Tuesday 24 February, 2009

பெங்களூரில் வெடிகுண்டு தாக்குதல் நடத்திய முகமதிய பயங்கரவாதிகள்

பெங்களூரில் வெடிகுண்டு தாக்குதல் நடந்த பிறகு, அவை ஹிந்துக்களே தங்கள்மீது எறிந்துகொண்டதாக எழுதித்தீர்த்தன இணைய முல்லாக்கள். சிமி அமைப்பு உள்பட தாக்குதல் நடத்திய முகமதியர் அனைவரும் ஒவ்வொருவராக பிடிபட்டு வந்த நிலையில், சமீபத்தில் சிக்கிய முகமதியன் ஒருவன் குறித்த ஜூ.விகடன் கட்டுரை இது.
************************************************
25 February 2009
************************************************

பிடிபட்ட பயங்கரவாதியின் பகீர் பின்னணி...
'மெஸ்மரிஸத்துக்கு மயங்கி வாழ்க்கையைத் தொலைக்கிறாங்க...'
அமில் பர்வேஸ்..!

நெடுநாள் வேட்டையில் இந்த பயங் கரவாத சுறா சிக்கியதையடுத்து, ஆச்சர்ய அதிர்ச்சியில் ஆழ்ந்திருக்கிறது கர்நாடகா மத பயங்கரவாதத் தடுப்பு போலீஸ்.
பெங்களூருவில் 2008-ம் வருடம் ஜூலை 25-ல் ஏழு இடங்களில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களில் இரண்டு பேர் பலியானார்கள்; இருபதுக்கும் மேற்பட்டவர்கள் மிகக் கடுமையாகக் காயம் பட்டார்கள். அந்த பயங்கர சம்பவத்தின் மூளையாக இருந்த அமில் பர்வேஸ்தான் கேரள போலீஸ் மூலம், இப்போது கர்நாடக போலீஸாரின் கஸ்டடிக்குவந்திருக்கிறான்.

பெங்களூரு குண்டுவெடிப்பு சம்பவங்களுக்குப் பிறகு, 2008-ம் வருடம் அக்டோபர் 4 மற்றும் 7-ம் தேதிகளில் காஷ்மீர் எல்லை வழியாக பாகிஸ்தானுக்கு தப்ப முயன்ற நான்கு முஸ்லிம் இளைஞர்கள், இந்திய ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டனர்! அவர்களில் இரண்டு பேரிடம் இருந்த வாக்காளர் அடையாள அட்டைகள்தான் அமில் பர்வேஸை போலீஸ் பிடியில் சிக்க வைத்திருக்கிறது. இது குறித்து மதவாத வழக்குகளை விசாரிக்கும் கேரள போலீஸ் அதிகாரிகளிடம் முதலில் பேசினோம்.
''காஷ்மீர் எல்லையில் சுட்டுக்கொல்லப்பட்ட அப்துல் ரஹீம், முகமது ஃபயாஸ், ஃபாயிஸ், முகமது யாசின் என்ற அந்த நால்வருமே கேரளாவைச் சேர்ந்தவர்கள். அவர்களின் சடலங்களை, அவர்களுடைய பெற்றோரிடம் ஒப்படைத்தபோது, 'எங்களுடைய பிள்ளைகளை வெளி நாட்டுக்குத்தானே வேலைக்கு அனுப்பினோம். காஷ்மீர் எல்லைக்கு எப்படிப் போனார்கள்? இதில் ஏதோ சதி இருக்கிறது. அது தெரியாதவரை நாங்கள் பிணத்தை வாங்க மாட்டோம்!' என்று பிரச்னை செய்தார்கள். அவர்களின் சந்தேகத்தை அடுத்து, முகமதையும், அப்துல் ரஹீமையும் வெளிநாட்டு வேலைக்கு அனுப்பியதாகச் சொல்லப்பட்ட கண்ணூரை சேர்ந்த சிபிலி, சாவிலி ஆகிய இருவரிடமும் விசாரித்தோம். அப்போதுதான் அந்த இரு ஏஜென்ட்களும் அரபு நாடுகளுக்கு ஆட்களை வேலைக்கு அனுப்புவதாகச் சொல்லி, அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை காஷ்மீர் எல் லையில் இருக்கும் பயங்கரவாத முகாம்களுக்கு அனுப்பிய விவரம் தெரியவந்தது.

ஏழை முஸ்லிம் மற்றும் மதம் மாறிய முஸ்லிம் இளைஞர்க ளைத் தேடிப் பிடித்து... ஆசை வார்த்தை காட்டும் சிபிலியும், சாவிலியும் அவர்களின் குடும்பத்துக்கு தாராளமாக நிதி யுதவி செய்து அவர்களையும் சரிக்கட்டிவிடுகிறார்கள். பிறகு, அந்த இளைஞர்களை மூளைச்சலவை செய்து பயங்கரவாதிகளாக மாற்றுகிறார்கள். 'உங்களை போலீஸ் கண்காணித்துக் கொண்டிருக்கிறது. அவர்கள் உங்களை எந்த நேரத்திலும் சுட்டுக் கொல்லலாம். அதற்கு முன்பாக அல்லாஹ்வின் பெயரால் உங்களுக்கு இடப்பட்ட கட் டளையை செய்து முடித்துவிடுங்கள். உங்கள் குடும் பத்தை இயக்கம் பார்த்துக்கொள்ளும்!' என அந்த இளைஞர்களுக்கு உயிர் பயத்தை போக்கும் மனோதிடப் பயிற்சியும் கொடுக்கிறார்கள். இந்த மெஸ்மரிஸத்துக்கு பலியாகும் இளைஞர்களுக்கு அசைன்மென்ட்களை கொடுத்து முடிக்க வைக்கிறார்கள்...'' என்றவர்கள் தொடர்ந்தனர்...

''இப்படி பயங்கரவாதிகளாக்கப்பட்ட அந்த கேரள இளைஞர்களின் குடும்பங்களுக்கு சிபிலி, சாபிலியின் ஆட்கள் மாதா மாதம் ஒரு தொகையை அனுப்பி வைத்துள்ளனர். பாவம், அந்தப் பெற்றோர்களை, வெளிநாட்டிலிருந்து தங்கள் பிள்ளைதான் பணம் அனுப்புகிறான் என நம்ப வைத்துள்ளனர். இதைவிடக் கொடுமை, இந்தக் கும்பலால் பயங்கரவாதிகளாக்கப்பட்ட சிலர், ஏதாவதொரு மோதலில் சுட்டுக் கொல்லப்பட்டும், குட்டு வெளிப்படாமல் இருப்பதற்காக அந்த இளை ஞர்களின் குடும்பத்துக்குத் தொடர்ந்து இன்னும் பணம் அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள்...'' என்று திகிலூட்டினார்கள்.
பிடிபட்ட அமில் பர்வேஸிடம் விசாரணை நடத்தி வரும் கர்நாடக உயர் போலீஸ் அதிகாரிகளிடம் பேசினோம்.

''சிபிலி, சாவிலி ஆகியோர் கொடுத்த தகவலை வைத்து ஜனவரி 10-ம் தேதி அமில் பர்வேஸை மத்திய பிரதேசத்தில் கைதுசெய்தோம். தடை செய்யப்பட்ட 'சிமி' அமைப்பின் கமாண்டோ படை தளபதிதான் அமில் பர்வேஸ். கையெறி குண்டுகளையும் பாட்டில் குண்டுகளையும் நிமிஷத்தில் தயாரிக்கும் திறமைசாலி. ஆறு பாஷைகள் தெரிந்த இவன், சமீப காலமாகத் தமிழ் படிக்கிறானாம். முப்பத்தைந்து வயதான பர்வேஸ§க்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. கடந்த ஆண்டு மட்டும், தென் மாநிலங்களில் தேர்வு செய்யப்பட்ட சுமார் முந்நூறு முஸ்லிம் இளைஞர்களுக்கு இடுக்கி மாவட்டத்தில் உள்ள வாகைமண்ணில் பயிற்சி கொடுத்துள்ளான். நீச்சல், மலை ஏற்றம், மரம் ஏறுவது, காடுகளுக்குள் மறைந்து தப்பிப்பது, கூட்ட நெரிசலில் தாக்குதல் நடத்திவிட்டு மோட்டார் சைக்கிளில் தப்பிச் செல்வது உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்பட்ட அவர்களை ஆப்கானிஸ்தானில் லஸ்கர்-இ-தொய்பா முகாமுக்கு அனுப்பியதற்கான ஆதாரங்களும் சிக்கியிருக்கின்றன. அமில் பர்வேஸிடம் கமாண்டோ பயிற்சி எடுத்த மலப்புரம் அப்துல் சத்தார், அப்துல் ஜபார், சர்ஃபுதீன், சக்காரியா, கண்ணூரை சேர்ந்த அப்துல் ஜலீல், முஜ்ஜீப், ஃபைசல், மனாஃப், எர்ணா குளத்தை சேர்ந்த பத்ருதீன் ஆகிய ஒன்பது பேரை கைது செய்திருக்கிறோம்.

அமில் பர்வேஸின் ஆலோசனைப்படி பெங்களூரு வெடிகுண்டு வெடிப்பு சம்பவத்தில் ஈடுபட்டதை ஒப்புக் கொண்டிருக்கிறான் முஜ்ஜீப். மற்றவர்கள் வாயே திறக்க மறுக்கிறார்கள். ரிமாண்டில் இருக்கும் அவர்களை மீண்டும் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க நீதி மன்ற அனுமதி கேட்டிருக்கிறோம். பிடிபட்டவர்கள் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் கேரளத்தைச் சேர்ந்த இரண்டு எம்.எல்.ஏ-க்கள், தேசியக் கட்சி எம்.பி. ஒருவர் உள்ளிட்ட இன்னும் சிலரிடமும் விசாரணை நடத்த வேண்டியிருக்கிறது...'' என்று திடுக்கிட வைக்கிறார்கள் கர்நாடக காவல் துறையினர்.

- இரா.முத்துநாகு

No comments: