Monday 11 June, 2007

தினமணியில் வெளிவந்த தலையங்க கட்டுரை

தினமணியில் வெளிவந்த தலையங்க கட்டுரை (28 மே 2007 என்று நினைக்கிறேன்...)

ஹிந்து தெய்வங்கள் மட்டும் ஆபாசகலைக்கு இலக்காவது ஏன்?

எஸ். குருமூர்த்தி

பிள்ளையார் சுழி போடுவதுபோல தொடக்கத்திலேயே எல்லோருக்கும் ஓர் எச்சரிக்கை. எதை எழுதினாலோ, பார்த்தாலோ நாகரிகமானவர்கள் ஆபாசமாகக் கருதுவார்களோ அதைப் புனிதம் என்று மதச்சார்பற்றவர்கள் என்று தங்களைப் பறைசாற்றிக் கொள்பவர்கள் அறத்துக் கூறுவதால், அந்த ஆபாசத்தை வெளிப்படையாக எழுதித் தீர வேண்றய கட்டாயம் ஏற்பட்றருக்கிறது. அதனால்தான் இந்தக் கட்டுரை. இங்கு சித்திரிக்கப்பட்றருக்கும் ஆபாசத்துக்கு மன்னிப்புக் கோரி...

பிரச்னையின் மையம் இதோ. ஏசுநாதர் சிலுவையில் அறையப்பட்ட காட்சியை ஓர் ஓவியர் வரைந்தால் அது எப்பற இருக்கும்? அவருடைய கைகள் சிலுவையின் இருபக்கமும், கால்கள் சிலுவையின் அறபாகத்திலும் வைத்து ஆணி அறக்கப்பட்டு அவரது உடலிலிருந்து ரத்தம் சிந்துவதும்தானே அந்தச் சித்திரத்தின் மையம். ஆனால் இப்போதைய நவீன ஓவியர்கள் இந்த மையக் காட்சியை அரைகுறை ஓவியமாகவே கருதுகிறார்கள். மேலும் தங்களுடைய கற்பனையினால் எப்பற ஏசுவை சிலுவையில் அறைந்து சித்திரத்தை முழுமையான கலைச்சின்னமாக்குகிறார்கள் பாருங்கள். சிலுவையில் அறையப்பட்ட ஏசுநாதர் துயிலுரியப்பட்டு - ஆம் நம்புங்கள்! முழு நிர்வாணமாகச் சித்திரிக்கப்பட்டு - அவருடைய ஆண்குறியிலிருந்து விந்துகள் சிந்தி ஆச்சரியப்படாதீர்கள், அதோடு மட்டும் நிற்கவில்லை - அந்த விந்து துளிகள் அந்தச் சிலுவைக்குக் கீழே வைக்கப்பட்றருக்கும் மேற்கத்திய பாணி டாய்லெட் ஓட்டையில் விழுவதுபோலவும், அந்த டாய்லெட் அறயில் மீன்கள் இருப்பதுபோலவும், அந்த மீன்கள் அந்த விந்துகளை விழுங்குவதுபோலவும்... வக்கிரமான கற்பனையின் உச்சாணிக்குச் சென்று ஆபாசத்தைக் கலையாக்கிச் சித்திரித்து சிலுவையில் ஏசுநாதர் அறையப்பட்ட "அரைகுறை' ஓவியத்தை முழுமையாக்குவதுதான் நவீன ஓவியம் (ம்ர்க்ங்ழ்ய் ஹழ்ற்). நம்புங்கள்; இது கற்பனையல்ல. இரண்டு வாரங்களுக்கு முன் நடந்த விஷயம். இது நடந்தது குஜராத்தில். ஆனால் செய்தது நரேந்திர மோற அல்ல. அவர் இந்தக் கேவலத்தைத் தடுக்கத்தான் செய்தார். ஆனால் இதைத்தான் அற்புதமான ஓவியம்; அந்த ஓவியரின் சுதந்திரம் புனிதமானது என்று கூறுகிறார்கள் மதச்சார்பற்ற அறிவு ஜீவிகளில் சிலரும், பத்திரிகையாளர்களில் பலரும். இத்தோடு முறயவில்லை இந்த வக்கிரம்; இது ஓர் ஆரம்பம்தான். மேலும் பாருங்கள்; ஒரு பெரிய ஓவியத்தில் முழு நிர்வாணமான ஒரு பெண். இது அந்த ஓவியத்தின் முன்னுரை, முறவல்ல. அந்தப் பெண்ணின் கர்ப்பப் பையிலிருந்து ஒரு சிசு துறத்து வெளியில் வர முயற்சி செய்வதுபோல அமைகிறது அந்த ஓவியத்தின் அருவருப்பான அடுத்தகட்டம். இப்போதும் முழுமையடையவில்லை அந்த ஓவியரின் அந்தப் படைப்பு. கடைசியில நிர்வாணமாக எல்லோரும் பார்க்கும்பற குழந்தை பெறும் அந்தப் பெண் "துர்க்கை அம்மன்' என்று எழுதி அந்த ஓவியத்தை முறக்கிறார் அந்த ஓவியர். அப்பற அநாகரிகமாக சித்திரிக்கப்பட்ட பெண்தான் துர்க்கை!

இந்த இரண்டு கீழ்த்தரமான ஓவியங்கள் மட்டுமல்ல; சிவ பெருமான் மற்றும் விஷ்ணுபகவான் போன்று ஹிந்துக்கள் வணங்கும் தெய்வங்கள் இதுபோலவே வக்கிரமாகச் சித்திரிக்கப்பட்டு அந்த ஓவியங்கள் குஜராத்தில் பரோடா மகாராஜா சாயாஜி ராவ் பல்கலைக்கழகத்தில் நடந்த ஓவியக் கண்காட்சியில் வைக்கப்பட்றருந்தன. இந்த அநாகரிகமான ஓவியக் கண்காட்சியை பொதுமக்கள் ஆட்சேபித்தனர்; ஆர்ப்பாட்டமும் செய்தனர்; போலீஸôரிடம் புகார் செய்தனர்; அதன்மேல் போலீஸôர் நடவறக்கையும் எடுத்து அந்த ஓவியரைக் கைதும் செய்தனர். போலீஸ் நடவறக்கை எடுத்த அடுத்த நிமிஷம் நாடு முழுதும் மதச்சார்பற்ற அறிவுஜீவிகளும் மற்றவர்களும் ஒட்டுமொத்தமாக ஆங்கிலப் பத்திரிகைகளும் குஜராத் முதல்வர் நரேந்தி மோறயைக் குறி வைத்து தாக்க ஆரம்பித்தனர். அவர் சட்டாம்பிள்ளையாக நடந்து கொள்வதாகவும் கலைஞர்களின் சுதந்திரத்தைப் பறிப்பதாகவும் குற்றம் சாட்றனர். "சுதந்திரமில்லையென்றால், கலைக்கு உயிரில்லை' என்றெல்லாம் கோஷம் எழுப்பினார்கள் மும்பையிலும் தில்லியிலும். ஆனால் அப்பற ஆர்ப்பாட்டம் செய்தவர்கள் தாங்கள் எந்தவிதமான ஓவியக்கலையையும், எந்த ரகமான ஓவியங்களையும் பாதுகாக்க போராடுகிறோம் என்பதைக் கூறவும் இல்லை; அவர்களை யாரும் எதற்காகப் போராடுகிறீர்கள் என்று கேட்கவும் இல்லை. தைரியமிருந்தால் அவர்கள் எந்தவிதமான சித்திரங்களை வரையும் உரிமைக்காகப் போராடுகிறோம் என்று வெளிப்படையாகக் கூறியிருக்க வேண்டும். வக்கிரமாகச் சித்திரிக்கப்பட்ட ஏசுநாதர் ஓவியத்தையும், பெண்ணை கீழ்த்தரமாக்கி துர்க்கை என்று எழுதப்பட்ட அந்த ஓவியத்தையும் மக்கள் முன்னால் வைத்து ""இந்த ஓவியங்களை வரைந்து காட்சிக்கு வைத்தால் என்ன தவறு?'' என்று நாணயமாக மக்களைக் கேட்றருக்க வேண்டும் அவர்கள். ஆனால் அப்பறச் செய்ய அவர்களுக்குத் துணிவு கிடையாது. அவர்கள் அப்பறச் செய்தால், பரோடாவில் நியாயமாகத்தான் பொதுமக்கள் கொதித்தெழுந்தனர் என்கிற "குட்டு' வெளியாகிவிடுமே! என்ன கலை என்பதை மறைத்து எல்லா பத்திரிகைகளும் "கலை சுதந்திரம் பறிபோகிறது' என்று ஒப்பாரி வைத்தன. ஆனால் எந்த மாதிரி கலை, எந்த மாதிரி படங்கள் பரோடாவில் காட்சிக்கு வைக்கப்பட்டன என்பதை எந்தப் பத்திரிகையும் நாணயமாக வெளியிடவில்லை. காரணம் ஆபாசத்தை எப்பற வெளியிடுவது என்பதுதான். பின் எப்பற ஆபாசம் கலையாக முறயும்? அதுமட்டுமல்ல; பரோடாவில் ஓவியக் கண்காட்சி நடத்துபவர்களுக்கு எதிராகப் புகார் கொடுத்தது ஏசுநாதரை அப்பற கீழ்த்தரமாகச் சித்திரித்ததால் மனம் புண்பட்ட ஒரு கிறிஸ்தவர். இந்த உண்மைகளைக் கூட வெளியிடாமல், ஹிந்து வெறியர்கள் கண்காட்சியை எதிர்க்கின்றனர் என்று கூசாமல் பொய் கூறின பத்திரிகைகள்! இன்று வரை உண்மையை எழுதவில்லை எந்தப் பத்திரிகையும்.

ஹிந்துக்கள் வழிபடும் ஆண் தெய்வங்களையும் பெண் தெய்வங்களையும் ஆபாசமாகச் சித்திரிப்பதையே தங்கள் கொள்கையாகக் கொண்ட ஓவியர்கள் பலர் நம் நாட்றல் இருக்கின்றனர். இவர்களில் தலைசிறந்து விளங்குபவர், பலராலும் பாராட்டப்படுகிற எம்.எஃப். உசேன்தான். ஹிந்துக்களின் எல்லா தெய்வங்களை - ஏன் எல்லோருக்கும் பொதுவான, பாரதியார் போற்றிய பாரத அன்னையையும்கூட துயிலுரிந்து, நிர்வாணமாகச் சித்திரித்த அற்புதமான கலைஞர் அவர். பதிவிரதையான சீதை நிர்வாணமாக பிரம்மசாரியான அனுமனின் வாலின் நுனியில் அமர்ந்திருப்பதுபோல ஓவியம் தீட்றனார் இந்த பிருகஸ்பதி! "ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோவில் ஆண்ற' என்பதுபோல ஏன் இப்பற ஹிந்து தெய்வங்களை மட்டும் ஆபாசமாகவும் கீழ்த்தரமாகவும் சித்திரித்து ஓவியம் தீட்டுகிறார்கள் இவர்கள்? இந்தக் கேள்விக்குப் பதில் எல்லோருக்கும் புரிந்ததே. ஹிந்து தெய்வங்களை எப்பறக் கேவலமாகச் சித்திரித்தாலும் அதைத் தட்றக் கேட்கவோ, அதற்காகக் கோபப்பட்டு வெகுண்டு எழுந்து பஸ்களைக் கொளுத்துவோர் அப்பறச் செய்கிறவர்களை தீர்த்துக் கட்ட உத்தரவிட்டு மதக்கட்டளை பிறப்பிக்கவோ ஹிந்து மதத்தில் வழியில்லை. வேறுமத நம்பிக்கையை இப்பற ஆபாசமாக்க முறயுமா? மற்ற மதத்தினரிடம் இப்பற விளையாறப் பாருங்கள் என்று விஸ்வ ஹிந்து பரிஷத்தோ அல்லது சங்கராச்சாரியர்களோ சவால் விடவில்லை. இப்பறக் கூறியது தில்லி உயர் நீதிமன்ற நீதிபதி கபூர். 2005ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஆபாசமான படங்களை வரைந்ததற்காக ஓவியர் உசேனுக்கு எதிராக வழக்குத் தொடர அனுமதியளித்தது, உசேன் மனுவைத் தள்ளுபற செய்து வழங்கிய தீர்ப்பில் கூறுகிறார் நீதிபதி கபூர். கோறக்கணக்கான மக்களால் வணங்கப்படும் தெய்வங்களைக் கேவலப்படுத்தினால் அதனால் அந்த மக்களுடைய மதஉணர்வுகள் புண்படுகின்றன. அதுமட்டுமல்ல; மதங்களுக்கிடையே நிலவி வரும் நல்லுறவுகளையும் அது பாதிக்கிறது. அதுபோன்ற சித்திரங்களை கலையென்று சிலர் கூறினாலும் வழிபடப்படும் தெய்வங்களை நிர்வாணமாக்கிச் சித்திரிப்பதால், அது மதநம்பிக்கை உள்ள மக்களின் மனத்தை வேண்டுமென்றே புண்படுத்தும் செயல் என்பதை மறக்க முறயாது. கலை சுதந்திரம் என்கிற போர்வையில் மதஉணர்வுகளை நோக அறக்கும் செயல்களை அனுமதிக்க முறயாது. இது வேற்றுமதத்தைச் சேர்ந்த மனுதாரராருக்கு (உசேன்) இன்னும் நன்றாகவே தெரிந்திருக்க வேண்டும். தெய்வங்கள் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கை எவ்வளவு ஆழமானது என்பதை (உசேன்) மனுதாரர் சோதித்துப் பார்க்க வேண்டுமென்றால், அவர் சார்ந்த மதக் கடவுளையோ அல்லது வேறு மதத் தெய்வங்களையோ இதுபோன்ற கலைக்கண்ணோட்டத்தோடு வரைந்து தன் கைவரிசையை காட்றப் பார்க்கட்டும்''. இதற்கு மேல் ஒரு வார்த்தை கூட சேர்க்க வேண்றய அவசியமில்லை. நீதிபதி கபூர் கூறியுள்ளதுபோல, மதச்சார்பற்ற அறிவுஜீவிகளும் பத்திரிகையாளர்களும் உசேன் போன்றவர்கள் ஹிந்து அல்லாத மற்ற மததெய்வங்களிடத்திலும் தங்கள் கைவரிசையைக் காட்ட வேண்டும் என்று கூறுவார்களா? அவர்கள் ஏன் கூறுவார்கள்? நீதிபதி கபூர் கொடுத்த தீர்ப்பையை அவர்கள் பிரசுரிக்கவில்லையே
--------------------------------------------------------------------------------

நன்றி: தினமணி

No comments: