநாடுகளில் தங்கி நிறைவேற்று வார்கள். இங்குள்ள கம்யூட்டர் நிறுவனங்களுக்குள் வைரஸ் அனுப்புவதுதான் இந்த இளைஞர்களுக்கு அஸைன்மென்ட். இதற்காக ஆளெடுக்கும் பணியில் பிஸியாக இருந்தபோதுதான், அல்&கொய்தா இயக்க மேலிடம் கபீலை லண்டனுக்குப் போகச் சொல்லியிருக்கிறது. எரியும் ஜீப்பை ஓட்டிச் சென்று மோதும் வேலை கபீலுக்கு புதிய அனுபவம். ஆகவே, கம்ப்யூட்டரில் கில்லாடியான அவன் இந்த மாதிரியான அதிரடித் தாக்குதலை வெற்றிகரமாக செயல்படுத்த முடியாமல், குழம்பிவிட்டான். அதனால், சதித் திட்டம் தோல்வியில் முடிந்துவிட்டது.’

இங்குள்ளகபீலின் வீடு மற்றும் வேறு சில இடங்களில் சோதனை நடத்திய போலீஸார், கபீல் பயன்படுத்தி வந்த கம்ப்யூட்டர்க¬ளைப் பறிமுதல் செய்திருக்கின்றனர். அதில் உள்ள விவரங்கள் மிகவும் ரகசியமான வகையில் பதிவு செய்யப்பட்டிருந்த போதிலும், மத்திய உளவுத்துறையின் கம்ப்யூட்டர் நிபுணர்கள் அதிலுள்ள விவரங்களைக் கண்டுபிடித்துவிட்டார்கள்.

உலகம் முழுவதும் உள்ள அல்&கொய்தா இயக்கத் தினருக்கு ஐயாயிரம் இ&மெயில்களை அனுப்பியிருக்கிறான் கபீல். 2001&03&ம் ஆண்டுகளில் வடக்கு அயர்லாந்துக்குப் போய், அங்குள்ள தீவிரவாதிகளிடம் பயிற்சி பெற்றிருக்கிறான். ஒசாமா பின்லேடனின் பேச்சுகள் மற்றும் அல்& கொய்தா இயக்க கமாண்டர்கள் 30 பேரின் பேச்சு களைத் தன் லேப்&டாப்பில் பதிவு செய்து வைத்திருந்தானாம். செசன்யா மற்றும் ஈராக் நாடு களில் தீவிரவாதிகள் எப்படிச் செயல்படுகிறார்கள், அங்கெல்லாம் தீவிரவாதிகள் சிக்கினால் எந்தெந்த வகையில் சித்ரவதை செய்யப்படுகிறார்கள் என்பதை வீடியோ செய்து வைத்திருந் தானாம்.

கபீலின் சகோதரனான சபீலின் பின்னணியைப் பற்றியும் பெங்களூருவிலுள்ள தீவிரவாதிகள் தடுப்பு போலீஸ் பிரிவினர் விசாரித்து வருகிறார்கள். ஆகவே அடுத்தடுத்து மேலும் பல அதிர்ச்சித் தகவல்கள் வெளிவரும் என்பது மட்டும் நிச்சயம்!

ஆர்.பி.

No comments: