Wednesday 17 September, 2008

டெல்லியில் முகமதிய பயங்கரவாதம்: ஒரு தாமதமான பதிவு...

கடந்த 13ம் தேதி டெல்லியில் 5 இடங்களில் தொடர்ச்சியாக குண்டு வெடித்தது. 90 பேர் காயம் அடைந்தனர். 20 பேர் பலியாயினர். மாலை 6:30 மணிக்கு மக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும் நேரம் பார்த்து குண்டுகளை வெடிக்கச் செய்தனர் இந்த முகமதிய பயங்கரவாதிகள். 45 மணி நிமிடங்களுக்குள் 5 இடங்களில் குண்டு வெடிப்பு நிகழ்த்தப்பட்டுள்ளது. இந்தியா கேட் அருகில் ஒரு குண்டை செயலிழக்க செய்திருக்கிறார்கள்.

ஆனாலும் இந்த‌ முக‌ம‌திய‌ ப‌ய‌ங்க‌ர‌வாதிக‌ளுக்கு ம‌த‌/இன‌ ப‌ற்று அதிக‌ம்தான். முக‌ம‌தியன்கள் யாரும் செத்துவிடாத‌வாறு, அவர்கள் ரம்ஜான் நோன்பை முடிக்கிற நேரத்தை கணக்கிட்டு திட்டமிட்டு இந்த குண்டுவெடிப்பை நிகழ்த்தியிருப்ப‌து க‌வ‌னிக்க‌த்த‌க்க‌து.

ஜிகாதிகள் பலிகொண்ட அந்த அப்பாவி இந்தியர்களின் ஆத்மா சாந்தியடைய இறைவனின் அருள் கிடைக்கட்டும். காயம்பட்டவர்களுக்கும் கைகால்களை இழந்தவர்களுக்கும், இந்த நிகள்வுகளால் பாதிக்கப்பட்ட அனைத்து ஆண்கள், பெண்கள், குழந்தைகள் அனைவரையும் எல்லாம் வல்ல இறைவன் காக்கட்டும்.

********

இனி....

பாதிக்கப்பட்ட‌ குடும்பங்களுக்கு நிவாரணம்(பிச்சை) இடப்படும். பிரதமரிலிருந்து ஜனாதிபதியிலிருந்து எல்லோரும் அறிக்கை இடுவர்... வ‌ழக்க‌ம்போல் போலீசார் தீவிரவேட்டையை ஆர‌ம்பித்துவிடுவர்... துப்புக்க‌ள் துல‌ங்க‌ ஆர‌ம்பிக்கும்... "உடனே முகமதியரை சந்தேகப்படக்கூடாது, இந்துத்துவ அமைப்புகளையும் கருத்தில்கொண்டு விசாரணை நடத்தப்படவேண்டும்" என்று இணைய முல்லாக்கள் முதல் இமாம்கள் வரை கூப்பாடு போடுவர், கைது ப‌ட‌ல‌ம் ந‌ட‌க்கும்... முக‌ம‌திய‌ர் ப‌ல‌ர் கைதுசெய்ய‌ப்ப‌டுவ‌ர்... "ஆதார‌மில்லாம‌ல்" ப‌ல‌ர் விடுவிக்க‌ப்படுவ‌ர்... பல்வேறு இன்னல்களுக்கிடையே பெரும்பாடுப‌ட்டு த‌ண்ட‌னைக்குள்ளாக்க‌ப்ப‌ட்டாலும் அப்சல்/ பாஷா மாதிரியாக‌ அனைத்து முய‌ற்சிக‌ளும் வீணாக்க‌ப்ப‌டும்...

இத‌ற்கிடையில் ஹிந்துவாக‌ பிறந்த‌ ஒரே கார‌ண‌த்தால் வெடித்துச்சித‌றிய‌ அந்த‌ உயிரும், அவ‌ர்த‌ம் குடும்ப‌த்தாரும் ம‌ற‌க்க‌ப்ப‌ட்டு நாம் அனைவ‌ரும் சொந்த‌ க‌வ‌லைக‌ளில் மூழ்கிப்போவோம்.

************
க‌ட‌ந்த‌ இர‌ண்டு நாளாக‌ தின‌சரிகளில் வ‌ந்த செய்திகள்... ப்ர‌திபா பாட்டீல் (அதாங்க‌ ந‌ம்ம‌ ஜ‌னாதிப‌தி) மாநில‌ முத‌ல்வ‌ர்க‌ளை தில்லிக்கு வ‌ர‌வ‌ளைத்து, கூட்ட‌ம்போட்டு, தீவிர‌வாத‌த்தை ஒடுக்க‌ "பாடுப‌ட‌வேண்டும்" என்று "கேட்டுக்கொண்டாராம்". தில்லியில் ந‌ட‌ந்த‌ குண்டுவெடிப்புக‌ள் "க‌வ‌லைய‌ளிப்ப‌தாக" உள்ள‌தாம். தீவிர‌வாத‌த்தை நாம் அனைவ‌ரும் ஒன்றாக‌ இணைந்து போராடினால் த‌டுத்துவிட‌லாம் என்ப‌து போன்ற "கருத்தாழ‌மிக்க"‌ ஆலோச‌னைக‌ளை இல‌வ‌ச‌மாக‌ வழங்கியுருகிறார். இருக்க‌ட்டும்... மாத‌ ச‌ம்ப‌ள‌ம் ஒன்ற‌றை ல‌ட்ச‌மாக‌ ச‌மீப‌த்தில் உய‌ர்ந்திருக்கிற‌து, இவ்வ‌ள‌வுகூட‌ பேசாவிட்டால் எப்ப‌டி...!

**********

ம‌டியில் குண்டைக்க‌ட்டிக்கொண்டு எவனைக் கொல்லலாம் என்று அலைந்து கொண்டிருக்கும் இந்த‌ கூட்ட‌ம் முக‌ம‌திய‌ ப‌ய‌ங்க‌ர‌வாதிக‌ளைத்த‌விர‌ வேறு யாராக‌ இருக்க‌ முடியும்... எவ்வ‌ள‌வோ ஆதார‌ங்க‌ளை பார்த்தாகிவிட்ட‌து ( கீழ்கண்ட இவ்வார‌ ஜூவி க‌ட்டுரையை பாருங்க‌ள்). ஆனாலும் "முக‌ம‌திய‌ர்க‌ளை மட்டும் சந்தேக‌ப்ப‌ட‌க்கூடாது" என்ற‌ரீதியில் ப‌ல‌ இட‌ங்க‌ளிலும் எழுத‌ப்ப‌ட்டுவ‌ருகிற‌து... வாஞ்சூரோ மூஞ்சூரோ (இந்த மாதிரி கழிசடை பதிவுகளையெல்லாம் நான் பெரும்பாலும் படுப்பதில்லை... ஆனாலும் அவ்வப்போது கண்ணில் பட்டுத் தொலப்பதுண்டு) த‌முமு வின் அறிக்கையாக வந்த விஷயங்களை சமீபத்தில் இப்படி எழுதியிருக்கிறது....
"
தொடர் குண்டு வெடிப்புகளைத் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் வன்மையாகக் கண்டிக்கின்றது....இந்தப் படுபாதக செயல்களைச் செய்த உண்மை குற்றவாளிகள் உடனடியாகக் கண்டுபிடிக்கப்பட்டு அவர்களுக்கு உச்சபட்சத் தண்டனை அளிக்கப்பட வேண்டும் என்று தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் கோருகின்றது.குண்டுவெடிப்புகளுக்கு காரணமான உண்மை குற்றவாளிகள் தப்பிக்க விடப்பட்டு அப்பாவிகள் கைதுச் செய்யப்படுவதினால் தான் குண்டுவெடிப்புகள் தொடர்கின்றன.

குண்டுவெடிப்புகள் நடைபெற்றவுடன் உடனடியாகச் சந்தேகப் பார்வையை முஸ்லிம் அமைப்புகள் மீது வீசும் போக்கைத் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் வன்மையாகக் கண்டிக்கின்றது.தமிழகத்தில் தென்காசியில் ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தில் குண்டுவைத்தவர்கள் முஸ்லிம் அமைப்பினர் அல்ல.

மராட்டிய மாநிலம் நான்டெட்டில் இருமுறை குண்டுகளைத் தயாரித்துக் கொண்டிருந்த போது பஜ்ரங் தள அமைப்பினர் இறந்துள்ளனர்.
கடந்த ஜுலை மாதம் தானே, பான்வெல், வார்சி போன்ற ஊர்களில் பொது இடங்களில் குண்டு வெடித்த போது மாராட்டிய காவல்துறை சனாதன் சான்ஸ்தான் என்ற அமைப்பைச் சேர்ந்தவர்களைக் கைதுச் செய்துள்ளது.
சமீபத்தில் கான்பூரில் குண்டுகளைத் தயாரித்துக் கொண்டிருந்த போது அவை வெடித்து பஜ்ரங்தளத்தைச் சேர்ந்த இருவர் உயிர் இழந்துள்ளனர்.
நாடாளுமன்றத் தேர்தல் விரைவில் வரும் நிலையில் அதில் முழுப் பலனையும் பெறுவதற்காகப் பாசிசத்தை அடிப்படையாகக் கொண்டு செயல்படும் சக்திகள் இந்தத் தொடர் குண்டுவெடிப்புகளை ஏன் நடத்தியிருக்கக் கூடாது என்பதை மத்திய அரசு ஆராய வேண்டும்.
குஜராத் முதல்வர் மோடி முன்கூட்டியே டெல்லியில் குண்டுவெடிக்கும் என்று தனக்குத் தெரியும் என்று கூறியுள்ளார்.


இதே நேரத்தில் அஹ்மதாபாத் குண்டுவெடிப்பு தொடர்பாகக் கைதுச் செய்யப்பட்டோரை விசாரித்த போது டெல்லி குண்டுவெடிப்பு தொடர்பாக அவர்களிடமிருந்து எந்தவொரு குறிப்பும் கிடைக்கவில்லை என்று அஹ்மதாபாத் காவல் இணை ஆணையாளர் ஆசிஸ் பாட்டியா குறிப்பிட்டுள்ளார்.

எனவே டெல்லி குண்டுவெடிப்புக் குறித்து ஒரு தலைபட்சமாக விசாரிக்காமல் பல்வேறு கோணங்களில் நரேந்திர மோடி உள்ளிட்டோரை விசாரித்து உண்மை குற்றவாளிகளைக் கண்டுபிடித்து கடும் தண்டனை அளிக்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனத் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் கோருகின்றது.

"

எப்படித்தான் இப்ப‌டி எழுத‌ ம‌ன‌ம் வ‌ருகிற‌தோ ? எவ்வ‌ள‌வுதூர‌ம் இது உண்மையோ.... வ‌லைப்ப‌திவில் இப்ப‌டி ஒருவ‌ர் எழுதியிருக்கிறார்...

"
என் டி டிவியில் பர்கா தத் ஒரு பெண்மணியிடம், “நீங்கள் இங்கு எதற்காக வந்தீர்கள்?” என்று கேட்கிறார்…அந்தப் பெண்மணி தன் முப்பத்திரண்டு பற்களையும் காட்டி சிரித்துக் கொண்டு, “இந்த மாதிரி சமயத்தில் போலீசும் மற்றவர்களும் எப்படி வேலை செய்கிறார்கள், என்னவெல்லாம் நடக்கின்றன என்பதை பார்க்க வேண்டும் என்று என் மகள் ஆசைப்பட்டாள். அதற்காகத்தான் அவளை அழைத்துக் கொண்டு வந்தேன்” என்று சொல்கிறார். குண்டு வைத்த ஜிகாதிகளை விட இந்தப் பெண்மணி கொடூர மனம் படைத்தவர்…
தன் சக குடிமக்கள் இறந்தும், இறந்துகொண்டும் இருக்கிறார்களே…அவர்களுக்கு உதவி செய்யவேண்டும் என்று மனதில் தோன்றவில்லை…வேடிக்கை பார்க்க வேண்டும் என்று தோன்றியதாம்…அதையும் சிரித்துக் கொண்டே சொல்கிறார்…இவரைப் போன்றவர்களும் இந்த தேசத்தில் இருக்கத்தான் செய்கிறார்கள்!


இதுதானே முக‌ம‌திய‌ம் அவ‌ர்க‌ளுக்கு க‌ற்றுத்த‌ந்த‌து. இவ‌ர்க‌ளிட‌ம் வேறென்ன‌ எதிர்பார்க்க‌முடியும் ?

****** ஜூவி க‌ட்டுரை கீழே ******
Issue Date: 21-09-08
டெல்லியின் நிறம் சிவப்பு!

டெல்லி, இன்னொரு முறை தன் மீது ரத்தக் கறை பூசிக்கொண்டு மக்களின் பாதுகாப்புக்கு என்ன உத்தரவாதம் என்ற கேள்வியை ஆட்சியாளர்களுக்கு கேட்டிருக்கிறது. இந்தியாவுக்கு எதிரான பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள், கடந்த 13-ம் தேதி டெல்லியில் ஒன்பது இடங்களில் வெடிகுண்டு வைத்தனர். இதில் ஐந்து இடங்களில் குண்டு வெடித்தது. மூன்று இடங்களில் இருந்த குண்டுகள் வெடிக்காமல் போனது. மற்றொரு வெடிக்காத குண்டு பற்றி இதுவரை தகவல் இல்லை. வார இறுதி நாளான சனிக்கிழமையன்று மக்கள் அதிகம் கூடும் இடங்களில் வெடித்த குண்டுகளால் இருபத்தி நான்கு பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கும் அதிகமானவர்கள் படுகாயமடைந்தனர்.
டெல்லி போன்ற வட இந்திய நகரங்களில் வழக்கமாக சனிக் கிழமைகளில் சனீஸ்வரன் கோயில்களில் கூட்டம் அதிகமாக இருக் கும். கூடவே, ரம்ஜான் உண்ணா நோன்பு திறக்கும் சமயத்தில் டெல்லி பூங்கா, கடை வீதிகள், முக்கிய சாலைகளில் இந்த வெடி குண்டுகள் வெடித்திருக்கின்றன.
அப்பாவிகளை அவ்வப்போது காவு கேட்கும் தீவிரவாதிகளின் கோரிக்கைதான் என்ன? டெல்லி குண்டு வெடிப்பை புலனாய்வு செய்யும் ஒரு உயரதிகாரியிடம் பேசினோம். ''பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத இயக்கங்கள் பலவும் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.-யும்தான் தாக்குதல்களுக்குப் பின்னணியில் இருக்கிறது. பாபர் மசூதி இடிப்பு விவகாரம், அமெரிக்காவுடனான அணுசக்தி
ஒப்பந்தம் என்பதெல்லாம் அவர்களுடைய கோபத்துக்குக் காரணம் இல்லை. இரண்டு நோக்கங்களுக்காக இந்திய வரை படத்தில் அவ்வப்போது ரத்தக்கறை பூசுகிறார்கள். இந்திய பொருளாதாரத்தை சீர்குலைப்பது. அடுத்து, இஸ்லாமியர்களுக்கும் இந்துக்களுக்குமிடையே விரோதத்தை வளர்த்து, தங்களுக்கு சாதகமாக இந்திய முஸ்லிம்களை வளைப்பது இவைகள்தான் இவர்களுடைய நோக்கம். இதனால் மல்காம், அஜ்மீர் தர்கா, ஹைதராபாத் மெக்கா மசூதி போன்றவைகளையும் ஏற்கெனவே வெடிகுண்டு வைத்து தாக்கினார்கள். இப்படித்தான் இந்திய பொருளாதார வளர்ச்சியை சீர்குலைக்க முயல்கிறார்கள் தீவிரவாதி கள். இவர்களின் கடந்த கால தாக்குதல்களில் அதிக சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள், சாட்டிலைட் தொலைபேசிகள் மற்றும் பயங்கரமான ஆயுதங்கள் மட்டுமல்ல, பணமும் ஏராளமாக உபயோகப்படுத்தப்பட்டிருக்கிறது. ஆனால், இப்போது இவர்கள் தங்களை முற்றிலுமாக மாற்றிக்கொண்டு விட்டனர். ஒரு மொபைல் போனைக்கூட இப்போது உபயோகிப்பது கிடையாது. தொலைபேசி உரையாடல் கிடையாது. இவற்றால் தங்கள் அடையாளங்கள் எளிதாக தெரிந்து விடும் என்பதால்தான் இதனை சாதுர்யத்தோடு தவிர்த்து விட்டார்கள். இப்போது நடத்தப்படும் ஆபரேஷனுக்கு பெயர் L.R.O. (Low risk operation). வெடிகுண்டு சம்பவங்களில் இந்த தீவிரவாதிகள் சிக்கிக்கொள்ளக்கூடாது என்பதுதான் இந்த ஆபரேஷனின் முக்கியமான நோக்கம்'' என்று சொல்லும் அந்த அதிகாரி, ''உள்ளூரில் மலிவாக கிடைக்கும் வெடிப் பொருட்களைக் கொண்டு வெடிகுண்டை தயாரிக்க ஆரம்பித்திருக்கிறார்கள் தீவிரவாதிகள். பொதுவாக அம்மோனியம் நைட்ரேட் என்ற வேதிப்பொருளைக் கொண்டுதான் இப்போது வெடிகுண்டை தயாரித்து, வெடிக்க வைக்கிறார்கள். கார் போன்ற வாகனங்களில் பயணிப்பதைத் தவிர்த்து, சைக்கிள்களில் கொண்டு போய் குண்டுகளை வைக்கிறார்கள். ராணுவ ஏரியாக்கள் போன்ற பாதுகாப்பு அதிகம் உள்ள பகுதிகளை அவர்கள் தேர்ந்தெடுப்பதில்லை. எளிதில் பொதுமக்களோடு கலந்து அதிக உயிர்ச் சேதங்களை உருவாக்கும் பகுதிகளாகப் பார்த்துத்தான் குண்டுகளை வெடிக்க வைக்கிறார்கள்...'' என்றும் சொன்னார் அந்த புலானாய்வுத் துறை அதிகாரி.
இந்த வெடிகுண்டு வெடிப்புச் சம்பவங்கள் அனைத்துக்கும் காரணமான தீவிரவாத அமைப்பு என்று உளவுத்துறையினர் கண்டறிந்திருப்பது, இந்தியன் முஜாஹிதீன் என்ற அமைப்புதான்.
'இனியும் இப்படியரு கோர சம்பவம் நடக்காமல் இருக்க என்ன செய்வது? யார் இந்த இந்தியன் முஜாஹிதீன்?' போன்ற கேள்விகளோடு, தீவிரவாதம் குறித்த ஆய்வாளரும் பிரபல பத்திரிகை யாளருமான தீபக் சர்மாவை சந்தித்தபோது, ''அகமதாபாத், பெங்களூரு போன்ற இடங்களில் நடந்த வெடிகுண்டு வெடிப்புச் சம்பவங்களில் சிலரை போலீஸார் கைது செய்துள்ளனர். இவர்களில் சிலர் இந்திய இஸ்லாமிய மாணவ அமைப்பைச் சேர்ந்தவர்களும் (சிமி) இருந்தார்கள். ஆனால், இவர்களுக்கும் வெடி குண்டு சம்பவங்களுக்கும் நேரடியான தொடர்பு கிடையாது என்பதால், மத்திய அரசு 'சிமி'யை தடை செய்வதில் கால தாமதம் செய்தது. இருந்தாலும், சிமி அமைப்பினர் இந்த பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு தொடர்ந்து உதவி புரிவது உண்மை. இப்படிப்பட்டவர்களை அடையாளம் கண்டு கட்டுப்படுத்தாதவரை இந்த பயங்கரவாதத்தை தடுக்க முடியாது. தீவிரவாதிகள் நம்மை அச்சுறுத்த, எப்படி இந்தியா மீது தாக்குதல் நடத்தி வருகிறார்களோ... அதே வழியில் நாமும் அவர்களை அச்சுறுத்த பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை வைத்து அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். உண்மையில் கடந்த மூன்று ஆண்டுகளாக நடந்து வரும் சம்பவங்களில் நேரடியாக தொடர்புடையவர்கள் என்று சந்தேகிக்கும் பலரையும் இதுவரை போலீஸார் கைது செய்யவில்லை.
வாரணாசி கோயில் தாக்குதலுக்குப் பிறகு உத்தரப் பிரதேச சிறப்பு அதிரடிப்படை போலீஸார் வலியுல்லா என்ற பங்களாதேஷ்காரரை கைது செய்தனர். இதில் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வந்தது. இவர் ஐ.எஸ்.ஐ. ஆதரவுடன் செயல்படும் ஹ¨ஜி தீவிரவாத அமைப்பை சேர்ந்தவர். இவரோடு சம்பந்தப்பட்டவர்கள் அப்துல் ஹனந்த் போன்றவர்கள். இவர்கள் ஜெய்ஸ்-இ-முகம்மது இயக்கத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் பிரபல தேவ்பந்த் (Saharan pur) மதரஸாவில் வந்து படித்துக் கொண்டு தீவிரவாதச் செயலில் ஈடுபட்டனர். இவர்களுக்கும் ஜெய்ஸ்-இ-முகம்மது இயக்கத்துக்கும் உள்ள தொடர்பு மட்டுமல்ல, அல்-கொய்தா இயக்கத்தோடு இருக்கும் தொடர்பு குறித்தெல்லாம் கூட வெளியே தெரிய வந்தது. இவர்கள் பங்களாதேஷ் வழியாக இந்தியாவுக்குள் நுழைந்தனர். எல்லை தாண்டுவது காஷ்மீர் பகுதியில் இருந்து இப்போது இடம்மாறி மேற்குவங்காளம் மற்றும் வடகிழக்கு மாநிலங்கள் வழியாக நடக்கிறது. பாகிஸ்தான் ஆதரவுடன் பங்களாதேஷ் வழியாக வருபவர்கள்தான் 'இந்திய முஜாஹிதீன்' என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள். இந்த முஜாஹிதீன்களுக்கு சிமி இயக்கத்தினரோடு தொடர்பு இருப்பதாலேயே வெடிகுண்டு சம்பவங்கள் இங்கே தொடர்ச்சியாக நடக்க ஆரம்பித்திருக்கின்றன. இதை அரசு தடுக்காத வரை இந்தியாவில் பயங்கரவாத நடவடிக்கைகள் தொடரத்தான் செய்யும்'' என்கிறார் சர்மா.
- சரோஜ் கண்பத்படங்கள்: முகேஷ், பங்கஜ்

No comments: