Tuesday 24 February, 2009

கஞ்சா செடிகள் நிறைந்த பாளடைந்த முகமதிய தேசங்கள்

கஞ்சா செடிகளும் பயங்கரவாதிகள் பதுங்கிவாழும் குகைகளும் நிறைந்த தேசம் பாகிஸ்தானும் ஆஃப்கானிஸ்தானும். இந்த பாகிஸ்தான் குறித்துதான் “அதன் வளர்ச்சி பாரதத்துக்கு ஒன்றும் குறைந்தில்லை... அங்கே தேனும் பாலும் ஆறாக ஓடுகிறது.. ” என்ற ரீதியில் “தீராநதி” யில் முகமதியன் எழுதிய கட்டுரை ஒன்றை வாசிக்க நேர்ந்தது. அன்நாடுகளில் மையம்கொண்டுள்ள முகமதிய பயங்கரவாதம் குறித்த ஜூவி கட்டுரை இது.
*************************************
25th February 2009
*************************************

எம்.ஏ.ஜவஹர்
ஊர் இரண்டு பட்டால்...

பாகிஸ்தானில் கடந்த வாரம் நடந்த மூன்று சம்பவங்கள், நம் நாட்டுக்கு முக்கியத் துவம் வாய்ந்தவை. முதலாவதாக, மும்பை தாக்கு தல் சம்பந்தமாக இந்திய அரசு எவ்வளவோ ஆதாரங்கள் கொடுத்தும், அத்தாக்குதல் பாகிஸ்தானியர்களால் பாகிஸ்தானிலிருந்து திட்டமிட்டுத்தான் நிறைவேற்றப்பட்டது என்று கூறியும் தொடர்ந்து மறுத்துவந்தது பாகிஸ்தான்.

இப்போது திடீரென்று, 'தங்கள் நாட்டில்தான் இத்திட்டத்தின் ஒரு பகுதி நிறை வேறியது!' என்பதை ஒப்புக்கொண்டதுடன் தாக்குதலுக்குப் பின்னணியாக இருந்த வேறு ஒரு பாகிஸ்தானியரையும் கைதுசெய்து, அந்நாட்டு பயங்கரவாதச் சட்டத்தின் கீழ் கடுமையான தண்டனை வழங்கப்படும் என்றும் அறிவித்திருக்கிறது. இதற்கு அமெரிக்கா மற்றும் உலகநாடுகளின் நிர்ப்பந்தம்தான் காரணம். இப்படி பாகிஸ்தானிய அரசு நடவடிக்கை எடுக்கத் தொடங்கியிருப்பதே இந்திய அரசின் அணுகுமுறைக்குக் கிடைத்திருக்கும் வெற்றி யாகவும், பயங்கரவாத இயக்கங்களின் சறுக்கலாகவும் இத்துறை வல்லுநர்கள் வர்ணிக் கிறார்கள்.

இனி, பாகிஸ்தானிலிருந்து வந்த அடுத்த இரண்டு செய்திகள்... இவை இரண்டுமே இந்திய அரசுக்கும் உலகநாடுகளுக்கும் கவலையைத் தந்திருக்கின்றன.

ஒரு வெளிநாட்டு செய்தித்தாளுக்கு அளித்த பேட்டியில் பாகிஸ்தான் ஜனாதிபதிஆஸிப் அலி சர்தாரி, 'பாகிஸ்தானின் அண்டை நாடான
ஆப்கானிஸ்தானை ஆண்ட தாலிபன்கள் அமெரிக்கர்களால் தூக்கியெறியப்பட்டவர்கள். மீண்டும் ஆட்சியைப் பிடிக்கச் சண்டையிட்டுக் கொண்டு இருக்கும் இவர்கள், பாகிஸ்தானில் தங்களுக்கு மறைமுக ஆதரவு கொடுத்துவரும் ராணுவத்தினர் மற்றும் நிர்வாகத்தில் உயர் பதவியில் இருக்கும் அதிகாரிகள் மூலம் பாகிஸ்தானையே பிடிக்கத் திட்டமிட்டு வருகி றார்கள்!' என்று கூறியிருக்கிறார். மேலும் 'இதுபோன்ற முயற்சிகள் சில ஆண்டுகளாகவே இருந்து வந்தபோதும், இதற்கு முந்தைய பாகிஸ் தானிய ஆட்சியாளர்கள் கண்டும் காணாமல் இருந்திருக்கிறார்கள்...' என்றும் பேசியிருக்கிறார். இந்தச் செய்தியைக் கேட்டு உலக நாடுகள் அதிர்ந்துவிட்டன.

அந்த அதிர்ச்சியில் இருந்து மீளுவதற்கு முன்பே, தாலிபன்களின் எதிர்ப்பை சமாளிக்க முடியாத பாகிஸ்தானிய அரசு, 'ஆப்கானிஸ்தான் எல்லையை ஒட்டி அமைந்திருக்கும் பாகிஸ்தானின் 'நார்த் வெஸ்ட் ஃப்ரான்டியர்(NWFP-North west Frontier province)' என்ற 'ஸ்வாட்' பகுதியை தாலிபன்கள், அவர்களின் சட்டவிதிப்படி பாகிஸ்தான் அரசுக்கும் உட்பட்டு ஆட்சி நடத்திக்கொள்ளலாம்' என்றொரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருக்கிறது. கடந்த ஏழு ஆண்டுகளாக அமெரிக்கப் படையினரை எதிர்த்துத் தீவிரமாகப் போரிட்டுவரும் தாலிபன் படையினருக்கு இது பெரும் வெற்றி. இதைக் கொண்டாடும் விதமாக ஊர்வலங்களும் பொதுக்கூட்டங்களும் அப்பகுதி யில் தொடர்ந்து நடந்தவண்ணமாக உள்ளன. இப்போது ஏற்பட்டிருக்கும் இந்த உடன்பாடும், உலகநாடுகளுக்கு, குறிப்பாக இந்தியாவுக்கு மிகவும் அதிர்ச்சியளிக்கும் செயல். ஸ்வாட் பகுதியில் தன் ஆட்சியை மறைமுகமாக நிலைநாட்டியிருக்கும் தாலிபன்கள், அடுத்தபடியாக பாகிஸ்தான் நாட்டின் மற்ற பகுதிகளில் வேரூன்ற முயற்சிப்பார்கள்.

இந்நிலையில், ஸ்வாட் பகுதியில் இருந்து சுமார் 100 கிலோமீட்டர் தூரமே உள்ள பாகிஸ்தானிய தலைநகரம் இஸ்லாமாபாத்தை தாலிபன்கள் கைவசப்படுத்த எத்தனை நாட்கள் ஆகும்? மேலும், அங்கிருந்து பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள இந்தியாவின் காஷ்மீர் பகுதியில் அவர்கள் வேரூன்றிவிட்டால், நம் நாட்டு எல்லைக்கு தாலிபன்கள் வந்துவிட்டார்கள் என்றுதான் அர்த்தம். தாலிபன்களின் இந்திய எதிர்ப்புக் கொள்கைகள், காஷ்மீர் பிரச்னையில் அவர்கள் காட்டும் ஆர்வம் போன்றவற்றைப் பார்க்கும்போது, இந்தியாவுக்கு சிக்கல் வலுக்கிறது என்பதுதான் நிஜம். அரசு இப்போதே இதுபோன்ற நிலைமையை எதிர்கொள்ளத் தன்னை ஆயத்தம் செய்துகொள்ள வேண்டும்.

இதற்கிடையில், இந்தியக் கடற்படைத் தளபதி, 'கடல்வழியாக இந்தியாவுக்குள் அணு ஆயுதங்களைக் கொண்டுவர முயற்சிகள் நடைபெறும் அபாயம் இருக்கிறது. அதைத் தடுக்க கடற்படையை மேலும் வலுப்படுத்தவேண்டும். ஸ்கேனர் போன்ற கருவி களைப் பயன்படுத்தி, நாட்டினுள் வரும் அத்தனை சரக்குப் பெட்டிகள், சரக்குகள் ஆகியவற்றை சோதனை செய்யவேண்டும்' என்று கூறியிருக்கிறார். கடற்படைத் தளபதி தனக்குக் கிடைத்த நம்பத்தகுந்த உளவுத் தகவல்களை வைத்துதான் இப்படிச் சொல்லி யிருக்கவேண்டும்.
பாகிஸ்தானிடம் அதிக அளவில் அணு ஆயுதங் களும், அணுகுண்டுகளும் இருக்கிறது என்பது உண்மைநிலை. ஏற்கெனவே பாகிஸ்தானில் ஐ.எஸ்.ஐ., ராணுவம், தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் என்று மூன்று அதிகாரத் துறைகள் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதியின் கீழ் முழுமையாக இயங்காமல், தனித் தனியே சுயேச்சையாகச் செயல்பட்டுவருவதாக செய்திகள் வந்தபடி இருக்கின்றன. இச்சமயத்தில் அந்நாட்டில் ஒரு அசம்பாவிதம் நடந்து, அந்நாட்டின் அணு ஆயுதங்கள் அடிப்படைவாதிகள் கையில் இருக்குமேயானால், இந்தியாவுக்கு மட்டுமல்ல மொத்த உலக நாடுகளுக்குமே அது அச்சுறுத்தலாகத்தான் முடியும்.

இந்நிலையில், இந்தியா என்ன செய்யவேண்டும்?

தன்னுடைய உளவுத் துறை, எல்லையோரப் பாது காப்புப் படை போன்றவற்றை முடுக்கிவிடவேண்டும். கடற்படை பாதுகாப்பை அதிகப்படுத்துதல், நவீன தொழில்நுட்பக் கருவிகளைப் பயன்படுத்தி ஆயுத ஊடுருவல்களைத் தடுத்தல் ஆகியவற்றைச் செய்யவேண்டும். அதோடு, இரண்டு முக்கிய நடவடிக் கைகளையும் எடுக்கவேண்டும்.

ஒன்று, இது வரை பாகிஸ்தான் நம்மை எப்படி நடத்தியது என்பது ஒரு புறம் இருக்க, இப்போது அங்கு அமைந்திருக்கும் சிவில் அரசின், 'தீவிரவாதிகள் மீது நாங்கள் தகுந்த நடவடிக்கை எடுப்போம். ஏனென் றால், அவர்கள் எங்களுக்குமே அச்சுறுத்தலாகி விட்டார்கள்' என்கிற கூற்றை ஏற்று அவர்களுக்கு ஒரு வாய்ப்பு அளித்துப் பார்க்கலாம். இன்று இந்தியா-பாகிஸ்தானிடையே நிலவும் பரஸ்பர நம்பிக்கையின்மை, தீவிரவாத இயக்கங்களுக்குத்தான் சாதகம். நிர்ப்பந்தத்தால்தான் மும்பை பயங்கரவாதச் செயலுக்கு எதிரான நடவடிக்கையை பாகிஸ்தான் தொடங்கியிருக்கிறது என்றாலும், அப்படியரு முடிவை எடுத்திருப்பதே நல்ல விஷயம்தான். நம்மைப் பொறுத்த வரை அங்குள்ள மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுப் பிரதிநிதிகளைத்தான் நம்பியாகவேண்டும். பாகிஸ்தானில் உள்ள தீவிரவாதிகள் மீதும் தீவிரவாதப் பயிற்சி முகாம்கள் மீதும் உலக நாடுகள் மூலம் தொடர்ந்து நடவடிக்கை எடுக்க பாகிஸ்தானை உலகநாடுகள் மூலம் நிர்ப்பந்திக்கவேண்டும். அதே சமயம், தீவிரவாதிகளை ஒழிக்க பாகிஸ்தான் கேட்கும் உதவிகளைச் செய்யத் தயங்கக்கூடாது. அங்கிருக்கும் பயங்கரவாத இயக்கங்களை நாம் போர் மூலம் ஒழிக்கமுடியும் என்றாலும், அதை பாகிஸ்தான் அரசு மூலமே செயல்படுத்துவதுதான் புத்திசாலித்தனம்.

இரண்டாவதாக, நம் நாட்டில் கிட்டத்தட்ட 20 கோடி இஸ்லாமிய சகோதரர்கள் வாழ்கின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் பயங்கரவாதச் செயல்களுக்கு ஆதரவாக இருக்கிறார்கள் என்பது போன்ற தவறான எண்ணத்தை சில அரசியல் கட்சிகள் பொதுமக்கள் மத்தியில் பரவவிட்டிருக்கின்றன. இதில் எள்ளளவும் உண்மை இல்லை. நாட்டுக்காக பல தியாகங்கள் செய்து, நாட்டின் வளர்ச்சியில் சிறுபான்மை மக்கள் ஆற்றிய, ஆற்றிவருகிற பங்கை யாராலும் மறுக்க முடியாது. இது போன்று நிலவிவரும் கருத்தைக் களையெடுக்க எல்லாக் கட்சிகளுடனும் சேர்ந்து ஒரு யுக்தியை நம்முடைய அரசு தீட்டிச் செயல்படுத்த வேண்டும். தாங்கள் புறக்கணிக்கப்படுகிறோம் என்று சிறுபான்மை மக்கள் நினைத்தால், அதைக் களைந்து அவர்களுக்கு நம்பிக்கை கொடுக்கவேண்டும். அப்போதுதான் நாட்டிலுள்ள அனைத்துத் தரப்பு மக்களிடமும் ஒற்றுமை நிலவி... அந்த பலத்தின் வாயிலாக எல்லை வரை வரப்பார்க்கும் எதிரியை வெல்லலாம். இல்லையென்றால், 'ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்குத்தானே கொண்டாட்டம்?!'

No comments: